Contact us at: sooddram@gmail.com

 

வீரமக்கள் தின நினைவுக் கருத்து

அதிகாரப்பரவலாக்கல் என்ற விடயம் 13 வதை தாண்டி செல்லவில்லை. -  தோழர் சுகு- ஸ்ரீதரன்

மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் மரணித்தவர்களை நினைவு கூர்வது சீரிய பண்பாடு. அது இன்றைய எமது வரலாற்றுச் சூழலில் மேலதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இவர்களையெல்லாம் மற்நது விடுவோம். அந்தச் சுவடே தேவையில்லை என்று ஒரு கூட்டம் புறப்பட்டிருக்கிறது. அது மக்களின் இன்ப துன்பங்களில் பங்கு பெறாத எந்த தியாகமும் செய்யாத கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்மக்கள் பேரழிவுகளையும் அவலங்களையும் சந்தித்த போது சம்பந்தமில்லாமல் இருந்து விட்டு இப்போது தமிழ் மக்கள் மீது அதிகாரம் செலுத்த புறப்பட்டிருக்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் பஞ்சமும் நோயுமாக வாழ, இந்த சௌகரியமான கூட்டம் இவர்களை ஆளப் புறப்பட்டிருக்கிறது. இது பற்றி மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணமிது. இதனை இந்த வீரமக்களின் தினத்திலே குறித்ததுரைக்கிறோம்.

சமூகத்தின் விடியலுக்காக என்றே ஒவ்வொருபோராளியும் வீட்டிலிருந்து புறப்பட்டிருக்கிறார்கள். தவறான வழிகளில் சிக்குண்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால் உயிர்த்தியாகம் நிகழ்ந்திருக்கிறது. இந்த தியாகங்கள் வியர்த்தமாவதை, இழிவு படுத்தப்படுவதை தார்மீக உணாச்சி உள்ள எவரும் சகித்துக் கொண்டிருக்க முடியாது.
எமது
சாதாரண குடும்பங்களின் பிள்ளைகளின் தியாகங்களை கனவான்களிடம் விட்டு விட முடியாது.

இலங்கையில் தமிழர்கள் பேரழிவுகளை அனுபவித்திருந்தாலும் அனைத்து சமூகங்களும் ஏதோ ஓரு அளவில் அழிவுகளைச் சந்தித்திருக்கிறார்கள். இதில் தேசிய இன சுதந்திரம், ஜனநாயகம், சமூக சமத்துவத்திற்காக போராடியவர்களை நாம் மறந்து விடமுடியாது.

இன்று 30 வருடம் பாரிய யுத்தம் நடந்ததென்பதே மறக்கப்பட்டு வருகிறது. மாற்றங்கள் எதுவும் சமூகத்தில் பெரிதாக நிகழ்ந்து விடவில்லை. கிராம சேவகர் அலுவலகம், பிரதேச செயலகம், மாவட்டசெயலகம், பொலிஸ் நிலையம், வைத்திய சாலை எந்த இடங்களிலும் சாதாரண மனிதனுக்கு மரியாதை எதுவும் கிடையாது. அதிகார மமதையே மேலோங்கிக் காணப்டுகிறது.

ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம . சாதாரண மக்களுடனான சாதாரண வார்த்தையாடல்களில் கூட வன்முறை விரவிக்கிடக்கிறது. அதிகார வர்க்கத்தின் செயற்பாடுகளை தட்டிக் கேட்கும் அரசியல், கலாச்சார இயக்கம் தேவைப்படுகிறது.
மனித
தன்மையற்ற அதிகார கட்டமைப்பில் பாரிய சீர்திருத்தங்கள்- தகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது.

லஞ்சம், ஊழல், முகஸ்துதி, சலுகை என்பன நிர்வாணமாகவே உலாவித் திரிகின்றன.
30 ஆண்டுகள் போராடிய சமூகத்திற்கு கிடைத்த பரிசு இதுதான் என்றால் நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும . போராட்டத்தில் தார்மிவலு-அறம் என்பன எந்தளவுக்கு இருந்தன என்பது பற்றி நாம் மீளாய்வு செய்ய வேண்டும . இந்த வரலாற்று படிப்பினை மிக மிக முக்கியமானது.
ஏனெனில் நம்பிக்கை வறட்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கண்ணியமான சுயமரியாதையுடன் கூடிய வாழ்வொன்று எம் மக்களுக்கு கிட்ட வேண்டும்.
சுதந்திரமான வாழ்வை நோக்கியே போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் திசை தடுமாறி எங்கெங்கோ சென்று முன்னர் இருந்ததைவிட மோசமான வாழ்நிலை.

அதிகாரப்பரவலாக்கல் என்ற விடயம் 13 வதை தாண்டி செல்லவில்லை. அந்த 13 வதில் மிச்ச மீதியாக உள்ளவற்றையும் பறித்தெடுக்கும் போக்குத் தான் அரசபேரினவாத மட்டத்தில் செயற்படுத்தப்படுகிறது. இதற்கெதிராக தெற்கின் இடதுசாரி ஜனநாயக சத்திகள் குரல் எழுப்புகிறார்கள். 13 வதில் உள்ள பொலிஸ்- நிலஅதிகாரங்கள் உள்ளவாறே இருக்க வேண்டும் அதில் மாற்றம் செய்யக் கூடாது என்று இவர்கள் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால்
தமிழ் தரப்பில் 13 வதை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்து பகிரங்கமாக வெளிப்படுத்தப்படவில்லை.

இது அதிகாரப்பரவலாக்கல் சம்பந்தமான இதய சுத்தியை கேள்விக்குள்ளாக்குகிறது.
13 வதை பாதுகாப்பதற்கு தெற்கின் ஜனநாயக இடதுசாரி சத்திகளுடனும், மலையக முஸ்லீம் மக்களுடனும் இணைந்து செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வர வேண்டும். எமது மக்களின் இருப்பு பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிப்பதாக ஏதோ ஒரு அளவில் அதிகார பரவலாக்கல் அரசாங்க கட்டமைப்பு அமைய வேண்டும். அதிலிருந்து தான் தொடங்க வேண்டும
.

கிழக்கு மாகாணசiயின் அதிகாரங்களை உறுதிப்படுத்த பிரதானமாக தமிழ் முஸ்லீம் கட்சிகள் இணைந்து யதார்த்தமாக செயற்படவேண்டும். அதிகாரப்பரலாக்கல் கட்டமைப்பை பலப்படுத்தும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

வடக்கு மாகாண சபை அமைந்தாலும் அது பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். புத்திசாதுரியமும், பொறுமையும் தீர்க்க தரிசனமும் தேவைப்படுகிறது. தமிழ் ஜனநாயக சத்திகளின் ஐக்கியமும , முஸ்லீம், மலையக மக்களுடன் ஐக்கியமும், தென்னிலங்கை ஜனநாயக இடதுசாரிசத்திகளுடனும் ஐக்கியமும் இவ்வாறான முறையிலேயே நாம் இயங்க வேண்டும்.

தமிழ் மக்களின உரிமைகைளை வென்றெடுக்கசிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளை வென்றெடுக்க இலங்கை ஜனநாயகமானதும்பல்லினங்களின் நாடாக மறுவதற்கும் இது அவசியம். இன்று அதற்கு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. நாம் தமிழ் மக்களுக்கும் இலங்கையின் அனைத்து சமூகங்களுக்கும் கண்ணியம்- சுயமரியாதையுடன் கூடிய வாழ்வை வென்றெடுக்க வேண்டும்.

மறைந்த போராளிகள் பொதுமக்களுக்கு செய்யும் அர்த்தமுள்ள அஞ்சலியாக அது இருக்கும்!!
தோழர்
சுகு- ஸ்ரீதரன்
பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை
முன்னணி

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com