Contact us at: sooddram@gmail.com

 

வடமாகாண சபையின் பொறுப்புணர்வற்ற போட்டுடைக்கும் காரியம்

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆறு வாரங்கள் கடந்த நிலையில் வட மாகாணசபை யுத்தத்தின் இறுதி நாட்களில் நடந்த பேரழிவு இனப்படுகொலை. ஜெனிவா அறிக்கை உரியகாலத்தில் - வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசரும் வடக்கு முதலமைச்சருமான விக்னேஸ்வரன் அவர்கள் வழமையான இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னரான வரலாற்றை சொல்லி யுத்தத்தின் இறுதி நாட்களில் நிகழ்ந்த அனர்த்தங்கள் வரையும் குறிப்பிட்டு இதனை வலியுறுத்தினார்.

புதிய அரசாங்கம் விசேட அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது ஊழலற்ற நிர்வாகம், நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகளை தவிர்ப்பது சமூகங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவது, ஜனநாயகத்தை மேம்படுத்துவது, மலையகத்தின் வீடமைப்புத் திட்டங்களை உருவாக்குவது, அரச, தனியார் துறை ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிப்பது, சாதாரண மக்கள் மீதான விலைவாசி சுமைகளை குறைப்பது, சிவில் நிர்வாகத்தை பலப்படுத்துவது, மக்களுக்கு நேசமானதாக அதனை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை தனது 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கியுள்ளது. சுற்றாடல் பாதிப்புக்களை ஏற்படுத்தாத விதமாக பேண்தகவு கட்டமைப்புக்களை உருவாக்குவது என்பவற்றை தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளது.

தவிர உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றுவது, பல ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழும் மக்களை தமது சொந்த இடங்களில் குடியேற்றுவது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது உள்ளிட்ட விடயங்களை சாத்தியமாக்குவது அரசியலமைப்பில் பாரிய சீர்திருத்தங்களை செய்வது இலங்கையின் பல்லின பாங்கை உறுதி செய்வது உள்ளிட்ட பல விடயங்கள் நிகழலாம் என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

நடக்குமோ நடக்காதோ போதிய அவகாசத்தை அளிக்காமல் வடக்கு மாகாணசபை எடுத்தேன் கவிழ்த்தேன் என்றவாறு தீர்மானங்களை சபையில் நிறைவேற்றுவது, நீண்டகால நோக்கில் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்குமா என்பது முக்கியமான கேள்வியாகும். தேவையில்லாமல் சம்பந்தா சம்பந்தமில்லாமல் மோதல் நிலைமைகளை தோற்றுவிப்பது மாகாணசபை ஆக்கபூர்வமான முறையில் இலகுவாக செயற்படுவதற்கு உதவுமா? என்பதெல்லாம் தவிர்க்க முடியாத கேள்வியாகும்.

உண்மையில் இவர்களுக்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அக்கறை இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.  தமிழ் மக்களின் நீண்டகால அன்றாட விடயங்களுடன் இவர்கள் விளையாடுகிறார்களா என்ற ஐயத்தை தோற்றுவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா வின் அணுசரனையுடன் உள்நாட்டில் நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என இந்த அரசு உறுதியளித்துள்ளது. இந்த சூழ்நிலையில் வடக்கு மாகாணசபை இப்படியொரு தீhமானத்தை கொண்டுவந்ததன் மூலம் பேரினவாத சக்திகளை பலப்படுத்தும் மூலோபாய தவறொன்று விடப்பட்டிருக்கிறது.

நிலைமை சீர் செய்யப்பட வேண்டும் என்பதைவிட அராஜக வழிகளில் நிலைமையை மோசமடையச் செய்யும் காரியங்களே நடைபெறுகின்றன. இவர்கள் கூறும் சர்வதேச சமூகம் இவர்களுடைய நடைமுறையை ஆதரிக்கப் போவதில்லை. எதிரான பிரதிபலிப்புக்களும் தனிமைப்படுத்தல்களுமே இங்கு மிச்சமாகும். புதிய அரசுக்கு சந்தர்ப்பத்தை வழங்காத இந்த அராஜகம் சமூகப் பொறுப்பற்ற தனத்தின் வெளிப்பாடாகும். கொஞ்சமேனும் முன்னேற்றகரமாக இருக்கும் நிலைமைகளை பின்தள்ளுவதாகவும் இது அமைந்துள்ளது.

புதிய அரசின் பிரதமர் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களும் இதுபற்றிய நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். இத்தகைய சூழ்நிலையில் இந்த தீர்மானம் இனசமூகங்களிடையே ஐக்கியத்தை விரும்பும் சக்திகளை பலவீனப்படுத்தி அதிதீவிர இனவாத சக்திகளை பலப்படுத்துவதாகவே அமையும். 70 வருடங்களுக்கு மேலாக நிலவும் பிரச்சனை இன்னும் வரம்பற்ற காலத்திற்கு நீடித்துச் செல்வதற்கே வழிவகுக்கும்.

தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் தமக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை ஒரேயடியாக புறக்கணித்துவிட முடியாது. சமூக ஏற்றத்தாழ்வு இடைவெளி அதிகரித்த சூழ்நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டிய சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அரச தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதியர்களின் ஊதியத்தை அதிகரிக்க வேண்டியிருந்தது. ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு விசுவாசமான இராணுவ கட்டமைப்பு, அதிகாரத்தை அனுபவித்த கட்டமைப்பு நீடித்து நிலவுவது இன்றைய ஆளும் தரப்பினருக்கும் விருப்பமான விடயமல்ல.

சிவில் வகைப்பட்ட ஜனநாயக நிலவரங்களை நோக்கி நகர வேண்டிய தேவையிருக்கிறது. அதைநோக்கி வரலாறு உந்தித் தள்ளிக்கொண்டிருக்கிறது. 1970கள் தொடக்கம் இந்த நாட்டில் நிலவும் ஜனநாயக சீர்குலைவு நிலைகளிலிருந்து மீளவேண்டியிருக்கிறது. பயமற்று ஒவ்வொரு மனிதரும் மனித சமூகமும் சுதந்திரமாக வாழ்வதற்கான நிலைமைகள் ஸ்தாபிக்கப்பட வேண்டியிருக்கிறது. அதற்கான வாய்ப்புக்களை கதவுகளை அடைத்துவிடும் அதிதீவிர நிலைப்பாடாகவே வடக்கு மாகாணசபையின் நடவடிக்கைகளை கருத முடியும்.

வடக்கு மாகாணசபை கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் ஏராளம் இருக்கின்றன. பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் சுதந்திரமான வாழ்வு, இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம், தண்ணீரில் எண்ணெய் கழிவுகள் கலந்ததனால் சுன்னாகம் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்டுள்ள பாரிய சூழலியல் பிரச்சனைகள், குடிநீர் வசதிகளை அதிகரிப்பது உள்ளுர் தெருக்களை செப்பனிடுவது, கல்வி, சகாதார நிலைகளை மேம்படுத்துவது சுற்றாடல் அழிவு சவால்களை எதிர்கொள்வது இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை அதிகரிப்பது. மாகாணசபைக்குரிய அதிகாரங்களை முழுமைப்பெற செய்வது உள்ளிட்ட ஏராளம் பிரச்சனைகள் நிறைந்து கிடக்கின்றன.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு போதையூட்டும் சுலோகங்களுடன் யதார்த்தத்துக்கு புறம்பாக செயற்பட முனைகின்றனர். உண்மையில் உலக உள்ளுர் யதார்த்தங்கள் இங்கு புரிந்துகொள்ளப்படவில்லை. பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான தற்போதைய சந்தர்ப்பம் இழக்கப்பட்டு விடுமோ என்ற ஐயம் எழுந்துகொண்டுதான் இருக்கிறது.
நிதானமில்லாத போக்குகள் பல சந்தர்ப்பங்களில் பாரிய நட்டத்தை சேதாரத்தை எமது சமூகத்துக்கு ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை இவர்கள் மீண்டும் மீண்டும் உணர தலைப்படுகிறார்கள் இல்லை.

மனித உரிமைகள் பற்றிய அக்கறைகளை இங்கு யாரும் குறைகூறி விட முடியாது. ஆனால் அது 'நெஞ்சில் உரமுமின்றி நேர்மை திறனுமின்றி' செய்யும் வஞ்சனையாக இருக்கமுடியாது.
எனவே சிந்தித்து தூரநோக்கில் எமது மக்களுக்கு எவையெவை நன்மைபயக்கும் அவல வாழ்விலிருந்து விடுதலையையும் விமோசனத்தையும் பெற்றுத்தரும் என்ற நன் நோக்கிலிருந்து செயற்பட வேண்டும். அற்ப அதிகார தேர்தல் நோக்கங்களுக்காக மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தீர்மானங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.

வடக்கு மாகாணசபையின் தீர்மானம் இனப்பிரச்சனைக்குத் நிரந்தர தீர்வு காண விரும்பும் அண்டை நாடு மற்றும் சர்வதேச சக்திகளுக்கு அசௌகரியத்தையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான அவ நம்பிக்கையை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் ஏற்படுத்துவது எமது பிரச்சனைகளை நாளடவில் யாரும் பொருட்படுத்தாத நிலைமைக்கு கொண்டு சேர்ப்பிக்கும்.

வடக்கு மாகாணசபையின் தீர்மானம் டெல்லியில் அதிருப்தியை தோற்றுவித்துள்ளதென்பதை நாம் அங்கிருந்து வரும் செய்திகளினூடாக உணர முடிகிறது. முதிர்ச்சியற்ற எல்லாவற்றையும் போட்டுடைக்கின்ற செயற்பாடாக இது பார்க்கப்படுகிறது. அதிகாரப்பரவலாக்கல் தொடர்பாக தென்னிலங்கையில் கரிசனை கொண்ட சக்திகளையும் இது பலவீனப்;படுத்துகிறது. சந்தர்ப்பங்கள் நழுவவிடப்படுகின்றன. எரிச்சலடைவதற்கான நிலைமைகள் வலுவடைவதில் தமிழ் மக்களுக்கு மேலும் மேலும் பின்னடைவையே ஏற்படுத்தும். எனவே தவறுகள் உடனடியாக சரி செய்யப்படல் வேண்டும். இதற்கான அழுத்தங்கள் மக்கள் கல்வியலாளர்கள் மத்தியிலிருந்து எழ வேண்டும்.
(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com