Contact us at: sooddram@gmail.com

 

12 மார்கழி 1986

வரலாற்றில் கறை படிந்த நாட்கள்

(தோழர  ுகு)

இன்று தான் ஈபிஆர்எல்எப் புலிகளால் தடைசெய்யப்பட்டது.1986 ஏப்பிரலில் ரெலோ பின்னர் புளொட , என்எல்எப்ரி, பிஎல்எப்ரி  என்று தடைசெய்தார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி, இடதுசாரிகள் தொழிற்சங்கங்கள் சுதந்திரமான ஸ்தாபனங்களின்  ெயற்பாடுகளை முடக்கினார்கள். தமிழ் பாசிசத்தின் ஒரு முக்கிய காலகட்டமே இது. வேறுபட்ட அபிப்பிராயங்களுடன் வௌ;வேறு கட்சிகளின் இருப்பு நிராகரிக்கப்பட்டது.

இது வெறுமனே வௌ;வேறு கட்சிகள் தலைவர்கள் என்பதனுடன் நிற்கவில்லை. சக சமூகங்கள் ,அண்டைநாட்டின் தலைவர் என விரிந்தது. இந்தவரலாற்று விபரீதங்கள்தான் பிரதானமாக தமிழர்களுக்கு எதுவுமே கிடைக்காமல் செய்தது.

வரலாற்றில் இழைக்கப்படும் பாரதூரமான தவறுகளுக்கு என்றோ ஒரு நாள் விலை செலுத்தவேண்டியே வரும். அது நிகழ்ந்தது. மாற்று கட்சியினரும ,தலைவர்களும், சக சமூகங்களும், கவிஞர்கள் மனித உரிமைவாதிகள், முற்போக்காளர்கள் உடல்மீதியின்றி அழிக்கப்பட்டது மாத்திரமல்ல, தலைமறைவாகுவதற்கும,; இடம்பெயர்வதற்கும் புலம் பெயர்வதற்கும் நிர்பந்திக்கப்பட்டார்கள்.

இன்று தலைமையில்லாத சமூகமாக ஊடகங்கள் இல்லாத பிரச்சார சாதனங்கள(ஊதுகுழல்கள்மிஞ்சிய சமூகமாக மாறியதன் பிரதான காரணம் இதுதான்.

பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் -பாரதி

இதுதான் நிகழ்ந்தது.

சமூகம் பற்றிய எழிலார்ந்த கனவுகளுடன் புறப்பட்டவர்கள் மானிட விடியலைக்கனவு கண்டவர்கள் கேட்பாரின்றி தெருக்களிலும், வீடுகளிலும், சித்திரவதைக் கூடங்களிலும் கொல்லப்பட்டார்கள். வதை முகாம்களில் வாடினார்கள்.

பேரினவாதம் பற்றி என்ன குற்றச் சாட்டுக்கள்  ுன்வைக்கப்பட்டதோ பல சந்தர்ப்பங்களில் அதையெல்லாம் விஞ்சியதாக புலிப்பாசிசத்தின் செயற்பாடுகள் அமைந்தன. வௌ;Nவுறு கருத்துக்கள் வௌ;வேறு இயக்கங்கள் இருக்கக் கூடாது .மாற்றுகளுக்கான எந்த இடைவெளியும் இல்லை  என்ற நிலை எமது சமூகவாழ்வை காட்டுமிராண்டி நிலைக்கு தள்ளியது.

ஆனால் இந்த சகோதரப்படுகொலைகள் ஒரு சமூகத்தின் அழிவில் பிரதான காரணிகளாக இருந்தன என்பதை இன்றைய அற எழுத்து விற்பன்னர்கள்?? எவரும் மூச்சு கூட விடுவதில்லை. பாசிசத்தை நியாயப்படுத்துவதற்குஎல்லாரும் தான் பிழைவிட்டவைஎன குணாம்ச ரீதியாகவும் அளவு ரீதியாகவும் பெருநாசம் விளைவித்த ஒன்றுக்கு இவர்கள் நியாயம் சொல்வார்கள்.ஏதோ ஒரு சில தவறுகள் தான் நடந்தன என சப்பை கட்டுவார்கள். அதுவும் சரி செய்யப்பட்டிருந்தால் எல்லாம் நேர்த்தியாக இருந்திருக்கும் என்பதுபோல் எழுதுவார்கள்- “நெஞ்சில் உரனும் இன்றி நேர்மை சிறிதும் இன்றி”-பாரதி

இந்த சமூகத்தில் மாற்றதிற்காக நின்றவர்கள் பிரதானமாக தமிழ் பாசிசத்தால் அழிக்கப்பட்டார்கள் என்பதே உண்மை.

  மீண்டும் மீண்டும் பாசிசத்தின் நிழலில் சமூகத்தை நிறுத்துவதற்கு முனைபவர்கள் இன்றும் இருந்துகொண்டு தான் இருக்கிறாhக்ள். பௌத்த சிங்கள மேலாண்மை வாத சக்;திகளும் அதற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வருகின்றன.

இராணுவ பிரசன்னமும் ,ஆத்திரமூட்டலும் ஒரு நெருக்கடியான நிலையை நோக்கி சமூகத்தை இட்டுச் செல்லும் போக்கு பரவலாக அப்பட்டமாக  காணப்படுகிறது. இந்த சமூகத்தில் சிறந்தவை எல்லாவற்றையும் ,உன்னதமானவை எல்லாவற்றையும் அழித்ததில் தமிழ் பாசிசத்திற்கு பங்குண்டு என்பதை நாம் மனதில் இருத்தியாகவேண்டும்.

இன்று நிகழும் அநியாயங்களுக்கு மாற்றாக அது இருக்கமுடியாது. அது சட்டிக்குள் இருந்து நெருப்புக்குள் விழுந்த கதையாக  இருக்கும். பேரழிவுகளுக்கும் ,தமிழ் சமூகம் எதையுமே பெறமுடியாமல் போனதற்கும் தமிழ் போராட்டம் ஒரு சிதைவியக்கமாக மாறியதற்கும் இந்த தமிழ் பாசிசம் பங்களித்தது என்பதே யதார்த்தம்.

கடந்தகாலம் நிதானமாக பாரபட்சமின்றி ஆராயப்படவேண்டும்.

துரோகம் பற்றி பேசுபவர்கள் புலிகளைத் தவிர்ந்த அனனத்து இயக்கங்கள்  அரசியல் கட்சிகளுக்கும் துரோகப்பட்டம் சூட்டுவார்கள் .ஆனால் இன்று வாழும் புலிகளின் பிரதான தலைவர்கள் உறுப்பினர்கள் கணிசமானோர் எங்கு நிற்கிறார்கள் என்பது பற்றி மூச்சு விடுவதில்லை. இந்த சகோதரப்படுகொலைகளில் உடல்மீதியின்றி அழிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் மிகப் பெறுமதி வாய்ந்த மனிதர்கள்.

ஜனநாயக உணர்வு கொண்ட முற்போக்கான பிரிவு தேடித்தேடி அழிக்கப்பட்டது.  இந்த மனிதர்களின் இழப்பு சமூகத்தில் பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறதென்பதே உண்மை. இன்று இனப்பிரச்சனைக்கு தீர்வு ,இராணுவமயமாக்கலுக்கெதிராக அஹிம்சை வழியில் எதிர்ப்பியக்கம் நடத்துவதற்கு கூட ஆட்களை கண்டு பிடிக்கமுடியாமல் இருக்கிறது.

எமது சமூகத்தில் நிலவும் பெரிய பிரச்சனை என்னவென்றால் உண்மையை; பேசவோ உண்மையை கண்டறியவோ விருப்பமில்லாமல் இருப்பது. சிங்களபேரினவாதம் காலம் காலமாக தமிழ் மக்களுக்கு இழைத்த   அநீதிகளையெல்லாம் எவ்வாறுபயங்கரவாதம்என்ற ஒற்றை சொல்லால் மூடி மறைக்க முயலுகிறதோதுரோகம்என்ற ஒற்றைச் சொல்லினால் தமிழ் பாசிசம் தனது அநியாயங்களுக்கெல்லாம் நியாயம் சொன்னது, சொல்லிக் கொண்டிருக்கிறது.

மாற்று இயக்கங்கள் தவறிழைக்கவே இல்லை என்று கூறிவிடமுடியாது..

தவறுகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அது பாசிசமாக இருக்கவில்லை.

முட்டிமோதலுடன் பேசுவதற்கான இடைவெளி இருந்திருந்தால் இயக்கங்கள் உருப்படியாக சில காரியங்களை மக்கள் சார்பாக ஒப்பேற்றியிருக்க முடியும். பாசிசம் உலகில் Nவுறு இடங்களில் நிகழ்ந்ததைப்போலவே பாரிய சமூக அனர்த்தத்திற்கு வழி வகுத்தது. நாம் தனிப்பட்ட மனிதர்களை இங்கு குறிபிபடவில்லை. ஒரு மனித குலவிரோத கருத்தியல் பற்றிய !!

 இது 80 களுக்கு முன்னரே உருவாக்கப்பட்டது. அது சமூக ஜனநாயகத்திற்கும், முன்னோக்கிய இயக்கத்தின் மீதும் பாரிய அனர்த்தங்களை விளைவித்தது.  உண்மையின் வெளிச்சத்தில் நாம் முன் செல்ல வேண்டும்.  பாசிசத்தை சமூகத்தினுள் உயிர்ப்பிக்கும் முயற்சிகள் சமூகத்தை மீண்டும் பேரழிவைநோக்கியே இட்டுச்செல்லும .

சமூக நல்லெண்ணமும்  ,அற உணர்வுகள் மேலோங்குவதற்குமான இடைவெளி அதிகரிக்க வேண்டும். சமூக ஜனநாயக சத்திகள் நெருக்கமாக இணைந்து செயற்படவேண்டும்

தோழர் சுகு

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com