Contact us at: sooddram@gmail.com

 

'ஜனநாயகம். இன நல்லுறவு, சமூகப்பாதுகாப்பு  (பகுதி 2)

(சுகு-ஸ்ரீதரன்)

பெரும்பான்மை இன சமூக மக்கள் இன்றைய வாழ்க்கைச் செலவு உயர்வினால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். றோட்டுக்களும் தெருக்களும் அலங்காரமாக இருக்கும் அளவிற்கு மக்களுடைய வாழ்க்கை அலங்காரமாக இல்லை. அது அலங்கோலமாக இருக்கிறது. கிராமங்களிலும் நகரங்களிலும் தொழிலாளர்கள ,அறிவு ஜீவிகள் மாணவர்கள் அமைதியிழந்து காணப்படுகிறார்கள்.இது இலங்கையின் வௌ;வேறு இன சமூகங்களில் வௌ;வேறு அளவுகளில் வௌ;வேறு இயல்புகளுடன் காணப்படுகின்றன. சிறுபான்மைச்  சமூகங்களின் மீது அது இனவாத மேலாண்மையுடன் காணப்படுகிறது. அரச மட்டத்திலான வன்முறை சமூக மட்டத்திலும் பரவிக் காணப்படுகின்றன.

நுகர்வுக் கலாச்சாரத்தின் விபரீதங்கள், பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை போன்றவற்றையும் அதிகரிக்கச் செய்துள்ளன.

காணாமல் போதல் ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல் ,ாணவர்கள் மீதான தாக்குதல்கள் ஜனநாயக நடவடிக்கைகள் எதையும் முன்னெடுக்கமுடியாத நிலைமைகள் காணப்படுகின்றன. பேச்ச , எழுத்து எல்லாவற்றையும் விட மக்கள் வீதியில் இறங்கி தமது எதிர்ப்பை தெரிவிப்பது உயர்ந்த அறமாக சமகாலத்தில் கருதப்படுகிறது.

எகிப்து தொடக்கம் நேபாளம் மியன்மார் வரைவால்ஸ்றீற்தொடக்கம் லத்தின் அமெரிக்கா எதென்ஸ் வரை இது உண்மையாகும்.

அவசரகாலச் சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம்- 30 வருட யுத்தம் என்பவற்றின் விளைவால் இலங்கையில் ஜனநாயகம் புத்துயிர் பெறுவதில் நெருக்கடிகள் இருக்கின்றன. இந்த நிலை மாறவேண்டும். சமூகம் இயங்குவதற்கும் ஒரு நாடு சுபிட்சப் பாதையில் செல்வதற்கும் ஜனநாயக சுதந்திரம் முக்கியமானது.

மக்கள் அரங்கால் முன்நிறுத்த வேண்டிய வெளிப்படுத்தப்படவேண்டிய பிரச்சனைகள் பல இருக்கின்றன.பாராளுமன்றம ,உள்ள+ராட்சி- மாகாணசபை பிரதிநிதித்துவங்கள் போதாமையைக் கொண்டிருக்கின்றன.

நிலமானியக் கனவுகளை வைத்துக் கொண்டு இலங்கை முதலாளித்துவ கட்டமைப்பை நோக்கி முன் செல்ல முயன்றாலும் சிதைந்த முதலாளித்துவமும்- நிலமானியமும்- இராணுவ வாதமும் கலந்த ஒரு ஜனநாயக விரோத ஆட்சி முறையை ஸ்தாபிக்க முனைகிறார்கள்.

ஒரு புறம் இலங்கையின் கதவு திறந்து விடப்பட்டிருந்தாலும் மறுபுறம் நீதிமன்றம், பாராளுமன்றம், மாகாண சபை என்பன அர்த்தமிழந்து போகுமளவிற்கு அதிகாரமற்ற அமைப்புக்களாக முடக்கப்படுகின்றன. சிறுபான்மைச் சமூகங்களின் மீது மேலாண்மையைத் திணிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.  இலங்கையின் முன்னேற்றம் என்பது இந்த நிலை தவிடு பொடியாவதிலேயே இருக்கிறது.

சிறுபான்மை கட்சிகளால் இந்த நிலை விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கிறதா என்பதே முக்கியமான கேள்வியாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ஏதாவது திட்டம் திசை வழி இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் அதிருப்தியான அறிக்கைகளை தெரிவிப்பதோ வேண்டு கோள்களை விடுப்பதோ அதிகளவிலான பயன் விளைவிக்காது.

வீதியிலிறங்கி அஹிம்சை வழியில் செயல்படுவது பிரதானமானது.

உலகளாவிய அளவில் குறிப்பாக இந்திய அளவில் ஈழத்தமிழர் நிலை குறித்து அதிகாரப்பரவலாக்கல , இலங்கையில் ஜனநாயகம் மனித உரிமைதொடர்பான அக்கறைகளையும் எமது மக்களின் நிலையையும் கருத்திற்கெடுத்து ஆக்கபூர்வமாக செயற்பட முன்வரவேண்டும்.

உலகம் எல்லாவற்றையும் செய்யும் பொறுத்திருங்கள் என்று தமிழ்மக்களுக்கு கூறுவது ஒரு மோசடியும் ,ோளைத்தனமுமாகும். இலங்கையின் நிலைமை தொடர்பாக இலங்கையின் பிரதான சமூகங்கள் எல்லாவற்றுக்குமே அக்கறைகள் கனவுகள் இருக்கின்றன. இந்த இடத்தில் ஒருங்கிணைந்து செயற்படமுடியும் ,ெயற்படவேண்டும்.

போகமுடியாத இடத்திற்கு வழி சொல்பவர்களுக்கு யதார்த்தத்தை விளங்க வைக்க முயலவேண்டும். சரிப்பட்டு வராவிட்டால் அவர்களுடைய நிலைப்பாடுபற்றிய விவாதங்களில் காலத்தை விரயமாக்காமல் தமிழ் மக்களுக்கு நாம் என்ன செய்யமுடியுமோ அதை நோக்கி முன்னேற வேண்டும்.

பொறுப்புள்ள தலைமை என்பது தீர்க்கமாக, யதார்த்தமாக முடிவெடுப்பதாக அமைய வேண்டும். காலத்துக்கும் கந்த புராண படனம் செய்து கொண்டிருக்கமுடியாது. போராட்டத்தில் ஈடுபட்ட பலர் இறந்து விட்டனர். இன்னுமொரு பகுதியினர் நரை திரைமூப்பொரு வடிவம் கொண்டுள்ளனர். ஆனால் முதிர்ச்சி ஏற்படவில்லை. அனுபவம் முதிர்ச்சி பக்குவத்துடன் பிரச்சனைகள் அணுகப்படவேண்டும்.

இனப் பிரச்சனையை அடுத்த தலைமுறைக்கு அனுப்பாமல் வாழும் தலைமுறைகள் முடிவுக்குக் கொண்டவர முயலவேண்டும். சமூகங்கள் இணைந்து வேகமாக முன் செல்வதற்கு இது அவசியம். கோபங்கள் ,ிரோதங்கள் ,காழ்ப்புணர்ச்சிகள் கடந்து பரஸ்பரம் அனுசரித்து வாழவேண்டிய தேவை கருதி செயற்படவேண்டிய தருணம் இது.

காலனி ஆதிக்கத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்கள் எதுவும் நிகழவில்லை. முதலாவதாக இலங்கையின் சமூகங்கள் இலங்கையர்களாக பரிணமிக்கவில்லை. இன அடையாளங்களே தீவிரம் பெற்று வந்தன.

வறுமை ,ொழிலின்மை தென்னிலங்கையின் கிராமங்களில் இருந்து இரு கிளர்ச்சிகளை ஏற்படுத்தியிருந்தன. இவற்றுடன் இன ரீதியான முரண்பாடு 30 ஆண்டுகால யுத்தத்திற்கு வழி வகுத்தது. இந்த கிளர்ச்சி இயக்கங்களில் ஜனநாயக கூறுகள் தொடர்பாக பிரச்சனைகள் இருந்தன. ஜேவிபியில் பாசிசத்தின் கூறுகள் 1980களின் இன் இறுதியில் காணப்பட்டன. புலிகள் முற்று முழுதாக ஒரு பாசிச இயக்கமாக காணப்பட்டார்கள்.

ஆனால் வர்க்க ஏற்றத்தாழ்வுகள் தொடர்பானதும் ,ேசிய விடுதலை தொடர்பானதுமான இயக்கங்கள் ஜனநாயக உள்ளடக்கம் கொண்டனவே. இலங்கையின் அரசாங்கங்களுக்கு  ிளர்ச்சிகளை அடக்குவதில் இருந்த அக்கறை  சமூகபொருளாதார, இனப்பிரச்சனைகளைத் தீர்ப்பதில்  இருக்கவில்லை.

பெருவாரியான மக்களுக்கு உயிர்வாழ்வதற்கானதைத் தெளித்து விட்டு சிறுபான்மையினரான வசதியானவர்களின் வழங்களைப் பெருக்கிக்  ொள்வதாகவே இலங்கையின் சமூக அமைப்பு இருந்து வருகிறது. மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நிலையைக் கேட்கவே வேண்டாம்.

இலவசக் கல்வி , இலவச மருத்துவம் ஆகிய சேவைத்துறைகள் நலிவடைந்து வருகின்றன. வறுமையான கெடுபிடி நிறைந்த அவலமான வாழ்க்கை ஒன்றையே பெருவாரியான மக்கள் அனுபவித்துவருகிறார்கள். தனிப்பட்டமுறையில் எந்த மனிதருக்கும் மரியாதை கிடையாது.

பெருமளவிற்கு அற உணர்வு சிதைவடைந்தவர்களே இன்றைய பொதுவாழ்வில்  இருக்கிறார்கள். இது துரதிஸ்டமான உண்மையாகும்.

ஊழல் தலை விரித்தாடுகிறது.

சேவைத்துறைகள் நலிவடைந்து செல்கின்றன. மக்கள் வாழமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலை மாற வேண்டும். சகல மட்டங்களிலும் சமூக பொருளாதார பாதுகாப்பு அவசியம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com