Contact us at: sooddram@gmail.com

 

அறிவிற்கெதிரான அதிகாரம், கலகம்.

(சுகு-ஸ்ரீதரன்)

வரலாற்றை நவீன உலகில் தொல்லியல் மற்றும் மானிடவியல் மற்றும் இலக்கியங்கள், மரபார்ந்த பழக்கவழக்கங்கள் மற்றும் பண்பாடுகளிலிருந்தும் இவற்றை விஞ்ஞான ரீதியான விசாரணைக்கு உட்படுத்தி பதிய முற்படுகிறார்கள். ஆர்தர் .சி கிளார்க், ஐசாக் அசிமோவ் போன்றவர்கள் ஆர்வக் கிளர்ச்சி ஏற்படுத்தும் புனைவுகளைத் தந்தார்கள்.இரண்டு சூரியன்கள் நிலவும் கிரகம் கண்டு பிடிக்கபட்டபோது அது ஆர்தர்.சி. கிளார்க்கின் புனைவொன்றை ஒத்திருந்தது.தென்னிந்திய இலங்கை வரலாற்று ஆய்வுகளை ஐராவதம் மகாதேவன், நாகசாமி, இந்திரபாலா, சேனகபண்டாரநாயக்கா, செரான் தெரணியகல, ரகுபதி போன்றவர்கள் பிரதானமாக தொல்பொருளியல் மற்றும் மானிடவியல் தகவல்களைக் கொண்டு திராவிட மற்றும் இலங்கை சமூகங்களின உருவாக்கம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.
தற்போது டிஎன்ஏ - பரம்பரை இயல் தகவல்கள் மூலம் மக்கள் சமூகங்களின் பூர்வீகங்களை அறிய முயற்சிக்கின்றனர். இன்னும் சொற்ப காலத்தில் இது மிக எளிதாகி விடும்.

இலங்கையின் பாம்புகள் என்று சொல்லப்படும் பறக்கும் பாம்புகள் ஆந்திர பிரதேச சேச்சாலம் வன உயிரியல் பகுதியல் காணப்படுவதாக கண்டு பிடிக்கபட்டிருக்கிறது. 17000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நிலப்பகுதிகள் இனைந்திருந்தற்கான ஆதாரமாக இதனையும் கொள்ள முனைகிறார்கள். பனை, பூவரசு, கிழுவை வேலி, கரிக் குருவி, குடுமி, கடுக்கன் கிராப்பு கோயில் 14ந் திருவிழாவின் அடுத்தநாள் கறி, பனந்தென்னங்கள் ரசனை, வீட்டுச் சாரயம், மருமகனின் பூவரசு சீர்வரிசை பற்றிய மாமனாரின் நக்கல், தொண்டு பட்டி நேர்த்தி, சாதி அமைப்பு, உயரத்திலிருக்கும் அர்த்த நாரிசுவரரும் காட்டில் படுத்திருக்கும் பாவத்தம்மாளும் வௌ;வேறு பூசாரிகளும் படையலும் ஈழத்தமிழர்களின் வாழ்வில் குறிப்பாக . தமிழக திருச்செங்கோடு பிரித்தானிய ஆட்சிக்கால வாழ்வு பொதுவாக வடக்கு கிழக்கு குறிப்பாக யாழ் தீவுப்பகுதி வடமராட்சி மற்றும் தென்மராட்சி வலிகாம வாழ்வில் இருந்ததை தற்போதும் எச்ச சொச்சமாக இருப்பதை ஒத்ததாக காணப்டுகிறது.

திருச்செங்கோட்டின் 300 ஆண்டுகளுக்கு முந்திய சாயல் இங்கும் சிதறுண்டு காணப்படுகிறது.
பெருமாள் முருகன் இந்த தொப்புள் கொடி உறவை திட்டமெதுவும் இல்லாமல் அநாயாசமாக மாதொருபாகனில் பதிகிறார். கோயிலில் சாமி தூக்குவதற்கான பரம்பரை உரிமை சாதிக்கட்டமைப்பு. யாழ்ப்பாண ஆதிக்க கலாச்சாரமையமான நல்லூர் கந்தசாமி கோவிலிலும் திருவிழாக்காலங்களில் இதன் சிலசாயல்களைக் காணலாம். டானியல் அவர்களின் நாவல்களில் சிறுகதைகளில் கூட யாழ்மரபுகள் என்று சொல்லபட்டவற்றை மீறய விதி மீறல்கள் 'களவொழுக்கங்கள' பற்றிய கதைகள் விரவிக் கிடக்கும்.

கொச்சையான வக்கிரமான எண்ணங்களுடன் பார்ப்பவர்களுக்கு பெண்ணை எப்போதும் சந்தேக கண்ணினூடாக பார்க்கும் சாதி உட்பட அத்தனை அடிமைத்தனங்களையும் தலையிலேற்றிய ஆதிக்க சக்திகளுக்கு இது நிம்மதியைக் குலைக்கும் பிரச்சனை.
தமிழகத்தில் கருத்துச் சுதந்திரத்திற்கெதிரான நோய் எபோலா போல் தீவிரமாக பரவி வருகிறது. அது மத - தீண்டாமை வகைப்பட்டது மாத்திரமல்ல. யாழ்மையவாத தமிழ்தேசிய வெறியின் செல்வாக்கிற்கு உட்பட்ட வெறுப்புணர்வினூடாகவும் பரவியுள்ளது.

டாம் மற்றும் பிரசன்ன விதானகேயின் திரைப்படம் இவற்றின் மீதான இவை போன்ற இதரவற்றின் மீதான விரோதப் போக்குகள் போன்று பல. இவை எல்லாம் சேர்ந்து பகுத்தறிவு, சுதந்திர முற்போக்கு எண்ணங்களின் களமான தமிழகத்தை அண்மைக்காலமாக மாசுபடுத்தி வருகிறது. இந்த சுதந்திரத்திற்கெதிரான தாக்குதல்களுக்கெதிராக தீவிரமாக செயற்பட வேண்டிய காலம் வந்து விட்டது. துரோகிகள் என்று தூற்றுவோரும் இந்த கலாச்சார காவலர்களும் ஒன்றே. இவர்கள் அனேகமாக பாசிச வாதிகளாக இருப்பார்கள். ஈழத்து அரசியலின் இன்றைய கனவான்கள் அதிகாரவர்க்கமும் அனேகமாக இந்த பாசிச சிந்தனைப் போக்கு கொண்டதே.

தமிழகம் காந்திய சுதந்திர இயக்கம், இடதுசாரி முற்போக்கு மற்றும் திராவிட சீர்திருத்த இயக்க செழுமைகளுள் வளர்ந்தது. அதன் அறங்கள் சமூக விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அது உலகளாவிய தமிழர்களின் ஜனநாயக இருப்பிற்கும் அறிவு பூர்வமாக முன் செல்வதற்கும் அவசியமானது. அறஞ் சார் இலக்கியவாதிகள் பிரக்ஞையுடனோ அல்லாமலோ அறிவியல் வரலாறு மானிடவியல் பங்களிப்புக்களை வழங்குகிறார்கள். மற்றும் சமூக அதிர்வுகளை ஏற்படுத்துகிறார்கள். இந்தப் பதிவு, நாவல் பலநூறு கட்டுரைகளை விட வலுமிக்கது.
(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com