Contact us at: sooddram@gmail.com

 

தமிழ் அரசியலும் பெண்களும்

(ஞானசத்தி-ராஜி)

இனப்பிரச்சனை தீவிரமடைய  ஆரம்பித்த காலத்திலிருந்து தொடர்ச்சியாக பெண்கள் அரசியலில் போராட்டங்களில் பங்கு பற்றி   வந்திருக்கிறார்கள்.ஆனால் இன்று ஈழத்தமிழ் அரசியலில் பெண்களின் பங்கு நலிவடைந்து வருகிறது.இதற்கான காரணங்களை நாம் கண்டறிய வேண்டும். தமிழரசுக்கட்சி ,தமிழர் விடுதலைக் கூட்டணி ,இடதுசாரி கட்சிகளிலும்,  தொழிற்சங்கங்களிலும், பின்னர்; பல்வேறு இயக்கங்களில் பெண்கள் அங்கத்துவம் வகித்திருக்கிறார்கள். 1983 இனக்கலவரத்திற்குப் பின்னான காலப்பகுதியில்    பெருந்தொகையான பெண்கள் இந்த இயக்கங்களில் இணந்து செயற்பட்டனர். ஆனால் இன்று எந்த அரசியல் அமைப்புகளிலும் பெண்கள் அங்கத்துவம் வகிப்பதாகவோ ,அல்லது இணைவதற்கு ஆர்வமுள்ளவர்களாக இருப்பதாகவோ  அவதானிக்க முடியவில்லை. ஆரம்பத்திலிருந்தே பெண்கள் சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம்  போன்ற அஹிம்சை வழி எதிர்பியக்கங்களில் தம்மையும் இணைத்துக்கொண்டனர்.

60களின் முற்பகுதியிலிருந்து நிகழந்த சத்தியாக்கிரக உண்ணாவிரத போராட்டங்களில் பெண்கள் கணிசமான அளவில் கலந்துகொண்டிருக்கிறார்கள். தமிழர்விடுதலைக் கூட்டணயின் பெண்கள் அமைப்பான தமிழ் மகளிர் பேரவையில் கணிசமான பெண்கள் உறுப்பினர்களாக அங்கத்துவம் வகித்தார்கள்.

அதைத் தொடர்ந்து  ஆயுதப்போராட்ட இயக்கங்களிலும் பெண்கள் கணிசமான அளவு இணைந்து செயற்பட்டிருக்கிறார்கள். இப்போராட்டத்தில் தொடர்ச்சியாக பங்குபற்றிய –ஆதரவளித்த பெண்கள் பாரிய துன்பங்களை ,சவால்களை, இழப்புக்களை அவமதிப்புக்களை , வேதனைகளை சந்தித்திருக்கிறார்கள்.

பொதுவாக இதில் ஈடுபட்ட பெண்கள் அது எந்த கட்சி ,இயக்கம,; அமைப்புடன் தம்மை அடையாளப்படுத்தியிருந்தாலும் சரி சமூக – இயக்க – அரச வன்முறைகள் அதிகாரங்கள் பெருஞ் சவால்களாக இருந்துவந்துள்ளன. மன உழைச்சலையும் ஏற்படுத்தியுள்ளன.

பெண்களின் நிலையில் முன்னேற்றகரமான மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. கடந்த காலங்களில் போராட்டங்களில் பங்கு பற்றிய தம் வாழ்நாளில் பெரும் பகுதியை அர்ப்பணித்த பெண்கள்;  இன்று  அரசியலை விட்டு அந்நியப்பட்டது  சழுகத்திற்கு தலைமறைவாகி ஒதுங்கி வாழும் நிலை; ஏற்பட்டிருக்கிறது.

அரசியல்  ,சமூகப் பிரச்சனைகள்; எதுவானாலும் சரி கலந்துரையாடும்,  தீர்மானிக்கும் உரிமைகளில் பெண்களுக்கும் பங்கிருக்கவேண்டும். ஆனால் சமகாலத்தில்  அரசியலில்; அரிதிலும் அரிதாகி விட்டது. ஆரம்பகாலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணயின் பெண்கள் அமைப்பிலிருந்து இயக்கங்களின் பெண்கள் அமைப்புக்கள் வரை  தீhமானிக்கும் சத்திகளாகவோ ,அமைப்புக்களின் பிரதான பகுதியனராகவோ  இருக்கவில்லை.

 சமூகத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் பிரச்சனைகள் அனைத்துக்கும் முகம்  கொடுக்கும் பெண்கள் அரசியலிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டிருப்பது மிகப் பெரிய சமூக அநீதியாகும். இயக்கங்கள் கட்சிகள் சாராத அன்னையர் முன்னணி போன்ற அமைப்புக்கள் குறிப்பிட்ட சில மனித உரிமை மீறல்கள் தெடர்பாக குரல் கொடுத்து இயங்கி வந்தன. அவை கூட இன்று இயக்கம் இன்றி போய்விட்டன.

பெண்களின் வாக்குக்களையும் ,உழைப்பையும் பெற்று அரசியல் செய்யும் கட்சிகள், தலைமைகள்  பெண்களின் தீர்மானமோ கருத்துக்களோ அல்லது அவர்களின் பிரதிநிதித்துவமோ இல்லாமல் இருப்பது தவறானதென்று எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி செயற்படுகின்றன.  தொடர்ச்சியான இயக்கமோதல்களும் ,சகோதரப்படுகொலை மாற்று அரசியல் கட்சிகள் தடைசெய்யப்பட்டமை , எந்த ஜனநாயக கருத்து சுதந்திரத்திற்கும் இடமில்லாமல் போனதும்  மனிதர்களை அளவு கணக்கின்றி  கொன்று குவித்ததும் பெண்கள் செயற்படுவதற்கான இடைவெளியை இல்லாமல் செய்தது.

இயக்கங்களிலேயே பெண்களுக்கான தனித்துவம் ,கருத்து சுதந்திரம் ,தீர்மானிக்கும் உரிமைகள்  இல்லாமல் போனது , பால் சார்ந்த அவமதிப்புக்கள; வன்முறைகள்,புரிந்துணர்வின்மை ,ஆண்கள் சார்ந்து செயற்படவேண்டிய நிலைமை இப்படி பல்வேறு காரணங்களால் தொடர்ந்து அரசியலில் பங்கு கொள்ளமுடியாமல் போனது.

கருத்தை கருத்தால் எதிர் கொள்ளும் பக்குவம் இல்லாத புலிகள் இயக்கம்  விமர்சனத்தை முன்வைத்த  மனித –பெண் உரிமை வாதியும் அறிவு ஜீவியும் ஆன ரஜனி திரணகம  கவிஞர் செல்வி; போன்றவர்கள்   உட்பட பல பெண்ணுரிமை வாதிகளின்   வாழ்வை இருப்பை நிராகரிததது. இவர்கள் மீது தம் வீரத்தை கட்டினார்கள??  இந்த வீரர்கள் ??? தான் ஒருகாலத்தில் எங்கள் சமூகத்தில் துதிக்கப்படும் கதாநாயகர்கள்.

யாழ் நகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் ,மனித உரிமை சட்ட அறிஞர் மகேஸ்வரி வேலாயுதம் மற்றும் அரசியலில் ஈடுபட்ட அரசியல் ஆர்வமுள்ள மாற்று கருத்துக் கொண்ட பெண்கள் இவர்களுக்கு நேர்ந்ததை பற்றி குறிப்பாக யாழ்பல்கலைக்கழக மனித உரிமை ஆசிரியர் சங்கம் ,மாற்று இயக்கங்கள்- கட்சிகள் ,சர்வதேச மன்னிப்புச் சபை ,மனித உரிமை கண்காணிப்புக் குழு போன்றன மாத்திரமே கேள்வி எழுப்பின. கடந்த காலங்களில்(இப்போதும் கூட) தமிழ் ஊடகங்கள் பொதுவாகவே  ஜனநாயகமாக நடந்துகொள்ளவில்லை. அவை புலிகளின் விருப்பதிற்கு   ஏற்பவே நடந்த கொண்டன.

1986 ஆம் ஆண்டிலிருந்து பெண்கள் தொடர்ச்சியாக கொல்லப்பட்டும், உரிமைகள் மறுக்கப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டும் வந்த சூழ்நிலைகளில் தமிழ் ஊடகங்கள் ஊமையாகத்தான் இருந்தன. 1991 இல் முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து உடுத்த துணியுடன் வெளியேற்றப்பட்டபோது பெண்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத துன்பங்களையும் அவமானங்களையும் சந்தித்தார்கள். பொதுவாகவே கடந்த காலத்தை மீள்பார்வை செய்வோமானால் பெணகளே பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அரச வன்முறைகளினால்  பாதிக்கப்படும் வேளைகளில் குரல் எழுப்பிய  ஊடகங்கள் புலிப்பாசிசத்தால்  பெண்கள் கொல்லபட்டும்- கடத்தப்பட்டும் -அவர்களின் கருத்து சுதந்திரங்கள் பறிக்கப்பட்டும் அநியாயங்கள் இடையறாது அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருந்தபோது  ; மௌனம் காத்தன.

இந்த அனுபவங்களின் அடிப்படையில் தனித்துவமான சுயாதீனமான பெண்களமைப்பின் அவசியம் உணரப்படுகிறது. கடந்த காலங்களில் போரட்டத்தில் இணைந்து செயற்பட்ட பெண்கள் , வௌ;வேறு அமைப்புக்களில் இருந்தவர்கள் உட்பட   இன்றைய நிலையில்  கூட்டாக  தமது பிரச்சனைகள் பற்றி விரிவான கலந்துரையாடலுக்கு தயாராக வேண்டும். கடந்த கால அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதும், தவறுகளை மீளாய்வு செய்வதும் தொடர்ந்து தமது அரசியல் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வதும்- உணர்த்துவதும் முக்கிய கடமையாகும்.

அரசியல் , சமூக ,சாதி, மத வேறுபாடுகளுக்கப்பாhல்  பெண்கள் எதிர் நோக்கும் அநீதிகள் பால் ரீதியான சமத்துவமின்மைகள்   அவமதிப்புகளுக்கு அது எங்கு நடந்தாலும குரல் கொடுப்பதுடன் போராடவும் வேண்டும்.

கலந்துரையாடல் விவாதங்கள் ஊடாகத்தான் சரியான பாதையை நோக்கி பயணிக்க முடியும்.
ஞானசத்தி-ராஜி

(நன்றி: தேனி இணையம்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com