Contact us at: sooddram@gmail.com

 

இனப்பிரச்சனை தீர வேண்டும் என்று மனசார விரும்புகிறார்களா?

(சுகு-ஸ்ரீதரன்)

தமிழ் இயக்கங்களின் போராட்டம் தான் பிரதானமாக இலங்கையில் அதிகாரப்பகிர்விற்கான அக்கறைகளை தோற்றுவித்தது. ஆனால் அது இலங்கையில் என்ன நிலையில் இருப்பினும் 13 வது திருத்தத்தை உருவாக்குவதில் இந்த இயக்கங்களின் போராட்டமும் இந்தியாவின் அரசியல் அழுத்தமும் முக்கிய பங்கு வகித்தன. ஆனால் அதற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் பலர் இன்று மக்களின் பிரதிநிதிகளாகியுள்ளனர். இவர்கள் அதிகாரப் பகிர்விற்கான இயக்கத்தை உணமையிலேயே முன்னெடுத்துச் செல்கிறார்களா. அதுதான் இல்லை. நாம் ஜெனிவாவில் பேசுகிறோம். அமெரிக்க ராஜாங்கச் செயலகத்துடன் பேசுகிறோம். தென்னாபிரிக்காவுடன் பேசுகிறோம் என்று புலுடாவிட்டுக் கொண்டு திரிகிறார்கள்.

உள்ளூரில் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்பதை விட இருக்கும் அதிகாரப்பரவலாக்கல் கட்டமைப்பை யதார்த்தமாக்குவதை வி  உலகம சுற்றுவது இவர்களுக்கு சௌகரியமாக இருக்கிறது. பிரச்சனைகளுக்குத் தீர்வு என்று வந்துவிட்டால் தம்முடைய சௌகரியங்கள் கெட்டு விடும் என இவர்கள் அஞ்சுகிறார்கள். பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படுவதை விட அதனை தக்கவைப்பதையே இவர்கள் உளமார விரும்புகிறார்கள். மக்களின் அன்றாட பிரச்சனைகள் என்று அளவு கணக்கற்று இருக்கின்றன. வறுமை, பாதுகாப்பின்மை, அனாதரவு நிலை, நிலம், வீடு, சுகாதாரம், பாதை,போக்குவரத்து, கல்வி, சமூகப்பிரச்சனைகள் என ஏராளம். தமக்குள் எந்த புரிதலும் இல்லாமல் தமது தனிப்பட்ட நலன்கள் சார்ந்து இங்கும் இவர்கள் தேர்தல் சமயங்களில் தனிநாடு, சுயநிர்ணயம், இனமானம் பற்றி பேசுவார்கள். இவர்களது இந்த அரசியல் உள்ளூரில் மக்களுக்கு கிடைக்கவேண்டிய ஜீவாதார நலன்களைப் பாழடித்து விடுகிறது.

எமத  மக்களுக்குத் தேவை சாமானிய மக்கள் தலைவர்களே. வடஅமெரிக்க மேற்கத்தைய மற்றும் புலம்பெயர் அதிகாரசக்திகளின் கடாட்சத்துடன் தமத  ொந்த அலுவல்களைப் பார்ப்பதற்கான நடைமுறைகளே பெருமளவில் காணப்படுகின்றன. ஒரு சிலருக்கு சமூக அக்கறை இல்லை என்றில்லை. எனினும் அது ஆக்கபூர்வமாக, கனதியாக சமூகத்தை எட்டவில்லை. பேரழிவைச் சந்தித்த சமூகத்தை மீண்டெழச்செய்வதற்கு பதிலாக விபரீதங்களுக்குள் சிக்கவைக்கும் போக்கே அதிகமாக காணப்படுகிறது. வன்முறையற்ற, ஜனநாயக பூர்வமான சுதந்திரத்திற்கான இடைவெளிகளை உருவாக்குவதற்கான விருப்பங்கள் காணப்படவில்லை.

தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவமும் சரி, மாகாண சபை, உள்ளூராட்சி பிரதிநிதித்துவமும் சரி வெறும் அதிகாரங்கள் பதவிகள் என்பவற்றுக்கப்பால் மக்களுக்கு எத்தகைய பலாபலன்களை ஏற்படுத்தியுள்ளன? 30 ஆண்டுகால இழப்புக்களுக்கு வரவில்லை. அது பற்றிய கரிசனைகளும் இல்லை. தமது பதவிகள் இது தான் தமிழ  ேசிய கூட்டமைப்பின் முக்கிய பிரச்சனை. பதவிகள், அதிகாரங்கள் மக்களுக்கானவை அல்ல. தமது சொந்த தனிப்பட்ட நலன்களை முதன்மைப்படுத்தியவை.

ஜனநாயக உணர்வு கொண்ட இயக்கங்களில் இருந்தவர்களுக்கு தவறுகள் விதிவிலக்குக்களுக்கு அப்பால் சமூக நலன்களே முதன்மையானவையாக இருந்தன. சமூக விடுதலை தியாகம் என்பனவெல்லாம் இன்று கேள்விக்குரியனவாகhறிவிட்டன. இன்று எல்லாமே அர்த்தம் இழந்து போய்விட்டன. சமூக விடுதலை, தியாகம் என்பனவெல்லாம் இன்று கேள்விக்குரியனவாக மாறிவிட்டன. சுய நலமும் பதவி வெறியும் கொண்டவர்களுக்கே இன்று சமூக மரியாதையும் இருக்கிறது. போராடியவர்கள் இன்று தீண்டத்தகாதவர்களாகப் போய்விட்டார்கள். எமது சமூகத்தின் ஆதிக்க மனோநிலை அப்படித்தான் இருந்தது. இருக்கிறது.

இன்று தமிழ் அரசியல் பெருமளவிற்கு அயோக்கியர்களின் கூடாரம் என்று கூறுவதில் எனக்கு எந்த கூச்ச நாச்சமும் இல்லை. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பார்கள். 30 வருடம் யுத்தத்தையும் அழிவையும் சந்தித்த ஒரு மக்கள் சமூகத்தின  மத்தியில் வேலை செய்பவர்கள் குரோதங்கள், விரோதங்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு குறைந்த பட்ச இணக்கப்பாட்டுடன் வேலை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் உள்ளூரிலும் புலம்பெயர் தளத்திலும் அதனை மருந்துக்கும் காணமுடியாது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சொந்த நிலத்தை விட்டு ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சமூகம் தொடர்பாக இவர்களுக்கு எந்த பொறுப்புணர்ச்சியும் கிடையாது. அது ஓடித்தீரும் வரை அரசியலை நடத்துவோம் என்றவாறே இவர்களது செயற்பாடுகள் அமைகின்றன. உள்ளூரில் ஒரு கண்ணியமான வாழ்வு என்பது இவர்களது மனங்களில் இல்லை. அவலம் இவர்களின் பிழைப்பாகிறது.

இலங்கைத் தமிழர்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் சிறப்பான வாழ்வொன்றை கட்டியெழுப்ப இவர்கள் பங்களிக்க முடியும். ஆனால் இவர்கள் அதனை விரும்பவில்லை. இலங்கையின் ஆட்சியாளர்களும் இலங்கை பல்லினங்களின் தேசமாக மிளிர்வதை விரும்பிவல்லை.

வெ'வ்வேறு சமூக கலாச்சார தேசிய அடையாளங்கள் அவற்றின் முக்கியத்துவம் இன்றைய உலகியல் யதார்த்தம் அவர்களுக்குத் தெரியாதென்றில்லை. அவர்கள் தமது சொந்த அதிகாரத்திற்காக 'ஒரேநாடு ஒரே மக்கள்' என்கிறார்கள். அவ்வாறு அச்சில் வார்த்தது போல் மனிதர்கள் இருப்பதில்லை.  பேரினவாதத்திற்கு சிறுபான்மை இன சமூகங்கள் கீழப்படியவேண்டும் என்று வேறு வார்த்தைகளில் சொல்லப்படுகிறது. இங்கு அதிகாரத்திற்கு பேரினவாதம் தேவைப்படுகிறது. படைபலம் தேவைப்படுகிறது. இன்றைய அதிகார அகங்காரத்தின  உலகப பொதுவான போக்கு இத்தகையதுதான்.

ஆனால் பெருவாரியான மக்களின் சுதந்திரம் ஜனநாயகம் பற்றியே இப்போது பேச வேண்டியிருக்கிறது. இன சமூகங்களின் சுதந்திரமான ஐக்கியமே பாதுகாப்பான வாழ்வையும் பொருளாதார சமூக முன்னேற்றத்ததையும் ஏற்படுத்தக் கூடியது. செயற்கையாக உருவாக்கப்பட்ட சந்தேகங்களின் அடிப்படையில் ஒரு நாடு முன்னேற முடியாது.

1970 களின் பிற்பகுதியலும் முற்பகுதியிலும் தோற்றுவிக்கப்பட்ட சூழ்நிலைகள் எத்தகைய விபரீதங்களை ஏற்படுத்தியுள்ளன என்பது வரலாறு. ஆனால் அதிகாரப் பேராசை இந்த விபரீதங்களை நோக்கியே அழைத்துச் செல்கிறது. இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் தலையெடுத்த இந்த போக்கு ஒரு விசச் சுழல் போல் திரும்ப திரும்ப வந்து கொண்டிருக்கிறது. எமது சமூக வாழ்வை அரித்தழித்து வருகிறது. இலங்கையின் அனைத்து இன சமூகங்களும் எட்டியிருக்க கூடிய அரிய சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டிருக்கின்றன.

கடந்து வந்த 30 வருடங்களில் இழக்கப்பட்ட மனித உயிர்களின் இன்றைய பெறுமதி என்னவென்றால் பெருவெப்பம் நிறைந்த பாலைநிலம் ஒன்று மனங்களில் விரிகிறது. 'இது வரை கால வரலாறுகள் யாவும் வர்க்க போராட்டத்தின் வரலாறே' என்று கம்யூனிஸ்கட்சி அறிக்கையின் முதல் வரியாக மார்க்ஸ் ஏங்கல்ஸ் பிரகடனம். ஆனால் இலங்கையின் இன சமூக ஜனநாயக உரிமை களுக்காகப் போராடியவர்களுக்கு இன்று என்ன சமூகப் பெறுமானம் இருக்கிறது என்பது முக்கியமான கேளிவியாகும்.

அனேகமான அறம் சார் போராட்டங்களின் பின்னரும் அதற்கு சம்பந்த மில்லா  ூட்டமொன்று அதிகாரத்திற்கு வருகிறது. விதி விலக்காகவ  ோராட்டத்திற்கும்  புதிய அதிகாரத்திற்கும் தொப்புள் கொடி உறவு காணப்படுகிறது. அதற்கு இலங்கையின் சுதந்திர இயக்கமும் அதற்கு பின் வந்த அதிகாரமும் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டமும  உருவாகிய அதிகாரங்களும் விதிவிலக்கில்லை. சுதந்திரம் ,ிடுதலையென எழுச்சி கொள்பவர்கள் எழிலார்ந்த கனவுகளைக் கொண்டிருப்பார்கள். ஆனால் நம் கண்முன்னேயே கனவுகள் சிதைவையும் கண்டோம். எனவே சுதந்திர இயக்கத்தின் செல்நெறி என்ன என்பது பற்றி நாம் சிந்தித்தாக வேண்டும்.

இப்போதைய சமூக அக்கறையற்ற களவாணி  அரசியலுக்கு மாற்றான ஒரு பாதையை நாடளாவிய அளவில் உருவாக்குவது எவ்வாறு என்பது பற்றி சிந்தித்தாகவேண்டும்.எத்தகைய பெரிய வரலாற்று துன்பியல் நிகழ்ந்திருக்கிறது என்ற பிரக்ஞை இல்லாமலே வாழ்கிறோம். சமூகப் பிரக்ஞையுடன் போராடியவர்கள் மடிந்த பூமியில  பரவலாக வெட்க கரமான ஆசாடபூதிகளும், சுயநலமிகளும் மக்களின் சார்பாக அதிகாரம் பெற்றுள்ளார்கள். இத  ுன்னைய  நிலையை விட மோசமானதையே ஸ்தாபிக்கும் . கபடதாரிகளும்- களவாணிகளும் மக்களின் சார்பாக அதிகார சக்திகள் ஆகும் போது சமூக பண்பாட்டு மறுமலர்ச்சியோ பொருளாதார அபிவிருத்தியோ ஏற்பட சாத்தியமில்லை.

(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com