Contact us at: sooddram@gmail.com

 

ஜனநாயகம். இன நல்லுறவு, சமூகப்பாதுகாப்பு  (பகுதி 1)

சுகு-ஸ்ரீதரன்)

இனரீதியாக வேறுவேறு நிர்வாகங்கள் சாத்தியமில்ல . இன ரீதியான அதிகாரப்பரவலாக்கல் சாத்தியமில்லை. அது பிரிவினைக்கு வழிவகுக்கும் என்ற சாரப்பட இலங்கையின் ஜனாதிபதி திருகோணமலை சுதந்திர தின உரையில் சொல்லியிருந்தார். தமிழ்மக்களுக்கு, இந்தியாவுக்கு, உலகத்துக்கு அவர் கொடுத்த வாக்குறுதிகளிலிருந்து குறிப்பிடத்தகுந்த பின்வாங்கலாக அது அமைகிறது. இந்திய- இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகி 13 வது திருத்தம் இலங்கையின் அரசியலமைப்பில் ஒரு பாகமாகி கால்நூற்றாண்டு கடந்த நிலையில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்திருப்பது பேரினவாத மேலாண்மை ஆட்சியே இலங்கைக்கு பொருந்தும் என்று தெரிவிப்பது போல் உள்ளது.

இனமத பேதமற்ற- சமூகங்களின் ஒன்றிணைவு -எல்லோரையும் சமனாக நடத்துதல் என்ற வார்த்தை அலங்காரத்தினுள் கபடத்தனமான எல்லாமே அடங்கியுள்ளது.

யுத்த வெற்றியின் அடிப்படையில் இன உறவுகள் இங்கு தீர்மானிக்கப்படுகின்றன. புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் நடந்த மோதலில் தோற்கடிக்கப்பட்டவர்கள் தமிழர்களாக இங்கு சித்தரிக்கப்படுகிறார்கள்.

இந்த ஆட்சியாளர்கள் பல தடவைகள் புலிகள் வேறு தமிழர் வேறு என்று அவ்வப்போது தெரிவித்து வந்தாலும் தமக்கு வசதிப்பட்டபோதெல்லாம் தமிழர்களையும் புலிகளையும் ஒன்றாக்கினார்கள்.

பெரும்பாலான சிங்களவர்களுக்கு இது பற்றி பிரக்ஞை எதுவும் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் பேரினாவாத கட்டமைப்பே அதிகாரத்தை கெட்டிப்படுத்தவும் நீடித்து நிலைக்கச் செய்யவும் உதவும் என்று ஆளும் குடும்பம் நினைக்கிறது.

அதற்கேற்புடையதாக அரச யந்திரக்கட்டமைப்புக்கள் இசைவு படுத்தப்படடிருக்கின்றன.

முதன்மையாக இராணுவம்.

ஜே.ஆர் உருவாக்கிய சகல அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை பாராளுமன்றம் நீதித்துறை எல்லாவற்றையும் பலவீனமாகியது.விரும்பாமல் ஏற்றுக் கொண்ட அதிகாரப்பரவலாக்கல் கட்டமைப்பையும் பலவீனமாக்கியது.

அது இன்று நிரந்தர இராணுவ- வம்ச -குடும்ப -உற்ற சுற்ற- அராஜக ஆட்சி நோக்கி சிதைவடைந்திருக்கிறது. பாராளுமன்றம , அமைச்சரவை , மாகாண சபை , நீதித்துறை ,பொது நிர்வாகம் , சட்டம் ஒழுங்கு எல்லாமே இந்த பரிவார அதிகாரத்தின் முன் அர்த்தமிழந்து போய்விட்டன.

இந்த ஏக அதிகாரம் பிரதிவிம்பமாக தமிழ் மக்கள் மத்தியிலும் ஏக அதிகார கட்டமைப்பை கடந்த காலத்தில உருவாக்கியது. இன்றும் எமது சமூகத்தில் செல்வாக்கு செலுத்துகிறது.

தமிழ் தேசிய விடுதலை இயக்கம் இந்த ஏக அதிகாரத்திற்கான திசைவழியில் பாசிசமாக சிதைவடைந்தது. ஜனநாயக சத்திகள் அழிவை எதிர் நோக்கின.

இதே போன்றதொரு நிலையை 1980களின் பிற்பகுதியில் ஜேவிபியினர் தென்பகுதியில் ஏற்படுத்தியிருந்தனர்.

ஜனநாயக இடதுசாரி அரசியல் வாதிகள், தொழிற்சங்க வாதிகள், ஒத்துவராத பொதுஜனம், அரசின் தீவிர ஆதரவாளர் எனக் கருதப்படுவோர், மாற்று அபிப்பிரயம் கொண்டோர் இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்களையும்  அழித்தார்கள்.

நோர்வேயின் அனுசரணையுடன் அரசம் புலிகளும் பேச்சுவார்த்தை நடாத்திய காலத்தில் புலிகள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பது போல் முஸ்லீம் காங்கிரஸ் தம்மையும் முஸ்லிம் மக்களின்  ஏகபிரதிநிதிகள் என்று தெரிவித்தது.

தமிழ்தேசிய கூட்டமைப்பினரும் புலிகளின் காலத்திற்கு பின்னர் தம்மை ஏக பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்வார்கள்.

விதி விலக்காக மலையக கட்சிகளும், சிங்கள  மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும், சில மாற்று தமிழ் கட்சிகளும், இடதுசாரிக்கட்சிகளும் அவ்வாறு கூறுவதில்லை.

யாரும் அவ்வாறு  ூறுவது வெட்ககரமான விடயமும் தானே.

இவற்றிலிருந்து இலங்கையின் ஜனநாயக உணர்வு மட்டம் என்ன தராதரத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

முன்னர் மாவீரர் குடும்பங்கள் என்ற சிறப்பு எல்லாம் வழங்கப்பட்டது போல் இன்று இராணுவத்திற்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

 எந்த ஒரு சமூகத்திலும் இத்கைய பூசனைகள் விரும்பத்தக்கனவோ அல்லது சமூக முன்னேற்றத்திற்கு உதவுபவையோ அல்ல.

இராணுவ மேலாண்மை சர்வாதிகார ஆட்சி என்பன பாசிசமாகவே சிதையும் .இது உள்ள+ரிலும் உலக வரலாற்று அனுபவத்திலும் பாடங்களாக அமைகின்றன.

இலங்கையின் 8 திக்குகளிலும் விரியும் புதிய அகல நெடுங்சாலைகள்

 பழைய கடைகளும் வீடுகளும்  மறைந்து வருகின்றன. நகரங்கள் வண்ணமயமாக காட்சியளிக்கின்றன. வங்கிகளின் கிளைகள் பெருகியுள்ளன. ஊகவணிகம் தழைத்தோங்குகிறது. பணப்புழக்கம் இருக்கிறது??

கிராமங்களின் களிமண் குடிசைகளும், வறுமையின சாயல் கொண்ட வாழ்க்கையும் மறைந்து விடவில்லை.எமது பிரதேசங்களில் மறைந்து வரும் யுத்தத்தின் சுவடுகள் ஆங்காங்கே தென்படத்தான் செய்கின்றன.

இராணுவ பிரசன்னம், யுத்தவெற்றிச்சின்னங்கள், கைப்பற்றப்பட்ட படைக்கலங்கள், பதுங்குகுழிகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இராணுவத்தினர் சிவில் வாழ்க்கையில் சர்வ சாதாராணமாக தலையிடுகிறார்கள். அதற்குத் தமக்கு பிரத்தியேக உரிமை இருப்பதாக கருதுகிறார்கள்.

படைக்கும் பொலிசுக்கும் முன்னுரிமை என்ற நிலை பரவலாகக் காணப்படுகிறது.சிவில் நிர்வாகத்தின் எல்லா அம்சங்களிலும் அவர்கள் வீற்றிருக்கிறார்கள்.

பெயர் மாறிய ஊர்கள், ஆக்கிரமிப்பாளராக மலினப்படுத்தப்பட்ட தெருப்புத்தர் என காட்சிகள் விரிகின்றன.பொதுமக்களின் காணிகளும ,பொருளாதார நடவடிக்கைகளுக்கான பிரதேசங்களிலும் அவர்கள் கேள்விக்கிடமற்ற அதிகாரத்தை கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஜனநாயக நாட்டில் வெகுஜனங்களின் முன்னுரிமை பொதுவாக வலியுறுத்தப்படுவது. இங்கு இராணுவ முன்னுரிமை நிலை நிறுத்தப்பட்டுள்ளது. முன்னர் புலிப்பாசிசம் தமிழ் சமூகத்தில் சிறப்புரிமைகளைப்பெற்றிருந்தது.

ஆனால் புலிப்பாசிச கருத்தியலும் அரசியலும் எமது சமூகத்தில் ஒரேயடியாக செல்வாக்கிழந்து போகவில்லை. ஓன்றை ஒன்று மறுதலித்து தமிழ் மக்கள் மத்தியில் சர்வாதிகாரமே நிலை நிறுத்தப்படுகிறது.

 பொதுப்பல சேனாஎன்ற பெயரில் இப்போது புதிதாக ஒன்று கிளம்பியாயிற்று. இது ஒன்றும் தற்செயல் அல்ல. அண்மைக்காலத்தில் இந்தப்போக்கு வௌ;வேறு விதமாக உலாவந்திருக்கிறது. 1970களிலிருந்து இதனை அவதானிக்கலாம . சிறில் மத்தியு ஐதேக ஆட்சியாளர்களின் ஆசீர் வாதத்ததுடன் செயற்பட்டது பூமி புத்திரா, சிஹல உறுமய, ஹெல உறுமய என பலவும் உருமாற்றம் பெற்று வந்தன.

இப்போது முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

கௌதம புத்தரை நாளாந்தம் அவமதிக்கும் நிலை காணப்படுகிறது. துறவு, பற்றின்மை, கருணை, அன்பு, அஹிம்சையின் கருவூலம் பௌத்தம்.

உலகின் சிறப்பு வாய்ந்த மதம் அது. ஆனால் பௌத்தம் இங்கு மதக் குரோதங்கள+டாக சிறுமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

70களில் பரவலாக உருவாகிய இனவாத கருத்துக்களின் செயற்பாடுகளின் விளைவாக 77, 81, 83 இல்  இன வன்முறைகள்  நிகழ்ந்தன.

 அதே போன்றதொரு நிலை இங்கு தற்போத உருவாகிக் கொண்டிருக்கிறது. சிறுபான்மைச் சமூகங்களின் சமூகபொருளாதார கலாச்சார வாழ்வை நலிவுறுச் செய்தல் எங்கும் எதிலும் பெரும்பான்மை ஆதிக்கத்ததை நிலைநாட்டுவதே. அது பெரும்பான்மைச் சமூகதத்pன் மீது கொண்ட அக்கறையினால் அல்ல. பெரும்பான்மைச் சமூகத்தை போதையில் வைத்துக் கொண்டு இராணுவ சாயல் கொண்ட வம்ச ஆட்சியை கெட்டிப் படுத்துவது அவ்வளவுதான்.

(தொடரும்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com