Contact us at: sooddram@gmail.com

 

ஈழத் தமிழர்களின் விடிவெள்ளி!

வருங்கால தமிழ்நாட்டு முதலமைச்சர்!!

புலன்பெயர்ந்த தமிழர்களின் தேசியத்தலைவர்!!!

உலகின் ஒரேயொரு தூய தமிழன் சீமான் அவர்களுக்கு……

(பச்சைத் தமிழன்)

சமீபகாலமாக உங்களைக் கவனித்து வந்ததில், உங்களை மிஞ்ச யாருமே இல்லை என்னும் அளவிற்கு, உங்களது பேச்சுக்களும் நடவடிக்கைகளும் இருக்கின்றன. மறைந்தும் மறையாத தேசியத்தலைவர்? பிரபாகரனுக்கு அடுத்தபடியாக நீங்கள் தான் எமது கண்களுக்குத் தேசியத் தலைவராகத் தெரிகின்றீர்கள். வையாபுரி கோபாலசாமி, நெடுமாறன், திருமாவளவன், ராமதாஸ், ஈழத்தவர்களான உருத்திரகுமார், வினாயகம்? நெடியவன்? போன்றவர்களெல்லாம் உங்கள் கால்தூசுக்கும் பெறமாட்டார்கள். இவர்களை நம்பி எந்தப் பிரயோசனமும் இல்லை என்பது எமக்குப் புரிந்து விட்டது. விரைவில் பெரும்படை ஒன்றைத் திரட்டிக்கொண்டு வந்து, வன்னிக் காட்டில் இருந்துகொண்டு இலங்கை இராணுவத்துக்குப் பதிலடி கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

மறைந்த தேசியத்தலைவர்? பிரபாகரன் அவர்களுக்கு உணர்ச்சியாகப் பேசத் தெரியாது. மாவீரர்தின உரை நிகழ்த்தும் போது அவர் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் தெரியாது. எழுதிக் கொடுப்பதை எழுத்துக்கூட்டி வாசிப்பதனால் அவர் முகத்தில் சரியாக வாசித்து முடித்து விட வேண்டுமென்ற படபடப்பு மட்டும் தான் காணப்படும். ஆனால் நீங்களோ உணர்ச்சிப் பிளம்பு. வாய்ச் சொல் வீரன். நீங்கள் பேசும்போது வார்த்தைகள் வரிசைகட்டி வருகின்றன.

பழைய தேசியத் தலைவருக்குப் படிப்பறிவும் இல்லை. அத்தோடு அவரது தந்தை வழி அவரொரு மலையாளி. அதனால் அவர் தமிழ் வாசிக்கத் திக்குமுக்காடுவது இயல்புதான். அவர் தலைமையில் எமது போராட்டம் தோற்றுப் போனது. ஆனால் நீங்களோ ஒரு தூய தமிழன். அதோடு பட இயக்குனர். அறிவாளி. பேச்சாற்றல் மிக்கவர். உங்கள் தலைமையில் எமது போராட்டம் வெல்வது நிச்சயம். நம்புங்கள் தமிழீழம் நாளை மலரும் என்று பாடி வைத்தது உங்களை நம்பித்தானோ என்னவோ?

கடலூரில் உங்களது கட்சி சார்பாக நடத்தப்பட்ட மாவீரர்தின கொண்டாட்டத்தில் நீங்கள் பேசிய பேச்சை காணொளியில் பார்க்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதைப் பார்த்த போது நான் மெய்சிலிர்த்துப் போனேன். உங்களது முதலமைச்சர் கனவையும் பேச்சோடு பேச்சாகப் போட்டு உடைத்து விட்டீர்கள். 'ஐந்து வருடங்கள் என்னை சிறையிலிட்டால் அடுத்த முதலமைச்சர் நான் தான்' என்ற உங்கள் பேச்சு உலக மேடைப்பேச்சு வரலாற்றிலே யாரும  உபயோகித்திராத வீரவசனம். அந்த உங்கள் முதலமைச்சர் ஆசை, தமிழ்நாட்டிலுள்ள பலருக்கு வயிற்றில புளியைக் கரைத்துவிட்டது. ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த். வையாபுரி கோபாலசாமி, ஸ்ராலின் மற்றும் நடிகர் விஜய் போன்றவர்கள் உங்களையிட்டு எச்சரிக்கை கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். உங்களை ஐந்து வருடம் சிறையில் போட்டால் நீங்கள் முதலமைச்சராக வந்து விடுவீர்களோ எனப் பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் உங்களை நாலு வருடம் மட்டும் சிறையிலிடலாமா என அரச தலைமை சிந்திக்கத் தொடங்கி விட்டதாம்.  நீங்கள் முதலமைச்சராக வந்துவிட்டால் இலகுவாகத் தமிழீழம் கிடைத்து விடுமே என சிங்களப் பேரினவாதிகள் அச்சம்கொள்ளத் தொடங்கிவிடார்கள். புலன் பெயர்ந்ததுகள் பூரித்துப்போய் இருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சியில் சேராதவர்கள் நல்ல தாய் தகப்பனுக்குப் பிறக்காதவர்கள் என்கின்ற பேச்சுத்தான் எம்மை வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்றுவிட்டது. எமது தாய் தகப்பனின் மானத்தைக் காப்பாற்றுவதற்காக நான் உடனடியாக நாம் தமிழர் கட்சியில் சேர முயன்று வருகிறேன். தயவுசெய்து நாம் தமிழர் கட்சியின் இலங்கை முகவரியை தெரியத்தரவும். உங்கள் பேச்சுப்படி பார்த்தால் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்திராத பிரபாகரன் உட்பட வி.புலிகள் அனைவருமே நல்ல தாய் தகப்பனுக்குப் பிறந்திருக்கவில்லை. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, கருணாநிதி, உட்பட தமிழ்நாட்டுத் தலைவர்கள், மற்றும  ாம் தமிழர் கட்சியில் சேராத அனைத்து மக்களுமே தங்கள் தங்கள் பெற்றோர்களையிட்டு வெட்கித்துக் கொள்ள வேண்டும்.

பேச்சின் நடுவிலே 'பிரபாகரனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?' என்ற வினாவினை இந்திய அரசை கேட்டீர்கள். நல்ல கேள்விதான் கேட்டீர்கள். இப்படியான புத்திசாலித்தனமான கேள்வி கேட்கின்ற துணிச்சல் யாருக்குமே வராது. ஐந்தாறு வருடங்களுக்கு முன் ஈழத்தமிழர் பற்றியே அறிந்திருக்காத உங்களது அரசியல் அறிவு இந்திய அரசுக்குக் கிடையவே கிடையாது. இந்திய அரசுக்குப் பிரபாகரனைப் பற்றித் தெரிந்ததெல்லாம் பிரபாகரன் நம்பத்தகாத ஆசாமி. பிரபாகரன் ஒரு பயங்கரவாதி. பிரபாகரன் ஒரு சர்வதேச போதைவஸ்து வியாபாரி. பிரபாகரன் ஒரு கள்ளக்கடத்தல்காரன். பிரபாகரன் ஈவிரக்கமற்ற கொலையாளி. மேற்கத்திய நாடுகளின் கைக்கூலி.

கனடிய குடிவரவு அதிகாரிகள் தடுத்து வைத்த போது பிரபாகரன் பற்றிய பாட்டுப் பாடியதையும் அதற்கு அவர்கள் உனக்கு விசர் இல்லைத்தானே என்னும் பொருள்பட கேட்டதாகவும் பெருமையாகப் பேசினீர்கள். இந்த அசிங்கங்களையெல்லாம் ஏன் மேடையில் சொல்லுகின்றீர்கள். நாளை நீங்கள் முதலமைச்சராக வரும்போது இவையெல்லாம் சாட்சிக்கூண்டுக்கு வந்துவிடுமல்லவா? குடிவரவுத் துறையினர் தடுத்து வைத்திருந்த சில மணி நேரத்துக்குள் வயிற்றைக்கலக்கி மூன்று நாலு தடவை கழிவறை போய்வந்ததை மறைத்தது மாதிரி, பாட்டுப்பாடி விசர்ப் பட்டம் பெற்றதையும் மேடையில் சொல்லாமல் விட்டிருக்கலாம்.       

வி.புலி ஒருவன் தான் கரும்புலித் தாக்குதலுக்குப் போக ஆசைப்படுவதாக பத்து வருடங்களாகப் பிரபாகரனுக்குக் கடிதம் எழுதிவந்ததாக மேடையில் பெருமையாகப் பேசினீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு சம்பவத்தைக் கூறலாம் என நினைக்கிறேன். சாதாரண வி.புலி ஒருவன் தனது பொறுப்பாளரிடம் அண்ணே நான் கரும்புலியாகச் சேரப்போகிறேன் எனக் கேட்டானாம். அதற்கு அந்தப் பொறுப்பாளர் 'டேய் ................... இப்பமட்டும் நீ என்னவென்று நினைக்கிறாய். நாங்கள் எப்ப நினைக்கிறோமோ அப்ப நீ சாக வேண்டிது தான். அதற்குள் ஏன் கரும்புலி செம்புலி என்றெல்லாம் அவசரப்படுகிறாய்.''என்று சொன்னாராம்.      

அநுராதபுரத் தாக்குதலுக்கான பயிற்சியின் போது தேர்வாகாத பெண்புலி பற்றிய கதை ஒன்று விட்டீர்கள். நல்ல கதைதான். உங்களுக்கு நானும் ஒரு கதை சொல்லவா?

2வது உலகமகா யுத்தத்தின் போது ஹிட்லரிடம் 'உங்களது இந்த தொடர் வெற்றிகளுக்காக எதைக் குறிப்பிட்டுச் சொல்வீர்கள்?' என ஒரு ஊடகவியலாளர் கேட்டாராம். அதற்கு ஹிட்லர் தனது இராணுவக் கட்டுக் கோப்பைபற்றிக் குறிப்பிட்டு ஒரு நிரை இராணுவத்தினரைப் பார்த்து முன்னால் போகும்படி உத்தரவு போட்டாராம். முன்னாலோ பெரிய பள்ளத்தாக்கு. உத்தரவுக்குக் கீழ்படிந்து இராணுவ வீரர்கள் முன்னோக்கிப் போய், ஒருவர் பின் ஒருவராக அந்த பள்ளத்தாக்கில் விழுந்து இறந்து கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஊடகவியலாளன் ஓடிப்போய் கடைசியில் நின்ற வீரனிடம் ஏன் இப்படி வீணாக விழுந்து சாகிறீர்கள் எனக் கேட்டாராம். அதற்கு அந்த இராணுவவீரன் 'இவனோடு இருக்கிறதிலும் பார்க்க சாகிறது மேல்'' எனப் பதிலளித்தானாம்.

புரிகிறதா சீ......மானே? 

நாங்கள் மாறமாட்டோம்.  எங்களை மாற்றவும் முடியாது என்றும் கூறினீர்கள். புலிகளின் பணப் பட்டுவாடா இருக்கும்வரை நீங்கள் மாறமாட்டீர்கள் என்பது எமக்குத் தெரிந்த ஒன்றுதான். தென்னமெரிக்க நாடொன்றில் வைத்து கைமாறப்பட்ட பெருந்தொகைப் பணம் பற்றி நீங்களும் கூட்டத்தில் பேசவில்லை. நானும் அதுபற்றி உங்களிடம் எதுவும் கேட்கப் போவதுமில்லை. போதைப் பொருள் வியாபாரத்தில் வந்த புலிகளின் பணத்தைப் பெற்றுக்கொண்டு வந்துதான் நாம் தமிழர் கட்சி ஆரம்பித்தது என்பது உங்களுக்கும் எங்களுக்கும் மட்டுமே தெரிந்த பரமரகசியம். என்ன சிலவேளை வையாபுரியிற்கு புரிந்திருக்கும் ஏனென்றால், அவரும் உங்கள் வழியில் கட்சி ஆரம்பித்தவர்தானே. அதுசரி இந்த நடிகை விஜயலட்சுமி விடயத்தை எப்படி சரிக்கட்டினீர்கள் என்பது தான் எனக்குப் புரியவில்லை. அதுவும் புலிக்காசு தானா? இன்னுமொன்று மறந்தே போய்விட்டது. சிங்கள நடிகை ஒருவரை தொடர்ந்தும் உங்கள் படங்களில் கதாநாயகியாகப் போட்டு படம் எடுத்து வந்தீர்கள் அல்லவா? அந்த சிங்கள நடிகையை வைத்து புது பூஜா ஒன்றும் போடவில்லையா?

இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக இந்திய அகதி முகாம்களில் இருந்து சீரழிந்து போன ஈழத்தமிழர்களை ஏடெறுத்தும் பார்க்காத தமிழகத்துத் தலைவர்களிலும் பார்க்க நீங்கள் எவ்வளவோ மேல். ஏனெனில் நீங்கள் இந்தக் களத்துக்குப் புதியவர்தானே. கடந்த ஐந்தாறு வருடங்களாகத் தானே ஈழத்து மேடைகளில் சீ...மானின் நாடகங்கள்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை தூக்கிலிடக் கூடாது என ஒரு சில போராட்டங்கள் செய்தீர்கள். எனக்கு ஒரு சந்தேகம். ஒட்டுமொத்தமாக உலகில் மரணதண்டனையே கூடாத  என்கிறீர்களா? அல்லது ராஜீவ் வழக்கில் மட்டும் மரணதண்டனை கூடாது எனச் சொல்லுகின்றீர்களா?   உலகில் மரண தண்டனையே இருக்கக் கூடாது என்று சொல்வீர்களானால  ுலிகளால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு மரண தண்டனைகள் வழங்கப்பட்ட சமயங்களில் எல்லாம் எங்கே இருந்தீர்கள். 1990 ல் புலிகளின் துணுக்காய் வதைமுகாமில் மட்டும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்களுக்கு புலிகளால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதே. நூற்றுக் கணக்கான தமிழ்ப் பெண்களுக்கும் புலிகள் மரண தண்டனை நிறைவேற்றினார்களே அப்போ எல்லாம் எங்கே ஐயா இருந்தீர்கள். அந்தக் காலப்பகுதியில் ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி எதுவுமே அறிந்திராத அறிவிலியாக நீங்கள் இருந்திருப்பீர்கள். இப்போ மட்டுமென்ன?

வி. புலிகளால் வழங்கப்பட்ட ஒரு மரணதண்டனை பற்றிய சம்பவத்தையும் குற்றத்தையும் இங்கு குறிப்பிட்டால் ஏதாவது புரிந்து கொள்ளுவீர்களென எண்ணுகிறேன். 1984 நெல்லியடி என்னும் இடத்தில் ஓர் ஏழைக் குடியானவன், (தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்) குழந்தை பெற்ற தனது மனைவிக்கு சமைத்துக் கொடுப்பதற்காக கோழிக்குஞ்சு ஒன்றைத் திருடிவிட்டார். அவரை இழுத்துக்கொண்டு வந்த புலிகள் மின்கம்பத்தில் கட்டி வைத்து சுட்டுக் கொன்றார்கள். கோழிக்குஞ்சு திருடியதற்காக மரணதண்டனை வழங்கிய புலிகளின் நீதி முறைமை பற்றி அடுத்த கூட்டத்தில் பேசுவீர்கள் என்று நம்புகிறேன். உலகத்திலேயே கோழிக்குஞ்சு திருடியதற்காக மரணதண்டனை வழங்கிய ஒரே இனம  தமிழ் இனம் தான் என்றும், ஒரே தலைவன் பிரபாகரன் தான் என்றும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.  உலகிலேயே அதிக அளவான மரணதண்டனை நிறைவேற்றிய சமூகம் தமிழ் சமூகம் தான் என்ற பெருமையையும் சேர்த்துக் கொள்ளலாம்.               

தன்மானத் தமிழ் மறவன் உங்களிடம் கேட்டறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்களில் இதுவும் ஒன்று. கச்சதீவு யாருக்குச் சொந்தம்? இந்தியாவுக்கா அல்லது ஈழத்துக்கா கச்சதீவு சொந்தம்? மழுப்பாமல் மறைக்காமல் தெளிவான முடிவை கூறுங்கள். மறைந்த தேசியத் தலைவர் கச்சதீவு ஈழத்துக்குச் சொந்மானது என்று கூறிவந்ததையும் உங்களுக்கு ஞாபகமூட்ட கடமைப்பட்டுள்ளேன். அந்தக் கடற் பிரதேசம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில், ஈழத்துக் கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்ட சம்பவங்கள் எல்லாம் நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

தூத்துக்குடி கொழும்பு இடையேயான பயணிகள் கப்பல் ஆறு மாதம் ஓடினால் தூத்துக்குடி துறைமுகத்தில் தூக்கில் தொங்குவேன் என்று அன்று சவால் விட்டீர்கள். கப்பல் சேவையில் ஈடுபடத்தொடங்கி ஆறு மாதத்துக்கும் மேலாகிவிட்டது. சொன்னதை நீங்கள் வசதியாக மறந்துவிட்டீர்கள். எம்மால் தான் மறக்க முடியவில்லை. கயிறு ரெடியாகத்தான் இருக்கின்றது.

தமிழ் பேசும் இஸ்லாமியர்களும் தமிழர்கள் தான் என்ற அரிய கண்டுபிடிப்பொன்றையும் கடலூர் மேடையிலே அறிக்கையிட்டீர்கள். அவர்கள் தமிழர்கள் தான் என்றால், தமிழீழப் பிரதேசத்தில் வாழ்ந்த இஸ்லாமியர்களை தேசியத்தலைவர் ஏன் சிங்களப் பிரதேசத்துக்குக் கலைத்தார். காலகாலமாக வாழ்ந்த இடங்களில் இருந்து இரண்டு மணி நேர அவகாசத்தில் உடுத்த உடுப்புடன் விரட்டி அடிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்காக ஏன் எந்தத் தமிழ் குரலும் நீதி கேட்கவில்லை.

அந்த பேச்சில் இறுதியாக தேசியத்தலைவருக்கு? வாழ்த்துத் தெரிவித்து, செத்தவனுக்கு வாழ்த்துச் சொன்ன உங்கள் பகுத்தறிவு, ஆஹா.

பிரபாகரன் சயனைற் இல்லாமல் இராணுவத்திடம் பிடிபட்டதும், இராணுவத்தால் சயனைற் வழங்கப்பட்டபோதும் அதை உட்கொள்ளாமல் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எத்தனித்த மண்டியிடாத மாவீரத்தனம் பற்றியும் பிறிதொரு சமயம் எழுதுகிறேன்.

இலங்கைத் தமிழருக்கு இந்த நாட்டில் என்ன பிரச்சனை?

அதை எவ்வாறு தீர்த்து வைக்கலாம்? இது சம்மந்தமாக உங்களுக்கு ஏதாவது உருப்படியான, அடிப்படையான அறிவு இருக்கிறதா?

உங்களது அநாகரீகமான மேடைப் பேச்சுக்கான விடயம் என்பதால் நானும் சற்று அநாகரீகமாக எழுத வேண்டி ஏற்பட்டுவிட்டது. இங்கு எழுதப்பட்டுள்ள கேள்விகள், சந்தேகங்களுக்கு அடுத்த கூட்டத்தில் பதிலளித்து, நீங்கள் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவர் என்பதை நிரூபித்துக் கொள்ளுங்கள். ஆனாலும் உங்களை விடமாட்டேன். மேலும் மேலும் தொடரும்.

செந்தமிழ் சீமானே வா வா.

தமிழீழம் பெற்றுத் தா தா.

நீ செந்தமிழன் என்றால் நான்

பச்சைத் தமிழன்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com