Contact us at: sooddram@gmail.com

 

உலகம் தவறான பாதையிலிருந்து நல்வழிக்கு.....

(சுகு- ஸ்ரீதரன்)

இன்று உலகத் தலைவர்களை எடுத்துக் கொண்டால் சாதாரண மக்களின் சமூக பொருளாதார வாழ்வை மேம்படுத்துவது மனித உரிமை ஜனநாயகம் பற்றி அக்கறை கொண்டவர்கள் அருந்தலாகவே காணப்படுகிறார்கள். ஆனால் மானிடம் பற்றிய அக்கறை உள்ளவர்களும் அங்காங்கு உலகில் வாழத்தான் செய்கிறார்கள். உலகளாவிய அளவில் இந் தலைவர்கள் சமூக ஆர்வலர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று உலகம் எதிர் நோக்கும் நெருக்கடியான சவாலான பாதையிலிருந்து நல்வழியில் செல்வதற்கு இவர்களால் உதவ முடியும்.

இந்த புவிக்கோளும் மக்களும் பாதுகாக்கப்படவேண்டும். நிச்சயமற்ற நிலை பூவுலகின் மரணம் நிகழ்ந்து கொண்டிருக்கிறதா என்ற  ேள்வி திரும்பதிரும்ப எழுகிறது.எனவே அற உணர்வுள்ளவர்களின் பங்களிப்பு அதீதமாகத் தேவைப்படுகிறது.

இந்தியாவில் அப்துல் கலாம ,கிருஸ்ணையர், மார்க்கண்டேய கட்யு, அருந்ததி ராய், அமர்த்தியா சென், தென்னாபிரிக்காவில் டெஸ்மன் டூட்டூ, அயர்லாந்தின் மேரி றொபின்சன், ஆபிரிக்காவின வங்கரி மாத்தாபிடல் கஸ்டரோ, நெல்சன் மண்டெலா, அமெரிக்காவின் நோம் சோம்ஸ்கி, ,மியன்மாரின் அங்சாங் சுஜி இன்னும் இந்த வரிசையில் உலகளாவிய அளவில் பல சிறந்த மனிதர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பு அவசியப்படுகிறது.

மக்கள் நாடு உலகம்  பற்றிய அக்கறை உள்ளவர்கள் உலக இராணுவமயமக்கம் பேரழிவுப்பாதையிலிருந்து உலகை மீட்கப் பாடுபடவேண்டும் காந்தியடிகளின் கருத்துக்களும் போராட்ட வழிமுறைகழும் உலகளாவிய அளவில் செல்வாக்கு பெற்றது அது இந்தியாவில் மாத்திரமல்ல தென்னாபிரிக்கா வட அமெரிக்கா வரை அது வியாபித்தது.

சமத்துவமற்ற உலக ஒழுங்கு மாற வேண:டும். மாக்ஸ ,ஏங்கல்சினால் ஆரம்பித்து வைக்கபட்ட பணி  லெனின், றோசாலக்சம்பேர்க் ,ட்ரொட்ஸ்கி ,ஸ்டாலின், மாவோ , லுமும்பா, அலன்டே இன்றைய சாவேசு வரை செயற்பட்டிருக்கிறார்கள். செயற்படுகிறார்கள்.

ஜவஹர்லால் நேரு ,ோசிமின் ,சேகுவேரா போன்ற ஆளுமைகள்  அறவழி உலகிற்காக பாடுபட்டார்கள். டால்ஸ்டாய் ,ாந்தியடிகள் ,தாகூர் ,கான் அப்துல் கபார்கான் ஐன்ஸ்ரின் இவர்களுக்கிடையே உறவுகள் இருந்தன.

பாசிசம் காலனியாதிக்கத்திற்கெதிரான விழிப்புணர்வு காணப்பட்டது. பிரமாண்டமான அளவில் உயிரழிவுகள் நிகழ்ந்தாலும் பேரழிவுகளுக்கெதிரான சத்திகளும் தார்மீக பலம் உள்ளவையாக இருந்தன.  மானிடத்தின் நல்வாழ்வு பற்றி அவர்கள் அக்கறை கொண்டிருந்தார்கள். இன்று அற உணர்வுகள் அருகி விட்டன.

சுயநலமும் பெருவாரியான மக்களுக்கு அனர்த்தம் விழைவிக்கும் முறைகளே கடைப்பிடிக்கப்படுகின்றன. பங்கு மார்க்கட் பல்தேசிய கம்பனிகளின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சி- உலகின் வளர்ச்சி என்று சொல்லப்படும் கலிகாலத்தில் நாம் வாழ்கிறோம்.

இயற்கையை சூறையாடல் உலகம் முழுவதும் ஒருவிதமான பிரக்ஞையுமற்று நிகழ்கின்றன. இராணுவவாதம் உடல் மீதியின்றி அழித்தல் என்பன மிகவும் துணிச்சலாக நடைபெறுகின்றன. இதுவும் இயல்பானதே யதார்த்தமானதே என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

அதிகாரத்திற்கெதிரான போராட்டம் என்பது அப்பாவி மக்களின் உயிரைக் குடிக்கும் பயங்கரவாதமாக இருக்கமுடியாது.

 மத இன அடிப்படைவாதங்களுக்கு எதிர்கால உலகில் இடமில்லை என்றாக வேண்டும். பூமியைப்பற்றிய பிரக்ஞை வேண்டும .

எதிர்காலம் நிச்சயமற்றுப் போனதன் பின்னரும் பாதுகாக்கவேண்டும் என்ற அக்கறை தீவிரமாக எழவில்லை. இந்த நிலை மாற  ேண்டும். உலகின் நல்ல சத்திகள் இணைய வேண்டும்.

தீய சத்திகளின கட்டற்ற பெருக்கத்திற்கெதிராக இது நிகழவேண்டும்.  இங்கு தனிமனிதர்களின் பெயர்கள் மாதிரி இருந்தாலும் அவர்கள் உலக மக்களை ஆகர்சிக்க கூடியவர்கள். விரிந்த  பரந்த பார்வை உள்ளவர்கள்.
 இவர்களைப் போன்றவர்கள்  ஒருங்கிணைந்து உலகின் எதிர்காலம் பற்றி பேச வேண்டும். இதற்கான  ுன்னெடுப்புக்கள் அவசியமானது. உலகளாவிய அளவில் தொடர்பு கொண்ட உலக மானிட சமூக அக்கறை கொண்டவர்கள் இதனை மேற் கொள்ளலாம்.

(சுகு- ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com