Contact us at: sooddram@gmail.com

 

தொப்புள் கொடி உறவும் -தகிக்கும  யதார்த்தங்களும்

இன்று தமிழ், தமிழன், உலகத்தமிழர் ஒற்றுமை, தனிக்குணம், பழமை உலகில் அனைத்து மொழிகளிலும் தொன்மையானது என்றெல்லாம் சொல்லப்படுக்கிறது. ஆனால் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து விதிவிலக்குகளை விடுவோம். ஈவேரா அவர்கள் தென்னிந்தியா,  தமிழகத்தில் தீண்டாமை, பெண் அடிமைத்தனம், சமயம் பற்றிய அறக் கோட்பாடுகளை முன்வைத்துச் செயற்பட்டார். ஆனால் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஒரு தீவிர மறுமலர்ச்சி சீர்திருத்த இயக்கத்தை அவர் நடாத்தினார். ஆனால் அதன் பின்புலத்திலேயே தமிழகத்தின் இரண்டு திராவிட கட்சிகளும் உருவாயின. இவற்றைவிட வேறுபல இந்தப்பாரம்பரியத்தில் வந்த இயக்கங்கள் இருக்கின்றன.

பெரியாரின் கொள்கைகளை நடைமுறைகளை தலைகீழாகப் புரட்டிப்போடும் நடைமுறைகள் பரவலாக இருக்கின்றன. ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து சாதியம், பெண்ணடிமைத்தனம், மதச்சீர்திருத்தங்கள் பற்றிய அக்கறைகளை நாம் தவிர்த்து விட முடியாது. கலைஞரிடம் இன்று உலகில் வாழும் தலைவர்களில் தனக்கு பிடித்தவர்கள் யார் என்று கேட்டால  அவர பிடலைத்தான் சொல்லுவார்.

பெரியாருக்கு ஸ்டாலினைப் பிடிக்கும். இன்று தமிழ் நாட்டில் பல ஸ்டாலின் பெயர்கள் பெரியாரால் சூட்டப்பட்டவையே. இடதுசாரிக் கட்சிகளும் தேர்தல் என்று வரும்போத  இந்த பிரபல திராவிட கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொள்வார்கள். அமெரிக்கா கடுமையான பொருளாதாரத்தடை விதித்த நாட்களில் கியூபாவிற்கு உணவுப்பொருள் சேர்த்தனுப்பும் இந்திய மார்க்சிஸ்ட கட்சியின் முயற்சிக்கு மக்கள் பல்வேறு கட்சிகள் கலைஞர்கள் ஒத்துழைப்பு வழங்கினர்.

மண்டெல் கமிசன் பரிந்துரைகள் ஏகோபித்த முறையில் தமிழக அரசியல் கட்சிகளால் வரவேற்க்கப்பட்டன. பின் தங்கிய சமூகங்களுக்கான இட ஒதுக்கீடுகள் பற்றிய அக்கறைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் மீதான அத்து மீறல்களை பொலிஸ்நிலையங்களில் முறையிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்காக பெண்களுக்கோ சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள்,  தலித்துக்களுக்கோ பிரச்சனைகள் இல்லையென்றில்லை.

ஆனால் தமிழகத்தில் இன்று இடதுசாரி இயக்கம், பெரியாரின் இயக்கம், அம்பேத்கர் இயக்கம், தோழர் ஜீவா, காமராஜர் பாரம்பரியத்தின் செல்வாக்கு இருக்கிறது. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம், கண்ணதாசனின் பாடல்களிலும் எம்ஜிஆர், சிவாஜி படங்களிலும் கலைஞரின் வசனங்களிலும் சீர்திருத்த, பகுத்தறிவுக்கருத்துக்கள் இழையோடும்.

ஆனால் யாழ்மைய அரசியல் பொதுவாக வலதுசாரி வகைப்பட்டது. விதிவிலக்குகள் இருக்கின்றன. அதற்கு பெரியாரோ, அம்பேத்கரோ, காமராஜரோ, ஜீவாவோ உவப்பானவர்கள் அல்ல. தொப்புள் கொடி உறவு பற்றிப் பேசுபவர்கள் சமகால சமூக பொருளாதார மாற்றங்கள் அதனூடாக எழுந்த இந்திய தமிழக சமூக விழுமியங்களுடன  ஈழத்தமிழர் அரசியல் நெருக்கமானதல்ல. அப்படிப்பார்த்தால் இலங்கையின் இடதுசாரி அரசியலும், ஈழ முற்போக்கு அரசியலும் மாத்திரமே தமிழகத்திற்கு நெருக்கமானவை.

வெள்ளைக்காரர்கள் எல்லாவற்றையும் செய்து தருவார்கள். மற்றவர்கள  தம்மை விட தரம்தாழ்ந்தவர்கள் என்ற மன நிலையே பிரதானமாக வடக்கு யாழ்ப்பாண மைய அரசியலின் சாரம்சமாகும். அது பொதுவாக தமிழக அறம் சார் இலக்கியவாதிகளுடயோ அல்லது சமூகப்பிரக்ஞைகொண்ட எழுத்தாளர்களுடனோ தொடர்புபட்டதில்லை. விதி விலக்குகள் இருக்கின்றன. ஜனரஞ்சக சஞ்சிகைகள்? வர்த்தக ஜனரஞ்சக  ினிமா போன்ற ஊடகங்கள் அதற்கு விதிவிலக்கு.

தமிழகத்தில் அக்கறைக்குரிய அறங்கள் எல்லாம  ஈழத்தமிழர் ஆதிக்க அரசியலில் அக்கறைக்குரியவை அல்ல. அதே மாதிரியான பிரச்சனைகள் இங்கும் இருக்கின்றன. ஆனால் அவை பற்றிய அக்கறைகள் இங்கு முற்போக்காளர்களுக்கு மாத்திரம் உரியவை. இது முதலில் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

ஈழத்தமிழர் ஆதிக்க அரசியல் தனது சொந்த நலன்களுக்காகவே 'வெறும்' மொழி- பொருளாதார நலன்களையும் வைத்த  ாத்திரம் கொண்டு தொப்புள் கொடி உறவு பற்றிப் பேசுகிறது. புலம்பெயர் வியாபாரமும் நுகர்வும் பெருமளவு தமிழகம் சார்ந்தது. ஆனால் யாழ்மையவாதம  இந்தியர்களை,  தென்னிந்தியத் தமிழர்களை விட தாம் ஒரு படி உயர்ந்தவர்களாகவே  நோக்குவது. வெள்ளைக்காரர்கள் தான் தமக்கு சமதையானவர்கள் என்ற ஆதிக்கத்திமிர் மனோநிலையைக் கொண்டது. ஒருவித அடிமை மன நிலையும் கூட. மற்றப்படி சிங்களவர்களோ, ஆபிரிக்கர்களோ இதர மக்கள் குழுவினரோ தமக்கு நிகரானவர்கள் இல்லை என்ற இறுமாப்பும் இருக்கிறது.

மேற்போனால் இஸ்ரேல்காரர்களும் தாமும் ஒன்று என்ற மனோநிலையும் இருக்கிறது. இதனை ஒரு தொற்று வியாதியாக இப்போது சிங்கள ஆளும் வர்க்கத்தினருக்கும் பரப்பியிருக்கிறார்கள். தமிழகத்தின் சில அரசியல் பிரிவினருக்கு இது தெரியாதது. விளங்கிக்கொள்ளமுடியாததென்றும் இல்லை. ஆனால் அவர்களுடைய பொருளாதார நலன்களுக்கும் நாட்டின் தேர்தல் அரசியலுக்கும் பயன்படுகிறதென்றால் மெருகேற்றி பயன் படுத்துவார்கள். ஆனால் ஈழத்தமிழர் பற்றிய அறிவிலும் பிரச்சனை இருக்கிறது.

கிழக்கு, மலையகத் தமிழர், முஸ்லீம் மக்கள், சிங்களவர்கள் பற்றிய அறிவு அல்லது இலங்கை சமூகங்களின் வரலாறு பற்றிய அறிவும் குறைவாகவே காணப்படுகிறது. ஈழப் போராட்ட வரலாறு ஜனநாயக மறுப்பு இனப்பிரச்சனையின் தாற்பரியம் பற்றிய மேம்போக்கான ஒரு திரிந்த அறிவே காணப்படுகிறது. சிங்களவர்கள் என்றால் உலகில் மிக மோசமான மனிதர்கள் என்று சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்களுக்கும் சாதாரண மக்களுக்குமிடையே தெளிவான வேறுபாடுகள் இல்லை. பௌத்த சிங்கள பேரினவாதம் போல் யாழ்மையவாதம் எவ்வளவு மோசமான நச்சு அரசியல் என்பதும் தெரியாது. அது தமிழகம் மீதும் வெறுப்பை உமிழ்வது அருவருப்பது என்பதும் புரியாது.

உதாரணத்திற்கு தமிழக மக்களுக்கு ஈழத்தமிழர் நிலை ஏற்பட்டு இங்கு நிலைமை சுமுகமாக இருந்து அங்கிருந்து மக்கள் அகதிகளாக யாழ்ப்பாணம் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை கற்பனை பண்ணிப்பாருங்கள். இங்கு சுயபச்சாத்தாபம் மாத்திரம் தான் இருக்கிறது. எங்களைவிட உலகில் எவரும் கஸ்டப்படவில்லை என்ற கபடத்தனம் தான் செல்வாக்குச் செலுத்துகிறது. புத்திசாலிகள்,  ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் வாழும் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட தமிழர்கள் சிறந்ததொருசௌகரியமான புலம் பெயர்வாழ்வை அமைத்துள்ளார்கள்.

ஆனால் இன்னுமொரு பிரிவினர் 30 ஆண்டு போர் அனுபவங்ளை முள்ளிவாய்கால்வரை பெற்று செத்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த இழப்புக்களும் மரணங்களும் தான் வட அமெரிக்க ஐரோப்பிய வாழ்க்கையை ஸ்தாபித்தது. அதனை இயக்கும் சத்தியாக இருந்தது யாழ்மையவாதமே. இன்று யாழ்மையவாத சர்வதேச அரசியல் இங்கு ஈழத்தமிழர்களுக்கு நல்வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதற்கென்று கருதினால் அது அடி முட்டாள்தனமானதாகும். அது பிரக்ஞை பூர்வமாகவே ஐரோப்பாவிலும் வட அமெரக்காவிலும் தனது சௌகரியமான இருப்புக்காக உள்ளூர் தமிழர்களின் பிரச்சனைகளை மூலதனமாக்கியருக்கிறது. நாடு கடந்த தமிழீழம் என்பதும் அதுதான். இங்கு பிரச்சனை தீராமல் இருப்பதையே யாழ்மையவாதிகள் விரும்புகிறார்கள்.

இப்போது பிரச்சனை எல்லாம் இங்கு வாழ்க்கையை கட்டியமைக்கமுடியுமா என்பதே. இலங்கையின் ஜே.ஆர் - மகிந்த வரை யாழ்ப்பாண மன நிலையின் குணம் குறிகளை நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் வடக்கு- கிழக்கு வெறிச்சோடி விடும் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியும். அந்த இடைவெளியில் சிங்களவர்களை குடியேற்றத்தையும், இராணுவ மயமாக்கலையும், கலாச்சார ஆக்கிரமிப்பு கெடுபிடிகளையும் அதிகரித்துச் செல்வார்கள்.

1980களில் ஆட்கள் வெளியேறிச்செல்வதை ஊக்குவித்தது போலவே யுத்தம் முடிந்த கையோடு சரமாரியாக ஆட்கள் வெளியேறுவதை இலங்கை அரசு ஊக்குவித்தது. அண்மைய அவுஸ்திரேலிய கடல் பயணங்களில் எத்தனை பேர் கடலில் மாண்டார்கள் என்று தெரியாது. மனிதர்கள் இவ்வாறு வெளியேறுவது தேசிய எல்லைகள் என்று சொல்லப்படுவதை கடப்பது பிரிச்சனை என்று கூறவரவில்லை. மனிதகுலவரலாறு ழுமுவதும் இது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் ஒரு சமூகத்தின் இருப்பை நிராகரிக்கும  அரசின் போக்கும் அதனை மானசீகமாக ஏற்றுக் கொண்டு பகிரங்கத்தில் பாசாங்காக வார்த்தைகளை உதிர்க்கும் போலித்தனமும் தான் பிரச்சனை. இந்த நிலத்தில் கௌரவமாக மரியாதையுடன் வாழ்வதற்கு எத்தனை பேருக்கு விருப்பம் என்பதுதான் முக்கிய கேள்வி.

(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com