Contact us at: sooddram@gmail.com

 

தோழர் றொபேட் ஒரு மகத்தான மானிடன்

தோழர் றொபேட் சம காலத்தின் முக்கியமான தலைவர். அவர் சமுதாயத்தில் மறுமலர்ச்சி என்ற எழிலார்ந்த கனவை கொண்டிருந்தார். தமிழ் மக்களின் சுயமரியாதை, கௌரவமான வாழ்வு என்பதும் தமிழ் சமுதாயத்தில் ஜனநாயகம் மனித உரிமை என்பனவும் அவரின் உயிர் மூச்சாக இருந்தன. இலங்கையின் சகல இன மக்களுடனும் ஐக்கியப்பட்ட வாழ்வு என்பதிலும் அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.

உண்மை, நேர்மை, கண்ணியம், துரதிருஷ்டி என்பன அவரின் அருங் குணங்களாக இருந்தன. அவர் எப்போதும் போலித்தனங்களை வெறுத்தார். உண்மையை யதார்த்தத்தை அவர் திடசித்தத்துடன் எதிர் கொண்டார். அவர் இற்றைக்கு கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மாணவர் அமைப்பான ஈழ மாணவர் பொது மன்றத்தினூடாக தனது சமூக அரசியல் பிரவேசத்தை மேற்கொண்டார். அவர் தனது 45வது வயதில் தனது மரணத்தை எதிர் கொள்ளும் வரை தனது வாழ்வு முழுவதையும் தனது சமூகத்திற்காக அர்ப்பணித்திருந்தார். வசீகரமான தோற்றம் கொண்ட தோழர் றொபேட் வசீகரமான மனத்தையும் கொண்டிருந்தார்;. இது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளரின் கூற்று. சமகாலத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தலைவர்களில் தோழர் றொபேட் முக்கியமானவர். நம்பிக்கைகள் தகர்ந்து சவால்கள் சூழ்ந்த போதெல்லாம் அவர் மனம் கலங்கியதில்லை. தாம் வழி நடத்திய தோழர்களை தான் எந்த மக்களுக்காக செயற்பட தனது வாழ்வின் பெரும் பகுதியை அர்ப்பணித்தாரோ அவர்களை அவர் மரணிக்கும் வரை கைவிடவில்லை. ஒரு இலட்சியவாதியாக நடைமுறைவாதியாக அவர் செயற்பட்டார். எந்தவிதமான மூடநம்பிக்கைக்கும் துதிபாடல்களுக்கும் அவர் இடமளித்ததில்லை. தன்னுடன் பழகிய பத்திரிகையாளர்கள் கல்விமான்கள், பொதுமக்கள் ஆகியோரின் மனங்களில் அவர் ஒரு உயர்ந்த ஸ்தானத்தைப் பெற்றிருந்தார்.

ரஷ்யாவின் புகழ் பெற்ற நாவல் ஆசிரியன் ஒஸ்துரொவ்ஸ்கி தனது வீரம் விளைந்தது நாவலி;ல 'திடீர் நோயோ சோக விபத்தோ ஒரு மனிதனின் வாழ்விற்கு உலை வைக்கலாம். ஆனால் அவன் இந்த சமூகத்திற்காக அர்ப்பணித்து வாழ்ந்தான் என்ற உரிமை பெற்றவனாக மரணிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். ஒஸ்திரோவ்ஸ்கி குறிப்பிட்ட அந்த இலட்சிய மனிதனாக தோழர் றொபேட் வாழ்ந்து காட்டினார். மிகவும் நெருக்கடியான ஒரு கால கட்டத்தில் அவர் யாழ் மாநகர சபையில் ஒரு சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பங்கை ஆற்றினார். ஜனநாயகத்திற்கும், மனித உரிமைகளுக்கும் அவர் உறுதியாக குரல் கொடுத்தார். யாழ்ப்பாணத்தின் அறிவு கருவூலமான யாழ் நூலகத்தை திறந்து வைக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியுடன் நின்றிருந்தார். பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்றான் பாரதி. ஆனால் எமது சமூகத்தில் அது நிஜ உண்மையாக அமைந்திருந்தது. அடக்குமுறைக்குள் புதைந்து போயிருந்த சமுதாயத்தில் அவர் ஒரு ஒளிக்கீற்றாக தென்பட்டார். தனது சொந்த வாழ்க்கையில் அவர் பிரமச்சரியத்தை கடைபிடித்தார்;. தமது இளம் பராயத்தில் திருமணம் செய்யாமல் மரணித்துப் Nபுhன தோழர்களுக்காக அவர் அவ்வாறு நடந்து கொண்டார்.

அவரது வரலாறு மிக நீண்ட ஒரு நூலாக எழுதப்பட வேண்டியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இதனை குறிப்பிட்டு விட்டு செல்ல முடியாது.

சமூகத்தின் இக்கட்டான ஒரு காலகட்டத்தில் எல்லோரும் தலை தப்பி ஓடிக்கொண்டிருக்கையில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் அவர் போராடியவர். அவருடன் பழகிய சக இயக்கத் தோழர்கள் நண்பர்கள் மாநகர சபை உறுப்பினர்கள் அரசியல் தலைவர்கள் அவர் மீது பேரபிமானம் கொண்டிருந்தனர்.

தோழர் றொபேட்டை படுகொலை செய்ததன் மூலம  ாசிச வாதிகள் வெற்றிபெற வில்லை. அவர்கள் தோற்றுத்தான் போனார்கள். நாகரீகமான தமிழர்களும் நாகரீகமான மானிட சமூகமும் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியது. தோழர் றொபேட்டிற்கு தனது இறுதி மரியாதையை செலுத்தியது. இவ்விடத்தில் பாசிசவாதிகள் தோற்றுத்தான் போனார்கள்.

இன்று சமாதானம், மனித உரிமை தமிழ் மக்களின் அபிலாஷ  என்று யாரும் பேசலாம் ஆனால் அவற்றின் பொருள் பொதிந்த அர்த்தத்திற்காக போராடிய தோழர் றொபேட்டும் அவர் போன்ற தலைவர்களும், தோழர்களும் போராட்டக்காரர்களும் வரலாற்றால் சுமந்துவரப்படுவார்கள்.

சுகு-ஸ்ரீதரன்.

முன்னர் ஒருதடவை அவரது நினவு தினத்தில் பிரசுரமானது. இன்று அவரது 56 ஆவது பிறந்த தினம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com