Contact us at: sooddram@gmail.com

 

மார்கழி 24 தோழர் றொபேட் 55 வது பிறந்தநாள்

(தோழர் சுகு)

எமது சமூகத்தின் வாழ்வைச் சீராக்குவதற்கு பலபேர் முயற்சித்திருக்கிறார்கள். சமூக அநீதிகள் ,ாரபட்சங்கள் ஒடுக்குமுறைகள், மூடநம்பிக்கைகளுக்கெதிராக பலரும் போராடி இருக்கிறார்கள் . தன்னலமற்ற பெருந்திரளானவர்கள் எமது சமூகத்தில் இருந்திருக்கிறார்கள். இன்றும் வாழ்கிறார்கள். மக்களின் வாழ்வை செம்மையாக்குவதற்கு சீராக்குவதற்கு இன்று வாழ்பவர்கள் பங்களிக்கமுடியும். பங்களிக்க வேண்டும். ஆனால் அவநம்பிக்கைகள்  அதிகரித்துள்ளன. மிகவும் நெருக்கடியான ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் தோழர் சுபத்திரன் -றஞ்சன்- றொபேட்டின் பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சகலவிதமான சமூகத் தழைகளிலிருந்தும் விடுதலை, அறிவு, நியாயத்தின் வெளிச்சத்தில் விடயங்களை அவர் நோக்கினார். தேசிய ஒடுக்கமுறைக்கெதிரான போராட்டத்திற்கப்பால் சமூக சமத்துவத்திற்கான அக்கறைகள்  அவரிடமிருந்தன.

யோன் ரீட்டின் உலகைக்குலுக்கிய 10 நாட்களை பாடசாலை நாட்களிலேயே வாசித்தருந்தார். அது சோவியத் புரட்சியின் மகத்தான தருணங்கள் பற்றிய அமெரிக்க பத்திரகையாளரின் அனுபவம் உள்ளுரில் சமூகத் தழைகளை அறுத்தெறிந்த  ஆளுமை கொண்டவராக நண்பர்களையும் பெருமளவு ஊர் மக்களின் நேசத்திற்குரியவராகவும் காணப்பட்டார்.

தான் வாழும் சமூகம் பற்றிய கூர்மையான அவதானிப்பு அக்கறை அவரிடமிருந்தது. சோசலிச சமூகத்தின் சாத்தியத்திற்கான வழிகள் பற்றிய தேடல் அவரிடமிருந்தது. 1990 களின் மத்தியில் சோசலிச முகாமில் ஏற்பட்ட தகர்வு பல கேள்விகளையும் வாதப்பிரதிவாதங்களையம் ஏற்படுத்தியிருந்தது. தோழர் றொபேட் இதில் ஆர்வத்துடன் பங்கு பற்றினார். இன்றுவரலாறு பின்னோக்கி இயங்குவதில்லைஎன்ற விதி இன்று நிரூபிக்கப்பட்டு வருகிறது

அமெரிக்கா, கிரேக்கம், மத்திய கிழக்கிலும், மியன்மாரிலும,; வேறுபல நாடுகளிலும் ஏற்பட்டு வரும்  ாற்றங்கள் இதனைத்தான் நிரூபிக்கின்றன தோழர் றொபேட் கனவில் மிதப்பவரல்ல. நிஜத்திலே காலூன்றி நின்ற ஒரு யதார்த்தவாதிஈழமாணவர் பொதுமன்றத்தினூடாக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய தோழர் றொபேட் உடனடி நேரடிச் செயற்பாட்டாளராக விளங்கினார்

கூட்டத்தில் கூடிநின்று கூடிப்பிதற்றலன்றி நாட்டதில் கொள்ளாரடி கிளியே நாளில் மறப்பாரடி”- பாரதி

அவர் சொற் சிலம்பக்காரர் அல்ல. அவர் இயக்க செயற்பாடுகளுடன் சம்பந்தப்படுவதற்கு முன்னரே பரவலான வாசிப்பு சமூக அனுபவம் அவரிடமிருந்தது.  கவித்துவ உள்ளமும் இலக்கிய ஈடுபாடும் கொண்டவர். சர்வதேச திரைப்படவிழாக்கள் ,இலக்கிய கூட்டங்கள், நாடகப் பட்டறைகளை அவர் தவற விடுவதில்லை. அர்ப்பணத்துடனும் துணிச்சலுடனும் செயற்பட்ட தோழர் றொபேட் தாம் யாருடைய நம்பிக்கைக்குரியவரோ அந்த நம்பிக்கைகளை எப்போதும் அதனைப் பராமரிப்பதில் சிரத்தை கொண்டிருந்தார். தான் மக்களுக்குரைத்த விடயங்களில் தான் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்று  கருதியவர். ஜனநாயக அரசியல் சூழல் ஒன்றை ஸ்தாபிப்பதில் அர்ப்பண உணர்வுடன் செயற்பட்டார். அவலங்களுக்குள்ளான மக்களுக்கு உதவுதல், தோழர்களுக்கு தலைமைதாங்கி வழிநடத்துதல்  தனித்துவமாக மிளிர்ந்தார். இயக்கம் ,ோழர்கள் சொந்தக்காலில் நிற்பதற்கான பொருளாதார முயற்சிகளையும் பல அபாயங்கள் மத்தியில் முன்னெடுத்தார்.

மிகவும் கடினமான காலத்தில் ஒரு உறுப்பினராக இருந்துகொண்டு மாநகரசபை செம்மையாகச் செயற்படுவதற்கும் மக்களுக்கு இயன்றவரை காரியங்கள் ஆற்றப்படுவதற்கும் அவர் உதவினார். யாழ் நூலகம் மீண்டும் திறக்;கப்பட்டபோது அதனை திறக்கக் கூடாது என பலரும் ஆர்பாட்டம் பண்ணி அது ஞாபகச்சின்னமாக இருக்கவேண்டும் ,யாழ்ப்பாணம் என்றென்றும் சுடலைபோல் இருக்கவேண்டும் என்று அந்த மானிட விரோதிகள் அழிச்சாட்டியம் பண்ணிய வேளையில் அதனை புதுமெருகுடன் திறந்து வைப்பதில் மேயர் செல்லன் கந்தையன் -தமிழர் விடுலைக் கூட்டணி ,புளொட், ஈபிடிபி ஆகிய கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டவர்

அதிகாரப்பகிர்வு கட்டமைப்பொன்று ஏற்படவேண்டும், ஜனநயக அரசியல் பேணப்படவேண்டும்.. ஒடுக்கப்பட்ட மக்களின வாழ்வில் விடிவு வேண்டும் ,இன சமூகங்களிடையே நல்லுறவு வேண்டும் என்று நடைமுறையில் செயற்பட்டவர். மாற்று கருத்துடையவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். இராணுவ முகாம்களிலும் சிறையிலும் சக தமிழ் கைதிகளால் பெரிதும் மதிக்கப்பட்டார். இயக்கத்திற்கப்பால் அவருக்கு தோழர்கள் நண்பர்கள் அதிகமாக இருந்தார்கள . நகைச்சுவை யுடன் கலந்த இனிமையான நட்புணர்வு அவரிடமிருந்தது யாழ்ப்பாணக்காரியாலயத்தில் அவரை சந்திப்பதற்கு பாரபட்சம் இல்லாமல் அனைவருமே அவருடன் உறவு பாராட்டினார்கள.; சாமானியர்கள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள் என பலரும் அவரது நண்பர்களாக இருந்தார்கள்.

2002-2003 முற்பகுதி பெருமளவு தென்னிலங்கை நண்பர்கள் அவரிருந்த யாழ்ப்பாண காரியாலயத்தில் வந்து தங்கிச் செல்வார்கள். தமிழகத்தில் முகாம்களில் வாழும் தோழர்களின் நலன்களில் இடையறாது அக்கறை செலுத்தி வந்தவர். எங்கு துன்பங்கள் நெருக்கடிகள் நிலவியதோ அங்கெல்லாம் அவர் நின்றார். பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களது தார்மீகம் அல்ல. அவையெதையும் எதிர்பாக்காத இயக்கத் தார்மீகம .

எந்த பிரதிபலனையும் எதிர்பாராது மக்கள் நலனில் அக்கறை செலுத்துவது. அவரது ஊர் மேற்கு நுணாவில் கிராமம். அதனுள் நுழையும் போது இனம் புரியாத சோகம் நெஞ்சை நெருடுகிறது. பாழடைந்த அவருடைய வீடு, தாய்தந்தையரின் மரணம், சுற்றாடலில் அவரது தோழர்கள் நண்பர்களின் மரணங்கள் எல்லாம் மனக்கண்முன் வந்து போகின்றன. கிராமத்தின் ஆன்மா கலகலப்பு தொலைந்து போய்விட்டதைப்போல. வடக்கு கிழக்கில் பலகிராமங்கள் அப்படித்தான்.

துர்கோனிவன்தந்தையரும் தனயரும்நாவலின் தனயின் கல்லறைக்கு வயோதிப்பெற்றோர்கள் செல்லும் போது ஏற்படும் துயரத்தை ஓத்த ஆழ்ந்த வெறுமையின் அமைதி கலந்த துயரம் மேற்கு நுணாவிலில் ஏற்படுகிறது. எமது மக்களுக்கு எழிலார்ந்த வாழ்க்கையை கனவு கண்ட தோழர் றொபேட் தமது 45 வது வயதில்  ுலிகளால் படுகொலைசெய்யப்பட்டார்.

தோழர் றொபேட் அவரைப்போன்ற பலரின் படுகொலை ஈழப்போராட்டத்தின் வங்குறோத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது. இத்தகைய மனிதர்களின் உழைப்பு சமூகத்தேவை என்பன இங்கு நிராசையாக்கபட்டுள்ளன. 30 வருட யுத்தம் முடிவடைந்த பின்னராவது இவை பற்றி யாரும் கேள்வி எழுப்பி உள்ளனரா? நடந்த பிழைகள் பற்றி பேசப்பட்டதா? இந்த பிழைகளால் பல ஆயிரக்கணக்கானவர்கள் மடிந்திருக்கிறார்கள். அதை பற்றி சொரணை- சூடு எம்மிடம் இருக்கிறதா? இந்த சமூகத்தில அர்ப்பணத்துடன்  பணியாற்றி மரணித்த மனிதர்கள்; மதிக்கப்படாவிட்டால் எமது கோரிக்கைளுக்கு என்ன தார்மிக வலு இருக்கும். செத்தவர்கள் போகட்டும . இருப்பவர்கள் சமூகத்தை ஏமாற்றும் மட்டரக அரசியலை மேற்கொள்வோம் என்ற போக்கு இன்று பிரதானமாக இழையோடுகிறது.

இத்தகைய மனிதர்கள் வாழ்ந்ததற்கும் இன்று நிகழ்பவற்றிற்கும்  என்ன சம்பந்தம். சுய நலமும்- ஏமாற்றும்- மோசடியும் தானே ஆதிக்கம் பெற்றிருக்கின்றன. அர்ப்பணிப்புக்களை திரிபு படுத்துவதற்கும,; கொச்சைப்படுத்துவதற்கும் முயற்சிகள் நிகழ்கின்றன. இயக்கங்களில் இருந்து எஞ்சியவர்கள், சமூக நியாய உணர்வு கொண்டவர்களும் தான் இந்த அர்ப்பணிப்புக்களின் தார்மீக வலுவை நிலைநாட்டவேண்டும் எதிலுமே சம்பந்தப்படாதவர்கள்,சுத்தமானவர்கள், மாண்டவர்களும் எஞ்சியவர்களும் தீண்டத்தகாதவர்கள் என்று கருதும் கயமைகள் பற்றி எச்சரிக்கையாய் இருப்போம். அவர்கள் ஏற்கனவே தமிழ் அரசியலில் ஆதிக்கம் பெற்றுவிட்டார்கள்.

தவறுகளை மூடி மறைக்கமுடியாது. அவை உண்மையின் வெளிச்சத்தில் துருவப்படவேண்டும். ஆனால் எல்லாவற்றையும் இழக்கத்தயாராக இருந்தவர்களை என்றென்றும் எம் இதயத்தில் இருத்தி வைப்போம். இவர்களின் மரணத்தின் நிகரற்ற பெறுமதியை நாம் வரலாற்றில் நிலைநாட்டியாகவேண்டும்


குறிப்பு1 :

தோழர் றொபேட்டின் 9 வது ஞாபகார்த்த தினத்திற்கு எமுதப்பட்டது. இன்று அவரது 55வது பிறந்த தினத்திற்கு மறுபிரசுரம் செய்யப்படுகிறது.

குறிப்பு2:

1995  ாழ் இடம்பெயர்விற்கு பின்னரான சூழ்நிலையில் ஜனநாயக சூழலை உருவாக்குவதில பல பேர் பங்களித்திருக்கிறார்கள். திரு வல்லி சுந்தரம் , ,திருமதி சரோஜினி யோகேஸ்வரன், திரு .சிவபாலன், திரு ரவிராஜ் ,திரு கிருபா மாஸ்டர், ஊடகவியலாளர் நிமலராசன் ,திரு  சிவதாசன், முன்னாள் யாழ் மத்திய கல்லூரியின்  அதிபர் இராசதுரை மாஸ்டர், திரு செபஸ்ரியன் இருதயராஜன், கிராமசேவகர் ஆனந்தராசா ,திரு பாலநடராச ஐயர், திருமதி மகேஸ்வரி வேலாயுதம், திரு மதிமுகராசா, திரு தங்கவடிவேல்திரு ரவீந்திரன் இளங்கோ மாநகரசபையின் ஊழியர்கள்  அதிகாரிகள் இயக்கங்களின் அங்கத்தவர்கள் மனித உரிமைவாதிகள் ஆசிரியர்கள்  அரச ஊழியர்கள் சாதாரண பொதுமக்கள் என பலரும் இதில் முன்நின்று பங்களித்தவர்கள்.

 யாழில் ஒரு இயல்புநிலையை ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கு தமது உயிரையும் பொருட்படுத்தாது பாடுபட்டவர்கள .

தோழர் சுகு

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com