Contact us at: sooddram@gmail.com

 

இயற்கை, உலகம், மனிதர்

ஆசியாவின் 3 லட்சம் மக்களைக் காவு கொண்ட சுனாமி 9 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்த பேரனர்த்தம் நேர்ந்த கணங்களில் இலங்கை ஒன்றாக நின்றிருந்தது. மனிதர்களின் இயலாமை கையறு நிலை உணர்த்தப்பட்டது. இந்தோனேசிய, சுமாத்திரா, யாவா, தாய்லாந்து, இந்தியா, இலங்கை என மனிதப்பேரவல மண்டலம் உருவானது. கரையோரங்களின் மனிதவாழ்வும் நாகரிகங்களும் அழிந்தன.  மனிதர்கள் வேருடனும் வேரடி மண்ணுடனும் கடல்கொண்டு போன காட்சிஅது.  இப்போது எல்லாவற்றையும் மறந்து வழமையான காரியங்களில் இறங்கியிருக்கிறோம்.

30 வருட யுத்தத்தில் இலங்கை இழந்த மக்களில் ஏழில் ஒரு பங்கினரை ஒரு கணத்தில் இழந்தோம். நாளை எமது நாட்டின் கரைகளை மேவி தன்ணீர் வராது என்பதற்கு ஒரு நிச்சயமும் இல்லை. நாம் இருக்கும் வரை ஒருவரை ஒருவர் கழுத்தை திருகிக் கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது இந்த புவிக் கோளைப் பற்றிய கரிசனைகளுடன் எமது மற்றைய சமூகப்பிரச்சனைகளை அணுகப் போகிறோமா? இயற்கையின் கோரத்தாண்டவம் 60 வருட இனப்பிரச்சனை எல்லாவற்றையுமே ஒரு நொடியில் அர்த்தமிழக்கச் செய்து விடும்.

உலகத்தை நாழும் பொழுதும் கிண்டிக் கொண்டிருக்கிறார்கள். கடல்களிலும் தரையிலும் இயற்கையாக இருந்த தாவரவியல் பூங்காக்கள் ,உயிரியல் காடுகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எமது தோட்ட வயல் நிலங்களை எல்லாம் கொங்கிறீற் காடாக்கி கொண்டிருக்கிறோம். எமது நிலமும் கடலும் நஞ்சாகிக் கொண்டிருக்கிறது. உத்தரகந், கேதாரிநாத், பத்திரிநாத் உருச்சிதைந்து விட்டன. இந்த ஆண்டின் முற்பகுதியில் வெள்ளப்பெருக்கு அங்கு உருத்திர தாண்டவம் ஆடியது.

60 களின் பிற்பகுதி புயலின் பின்னர் தனுஸ்கோடி இல்லை. சென்னையிலிருந்து தனுஸ்கோடிக்கு ரயில் ஓடிய சங்கதி யாருக்கும் தெரியாது. இயற்கையைப் பற்றிய சூழல் பற்றிய கரிசனை இல்லாத முதலாளித்துவ உற்பத்தி உறவு முறை உலகமயமாக்கம் கார்ப்பரேட்டுக்களின் விஸ்வரூபம் உலகை சக்கையாகப் பிழிந்து துவைத்தெடுத்திருக்கின்றன.

பனி உருகல், ஒசோன் படலத்தில் ஓட்டை பூமிப்பந்தின் தட்டுக்களில் ஏற்படும் விலகல்களும், உராய்தல்களும், அடிக்கடி எழும் பூகம்பங்கள் இவை பற்றிய போதிய விழிப்புணர்ச்சி மனித குலத்தின் பாதுகாப்பு பற்றிய போதிய அளவு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படவில்லை. சுனாமி எமத  ுவிக் கோளில் ஒளிந்திருக்கும் ஈவிரக்கமற்ற ராட்சதன்.

இறுதி ஒரு தசாப்தத்தினுள் நிகழ்ந்த இயற்கை அனர்த்தங்களை மனக்கண்முன் கொண்டு வாருங்கள். முன்னர் கண்டிராத இயற்கைப் பேரழிவுகள் நிகழ்ந்திருக்கின்றன. சூழல் மனிதனின் ஜீவராசிகளின் இருப்புக்காகவே. இவற்றை அழித்து உலகச் சுடுகாட்டை உருவாக்குவதாகவே இன்றைய போக்குகள் காணப்படுகின்றன. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்றவாறே சூறையாடல் நிகழ்கிறது.

தலைமுறைகளின் வாழ்வு பற்றி, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு உணவு, காற்று, தண்ணீர் எப்படி கிடைக்கும் எப்படி இருக்கும் என்ற கவலைகள் இல்லை. இந்த உலகில் மனிதர்கள் வாழ்வதற்கான உரிமை சர்வதேச பிரகடனமாக அமைய வேண்டும். உலகளாவிய காப்பிரேட்டுக்களுக்காக, மக்களின் வாழ்வு இரண்டாம் பட்சமாக்கப்படுவதற்கு முடிவு கட்ட வேண்டும். அதற்கு உலகளாவிய அளவில் நடவடிக்கைகள் அவசியம்.

மனித குலம் அதன் நாகரிக மரபு, ஜீவனுள்ள மிச்ச மீதியான சூழல் பாதுகாக்கபடவேண்டும். அது விரிவு படுத்தப்படவேண்டும். அரசியல் சமூக பொருளாதார- உற்பத்தி உறவு முறையை சார்ந்து தான் இதனை செயற்படத்தமுடியும்.

சுனாமி முன்னெச்சரிக்கை கட்டமைப்பு

பாரிய இயற்கை அனர்த்தங்களை சமாளிப்பதற்கான ஆய்த்த நிலைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மக்களின் மீள் குடியேற்றம், மீள் கட்டுமானப்பணிகள் ஓரளவு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால் சுனாமியின் காயங்கள் இழப்புக்களின் வலி அந்த பயங்கரமான இரவுகளும் நாட்களும் எம் ஞாபகங்களை விட்டகலா கரியமிலவாயுவைக் கட்டுப்படுத்துவதற்கான மாநாடுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் பூமியை கரியமிலவாயுமண்டலமாகும் செயல்கள் நாளாந்தம் தீவிரமடைகின்றன. நாளாந்தம் எமது தெருக்களில் குவியும் வாகனங்களே எளிய சாட்சி.

பெருவாரியான மக்கள் சுரண்டப்படுபவர்களாகவும் சிறுபான்மையானோர் உலக வழங்களில் ஏக போகம் செலுத்தும் உலக ஒழுங்கு? நாடுகளின் ஒழுங்கு? உலகின் கோடான கோடி மக்களின் பாதுகாப்பான வாழ்வு பற்றி அக்கறை செலுத்தாது.  உலகளாவிய சுரண்டல் சமூக அமைப்பு புவிக் கோளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது. காப்பிரேட்டுக்கள்- பல்தேசிய கம்பனிகளின் நலனா உலகமானிடத்தின் நலனா முதன்மையானதென்று கேள்வி எழுந்தால் காப்பிரேட்டுக்களின் நலன்தான் முதன்மையானதென்று அம்மணமாகவே குறிப்புணர்த்தப்பட்டிருக்கிறது.

உலகளாவிய இந்த ஆதிக்கத்திற்கெதிரான மக்கள் இயக்கங்கள் இதன் குணங்குறிகளாக வெளிப்பட்டு நிற்கின்றன. உலகின் பெருவாரியான மக்கள் சார்ந்த சமூக ஆட்சிமுறைமையும் மனித குலத்தின் புவிக் கோளின் பாதுகாப்பும் ஒன்றோடொன்று தொடர்பு பட்டவை. காந்தீய வழிகளில் ,சமூக ஜனநாயக வழிகளில் அக்கறையுள்ள உலகநாடுகள் மக்கள் பாதுகாப்பான வாழ்வொன்று தொடர்பாக அக்கறை செலுத்தவேண்டிய தருணமிது. பாரிய சிறிய ஆயுதங்களை அழித்தலும் கடலும் நிலமும் நஞ்சாவதைத் தடுத்தலும் இன்று பாரிய சவால்களாக இருந்து கொண்டிருக்கின்றன.

உலகத்தின் பல்வேறு பகுதிகள் பாதுகாப்பில்லாமல் போய்க் கொண்டிருக்கும் சூழலில் உலகில் எப்பகுதியிலும் சூழலுடன் இசைவுபட்டு வாழ்வதற்கான நிலைமைகள் ஏற்படுத்தப்படவேண்டும . பாழ்பட்டுப்போன நிலங்கள் மீண்டும் பாதுகாப்பான வாழ்வை ஸ்தாபிபிபதற்கான இடங்களாக மாற்றப்படவேண்டும் அது இன்றைய காலகட்டத்தின  தவிர்க்கமுடியாத வரலாற்றுத் தேவை. நாடு இறைமைதொடர்பான கருதுருக்களில் மாற்றங்கள் தேவ .

உலகில் ஒருபகுதியினர் பாதுகாப்பாக, வாழ்ந்து கொண்டு இன்னுமொருபகுதி மக்கள் அனர்த்தங்கள் மத்தியில் வாழ்வதை ஏற்றுக்கொள்வது மனித தார்மீக அறங்களுக்கு முரணானது. எனவே இறையாண்மை தொடர்பான கருத்துக்களும் மறுபரிசீலனைக்குள்ளாகவேண்டும். யுத்த ஆக்கிரமிப்பு வகைப்பட்ட இராணுவங்கள் கலைக்கப்பட்டு மனித குலத்தின் பாதுகாப்பு தொடர்பான படையணிகளை கட்டுவதில் ழுமுக் கவனமும் செலுத்தப்படவேண்டும்.

 

சூழல் இயற்கையைப் பாதுகாப்பதற்கான விருத்தி செய்வதற்கான பேரியக்கம் இயக்கம் குறிப்பாக மாணவர்களிலிருந்து சமூகம் முழுமைக்கும் அது அவசியப்படுகிறது. உலகின் கோடான கோடி மக்களின் இருப்பு வாழ்விற்க  இசைவான பொருளாதார உற்பத்தி உறவுமுறை அமைய வேண்டி இருக்கிறது. 1970களின் பிற்பகுதியில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரசன்னத்தின் பின்னர் 1980களின் ஆட்கள்காணாமல் போதல் கடத்தல்கள் நிகழ்ந்த காலம். 'நாம் வாழ்வதற்கான நிகழ்தகவு அச்சம் தரும் வகையில் குறைந்துள்ளது' என்று கவிஞர் சேரன் தனது கவிதை வரியொன்றை தமிழ் சமூகத்தின் நிலை தொடர்பாக பதிவு செய்தார். ஆனால் இப்போ புவி, மானிடத்தின் நிலைமைக்கும் பொருந்திப்போகிறது.

(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com