Contact us at: sooddram@gmail.com

 

இல்லாமல் போன புலிகளும், இருப்பது போல காட்டும்; புலம்பெயர் தமிழீழமும்

(சாகரன்)

எம் மண்ணில் புலிகளை இல்லாமல் செய்த பின்பு கடந்து வந்த இந்த ஒரு வருடத்தில் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் ஏற்பட்டிருக்கும் புதிய நிலமைகளுக்கு ஏற்ப தம்மை தயார்படுத்தி புது வாழ்வு வாழ புறப்பட்டு விட்டனர். ஆனால் அவர்கள் நிம்மதியாக வாழ்வதைத் தடுப்பதற்கு புலம் பெயர் நாடுகளில் உள்ள மிகச் சிலர் (கவனிக்க மிகச் சிலர்) முனைப்புடன் செயற்படுவதில் மும்முரமாக ஈடபட்டு வருகின்றனர். இவர்கள் இல்லாமல் போன புலிகளின் விம்பமாக செயற்படுகின்றனர். இவர்களுக்கு மேற்குலக நாடுகளின் ஆசீர்வாதம் இருந்து கொண்டு இருக்கின்றது?. இலங்கை அரசு ஜேஆர் அரசு போன்று ஏகாதிபத்தியத்தின் ஏவல் நாயாக மாறும் வரைக்கும் இந்த ஆசீர்வாதம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இலங்கையில் தற்போது ஆட்சி ஏற்று இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அரசில் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை தொடர்வதற்குரிய வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகின்றன. இலங்கை அரசுடன் தற்போது உறவுகளில் உள்ள நேசநாடுகளின் அணிகளும் இலங்கையரசின் திசை வழிப் பயணத்தைப் உறுதி செய்வதாக அறிய முடிகின்றது.

புலிகள் எப்போதுமே மக்களுக்கு இயல்பு வாழ்வு நிலமை ஏற்படவிடாமல் தடுத்தல் என்பதில் மிகக் கவனமாக செயற்பட்டு வந்தனர். இதனை அவர்கள் உச்ச நிலையாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை காலத்தில் முதலில் தனித்தும், பின்பு தோல்வியின் விளிம்பில் சென்று பிரேமதாசாவுடன் கைகோர்த்தும் செய்தனர் என்பது வரலாறு. ஆனால் பிள்ளையான் தலைமையிலான தனித்த கிழக்கு மாகாணத்தின் செயற்பாட்டு ஆரம்பித்ததில் இருந்து கிழக்கிலும், 2003 ம் ஆண்டிற்கு பிற்பட்ட காலத்திலிருந்து யாழ்பாணத்திலும் புலிகளின் இம் முயற்சிகள் அவ் அவ் பிரதேசங்களில் பிசுபிசுத்துப் போக ஆரம்பித்தது.

புலிகளின் இவ்வகையான செயற்பாட்டின் ஊடாக இலங்கை அரசுக்கு எதிராக ஒருவகையான 'கொதிநிலையை' தமிழ் மக்கள் மத்தியில் பேணி வந்தனர். இதனூடாக ஒருவகை அனுதாபத்தை, ஆதரவை தமிழ் மக்களிடத்தும், புலி ஆதரவு புலம் பெயர் மக்களிடமும் பெற முயன்று வந்தனர். இதில் தற்காலிக வெற்றியையும் கண்டனர். இதே மாதிரியான செயற்பாட்டையே தற்போதைய புலம் பெயர் தமிழீழ செயற்பாடாளர்களும், அவர்களின் உள்ளுர் கூட்டமைப்பினரும் செய்ய முயல்கின்றனர். இதன் செயற்பாட்டு வடிவங்களே போர் குற்ற விசாரணை, நாடு கடந்த தமிழீழம், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான தேர்தல்கள் இஸ்தியாதி....இஸ்தியாதி....எல்லாம். இது சில காலத்திற்கு சிறிய அளவில் புலம் பெயர் நாடுகளில் சல சலப்பை ஏற்படுத்தலாம். ஆனால் இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தப் போவது இல்லை. மாறாக எரிச்சலையே ஏற்படுத்துகின்றது. இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான நம்பிக்கை வைத்துச் செயற்படும் செயற்பாட்டை தாமதப்படுத்தும் நிகழ்வுகளை ஊக்கப்படுத்துவதாக அமையப் போகின்றது.  

புலம் பெயர் நாடுகளில் இவ்வாறு சலசலப்பு ஏற்படுத்துபவர்கள்; எக்காலத்திலும் புலம் பெயர் நாடுகளிலிருந்து ஊருக்கு போகும் எண்ணம் இல்லாதவர்கள். தனித் தமிழீழம் கிடைத்திருந்தால் கூட இவர்கள் இப்படியாகத்தான் செய்திருப்பார்கள். இவர்களின் தற்போதைய முழு நோக்கமும் தம்மைப் போலவே ஏனையவர்களையும் ஊருக்கு போகவிடாது தடுத்தல் என்பதாகும். இலங்கையில் சிறப்பாக தமிழ் பிரதேசங்களில் இயல்பு நிலையில்லை என்பது போன்ற செய்திகளைப் பரப்புபவர்களும் இவர்களே. ஆனால் சாத்தியப்படும் போதெல்லாம் தாம் போகாவிட்டாலும் தம் பெண்டிர், பிள்ளைகளை ஊருக்கு அனுப்பி சொத்துப் பத்துக்களை கையடக்கும் வேலைகளை உள்ளுர் அரசியல் செ(h)ல்வாக்கினால் முடித்து விட்டு இலங்கை அரசின் 'ஜனநாயகத்தை' அனுபவித்துவிட்டு திரும்பி விடுகின்றனர். முடிந்தால் சன்னதியானுக்கும்;, வல்வை சிவனுக்கும் பூசை வைத்தும், மடுமாதாவிடம் அருளும் பெற்று கூடவே ஊரவருக்கு 'கடாய்' அடித்து, போத்தலுடன் விருந்தும் வைத்து தமது 'மேதாவிலாசங்களை'யும் காட்டி திருப்த்தி கண்டும் வருகின்றனர்.

புலம் பெயர் நாடுகளில் இருந்து ஊருக்கு போய்வரும் இயல்பு நிலமையைத் தடுத்தல் என்பதை முதன்மையான செயற்பாடாக புலம் பெயர் புலிப்பினாமிகள் தற்போது செய்து வருகின்றனர். இதனை புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை அரசும் புரிந்து கொள்ள வேண்டும். புலம் பெயர் நாடுகளில் உள்ள 5 வீதத்திற்கும் குறைவானவர்களின் ஆதரவுடன் நடைபெறும் இச்செயற்பாட்டை முழு புலம் பெயர் தமிழர்களும் செய்கின்றனர் என்ற தொனிப்பட அரசின் அறிக்கைகளும், அமைச்சர்களின் பேச்சுக்களும், அமைவது சரியானது அல்ல. வருந்தத் தக்கது. புலம் பெயர் நாடுகளில் உள்ள உண்மை நிலமையை வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதுவர்கள் இலங்கை அரசிற்கு எடுத்துரைக்க வேண்டும். உண்மை நிலையை அறிய வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதுவர்கள் புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களை தொடர்சியாக சந்தித்து கல்ந்துரையாடல்களில் ஈடபடவேண்டும். இலங்கைத் தூதரகத்தினர் தமிழ் மக்களினதும் பிரநிதிகள் என்ற எண்ணப்பாடு ஏற்படும் வண்ணம் உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஊருக்கு போய்வருவதை ஊக்கிவிக்கும் வரவேற்பு நிகழ்வுகளை செயற்படுத்த வேண்டும். இதற்கான தகவல் வழங்கும் பிரிவுகளை முடுக்கிவிட வேண்டும். இருநாட்டு பிரஜா உரிமை பெற விரும் பலர் வெளிநாடுகளில் உள்ளனர். இதனை இலகு வழியில் செய்ய ஆவன செய்தல் வேண்டும், ஊக்கிவிக்க வேண்டும். இந்த வகையில் கனடாவில் உள்ள இலங்கைத் தூதுவரின் அண்மைய செயற்பாடுகள் நம்பிக்கை ஊட்டுபவையாக அமைகின்றன.

புலிகளின் யுத்தத்தை காரணம் காட்டி சேகரித்த சொத்துக்களை பராமரிக்க நிதிவளங்களைத் திரட்டும் இன்னொரு வடிவங்களை புலிப்பினாமிகள் தொடங்கி விட்டனர். உழைக்காமல் விஸ்கி குடிக்க எடுக்கும் முன் முயற்சிகள் இவை. இதற்கு இவர்கள் தற்போது தூக்கிப்பிடித்த முதன்மை விடயம் நாடு கடந்த தமிழீழம். கூடவே இலங்கையில் ஒரு அசாதாரண நிலமைகள் நிலவுவதாக 'படம்' காட்டுகின்றார்கள். இலங்கை தமிழ் பேசும் மக்களுக்கு பிரத்தியேகமான அரசியல் பிரச்சனை உள்ளது. இதனைப் பற்றி ஆக்கபூர்வமாக அணுகி பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு செயற்பட வேண்டியுள்ளது. இவற்றில் செலுத்த வேண்டிய கவனத்தை விடுத்து பிரச்சனையை திசை திருப்பும், குழப்பும் செயற்பாட்டையே புலிகளின் விம்பங்கள் செய்து கொண்டே இருக்கின்றனர்.

ஏகாதிபத்தியம் ஒரு தலாய் லாமாவில் திருப்திப்படாமல் இன்னொரு இளம் தலாய் லாமாவை உயிர் வாழ வைப்பதற்கான முயற்சிகளே நாடு கடந்த தமிழீழமும் இதற்கான வெள்ளை காகங்களின் ஆதரவுகளும், அமெரிக்காவில் கூடிக் குலாவ அனுமதிப்பதுவும் ஆகும். பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிக்காகோவில் குண்டு வைப்பதற்கு முன்பே மணந்து பிடித்த அமெரிக்க அரசுக்கு நாடுகடந்த தமிழீழக்காரரின் புலித் தொடர்புகள் தெரியாது என்றால் இதை நம்ப மக்கள் என்ன கேணப் பயல்களா? ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் அரங்கேறும் இவ்விடயத்தால் நாடு கடந்த தமிழீழ அரசியல்வாதிகளுக்கு பணத்திற்கு இனிமேல் பஞ்சம் இருக்காது என்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது. பஞ்சம் வன்னியில் புலம் பெயர்ந்த மக்களுக்கு மட்டுமே. அவர்களை வைத்து பிழைப்பு நடத்தும் இவர்களுக்கு அல்ல.

இலங்கையின் போர்க் குற்றம் என்பது பற்றியும், அதற்கான விசாரணை பற்றியும் பெரிதாக சிலர் தற்போது பிரஸ்தாபிக்கின்றனர். நல்ல விடயம்தான். போரில் யாரும் குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. போர் குற்றம் என்று பேசும் போது போரில் ஈடுபட்ட இருதரப்பினரையும் கருத்தில் கொள்வதுதான் சரியானது. இதிலும் ஒரு புறம் அரசு. மறுபுறம் தமிழீழ விடுதலைப் புலிகள். சரி பிழைகளுக்கு அப்பால் ஒரு நாட்டின் அரசுக்கு தனது நாட்டின் பாதுகாப்பு என்ற விடயத்திலுள்ள கடமைப்பாட்டுடன் போரில்  செயற்படும் உரிமை உண்டு. புலிகள் விடயத்தில் இது பொருந்தாது. புலிகள் அரசும் இல்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும் அல்ல. மாறாக புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம். 

போர் குற்ற விசாரணை என்பது பொறியல் தாமாக சிக்கி இலங்கை அரசின் விசேட தடுப்பு முகாமில் உள்ள பத்தாயிரத்திற்கு மேற்பட்ட முன்னாள்  புலி உறுப்பினர்களை தூக்கில் போட கால்தடம் போடும் பொறி விளையாட்டை ஏற்படுத்திவிடும். தலைவர் முழந்தால் இட்டு சரணாகதியடைந்து போய்விட்டார். மற்றவர்களையும் இல்லாமல் செய்வதற்கு புலிப்பினாமிகள் முன் எடுக்கும் 'நல்' முயற்சிகள்? இவை. புலன் பெயர் புலிப்பினாமிகளே தொடருங்கள் உங்கள் 'சேவையை'. பாலகுமாருக்கும், இரத்தினதுரைக்கும் தேவைதான் இது?. நல்லா தேவை உங்களுக்கு இது. புரட்சிக் கருத்துப் பேசிய இருவரிடமும், நாம் அவர்களுடன் பேசும் காலத்தில் எத்தனை தடவை கூறி இருப்போம். நீங்கள் பாசிசத்தின் ஊற்று வாய்காலுக்கு அணை கட்டாதீர்கள் என்று. கேட்டீர்களா? இப்போது உங்கள் சகாக்களே உங்களுக்கு உயிருக்கு உலை வைக்க அத்திவாரம் போடுகின்றனர்.

இவ்விடயத்தில் சுரேஸ் பிரேமசந்திரன் நாற்காலியை தக்க வைத்துக்கொண்டு தற்;காலிகமாக தப்பித்துக் கொண்ட 'சாணக்கியன்'.  என்ன யுத்தத்தின் இறுதி நாட்களில் புலிகளின் நிலவறைகளில் இலங்கை இராணுவத்தினால் கண்டு பிடிக்கப்பட்ட ஈபிஆர்எல்எவ் இன் ஆவணங்கள் புலிகளுடன் பிணைந்து செயற்பட முடிவு செய்த பின்பு சுரேஸின் ஆவணப்படுதப்பட்ட கொலைக் குற்றங்களுக்கு சாட்சியங்களை கொடுக்க வித்திட்டுள்ளது. ஈபிஆர்எல்எவ் இன் இவ் ஆவணங்கள் எந்த ஊற்று வாய்கால் மூலம் புலிகளிடம் கொண்டு சென்று கொடுக்கப்பட்டது என்பது பொட்டனுக்கு மட்டும் அல்ல பிரதி பண்ணியவருக்கும் தெரியும்.

புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த ஆவணங்கள் சென்னையில் இருந்து பிரதி பண்ணி சுரேஸினாலும், சென்னையில் உள்ள அவரின் சகாக்களாலும், மற்றும் புலம் பெயர் நாடுகளில் வாழும் அவரது சகாக்களாலும்; இணைந்து நிறைவேற்றப்பட்ட கைங்கரியங்களை அம்பலப்படுத்தி நிற்கின்றன. இவற்றின் அடிப்படையில் நடைபெற்ற படு கொலைகளுக்கு பொட்டன் இல்லாதவிடத்து இவர்கள்தான் பதில் கூற வேண்டிவரும். கிட்லருடன் சேவகம் செய்தவர்கள் சர்வதேச சமூகம் நாஜிகள் பட்டியலுக்குள் உள்ளடக்கியது 40 வருடங்கள் களித்து. இந்த நாஜிகளை இன்றும் உலகம் பூராகத் தேடி சர்வதேசம் தண்டிப்பது போல இனிவரும் காலங்களில் புலிகளுடன் சேர்ந்தியங்கிய சுரேஸ், செல்வம் அடைகலநாதன் வகையறாக்களுக்கும் நடக்கப் போகின்றது. இவர்களால் நடத்தப்பட்ட காட்டிக் கொடுப்புக் கொலைகளுக்கான நீதி என்றோ ஒரு நாள் நிறுவப்படும். காட்டிக்கொடுப்பு கோடம்பாக்கத்தில் பத்தமநாபா கொலையுடன் ஆரம்பித்துவிட்டது என்ற எங்களது சந்தேகத்திற்கு நியாயங்கள் இல்லாமல் இல்லை. இவைகள் நிரூபிக்கப்படும்வரை தப்பித்திருங்கள். இது வெறும் குறுகிய காலம்தான். நாட்களை எண்ணிக் கொண்டு இருங்கள். உங்கள் மனிதப் படுகொலைக்கான தீர்ப்பு மக்கள் மன்றங்களில் உங்களுக்கு எழுதப்படும். இவ் போர்க் குற்ற தண்டனைகள் புலிகளுக்கு மட்டும் அல்ல புலம்பெயர் புலிப்பினாமிகளுக்கும், புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய வேலை செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் பொருந்தும், ஏன் சரத் பொன்சேகா வகையறாக்களுக்கும் பொருந்தும்.

(சாகரன்) (வைகாசி 20, 2010) (Saakaran)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com