Contact us at: sooddram@gmail.com

 

மண்டெலாவும் நாமும்

1970களின் நடுப்பகுதியிலிருந்து அங்கோலா, சிம்பாபே, நமீபியாவில  ிறவெறி, காலனி ஆதிக்கத்திற்கெதிரான இயக்கங்கள் வலுப்பெற்றன. ஜனநாயகப் புரட்சிக்குப் பின்னர் ஜனநாயகம் பேணப்பட்டதா? அது வரலாற்றின் ஒரு மாறுதல் கட்டம். வரலாறு அவ்வாறு தான் இயங்குகிறது. அந்த இயக்கவியல் புரிந்து கொள்ளப்படவேண்டும். மார்க்ஸ், காந்தி, சே, மண்டெலா போன்ற தலைவர்கள் உலகளாவிய அளவில் நேசிக்கப்பட்டிருக்கிறார்கள . அந்த நேசம் எங்கிருந்து வருகிறது. இந்த மனிதர்களின் ஜனநாயக உணர்வு,  மனித குலத்தின் மீது பேரன்பு இவற்றில் இருந்து தான் வருகிறது. மனிதர்களுக்கு சுதந்திரமான வாழ்வை ஏற்படுத்த அவர்கள் விரும்பினார்கள்.

மண்டெலா போன்ற தலைவர்கள் இல்லாமல் போனது மோசமான தனிமை உணர்வை ஏற்படுத்துகிறது. மக்கள் நேயமற்ற கெடுபிடியான ஆட்சித் தலைவர்கள் நிறைந்  உலகச  சூழலில் நெல்சன் மண்டெலா போன்றவர்களின் மறைவு நிரப்பமுடியாத வெற்றிடத்தை விட்டுச் செல்கிறது. வன்மமும், பகை உணர்ச்சியும் மலிந்த எமது சமூகச் சூழலில் கூட மண்டெலாவின் அணுகுமுறைகள் விரும்பப்படுமா?

நாங்கள் பெரும்பாலும் அநீதிகள் யார் யாருக்கு எந்தெந்த சமூகத்திற்கு நேர்கிறது இதில் எமக்கென்ன லாபம் என்று பார்த்து நாடகபாணியில் கண்டிப்பவர்கள். கருத்துச் சொல்பவர்கள். அத்தகைய சூழலில் மண்டெலாவிற்கு என்ன முக்கியத்துவம் இருக்கும்? அவர் சகல இனக் குழுக்களுடனும், சக தென்னாபிரிக்க-ஆபிரிக்க மக்களுடனும் உலகத்துடனும் எவ்வாறு உறவு பூண்டார் என்பதையும் நாம் கற்றுக் கொள்ள முயலவேண்டும்.

பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு தென்னாபிரிக்க அணுகுமுறை யாழ்மேலாதிக்க சிந்தனைமுறைக்கு ஒத்து வருமா? இது முக்கியமான கேள்வி. தென்னாபிரிக்க அனுபவங்களைப் பார்க்கும் போது எமது போராட்டவரலாறு அதன் தார்மீக வலுக்கள் பற்றிய கேள்விகளைத் தவிர்க்கமுடியவில்லை. போராட்ட மரபு என்று எதுவும் மிஞ்சவில்லை. எல்லாம் சிதிலமாகியுள்ளன. போராட்ட அறமரபு சிதைந்து சுத்துமாத்துப் பேர்வழிகளின் ஆதிக்கம் எமது அரசியல் அரங்கில் ஆங்காங்கே விரவிக்காணப்படுகிறது.

தென்னாபிரிக்க ஆட்சியில் முற்போக்கு ஜனநாயக சத்திகள் இன்றளவில் இருக்கின்றன. அங்கு வெறுப்புணர்வு அரிதானது. இங்கிதம் இருக்கிறது. கூட்டுணர்வு காணப்படுகிறது. மண்டெலா தவிர பெருவாரியான தென்னாபிரிக்கர்களால  ேசிக்கப்படும் இன்னொரு  உலகத்தலைவர் இருக்கிறார் என்றால் அவர் பிடல் தான். ஈழத்தமிழர் எமத  அரசியல் வெறுப்புணர்வால் நிரம்பியது. தென்னாபிரிக்கர்களின் வாழ்க்கை பாடல், ஆடல் கலைநயத்துடனும் வெளிப்படைத்தன்மையுடன் இணைந்தது. எமக்குள் ஆதிக்கம் வகிப்பது இருண்டு இறுகியது. போலியானது. உம்மணா மூஞ்சித்தனமானது.

நமக்குள்ளேய  ௌ;வேறு பிரதேசங்கள், சக சமூகங்கள், அண்டை அயலார் நாடுகள் மீது ஈடுபாடற்றது. பலசந்தர்ப்பங்களில் வெறுப்புணர்வு கொண்டது. உள்ளார்ந்து சொந்த சமூகத்தினுள்ளேயே பண்பாட்டின் பேரில் தீண்டாமை அநீதிகளை வைத்திருப்பது. இவற்ற  ுலம்பெயர் நாடுகள் வரை காவிச் சென்றிருப்பது.  சகிப்புத்தன்மை குறைவானது.

எங்களை விட்ட விண்ணர்கள் இல்லை என்று இறுமாந்திருப்பது, எங்களைவிட வேறு சக மனிதர்களும ,உலக மனிதர்களும் துன்பங்களை அனுபவித்திருப்பார்கள் ,அனுபவிக்கிறார்கள் என்பதில் அக்கறை இல்லாத பலசந்தர்பங்களில்  ஒத்துக் கொள்ளாத மனம்.

இந்த நிலை மாறுமா? மாறவேண்டும். வேறுபாடுகள் யதார்த்தமானவை என்று ஏற்றுக்கொண்டு புருவங்களை நெரிக்காமல் பரஸ்பர நல்லெண்ணத்துடன் செயற்பட முன்வரவேண்டும். பாசாங்கான வக்கிரத்தனமான அல்லது உண்மையான உணர்ச்சிவசப்படுதலுக்குப்பதிலாக மனித நேய சமூக பிரக்ஞை உணர்வுடன், தருக்க பூர்வமான சிந்தனை முறையுடன் பரஸ்பர நல்லெண்ணத்துடன் நமக்குள்ளும் நமக்கு வெளியிலும் செயற்பட முன்வரவேண்டும். உலகமானிடத்தின் ஒரு பகுதியினர் தான் நாமும் என்ற சிந்தனை வலுப் பெற வேண்டும்.

உலகம் பெருந்திரளான உலக மனிதர்களுக்குச் சொந்தமானது என்பதை அடிக்கடி நிறுவுபவர்கள் இத்தகைய வரலாற்றின் மனிதர்கள் தான். கேடுகெட்ட சர்வாதிகாரிகள ,இன-நிறவெறியர்கள் ,ஆக்கிரமிப்பாளர்கள் உலகம் குறிப்பிட்ட ஒரு சிறுபான்மையான பிரிவினருக்கு என்று செயற்படும் போது உலகம் கோடான கோடி மானிடர்களுக்கு சொந்தமானது என்று முகத்தில் அறைந்த வாக்கில் உணர்த்துபவர்கள் இவர்கள் தான்.

இத்தகையவர்கள் வரலாறு முழுவதும் தோன்றி மறைந்து கொண்டிருப்பார்கள்.

வால்டயர் ரூசோ போன்றவர்கள் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற கோசங்களுடன் முதலாவது பிரான்சுப்புரட்சி 1770களின் பிற்பகுதியில் பின்னர் மீண்டும் ஏறத்தாள ஒரு நூற்றாண்டின் பின்னர் பாரிஸ் கம்யூனும் நிகழவில்லையா. 1850களில் ஜோஸ் மாட்டி போன்ற தலைவர்கள் காலனி ஆதிக்கத்திற்கெதிராக போராடினார்கள். ஏறத்தாள ஒரு நூற்றாண்டின் பின் பிடல், சே தலைமையில் கியூபா புரட்சி நிகழ்ந்தது. ஆபிரிக்காவை ஒருதொகுதியாக எடுத்தால் அங்கோலாவில் 1960களில் நிகழ்ந்த மாற்றங்களையும் 1980,1990களில் தென்மேற்கு தெற்கு ஆபிரிக்காவில் நிகழ்ந்தவற்றையும் நாம்தொடர்பு படுத்திப்பார்க்க முடியும்.

இவ்வாறு பல உதாரணங்களை பார்க்கமுடியும். வரலாற்றின இயக்கவியலை நாம் புரிந்து கொள்ளவேண்டும். மண்டெலா நிறவெறி, தீண்டாமை, இன ஒதுக்கல்,  ாலனி ஆதிக்கத்திற்கெதிராகப் போராடிய உலகளாவிய ஒரு பன்முக ஆளுமை. எமக்கெல்லாம் நம்பிக்கையாக இருப்பவர். அதற்காக தென்னாபிரிக்காவில் அநீதியான சமூக அமைப்பு ஒரேயடியாக ஒழிந்து விட்டது என்று கூறவரவில்லை. பாரபட்சமற்ற அநீதியற்ற சமூகவாழ்விற்கு அவர் ஒரு மாபெரும் உந்த விசையாக இருந்தார்.

வரலாறு தலைமுறைகளுக்கும் காரியங்களை, கடமைகளை வைத்திருக்கின்றது. அந்த வழிக்கு மண்டெலா ஒரு ஆதர்சம். மண்டெலா தென்னாபிரிக்க சூழலில் இயல்பாக நிறவெறிக்கெதிரான போராட்டத்தில் பிரவேசித்தவர். அதன்பலாபலன்களை எதிர்கொண்டவர். எமது சிலர் போல் நாடகபாணியில் நுழையவில்லை. அவருடைய சுயசரிதையைப் பார்த்தால் அது ஓரளவு புரியும். மனிதராக இருந்துகொண்டுதான் போராடினார்.

குழுமனப்பான்மையிலிருந்து நாம் முதலில் விடுபட வேண்டும். வேறுபடுதலும்,  ஒன்றுபடுதலும் கலந்துரையாடுவதற்குமான இடைவெளியை நாம் பேண வேண்டும். பரந்த உலகைத் தரிசிப்பதற்கும் ,பரந்த கலந்துரையாடலுக்கும் கண்ணியமாக நடந்துகொள்வதற்குமாக எம்மை நாமே பயிற்றுவிக்க வேண்டியிருக்கிறது.

ஸ்ரீதரன்-சுகு

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com