Contact us at: sooddram@gmail.com

 

பல்லின இலங்கையின் எதிர்பார்ப்பு.

(சுகு-ஸ்ரீதரன்)
இலங்கையின் பல்லினமக்களின் விருப்பமாகவே புதிய ஜனாதிபதி மைத்திரிபாலாவின் தெரிவு அமைகிறது. சமூகங்களிடையே ஏற்படுத்தப்பட்ட பேதங்களின் சலிப்பும்- நாம் ஐக்கியமாக ,சமத்துவமாக வாழ்வதற்கான மக்களின் எதிர்பார்ப்பும் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இலங்கையின் வௌ;வேறு இன சமூகத்தவரின் ஜனநாயக அபிலாசைகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. பிரதானமாகவும்- முக்கியமாகவும் சுதந்திரமான, அமைதியான, வன்முறையற்ற சகவாழ்வு மக்களின் வாக்குச் சீட்டால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதனை புதிய ஜனாதிபதியும் அவரது சகாக்களும் கூரிய நுண்ணுர்வுடன் புரிந்து கொள்ளவேண்டும்.


ஒரு நாகரிகமான .கண்ணியமான, அச்சமற்ற வாழ்க்கையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இவை மக்களின் வாழ்க்கையின் சகல தளங்களிலும் உறுதிப்படுத்தப்படவேண்டும்.
அரசியல் அதிகாரத்தின் கிடுகிப்பிடி -அலட்சியம் -பாரபட்சம்- ஊழல் -குடும்ப உற்ற சுற்றமையம் இலங்கையின் சுதந்திரம் ,சகோதரத்துவத்தை நேசிக்கும் மக்களை வெறுப்படைய வைத்திருக்கிறது.
எனவே சமூக வாழ்வின் சகல மட்டங்களிலும் பேதமற்று சுதந்திரம் உணரப்படுவதற்கான நிலைமைகள் தோற்றுவிக்கப்படவேண்டும்.
அது பிரதானமாக மக்களின் சமூக பொருளாதார அபிலாசைகளை உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.
எதிரும் புதிருமாக கூட்டணி அமைத்திருக்கும் சக்திகள் மத்தியில் இது சவாலான பணியே.
காப்பிரேட்டுக்கள,; பெருவர்த்தகர்கள், தொழிலதிபர்களை முன்னிலைப்படுத்திய பொருளாதார நடவடிக்கைகள் இலங்கையின் சமூக பொருளாதார தளத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஏற்கனவே சமூகத்தில் அது பாரிய ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி உள்ளது.
எனவே சாதாரண மக்கள் சார்ந்த- நட்பான- மனித முகம் கொண்ட பொருளாதாரக் கொள்கை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
சேவைத்துறைகளுக்கு விசேட முன்னுரிமையளிக்கவேண்டும்.
கல்வி , சுகாதாரம் என்பன எல்லை கடந்து வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் இந்த இரண்டு துறைகளின் இலவச நிலை மீள் நிலை நிறுத்தப்படுவதுடன் மேம்படுத்தபடவேண்டும்.
அரச போக்குவரத்து துறை பாதுகாக்கப்படுவதுடன் அபிவிருத்தி செய்யப்படவேண்டும்.
நிலம் ,வீடு ,குடிநீர் , மின்சாரம் இவற்றுக்கான அரச செலவினங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.
அவசியமற்ற இராணுவ பாதுகாப்புச் செலவினங்கள் குறைக்கப்படவேண்டும்.
சமூகப்பாதுகாப்பிற்கான செலவினங்கள் அதிகரிக்கப்படவேண்டும்.
பாரம்பரிய மீன்பிடி, விவசாயம் நவீனமயமாக்கபடுவதும் சீரமைக்கப்படுவதும் வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கும் படியான தொழில் துறைகள் ஸ்தாபிக்கப்படவும் வேண்டும்.
உல்லாசப்பயணத்துறை நாடளாவிய அளவில் விஸ்தரிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும்.
லஞ்ச லாவண்ணியங்கள் மற்றும் அதிகார அகங்காரம் இல்லாத கண்ணியமானதாக காவல்துறை மறு சீரமைக்கப்படவேண்டும்
நட்பார்ந்த சமூக காவல்துறை உருவாக்கப்படவேண்டும்.
மக்களின் அன்றாட வாழ்வில் தலையிடும் அச்சுறுத்தும் கண்காணிப்பு- புலனாய்வு அமைப்புக்கள் கலைக்கப்படவேண்டும்.
பொதுநிர்வாகம் மக்களுக்கு நட்பானதாக நல்லியல்பை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும் எடுத்தெறிவதாக அமையக் கூடாது.
கிராம மட்டத்திலிருந்து இது முக்கியமானது.
நீதித்துறை சுதந்திரமானதாகவும் மக்கள் இலகுவாக அணுக கூடியதாகவும் அமைய வேண்டும்.
மக்கள் தமது குறைகளை வீதியிலிறங்கி சொல்வதற்கான நிலைமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும். இது மிக மிக முக்கியமானது.
விசேட அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவதும், இன சமூகங்களுக்கும் மாகாணங்களுக்கும் இலங்கை அரசியல் யாப்பில் கூறப்பட் விடயங்கள் முழுமையாக தாமதமல்லமல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
பல தசாப்தங்களாக இடம்பெயர்தும் புலம்பெயர்ந்தும் வாழும் மக்கள் தமது சொந்த இடங்களில் கௌரவமாக குடியேற்றப்படவேண்டும்.
தோட்டத் தொளிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் உருவாக்கபட்டு இரு நூற்றாண்டுகால லயன் காம்பரா வாழ்க்கைக்கு முடிவு கட்ட வேண்டும்.
நாட்டின் ஒரு பகுதி மக்கள் இவ்வாறு அவலவாழ்வு வாழ்வது தேசிய அவமானம் என்பது உணரப்பட வேண்டும்
மனச்சாட்சி- கருத்து சுதந்திரம் உறுதிப்படுத்தப்படவேண்டும்.
இலங்கை தென்னாசியாவில் சிறந்த ஒரு பல்லுயிர் பிரதேசம். பேரழிவு நுகர்வுகலாச்சாரத்தில் இது அழிவுறாமல் பாதுகாக்கப்படவேண்டும்.
சர்வதேச உறவுகள் ஜனநாயகம் ,மனித விழுமியங்களையும் அரசியல் பொருளாதார சுதந்திரதிற்கான கோடான கோடி மக்களின் அபிலாசைகளையும் கருத்திற்கெடுத்ததாக அமைய வேண்டும். வௌ;வேறு நாடுகள் தேசங்கள் மக்களுடனான சகவாழ்வை உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும்.
மனித குலத்தின் ஒருபகுதியினர் என்ற உணர்வுடன் செயற்பட வேண்டும்.
புலம்பெயர் மக்களுடன் உறவுகளைப்பலப்படுத்தும் விதமாக தூதரகங்களின் வினைத்திறன் அதிகரிக்கப்பட வேண்டும். இலங்கைக்கு வந்து செல்வதற்கான நிலைமைகள் அவர்களின் தொழில் நுட்ப மருத்துவ மற்றும் அனுபவம் அறிவு உள்ள10ர் மக்களுடன் பகிரப்படுதலுடன் இங்கு முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இலங்கை உன்னதமான பாதையில் பயணிப்பதற்கான வாய்ப்புக்கள் முன்னால் இருக்கின்றன. அவற்றை முழுமையாக கையாள வேண்டும்.
(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com