Contact us at: sooddram@gmail.com

 

என் மனவலையிலிருந்து..........!

மக்களின் இயல்பான எழுச்சியும், தன் எதிர்காலமும்

(சாகரன்)

போருக்கு பிந்திய தமிழ் சமூகம்வாழும் பிரதேசங்களில் நிலவும் நிச்சயம் அற்ற சமூக வெளிப்பாட்டின் ஒரு குறியீடாக மாணவியர் வித்தியாவின் பலாத்கார மானபங்கப்படுத்தலும், இதனைத் தொடர்ந்த படு கொலையையும் பார்க்கலாம். மக்களிடம் உறங்கிக் கிடந்த இயல்பான அநியாயங்களுக்கு எதிரான உணர்வலைகள் இங்கு எழுந்து நிற்பதையே மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என்பவர்களின் தற்போதைய போராட்டத்தைப் பார்க்க முடியும். இது போன்றதொரு போராட்டம் 1884 களில் பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் கடத்தப்பட்டு காணமல் போன போது காணப்பட்டது. இந்தப் போராட்டத்தின் முன்னிலைப் போராளியாக செயற்பட்டது இங்கு நினைவிலாடுகின்றது. யாழ் பல்கலைக் கழகத்தில் மையம் கொண்டிருந்த இந்தப் போராட்டம் இயல்பாக குடாநாடு எங்கும் பரவி தொடர்ந்த நாட்களில் குடாநாட்டிற்கு அப்பால்  தமிழ் பிரதேசங்கள் எங்கும் பரவியது. அந்தப் போராட்டத்தை எம்மவர் மத்தியில் இருந்தவர்களே அடக்கி ஒடுகினார்கள் என்பது யாவரும் அறிந்ததே. இதே மாதிரியான ஒரு போராட்டம் கொழும்பு பல்கலைகழக சுயாதீன மாணவர் அமைப்புத் தலைவர் தயா பத்திரனவை காணமல் செய்யப்பட்ட போதும் சிங்களப் பகுதிகளுக்கு அப்பால் யாழ் பல்கலைக் கழகத்திலும்(ஒரு சிறிய மட்டத்தில்) பரவியிருந்ததும் இதில் ஈடுபட்ட நாங்கள் துரோகிகளாக பார்க்கப்பட்டதும் நினையில் ஊஞ்சல் ஆடுகின்றது.

இந்தப் போராட்டங்களில் எல்லாம் மக்களிடம் கனற்று கொண்டிருந்த அநியாயங்களுக்கெதிராக போராட்ட உணர்வுகள் வெம்பி வெடித்ததை காணமுடிந்தன. இது போன்றதொரு நிலமையே இன்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளின் போது அண்மைய காலங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. இதன் ஒரு வெடிப்பு நிலையே தற்போதைய புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் வெளிபட்டுள்ளது. தற்போது நடைபெறும் மக்களின் இயல்பான எழுச்சிகளுக்கு மத்தியில் புகுந்து கல்லெறிதல், எரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், சட்டததை நிலை நாட்ட முயலும் தரப்பினருடன் மல்லுக்கு நிற்றல் போன்ற வன் செயலைகளை கிளப்பிவிட சமூக விரோதக் கும்பல்கள் முயலுவதும் இதனைச் சாட்டாக வைத்து சட்டத்தை நிலைநாட்டவேண்டியவர்களின் வீதிப் பிரசன்னத்தை அதிகரிக்க வைப்பதுவும் மக்கள் அரச படையினர் இடையே ஒரு கொதி நிலையை ஏற்படுத்த முயலுவதில் சிலர் ஈடுபடுவதிலும் மக்களும், இவர்களுக்கு தலைமை தாங்க முற்படுபவர்களும் அவதானமாக இருக்க வேண்டும். அமைதியான முறையில் தமது உளக் கிளர்ச்சிகளை எடுந்தியம்பும் ஒரு சமூகத்தை வன்முறைக் கும்பலாக காட்ட முயல்வது இன்னொரு வகையில் இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களின் குற்றங்களை சமூகத்தின்பால் குறைந்துவிடுவதற்கான ஒரு சூழ்ச்சியாக அமையலாம்.

மாணவிக்கு நடைபெற்றது போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களிலும் தமிழ் பிரதேசங்களிலும், ஏன் முழு இலங்கையிலும், இந்தியா போன உபகண்டப் பிரதேசங்களலும், உலகம் பூராகவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதனை சமூகமாக நின்று எதிர்த்து போராடுவதன் மூலமும், ஆண் பெண் சமத்துவமான சமூக அமைபை உருவாக்குவதன் மூலமும் இவற்றை முற்று முழுதாக இல்லாதொழிக்க முடியும் என்பதுவும் இங்கு கவனிக்கத்தக்கது. இதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவேண்டும். இடையிட்ட காலங்களில் விழிப்புக்குழுக்கழும், பாதுகாப்பு குழுக்களும் சகல அடுக்கு நிர்வாக, பாதுகாப்பு மட்டங்களிடையேயும் பொதுமக்கள், பாதுகாப்பு பிரிவினரால் இணைந்து முன்னெடுக்கப்பட வேண்டும். வடக்கை ஆளும் மகாண அரசு இவ்விடயம் சம்மந்தமாக கூடி ஆராய்வதற்கு எடுத்த தாமதம் இவர்கள் தாம் சார்ந்த மக்கள், சிறப்பாக பெண்கள் மீதான அக்கறையீனத்தை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது. இந்திய சிறையில் இருக்கும் பிரேமானந்தாவின் விடுதலை பேசும் முதல் அமைச்சர் தலைமையில் இதனை விட நாம் வேறு எதனை எதிர்பார்க்க முடியும். அரசியல் இலாபம் தேட முயலும் ஐங்கரநேசன், சிறீதரன் களின் பேச்சுக்களும், குற்றவாளியை தப்ப வைக்க செல்வாக்கு செலுத்திய விஜயகலாக்களையும், இதற்கான சட்ட உதவிகளை வழங்க முன் வந்த சட்டத்துறை பயிற்றுவிற்பனர் தமிழ்மாறன்களையும் இந்த தமிழ் சமூகம்தான் தமது வாக்குகளால் முதன்மையானவர்கள் என்று தெரிவு செய்தும், உயர்த்திப் பிடிப்பதும் இங்கு அருவருக்கத்தக்கது. இந்நிலையில் உள்ள தமிழ் சமூகத்தின் பிரிவுகள் இதிலிருந்து வெளியேறி வரவேண்டும்.

நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களில் பிரதேச ஒருமைப்பாட்டிற்கும், சமூக நல்லிணகத்திற்கான செய்திகளும் இருப்பது இங்கு அவதானிக்கப்பட வேண்டிவையாகும். வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு அப்பால் தென் இலங்கை சிங்கள மக்களும், முஸ்லீம் சகோதரர்களும் இயல்பாக இணைந்து போராடுவது நம்பிக்கை ஏற்படுத்துகின்றது. எதிர்காலத்தில் தமிழ் மக்களும் இதே மாதிரியான இலங்கை வாழ் ஏனைய சமூங்களின் பிரச்சனைகளுக்காக போராட்டத்தில் ஈடுபடுவது அமிழ்ந்து போன நல்லிணகங்கள் மேலெழுந்து வருவதற்கும் பரஸபரம் சமூகங்களிடையேயான நம்பிக்கைகளை கடடியெழுப்புவதற்கும் உறுதுணையாகவும் அமையும்.

தலைமத்துவம் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட, ஒருங்கமைகப்பட்ட விடாப்பிடியான போராட்டங்கள், விழிப்புணர்ச்சிகளே ஒரு சமுதாயத்தை நெறிப்படுத்தி நல்வழியில் கொண்டு செல்ல உதவும். இந்தப் போராட்டதில் மேற்கூறிய விடயங்களின் பற்றாக்குறை தெரிவது எமது யுத்தம் விட்டுச் சென்ற பரிசுகள் ஆகும். யுத்தத்தை நடத்தியவர்கள் தமிழ் தரப்பில் தலைவர்களை இல்லாது ஒழித்ததன் வெளிப்பாடுகள் இங்கும் வெளிப்பட்டே இருக்கின்றது. ஏகபோகம் என்பதும், கூட்டுத் தலமையை நிராகரித்த செயற்பாடும் எப்போதும் வெற்றியளித்ததாக வரலாறுகள் இல்லை. எனவேதான் கூறுகின்றோம் சமூகமாக நின்று போராடுவோம். நிலைத்த வெற்றிகளை எமதாக்கிக் கொள்வோம். பிரதேசங்கள் எங்கும் ஐதாகி இருக்கும் குடிசனப்பரம்பலும், அடையாளம் அறியப்படாத இனங்காணப்படாத மனிதர்களின் நடமாட்டத்திற்கான இடம்பெயர்வு, மீள்குடியேற்ற நிலமைகளும் புலம்பெயர் தேசத்திலிருந்து தாயகத்திற்கு விருந்தாட்ட விசிட் செய்யும் சில டாலர் மனிதர்களின் சதை மீதான வக்கிரங்களும் வித்தியாவிற்கு நடைபெற்றது போன்ற குற்றங்களை இந்த சமூகத்தில் விளையாடிவிட்டுச் செல்வதற்கு மைதனம் அமைந்து விட்டது.

இதற்கான போதைப் பொருட்களும், போதை வஸ்துக்களும் கடைநிலையிலேனும் ஒரு தமிழ் மகனால்தான் வியாபாரப்படுதப்படுகின்றது என்ற யதார்தத்தை ஏற்றுக்கொண்டு அதனை கருவறுக்க முயல்வோம். நமது இளைஞர், மாணவர் சமுதாயத்தை இந்த சிறகடித்து சீரழிக்கும் விடயங்களிலிருந்து காப்பாற்றுவோம். தொடரச்சியான தொடர்பாடல்களும் தனிமையைத் தவிர்த்த தொடர்புகளும் (அதுதான் மிகவும் தேவையான நேரத்தில் கைத் தொலைபேசி மூலமான தொடர்புகளும் சரியான முறையில் அறிவுபூர்வமாக பயன்படுத்தல்) இப்படியான காமுகர்கள் தமது வக்கிரங்களை சமூகத்தின் மீது திணிக்க வாய்ப்புக்களை குறைப்பதற்கு ஏதுவாக இருக்கும். மாறாக வெட்டியான செய்திப் பரிமாற்றத்திற்கும், முகப் புத்தகத்தில் லயிற்கும் 'like'  களான பாவனைகள் இந்த விரைந்த  மோபைல் தொழிநுட்பத்தினால்  மக்கள் பயன் பெறப்போவதில்லை.

இசைப்பிரயாவை தொடர்ந்தும் துயிலுரிந்த சில ஊடகங்களும், இணையங்களும் இங்கேயும் வித்தியாவை துயிலுரிந்து தமது இணையத்தை அதிகளவில் பார்க்கின்றனர் என்ற எண்ணிக்கையை காட்ட முயலும் வியாபார வக்கிரச் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கன. கூடவே இந்தக் குற்றச் செயலுடன் தமது அரசியல் முரண்பாட்டு இலாப நஷ்டங்களை சரிசெய்ய பொய்மைப் போட்டோக்கள் மூலம் நிரூபிக்க முயலும் நாகரிகமற்ற செயற்பாடுகளும் மக்களின் உணர்வலைகளை கொச்சைப்படுத்துவதாகவும், மழுகடிப்பதாகவும் அமைகின்றன. இது போன்ற விடயங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அம்பலப்படுதப்பட்டு இதில் ஈடுபடுபவர்கள் அந்நியப்படுத்தப்பட வேண்டும்.

விழிப்பாக இருப்போம்! விபரமாக இருப்போம்!! சமூகமாக வாழ்வோம்!!! இதற்கு சமூகமாக நியாயங்களுக்காக போராடுவோம்.

 (Saakaran) (May 23, 2015)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com