Contact us at: sooddram@gmail.com

 

போராட்டம் முள்ளிவாய்க்காலில் அவலமாக முடிந்ததற்கான வரலாற்று தவறுகள

1986 டிசம்பர் 13 நினைவு நாள் குறிப்பு

1986 ஆம் ஆண்டு சகோதரப்படுகொலைகளில் கொல்லப்பட்ட துரோகிகளாக முத்திரை குத்தப்பட்ட தமிழர்களால் தவிர மற்றப்படி அவர்கள் நினைவு கூரப்படுவதில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏப்பிரலில் ரெலோ இயக்கம் புலிகளால் தடைசெய்யப்பட்டது. யாழ் திருநெல்வேலியில் ரெலோ போராளிகள் குற்றுயிரும் குறை உயிருமாக எரிக்கப்பட்டபோது திருநெல்வேலி சந்தியில் அன்றைய கடைக்காரர்கள் இந்த தெருத் தாண்டவம் ஆடியவர்களுக்கு கொக்கோகோலா உடைத்துக் கொடுத்த நாட்களில் துரோகி தியாகி என்ற எல்லைக் கோடுகள் அழுத்தம் பெற்றன. உலகத்தின் கடைக் கோடி காட்டுமிராண்டி பிரவினரா நாம் என்ற கேள்வியை எழுப்பியது இந்தச் சம்பவம். இந்த கொக்கோகோலா கதை பல மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகளில் பதிவிடப்பட்டு பல உள்ளூர் உலக  ஊடகங்களில் இடம்பெற்ற பின்னரும் எமது தமிழ் ஜனநாயக ஊடகங்கள்? இன்றுவரை மூச்சுவிடவில்லை. சமூகத்திலும் அதுபற்றிய மனக்கிலேசம் இல்லை. 'எங்கடபொடியள்' என்ற வாஞ்சை அறுந்து விழுந்து துரோகி தியாகி என்று பிரிவுகள் ஏற்பட்டன. கொலைகளை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளும் ஒரு கலாச்சாரப்பிறழ்வுக்காலம் இது என வர்ணிக்கலாம்.

இதன் தொடர்ச்சியாக ரெல ,புளொட் , பேரவை ,ரெலா, என்எல்எப்ரி, பிஎல்எப்ரி, ஈபிஆர்எல்எப், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, நவசமசமாஜக்கட்சி தொழிற்சங்கங்கள் மனித உரிமைஅமைப்புக்கள் என்பன படுகொலைகள் மூலம் தடைசெய்யப்பட்டன. ஒரு பாசிச கரும்புகை வடக்கு கிழக்கு எங்கும் கவிந்தது. ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கும் செயற்பாடு ஒரு தொடர் வரலாறாக நிகழ்ந்தது.

இந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் தான் ஈபிஆர்எல்எப் டிசம்பர் 13இல  தடைசெய்யப்பட்டது. பலநூற்றுக்கணக்கானவர்கள் சுற்றிவளைக்கப்பட்டார்கள். தேசிய விடுதலைப்போராட்டம் என்றளவில் ஈபிஆர்எல்எப்ஆதரித்தவர்கள் தன்னும் விட்டுவைக்கப்படவில்லை. வயது, பால் என்ற வேறுபாடு இருக்கவில்லை. ஒரே ஒரு குற்றம் அவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றது, ஈடுபாடு செலுத்தியது. பலர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார்கள். இந்தக்காரியத்தை முன் நின்று நேரடியாக செயற்படுத்திய சிலர் மேற்கிலும் வட அமெரிக்காவிலும் சௌகரியமாக இன்றும் வாழ்கிறார்கள். சாகுமட்டும் உண்ணாவிரதம் இருந்து இறந்ததாக கூறப்படும் திலிபனின் மாய விம்பமும் இங்கு உடைகிறது.

பிரித்தானிய சிறையில் உண்ணாவிரதம் இருந்து மரணித்த பொபிசான்ட் போன்றவர்களின் அற உணர்வுகளுக்கும் திலிபனின் மன உணர்வுகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அது ஒரு வரலாற்று திரிபு. அஹிம்சை, மனிதஉரிமை, ஜனநாயகத்தில் எந்த நம்பிக்கையும் அற்றவர் அவர். இந்த சகோதரப்படுகொலைகளை அரங்கேற்றியதில் அவர் முக்கியமான பிரகிருதி.

போராடப்புறப்பட்டு சொந்த சமூகத்தினுள்ளேயே படுகொலை சிறை சித்திரவதைகளை அவமானங்களை எதிர்கொண்டவர்கள் கோபமும், பழி உணர்ச்சி ,அவமானத்துடன்,  கொதித்துப்போயிருந்தார்கள். சமூகத்தின் விடிவிற்கென சகலதையும் துறந்து வந்த சாதாரண போராளிகள் தமது தரப்பிலிருந்தே துப்பாக்கி தமக்கெதிராக நீழும . இரத்த உறவுக்குளேயே சொந்த சமுகத்தினுளேயே கொல்லப்படுவதற்கான நிலை, தலைமறைவாக வாழவேண்டிய நிலை, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதப்பி ஓட வேண்டியநிலை வருமென்று கனவிலும் நினைக்கவில்லை. ஏறத்தாள கால்நூற்றாண்டு காலம் எமது போராட்டத்தின் லட்சணம் இதுதான். இயல்பான மனிதாபிமான உணர்வுடன் இவர்கள் தலைமறைவாக வாழ்வதற்கு உதவியவர்கள் கூட பயங்கரமான அனுபவங்களை சந்திக்க நேர்ந்தது. யாழ் பத்திரிகைகளும், பிரபல தமிழ் ஊடகங்களும் சமூகவிரோதிகளை கட்டுப்படுத்திய செயல் போல் சித்தரித்தன.

புலிகளின் தளபதி கிட்டு இரண்டாம் குறுக்குத் தெருவில் அக முரண்பாட்டில் கிறனைட் தாக்குதலில் காலை இழந்தபோத(1987 மார்ச்) யாழில் ஒரு வீட்டில் அமைந்திருந்த சித்திரவதைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 57 பேர் பெருமளவுக்கு ஈபிஆர்எல்எப் மற்றும் புளொட், ரெலோ போராளிகள் ஆதரவாளர்கள் 'ஜாலியன் வாலாபாக்'பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஜெனரல் டயரின் வேலையை அருணா மேற்கொண்டான். அந்த படுகொலை 'கந்தன் கருணை' படுகொலை என அழைக்கப்பட்டது. உண்மையில் அந்த படுகொலை நடந்த இடம் தற்போது உதயன் ரெஸ்ட அமைத்திருக்கும் நீராவியடி கட்டிடப் பகுதியாகும்.

என்ன பிரச்சனை என்றால் 1983 இன வன்முறை, சர்வதேச மனித உரிமை தினம், நவம்பர் மாவீரர் தினம்? முள்ளிவாய்க்கால் நினைவு கூரப்படுவது மாதிரி முஸ்லீம் மக்களை வடக்கிலிருந்து வெளியேற்றியதையோ அல்லது சகோதரப்படுகொலைகளின  ோசமான நாட்களையோ, கந்தன் கருணைப்படுகொலைகளையோ, சென்னையில், பிரான்ஸ் பாரிசில் நிகழ்ந்தவை பற்றியோ இது போன்ற பல பாரதூரமான மனித உரிமை மீறல்களையோ நாம் நினைவு கூரத் தயாரில்லை. அப்படி எதுவும் நடந்ததாகவும் எமது பிரக்ஞையில் இல்லை. எமது அறிவிலும் இல்லை.

எம்மை நாம் சுயவிமர்சனத்துடன் அணுகுவதற்கு தயாராக இல்ல . எமது செயல்களை சில நேரங்களில் நினைத்தால் மனம் கூனிக் குறுகிப்போகிறது. ஆனால் எமது சமூகத்தில் வெட்க உணர்ச்சி, நீதி, நேர்மை என்பன குறைவாகவே இருக்கின்றன. மற்றவர்கள் எமக்கு நேர்மையாக உண்மையாக இருக்கவேண்டும். நாம் அவ்வாறிருக்க தேவையில்லை என்பதே எமது சமூக மனோ நிலையாகும். நாம் அனுராதபுரத்ததில அரசமரத்தின கீழ  ேற்கொண்டவற்றையும் இன்னும் பல ஜனநாயகவிரோத படுகொலைகளையும் நினைவு கூரக்கடமைப்பட்டவர்கள்.

ஈழப்போராட்டம் என்று சொல்லி வடக்கிலும், கிழக்கிலும் மலையகத்திலும் இருந்து ஆட்களைத் திரட்டி நட்டாற்றில் விட்டவர்கள், ஈழத்தில  எமக்கு உதவி அழிந்து போனவர்களையெலாம் மறந்தவர்கள், என்ற மனக்கிலேசம் எமக்கில்லை. ஐரோப்பாவிலும், வடஅமெரிக்காவிலும் போராட்டதிற்கென தமது உழைப்பையும் பொருளையெல்லாம் தானமாகியவர்கள் கந்தறுந்து நொந்துபோயிருக்கிறார்கள். வசூல் ராஜாக்கள் சத்தம் சந்தடி இல்லால் குபேரவாழ்வு வாழ்கிறார்கள். இங்கு குற்றுயிராக்கபட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் எதனையும் பெறவில்லை. வாழ்வு பாழ்பட்டு வறுமை மிஞ்சியது

நான் இங்கு நாம் என்று கூறுவது எம்மையெல்லாம் ஆக்கிரமித்துள்ள யாழ் மேலாதிக்க சிந்தனையையே. இதனால் நாம் பிணியாளர்களாக இருந்த கொண்டிருக்கிறோம். எல்லாருடைய இழப்புக்களையும் நாம் மூலதனமாக்கியிருக்கிறோம். எமக்கு பெருவாரியாக புலம்பெயர்வாழ்வு கிடைத்திருக்கிறது. எம்மை பார்க்க கமரோன் கூட வருகிறார். கிழக்கும  எமத பகுதிதான் என்று அவ்வப்போது ஒப்புக்கு 'ம்'மன்னாபோட்டு கிழக்கை பற்றி பேசும் நிலை தான் எமது ஆதிக்க அரசியல்.

போராடப் புறப்பட்ட  இறந்தவர்கள் எல்லாம் துரதிஸ்டசாலிகளாகப் போனார்கள். எம்மிடம் ஜனநாயக உணர்விருந்திருந்தால் தலைவர்கள், போரளிகள், கல்வியாளர்கள், மனித உரிமைவாதிகளின் இந்த பாரிய அழிவைத் தடுத்திருக்க முடியும். அவர்கள் எம்மத்தியில் இருந்திருந்தால் எத்தகைய வளம் அது. வாழ்வின் உன்னதத்தை தொடக் கூடிய அறிவும் அர்ப்பணமும் கருவூலமாக எம்மிடம் இருநதது. இன்றைய தலைமுறையினருக்கு நாம் எவற்றையெல்லாம் இழந்தோம், என்ன நேர்ந்திருக்கிறது என்று தெரியாது அதுபற்றிய பிரக்ஞையும் இல்லை. அதனை விளங்கவைப்பதும் கடினமான காரியம். இன்னுப்பலர் என்றென்றைக்குமாக நாட்டை விட்டே சென்று விட்டார்கள். 'பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்' என்பார்களே. இதுதான் நடந்தது.

இன்று பிரிக்கப்பட்ட அதிகாரம் தேய்வடைந்த மாகாணசபையையும் வரலாற்றுணர்வற்ற பிரதிநிதிகளையும் வைத்துக் கொண்டிருக்கிறோம். யாரையும் பழிதீர்ப்பதற்காக எழுத வரவில்லை. எம்மை சக இயக்கங்களை தடைசெய்தபோது எத்தகைய அவமானமும் நிர்க்கதியுமான உணர்வுகள் வேதனைப்படுத்தியதோ அதே உணர்வுகள் யுத்தத்தின் இறுதி நாட்களில் சாதாரண போராளிகளின் மக்களின் துன்ப நிலை நரகவேதனை உணர்வை ஏற்படுதியது. பல ஆயிரக்கணக்கான துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டவர்களின் மனங்கள் இவ்வாறு தான் துன்புற்றன.

ஆனால் ஆயிரக்கணக்கானவர்களை சிறுவர் பெண்கள் முதியவர்கள் என்ற பேதமில்லாமல் சங்காரம் செய்து விட்டு எந்த மனக்கிலேசமும் இல்லாமல் உண்டு உறங்கி நவைச்சுவை பேசும், வெற்றிப் பெருமிதம் பேசும் பிரகிருதிகள் மனித குலத்தின் பகுதியினர்தானா என்ற கேள்வி அடிக்கடி எழும். பல குழந்தைகளை நச்சுவாயுவுக்க  இரையாக்கிக் கொண்டு பல மில்லியன் மக்களை படுகொலை முகாம்களுக்கு அனுப்பிக்கொண்டு ஹிட்லர் எவ்வாறு நாளாந்தம் தன்னை அலங்கரிக்க முடிந்தது. உணவுட்கொள்ள முடிந்தது என்பது போன்ற விபரிதமான கேள்விகள் எல்லாம் எனக்குள் எழும்.

ஏனெனில் அவருக்கு சழைக்காதவர்கள் எம்மிடையேயும் வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள். வரலாற்றில் நாம் இழைத்த தவறுகள் பற்றி உணர்வு எம்மிடம் இல்லாததும் எமது அவலம் நீடித்துச் செல்வதற்கு காரணம். இந்த அவலத்திற்கு துணையாக தமிழ் ஊடகங்கள் வகித்த பாத்திரத்தை மறைத்துவிட மறுத்து விட முடியாது.  துரோகிகள் தியாகிகள் என்று பிரமாண்டமான அளவில் உயிர்ப்பலி நிகழ்ந்தது. பிள்ளையார் சுழிய  ிழையாக அமைந்து விட்டபடியால் எல்லாம் விழலுக்கிறைத்த நீராக.

எமது போராட்டத்தில் இருந்த நியாயத்தன்மை தார்மீக வலுபற்றி மீண்டும் மீண்டும் கேட்க வேண்டியிருக்கிறது.

           சமூகத்தினுள், சமூகங்களிடையே ஏற்படுத்தப்பட்ட கற்பிதமான பிரிவினை, வன்மம், குரோதம்,

           கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் விரயமாக்கியதில்.

           போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இல்லாத இராணுவத்தை இப்போது எமது குடிமனைகளில் அமர்த்தியதில்

           பல எமது வாழ்விடங்கள் உயர் பாதுகாப்புவலயங்களாய் போனதில் 

 

           எமது பிரதேசங்களில் புதிய தலைமுறையினர் வாழ விரும்பாத சூழ் நிலையை ஏற்படுத்தியதில்

           இங்கு வாழ்க்கையின் மீது வெறுப்பை உண்டாக்கியதில் எமக்கு பாத்திரம் இருக்கிறது என்பதை மறைத்து விடமுடியாது.

 

சமூகப்பொறுப்பற்ற அதிகார நோக்கங்களுக்காக மாபெரும் அழிவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

புலம்பெயர்ந்தவர்கள் கணிசமான ஒரு பிரிவினருக்க  இத பற்றிய பிரக்ஞை எதுவுமில்லை. காரணம் விரும்பியோ ,ிரும்பாமலோ இந்த அவலத்தில் அங்கு வாழ்வு ஸ்தாபிதமாகியது.

எனவே இங்கு தமிழர்களின் ஆழ்மனதில் அவலம் தொடரவேண்டும . அல்லது அதனைச் சித்தரிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை

ஏனெனில் நாம் இழைத்த தவறுகள் பற்றி எந்தப்பிரக்ஞையும் இல்லாமல் இருப்பதை என்னவென்பது. எமது ஜனநாயக விரோத செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள் பற்றியும் எந்த பிரக்ஞையும் இல்லாமல் இருக்கிறோம். யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகியும் இந்த பிரக்ஞை வரவில்லை. நாம் எமது தவறுகளால் என்னவெல்லாத்தையும் இழந்திருக்கிறோம் என்பதைப்பற்றி பேசவேண்டியருக்கிறது.

அப்பழுக்கில்லாமல் இந்த சமூதாயத்தின்; விடிவிற்காக போராடப்புறப்பட்டு துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டவர்கள,; இந்தபோராட்டம் அறப்போராட்டம் தான் என மானசீகமாக வரிந்து கொண்டு தவறாக வழிநடத்தபட்டு உயிரை மாய்த்தவர்களும் இந்த போரில் கொல்லப்பட்ட முகம் தெரியாத பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் விடுவிக்கப் படவேண்டும்.

எமது மனச்சாட்சியின் கதவுகள் திறக்கப்படவேண்டும். எமது போலி முகத்திரைகள் கிழித்தெறிந்து உண்மைகளைத் தரிசிக்கத் தயாராக வேண்டும்.

(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com