Contact us at: sooddram@gmail.com

 

எனது சிறிய வாசிப்பு அனுபவங்களில் தோழர் லெனின்

(சுகு-ஸ்ரீதரன்)

தோழர் லெனின் மார்க்சியத்தை வரிந்து கொண்டு உலகுக்கு உணர்த்திய அறங்களில் பிரதானமானவை என்று சிலவற்றைக் கருதுகிறேன். சாதாரண மக்களின் அதிகாரத்தை ஒரு நாட்டிலோ வளர்ச்சியுற்ற நாடுகளிலோ நிறுவுவதற்கான தீவிர செயற்பாட்டாளராக இருந்தார். அது ரஸ்சியாவில் தான் சாத்தியமானது. ஒரு சங்கிலித் தொடரான நிகழ்வாக 5 கண்டங்களிலும் இற்றை வரை அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பல நாடுகளில் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் வறியவர்களின் ஆட்சிகள் ஸ்தாபிக்கப்பட்டன. பல உருக்குலைந்தன. சில புதிதாகத் தோன்றின. சோவியத்யூனியனும் விதி விலக்காக இருக்கவில்லை. ஆனால் அந்த எழுச்சிகள் ஓயாத அலைகளா  இன்று வரை எழுந்து வீழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

மத்திய கிழக்கிலும், வட அமெரிக்கா- ஐரோப்பாவிலும் இன்றுவரை உலகளாவிய தேசிய சமூக விடுதலை இயக்கங்களிலும் இதன் குணங்குறிகளைக் காணலாம். தொழிலாளர் அரசை ஸ்தாபித்தலுடன் அது தன்னை வரையறுத்துக் கொள்ளவில்லை. இந்தியா உட்பட காலனி ஆதிக்கத்திற்கெதிரான தேசிய விடுதலை இயக்கங்கள் ஐரோப்பாவில் மாற்றங்கள் -நிகழ்வுகளை ஆர்வத்துடன் அவதானித்தார்.

நிலமானிய தழைகளிலிருந்து விடுதலை, ஜனநாயகப்புரட்சி- சோசலிசப் புரட்சி என்ற தொடர் இயங்கியல் நிகழ்வு பற்றி அவர் கரிசனை செலுத்தினார்.

மனித குலத்தின் சமத்துவமான வாழ்வு என்பதே அதன் அற உணர்வாக அமைந்திருந்தது.

 

தேசங்களின் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசும் போது குறிப்பாக மகாரஸ்சிய பெருமித உணர்வுகளை கடுமையாக விமர்சித்தார்.

ஆங்கிலத்தொழிலாளர் வர்க்கம் அயர்லாந்தின் விடுதலையை ஆதரிக்கவேண்டும் என்று மார்க்சும் ஏங்கல்சும் குறிப்பிட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.

தொழிலாளவர்க்கத்தை பிளவு படுத்தக் கூடாது என்ற நியாயத்துடன்? தேசங்களின் சுயநிர்ணய உரிமையை நிராகரித்தவர்ளுடன் அவர் கடுமையாக சம்வாதத்தில் ஈடுபட்டார்.

அதேபோல் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம  என்ற தனது கட்டுரையை முதலாம் உலகப் போhக்காலத்தில் எழுதினாhர்.

 உலகவளங்கள் ,ூலதனங்கள் எல்லாம் ஏகபோகமாகி உலகமானிடம் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதன் ஆரம்ப நிலைமைகளை தோழர் லெனின் சரியாகவே மதிப்பிட்டார்.

மார்க்ஸ்- ஏங்கல்ஸ் கம்யூனிஸ்ட கட்சி அறிக்கையில் கூறியது போல் எல்லா மனித உறவும் இன்று பணப்பட்டுவாடாவாக மாறிவிட்டன என்பது நிஜத்திலும் நிஜமாகி விட்டது.

தொழிற்சங்க வாத-அன்றாட பொருளாதாரவாத கோரிக்கைகளினுள் மூழ்குவதை லெனின் கடுமையாக விமர்சித்தார்

 தொழிலாளிவர்க்க அதிகாரத்தை நிலைநிறுத்தும் அரசியலை அவர் வலியுறுத்தினார்.

 இன்று தொழிற்சங்கங்களையே செயலற்றுப் போகச் செய்வதற்கு நலிவடையச் செய்வதற்கான நிலைமைகள் உருவாகியிருக்கின்றன.

 

காப்பிரேட்டுக்களையும், ஊகவாணிகத்தையும் அனுசரித்து நடக்குமாற  அவற்றின் முகவர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை பகர்கிறார்கள்.

காப்பிரேட்டுக்கள் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவன. அவையே உலகத்தின் ராட்சகர்கள் என்ற மாயவிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

எமது பொருளாதார மேதைகள் பலர் இதனைத்தான் அருங்கண்டுபிடிப்பாக சிலாகிகிக்கிறார்கள்.

இதன் தவிர்க்கமுடியா வரலாற்று விதியாக உலகத் தொழிலாளர்களை மேலும் மேலும் நெருக்கமாக கொண்டுவந்துள்ளது.

 

ஆனால் வாழமுடியாத நெருக்கடிகள் நெருக்குவாரங்கள் மக்கள் கிளர்ச்சிகளுக்கு தவிர்க்கமுடியாத வரலாற்று விதியாக திரும்ப திரும்ப எழுந்துகொண்டிருக்கின்றன.

இந்த காப்பிரேட்டுக்களின் நலன்களுக்காக உலகம், இயற்கைச் சுற்றாடல் பெரும் ஆபத்திற்குள்ளாக்கப்பட்டிருக்கிறது.

மத்திய கிழக்கில் நடக்கும் வேட்டையில் எண்ணெய்க்காக இரத்தம் என்பது பிரபலமானது.

சிறுரக கனரக நச்சு ஆயுதங்கள் வகை தொகையின்றிக் குவிக்கப்படுகின்றன.

 இவையெல்லாம் மனித குலத்தை சுவடே இல்லாமல் அழித்து விடக் கூடியன என்பதெல்லாம் விளங்காத சங்கதியல்ல.

ஈவிரக்கமற்ற சூறையாடல் என்பது தான  ுதன்மை பெற்றிருக்கிறது.

 இந்த இடத்தில் தோழர் லெனினின் அறக் கோட்பாடுகள் முக்கியமானவை.

நாடு பிடி- காலனிகளை பங்கு போடும் யுத்தங்களுக்கெதிராக அந்த ஏகாதிபத்திய நாடுகளின் உள்நாட்டு அரசுகளுடன் கணக்கு தீர்க்கவேண்டும  என்று லெனின் குறிப்பிட்டார்.

 

 இது சர்வதேச சகோதரத்துவத்திற்கான அறக் கூற்று. தோழர் றோசாலக்சம்பேர்க் போன்றவர்கள் ஜேர்மனியிலும் அதனை முன்னெடுத்தனர். இதற்காகவே அவரும் காhல் லீப்னெட் போன்ற தோழர்களும் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டார்கள்.

 

 மாபெரும் தத்ததுவார்த்த அறத்தின் பாற்பட்டு 'போல்சிவிசம்' – ரஸ்சிய பொதுவுடைமை இயக்கம் உருவானது.

 முதலாளித்துவ ஜனநாயகம் பற்றி அதன் மாயத் தோற்றம் பற்றி  'அரசும் புரட்சி'யில் அவர் தெளிவாகக் குறிப்பிட்டார். 1910களின் நடுப்பகுதியில் அவர் அதனை எழுத் ஆரம்பித்ததார்.

 

இடையறாத படிப்பும் அன்றாட அனுபவங்களிலிருந்து அவர் கருத்துக்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்.

 

மார்க்சிய இயக்கவியலை அவர் நன்கு புரிந் வைத்திருத்தார்.

 

அவருடைய கட்சி பற்றிய கருத்து அப்படியே இன்றையகாலத்திற்குப் பொருந்துமா எதார்த்தமானதா என்பது மறு பரிசீலனை செய்ய வேண்டியது.

அக்டோபர் புரட்சிக்காக தலைமறைவுகாலத்தில் உருவாக்கப்பட்ட கட்சி தொழிலாளர் வறியவர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட சோவியத்துக்களுக்கப்பால  அதிகாரத்துவ கட்டமைபை;பொன்றை கால ஓட்டத்தில் சோவியத் யூனியனில் ஸ்தாபிதமாக வழிவகுத்தது.

அதுவே 70 ஆண்டுகளில் ஏகாதிபத்திய சதிகளில் வீழ்ந்து போவதற்கும் எதுவித சமூகபிரக்ஞையுமற்ற இராணுவ வாத சாயல் கொண்ட அதிகாரத்துவ கட்டமைப்பு உருவாவதற்கும் வழிசமைத்தது.

தொழிலாளிவர்க்க ஜனநாயகம் சர்வாதிகாரம் பற்றிய கருத்துக்கள் இன்றும் வளர்த்தெடுக்கப்பட வேண்டியதாகவும் புதிய கண்டறிதல்களையும் அவாவி நிற்கிறது. 1910களனி பிற் கூற்றில் தாங்கள் ஏற்கனவே கருதியதை உடனடியாகச் செய்யமுடியா  ிலையிலேயே அவர் புதிய பொருளாதாரக் கொள்கையைப் பரிந்துரைத்ததார்.

புதிய யதார்த்தங்களுக்கு விடை காண்பதில் திரும்ப திரும்ப ஒரே விடயத்தை கூறும் மத போதகர்கள் போல் செயற்படவில்லை. மந்திர உச்சாடனம் செய்யவில்லை.

அவர் மார்க்சீய இயங்கவியலின் அடிப்படையில் அவற்றுக்கு விடை காண முயன்றார்.

அவர் சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டு பின்னர் ஜேர்மனி, சுவிற்சலாந்துஜெனிவ ,பிரான்ஸ் ,செக்கோசலவாக்கியா ,சுவீடன் ,பின்லாந்து என பல நாடுகளில் வாழ நேரட்டாலும் அங்குள்ள சமூக ஜனநாயக வாதிகளுடன் உறரைவப் பேணினார்.

தீப்பொறி,  ுதிய தீப்பொறி ,பாட்டாளி ,சமூக ஜனநாயகம் ,புதுயுகம் பிராவ்தா என வெ;வவேறு காலகட்டங்களில் பத்திரிகைளில் எழுதிக் கொண்டிருந்தார்.

ரகசிய வினியோகங்கள் மீள்பதிப்புக்கள் நிகழ்ந்தன.

மனித குலத்தின விடுதலை என்பதே அவரின  ஆழ்ந்த சிநதனையின் அடிப்படையாக இருந்தது.

 

 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்'

என்ற ஆன்ம வேகம்- ரஸ்சிய இலக்கியக் காரர்களின் நாவல்கள் கவிதைகள் ந.hடகங்களில் இருந்தெல்லாம் உதாரணங்களை எடுத்தாள்வார்

ரஸ்சிய தொழிலாளிவர்க்கம் மக்கள் பற்றிய கூருணர்ச்சி இருந்தது.

புரட்சி நடத்தப்பட வேண்டிய தருணங்கள் பற்றி அவர் தெளிவாக இருந்தார்.

1905, 1911 தொழிலாளர் கிளர்ச்சி 1917 பெப்ரவரி அக்டோபர் புரட்சி பற்றிய மதிப்பீடுகள் -மிகவும் யதார்த்தமானவர . நடைமுறைக்குதவாத போலியான கபடத்தனமான கற்பனைகளில் உலவாதவர்.

புரட்சிக்குப்பின்னர் ஜேர்மனியுடன் போரைத்தவிர்ப்;பதற்காக ரஸ்சியாவின் சில பகுதிகளை தற்காலிகமாக தாரைவார்த்து புரட்சியைப் பாதுகாத்தார்.

பின்னர் ஜேர்மனியில் நிகழ்ந்த மாற்றங்கள் படைவிலகலுக்கு வழிவகுத்தன.

 

இந்திய இடதுசாரிகள் எப்படிச் செயற்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்திய தேசிய விடுதலை இயக்கத்துடன் இந்திய இடதுசாரிகள் சேர்ந்துசெயற்பட வலியுறுத்தியவர .

 திலகர் ,பகத சிங் போன்றவர்கள் மீது லெனின் மேல் பெரும் மரியாதை வைத்தருந்தார்கள்.

 டாங்கே போன்றவர்கள் தேசிய விடுதலை இயக்கத்துடன் இந்திய இடதுசாரி இயக்கம் இணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தை உணாந்திருத்தார்

மார்க்சீய சொற்சிலம்பத்தில ஈடுபடும் பலருக்கு இது தெரியாது.

தத்தமது நாடுகளின் நிலமானிய உறவு முறைச் செல்வாக்கிற்கு உட்பட்டு மார்க்சியத்தை புரிந்துகொள்ள முயன்றார்கள்.

அதனை ஒரு இயக்கவியல் விஞ்ஞானமாக அல்லாமல் மதமாக்கவும் முயற்சித்தார்கள்.

அக்டோபர் புரட்சியை பாரதி 'ஆகா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி' என்று பாடினார்

இலங்கை உட்பட நாடுகளின் சுதந்திரதிற்கு பாடுபட்டவர்கள் அக்டோபர் புரட்சியின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களே. என்.எம் கொல்வின், எஸ்.எ விக்கிரமசிங்க, வைத்திலிங்கம், விவியன் குணவாத்தனா, பீற்றர்கெனமன் பிலிப  ுணவர்த்தனா போன்றவர்களும் அக்டோபர் புரட்சியின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களே.

இந்தியாவில் காந்தியடிகள் காலனிகளின் சுதந்திரம் பற்றிய லெனின் கருத்துக்களை வெகுவாக சிலாகித்தார்.

ஜவகர்லால் நேருபோன்ற தலைவர்கள் அக்டோபர் புரட்சிக்கு மிகவும் நேசமானவர்கள்.

யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் தோற்றத்தில் அக்டோபர் புரட்சியும் இந்திய தேசிய விடுதலை இயக்கமும் செல்வாக்குச் செலுத்தியது.

அதிதீவிர வாதம் வலது சாரி சந்தர்ப்பவாதத்திற்கு வழிவகுக்கும் என்பதை லெனின் தனது இடதுசாரி கம்யூனிசம் ஒரு இளம் பருவக் கோளாறு என்ற நூலில் தெளிவாகவே குறிப்பிட்டார்.

 எம்மிடம் போலியான பல வாய்ச்சொல் வீரர்களும் இருக்கிறார்கள்.

ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் அது இன்று எமது வாழ்வின் சகல அமசங்களிலும் நிலவும் உலகமயமாக்கலாகவும்

 மீளவும் மீளவும் உலகத்தை பங்கு போடும் யுத்தங்களாகவும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

 சுயநிர்ணய உரிமை என்பது உலகளாவிய அளவில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடு மாத்திரமல்ல அது பல்வேறு ஒடுக்குமுறைகள் தொடர்பிலும் பிரயோகிக்  ூடியவாறு விரிவடைந்துள்ளது

 

மக்களின் அறச் சீற்றங்கள் மாபெரும் நகரங்களை அதிர வைக்கின்றன.

சமத்துவுமான வாழ்வு உலகளாவிய அளவில் உருவாக்கப்படும் வரை இந்த அலை ஓயாது.

தொழிலாளர்கள் மற்றும  ஒடுக்கபட்டோருக்கு வெல்வதற்கான உலகம்

தேசங்களின சுதந்திரம்

பெண்களின் உரிமைகள்

ஏகாதிபத்திய யுத்த எதிர்ப்பு

பாசிசம், நிறவெறிக்கெதிரான போராட்டங்கள்

கிழக்கில் நடந்த ஜனநாயகப் புரட்சிகள் ,சமூக ஜனநாயக இயக்கங்கள் மேற்கத்திய வாழ்வில் உருவாகிய பெறுமானங்கள்

வறுமை ஒழிப்பு

உலகளாவிய சுற்றாடல் பாதுகாப்பு

இலவச சுகாதார வைத்திய வசதி

கல்விச்சுதந்திரம், சமூகப்பாதுகாப்ப  பற்றிய கருத்துக்கள் வலுவடைவதற்கு அக்டோபர் புரட்சி உந்து சத்தியாக இருந்தது.

 இன்றைய உலகமயமாக்கல் சுரண்டலுக்கெதிரான சவால்களும் அங்கிருந்து தான் உருவாகின்றன.

 54 வயதில  மறைந்த தோழர் லெனின் இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால் உலகின் நவீன  தேவைகளுக்கான கோட்பாடுகளை கருத்தியல்களை இயக்கவியல் கண்ணோட்டதில் உருவாக்கியிருப்பார்.

சமூக வாழ்வின் சகல துறைகள் பற்றியும் வர்க்க கண்ணோட்டத்தில் அவர் வெளிப்படுத்தி வந்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com