Contact us at: sooddram@gmail.com

 

தோழர் பாலசுப்பிரமணியம் - பாலா - கபூர்.

1980களின் முற்பகுதியில் தோழர் பாலாவை கொழும்பு கொள்ளுப்பிட்டி முகாந்திரம் ஒழுங்கையில் சந்தித்தேன். துடிப்புமிக்க வசிகரமான மாணவராகிய பாலா ஈழப்போராட்டதில் மிகவும் மூத்த உறுப்பினர். 1977 இன் பின்னர் தொழிற்சங்கவாதியும் தமிழ்அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் தலைவருமான கே.சி நித்தியானந்தா அவர்களின் தலைமையிலான அகதிகள் புனர்வாழ்வுக் கழகம் கொழும்பில் அகதிகளான தமிழர்களுக்கான உதவிகளைப் புரிந்துகொண்டிருந்தார்கள். தோழர் தேவா ஈழவிடுதலையில் அக்கறை கொண்ட ஈழவிடுதலை இயக்க்காரர்கள் உட்பட  பலர இப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அக்காலகட்டத்திலேயே தோழர் பாலா - கபூர் ஈழமாணவர் பொதுமன்றத்தில் இணைந்துகொண்டார். இனக்கலவரத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவி புரியும் பணிகளினூடாகவே அவர்கள் தமது சமூகப்பணிகளை ஆரம்பித்தார்கள்.

அருளரால் லங்காராணி எழுதப்படுவதற்கும் இந்த செயற்பாடுகள் உந்தததலாக இருந்தன. அவர் கொழும்பில் பல முற்போக்கு சிந்தனையாளர்களுடன் இளைஞர்களுடன் பரவலாக தொடர்புகளை ஏற்படுத்தினார். சிறையிலிருந்த தோழர்களின் நலன்களில் அவர்பெரும் அக்கறை செலுத்தினார். வெலிகடைச்சிறையில் அக்காலகட்டத்தில் சிறைவைக்கப்பட்டிருந்த தோழர்கள் தேவா, நற்பிட்டி முனை பாஸ்கரன், தேவகுமார் (இந்த இருதோழர்களும் வெலிகடைச் சிறைப் படுகொலையில் கொல்லப்பட்டார்கள்) ஆகியோரின் விடுதலை உட்பட அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பாடுபட்டார். சட்டதரணிகளை மனித உரிமைவாதிகளை சந்தித்துப் பேசுவது என அவர் இடையறாது விடுதலைக்கு உழைத்துக் கொண்டிருந்தார்.

அவருடைய வீடு கொள்ளுப்பிட்டி முகாந்திரம் ஒழுங்கையில் அமைந்திருத்து.அவருடைய அப்பா அரச உத்தியோகத்தர். அவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும், 80களின் பிற்பகுதியல் சிறுவனாக இருந்த அவரது இளைய சகோதரர் பருத்தித்துறையில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய சகோதரி பிரபா தற்போது சுவிசில் வசிக்கிறார். புலம் பெயர்தளத்தில் அவரும் அவரது கணவர் தோழர் மகாலிங்கம் - நியூட்டன் - லோலன் சமூகப்பிரக்ஞையுடன் தாக்கமாகச் செயற்படுபவர்கள்.

அவர்கள் எப்படியோ வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர்கள் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத இழப்புக்களையும் துன்பங்களையும் சந்தித்தார்கள். இந்தப்போராட்டதில் ஒரு குடும்பத்தின் அழிவை சிதைவை தோழர் கபூர் அவர்களின வாழ்க்கையிலும் பாhக்கலாம். அவருடைய அப்பா இந்தியாவில் வேலூரில் அகதிமுகாம் ஒன்றில் மரணமானார். அவருடைய அம்மா தமிழகத்தில் வாழ்கிறார். 1986 இல் புலிகள் ஈபிஆர்எல்எப்தடைசெய்தபோத  ாவகச்சேரி கிராமமொன்றில் வைத்து புலிகளால் அவர் கடத்தப்பட்டார். இன்றுவரை அவருக்கு என்ன நேர்ந்ததென்று தெரியாது. ஒரு கண்ணியமான சமூகப்பிரக்ஞை உள்ள ஒரு நாகரிகமான போராளியின் அவலச் சரித்திரம் இது.

நான் கொழுப்பு செல்லும் நாட்களில் சிறு சிறு கருத்தரங்குகளை ஏற்பாடுசெய்வார். மழையிலும் வெயிலிலும் பஸ்சிலும் திரிந்து சொந்தபணத்தில் வேலைசெய்தார். படுகொலைசெய்யப்பட்ட தோழர்கள் சிவகரன் - இப்ராஹீம், பிரேம்; இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் தோழர்கள் ராஜ்குமார் - றொபின் கேசவன் போன்றவர்கள் அவரது கல்லூரி மற்றும் நண்பர்கள் பின்னர் தோழர்கள். மொறட்டுவ, வெள்ளவத்தை, தெஹிவளை, கொட்டாஞ்சேனை என அவர் தொடர்புகளை வைத்திருந்தார். தோழர் கங்காதரன் அப்போது கொழுழ்பு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைசெய்தவர். அவருடைய மாமனார் ராகவனும் அவ்வாறான உதவிகளைப் புரிந்தவர். யாழ்ப்பாணத்திலிருந்து வந்து போவதற்கா  ோக்குவரத்துசெலவு மற்றும் கொழும்புச் செலவுகளுக்கு இவ்வாறான தோழர்களிடம் அழைத்துச் சென்று பெற்றுத்தருவார்.

1980களில் கொண்டுவரப்பட்ட கல்வி வெள்ளை அறிக்கையைக் கண்டித்து கொழும்பு விவேகானந்தா பாடசாலையில் கூட்டமொன்றை நடத்தினோம் அதில் பல இடதுசாரித் தோழர்கள் பேராசிரியர் சந்திரசேகரம் உட்பட உரையாற்றினர்hகள். பேராசிரியர் சந்திரசேகரம் உயர்கல்விக்கான சுதந்திரம் பற்றிப் பேசியது எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது. இந்த கூட்டத்தை ஈழமாணவர் பொதுமன்றமே ஏறபாடு செய்திருந்தது. பயங்கரவாததடைச்சட்டமத்தின் கீழ் பலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுக்கொண்டிருந்த மிகவும் நெருக்கடியும் ஆபத்தும் நிறைந்த காலத்தில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. தோழர்கள் பாலா, கேசவன், சிவகரன் போன்றவர்கள் கொழும்பின் பல்வேறு திசைகளிலிருந்து மாணவர்கள், தொழிற்சங்கவாதிகள், மற்றும் அரச ஊழியர்கள் பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களையும் அழைத்து வந்து மண்டபம் நிறைந்த கூட்டத்தை நடாத்தினார்கள்.

ஏதோ சமூகத்தை மாற்றப்போகிறோம் நாங்கள் சாதிக்கப்போகிறோம் என்ற அர்ப்பணம் கனவுடன் செயற்பட்டோம். தோழர்கள் கங்காதரன  ாகவன் புலம்பெயர்ந்து லண்டனில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இத்தகையோர் மத்தியில் நாம் விதைத்த கனவுகளை நனவாக்க முடியவில்லை. நாங்கள் இந்த சமூகத்திற்கும் எம்மை நம்பிச் செயற்பட்டவர்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இவ்வாறு பலர் எம்மீது மனம் விட்டுப் போவதற்கும் நம்பிக்கை இழப்பதற்கும் நாமும் பாத்திரவாழிகளாக இருந்தோம்.

அந்தகாலத்தில் றோயல்கல்லூரி மாணவராக இருந்த பாலா அப்போதுதான் இலங்கையில் அறிமுகமாகியிருந்த கணனிக்கல்வியையும் மேற்கொண்டிருந்தார். மிகுந்த புத்திக் கூர்மையும் ஆழுமையும் நிறைந்த தோழர் பாலா சொந்த வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தால் சிகரங்களைத் தொட்டிருப்பார். அவருடன் சகாவாக வேலைசெய்த தோழர் அகிலனின் - செண்பகன் சகோதரர் தந்தையார் ஆகியோர் 1983 தெகிவளை வீட்டில்லைத்து இனவாதக் குண்டர்களால் படுகொலைசெ;யப்பட்டனர். வீடும் எரியூட்டப்பட்டது. அகிலனும் அவரது சகோதரி தோழர் வாசுகியும் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தனர். தோழர்கள் அகிலன்-செண்பகம  ிருபானந்தன்- இமாம், ஞானம், சுகிர்தன், நாகராஜா, அசோக், எட்வேட்  7பேர் பாக்கு நீரிணையில் படகு விபத்தொன்றில் 80களின் நடுப்பகுதியில் பலியானார்கள்.

அக்காலத்தில் கொழும்பில் நின்றிருந்த தோழர் கேதீசும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரியும் பணியில் ஈடுபட்டிருந்தார். தோழர்கள் பாலா, றொபின், இப்ராஹீம், பிரேம், கேசவன், வேலாயுதம் சொர்ணலிங்கம், மனோராஜசிங்கம் முன்னர் பின்னராக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தனர். அக்காலத்தில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் வேலைசெய்த தோழர் சொர்ணலிங்கமும் தொழிற்சங்க வாதியும் வெள்ளவத்தையில் தபாலதிபராக இருந்த தோழர் வேலாயுதமும் முன்னர் யேர்மனியில் இருந்து தற்போது லண்டனில் வசிக்கிறார். தோழர் பாலாவிற்கு சிறந்த ஆலோசகர்களாகவும் தோழர்களாவும் இருந்தார்கள் என்பதை பிரத்தியேகமாக இங்கு குறிப்பிட வேண்டும். இவர்கள் இருவரும் இடதுசாரி பாரம்பரியத்தில் வந்தவர்கள். தோழர் சொர்ணலிங்கம் எம்மை சிலதடவை அப்போது வெள்ளவத்தையில் வாழ்ந்த தோழர் சண்முகதாசனிடம் அழைத்துசென்றிருக்கிறார். தோழர் வேலாயுதம் ஊரிலும  ுலம்பெயர்தளத்திலும்  அற அரசியல் சமூகப்பணிகளில் குறிப்பிடத்தகுந்த  பங்காற்றியவர்கள்.

தோழர் பாலாவிற்கு மாங்குளத்தில் பருத்தித்துறையில் திருமலையில் உறவுகள் இருந்தன. தோழர் அகிலனின் உரும்பிராய் வீடு, செழியனின் வீடு, பிரதானமாக தோழர் நக்கீரனின் வீடு, பலாலிவீதி தோழர் ஈஸ்வரமூர்த்தியின் அறை, பெருமாள் கோவிலடி வீடுகள், தோழர் கேதீஸின் அபிவிருத்தி ஆய்வு கல்வி தொடர்பாடலுக்கான நிலையம் இவை எல்லாவற்றையும் மாறி மாறிப் பயன்படுத்தினோம்.

நாம் வெகுஜன மற்றும் கிளர்ச்சி வேலைகளை எவ்வாறு மேற்கொள்வது பிரசுரங்களை எவ்வாறு உருவாக்குவது சுவரொட்டி போன்ற விடயங்களில் அவரது கருத்துக்கள் அவர் புத்திக் கூர்மையும், ஆளுமையும் மிக்கமனிதன் என்பதைப் புலப்படுத்தியது. 1984 இல் நான் கைதுசெய்யப்பட்டபின் அவருடனான தொடர்புகள் அறுந்து போயின. மூன்றாண்டுகள் கழித்து சிறையிலிருந்து வரும் போது அவர் புலிகளால் கடத்தப்பட்டிருந்தார். கடுமையான சித்திரவதைகளின் பின்னர் விடுதலையாகிய காலஞ்சென்ற தோழர் இளங்கோ புளோட் இயக்கத்ததைச் சேர்ந்த தோழர் மென்டிஸ் தோழர் கபூர் ஆகியோர் புலிகளின் சித்திரவதைக் கூடத்தின் ஒரு அறையில் அடைக்கபட்டிருந்தார்கள். பின்னர் இவர்கள் இருவரையும் பிரித்து வெறெங்கோ கொண்டு சென்று விட்டார்கள். அதன் பின்னர் தோழர் பாலாவிற்கு என்ன நடந்ததென்று இன்று வரை தெரியாது.

அந்த சித்திரவதைமுகாமிற்கு புளொட் தோழர் மென்டிசை பார்வையிட வந்த தாயாரிடம் மென்டிசின் கைக்கடிகாரத்தையும் சட்டையையும் யைளித்தார்கள் அந்த தாய்காலில் விழுந்து கதறியபோது அவரின் அந்ததாயின் நெஞ்சில் உதைத்து துரத்தினார்;கள .என்று இதனை கண்கண்டசாட்சியான காலஞ் சென்ற தோழர் இளங்கோ தனது சித்திரவதை முகாம் அனுபவங்களைச் சொல்லும் போது தோழர் இளங்கோ நினைவு கூர்ந்தார்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணியின் சார்பில் தோழர் ஜோர்ஜ் ஹபாஸ் தலைமையிலான பாலஸ்தீன் பிரபல முன்னணியின் பாசறையில் பயிற்சி பெற்ற 8,9 தோழர்களில் அவரும் ஒருவர். பிற்காலகட்டத்தில் மக்கள் விடுதலைப்படையைக் கட்டியமைப்பதில் செயலூக்கமான பங்களிப்பை வழங்கினார். 1970களின் பிற்பகுதியிலிருந்து 1986 இறுதியில் இயக்கம் தடைசெய்யப்படும் வரை அவர் செயலூக்கமான பங்களிப்பை வழங்கினார். அவரும் அவரது குடும்பத்தினரும் இந்தப் போராட்டத்தில் தனிப்பட்ட முறையில் இழந்தவை அதிகம . இறுதியாக தன்னையும் அர்ப்பணித்தார்.

(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com