Contact us at: sooddram@gmail.com

 

ஓடிப்போன வரதர் மீண்டும் வருவாரா ?

 இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது தமிழர்களின் அரசியல் வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒன்றாகும். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னரே அதிகாரப்பரவலின் அலகானது மாகாணமாகி, மாகாண சபை முறை உருவாக்கப்பட்டு அதன் பின்னர் வடக்கும் கிழக்கும் தற்காலிகமாக இணைந்து ஓரலகாகியது. தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று உண்மையாகவே எண்ணுபவர்கள், கொடிய யுத்தம் தொடரக்கூடாது என்று எண்ணுபவர்கள்,  தங்களது தனிப்பட்ட பழிவாங்கும் எண்ணங்களை ஒருபுறம் தள்ளிவிட்டு, அனைவரையும் ஒன்றிணைத்து,  இந்த சந்தர்ப்பத்தை சரிவர பயன்படுத்தி தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுக்கு வழி செய்திருக்க வேண்டும்.


உண்மையிலேயே அப்பேற்பட்ட ஒரு பொன்னான சந்தர்ப்பமானது EPRLF அமைப்பினருக்கே எட்டியது. அந்த நேரத்திலே இந்திய ராணுவம் இலங்கையிலே நிலை கொண்டிருந்தது. இலங்கை இராணுவமோ முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்தது. அபிவிருத்திக்கென இந்தியா கோடிக்கணக்கான ரூபாய்களை அள்ளிக்கொடுத்தது. EPRLF இன் செயலாளர் நாயகமாக தோழர் பத்மநாபா இருந்தபோதிலும், EPRLF  இன் வளர்ச்சியிலோ அல்லது கஷ்டங்களிலோ எந்த விதத்திலும் சம்மந்தமில்லாத வரதராஜப்பெருமாளே முதலமைச்சர் பதவியை தட்டி பறித்துக்கொண்டார். அது கூட பரவாயில்லை என்று ஏற்றுக்கொண்டாலும்,  மாகாண சபையை ஒழுங்காக நடத்தினார்களா என்றால், இல்லவேயில்லை. தாங்கள் பழைய EPRLF இல்லை என்று கூறியவர்கள், புலி வேட்டை என்று கூறி EPRLF இன் பொட்டம்மானான ஜேம்ஸின் (சிவா, சாகரன், அலம்பல் சிவா) உத்தரவுக்கிணங்க,  பொதுமக்கள், கல்விமான்கள், மாணவர்களை கொன்று குவித்தார்கள்.

இதை தொடர்ந்து மக்களின் சீற்றத்துக்கு உள்ளாகியவர்கள் சாதாரண கீழ் மட்ட தோழர்களை தவிக்க விட்டுவிட்டு இந்தியா பறந்தார்கள். அவ்வாறு பறந்த பெருமாள் இடைக்கிடை இலங்கைக்கு வந்து மீண்டும் ஏதாவது பதவிகள் கிடைக்குமா என நோட்டம் பார்த்தார். மாகாண சபை காலத்து பயங்கர யுகத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை. இதனால் தான் மக்கள் திரும்ப திரும்ப நுPசுடுகு ஐ நிராகரிக்கிறார்கள் என்பதை உணர்ந்த பெருமாள் இனிமேல் திரும்பி வருவதில்லை என மீண்டும் சென்றார். தற்பொழுது புதிய அரசு உருவாகி சந்திரிக்கா அம்மையார் முக்கிய பங்கு செலுத்துகின்ற நிலையில்,  இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இந்தியாவில் தங்கியிருக்கும் பெருமாள் மீண்டும் வர இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (நன்றி: சலசலப்பு)

மேற்படி செய்தி தொடர்பாக சில மேலதிக தகவல்கள்

(சமரன்)
வரதர் வரமாட்டார். சம்பந்தப்பட்டவர்கள் அச்சப்பட வேண்டாம். அவர் இந்தியாவில் உழைத்து வாழுகிறார். முன்பு போல் மாட்டுப் பண்ணை வைத்தாவது உழைத்துச் சாப்பிடுவார். பிள்ளையைக் கடத்தியோ, வெள்ளைவான் விளையாட்டோ இவர் செய்யப்போவது இல்லை. 1970 களிலிருந்து ஈழ மக்களின் விடுதலையுடன் தன்னை இணைத்து செயற்படும் வரதர் பற்றி அவதூறு கிளப்புவது ஒன்றும் இவர்களின் புதிய வேலை இல்லை. தமிழ் மக்கள் அரங்கத்தில் சகலரையும் இணைத்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயன்ற நற் செயற்பாட்டை வரலாற்றில் இலகுவாக அழித்துவிடவும் முடியாது. ரெலோ மீதான புலிகளின் தாக்குதலின் போது வெள்ளைக்கொடி கட்டி கிட்டுவிற்கு சமாதான, சகபாடியாக செயற்பட்டவர்கள் யார் என்பது அன்றைய யாழ் மக்களுக்கு தெரியும். இதன் பின்பு ஈபிஆர்எல்எவ் மீதான தாக்குதலுக்கு முன்பே ஈழத்தை விட்டோடி மறைந்தார்கள். பின்பு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்பு ‘தம்பி’ யை முதல் அனுப்பி தாமே ஈபிஆர்எல்எவ்  என்று முந்தி உரிமைகோர யாழ்பாணம் வந்த போது புலிகளால் தம்பி கொல்லப்படும்வரை இவர்கள் கிட்டுவின் உளவாளிகள். இதன் பின்பு பிரபாகரனின் மறு அவதாரங்களாக செயற்பட்டதே வரலாறு. இணைந்த மகாண சபையை இல்லாமல் செய்ய ஒரு வளத்தில் இவர்களையும் மறுவளத்தில் புலிகளையும் பிரேமதாசாவால் ஒரே மாட்டு வண்டியில் பூட்டி வெற்றி கொள்ள ஒத்துழைத்த பெருமையும் இவர்களையே சாரும்.  மாகாணசபைக்கு எதிராக செயற்படுத்துவதற்காக பிரேமதாசாவால் இறக்குமதி செய்யப்பட்டு, ஏறத்தாள 25 வருடங்களாக சிங்கள அரசின் பாதுகாப்புடன் இருந்து கொண்டு பிழைப்பு நடத்தும் அரசியல் மேதைகளுக்கு, மைத்திரியும் ஏதாவது போடுவார். அவசரப்பட வேண்டாம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com