Contact us at: sooddram@gmail.com

 

பேராசிரியர் சாந்தசீலன் கதிர்காமர் மறைவு

(சுகு- ஸ்ரீதரன்)

கொழும்பு, யாழ் பல்கலைக்கழகத்திலும் பின்னர் ரோக்கியோ பல்கலைக்கழகங்களிலும் நவீன வரலாறு மற்றும் சர்வதேச அரசியல் கற்கைப் பேராசிரியராக பணியாற்றியவர்.
முற்போக்கு ஜனநாயகவாதியாகவாதியும் - உரிமைச் செயற்பாட்டாளருமான சீலன் கதிர்காமர்  25.07.2015 இல் தனது 81வது வயதில் காலமானார். அவர் 1930 களில் யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிதமான இளைஞர் காங்கிரஸ் பற்றிய விவரணத்தை புதிய தலைமுறைக்கும் எதிர்காலத்திற்குமாக மும் மொழிகளிலும் பதிவு செய்தார். நாடு தழுவிய சமூக ஜனநாயக அக்கறைகளை அவர் கொண்டிருந்தார். இலங்கையின் உண்மையான சுதந்திரத்தை நேசித்த யாழ்ப்பாணத்தின் தீண்டாமை, அநீதிகளை எதிர்த்த ஒரு இயக்கம் யாழ்ப்பாணத்தில் உருவானது பற்றியும், இந்திய சுதந்திர இயக்கத்துடன் அதற்கிருந்த தொடர்பு பற்றியும் முக்கியமான வரலாற்றுப்பதிவை மேற்கொண்டவர்.

வழமையாகப் பேசப்படும் அலுப்புக்கொள்ள வைக்கும் வரலாற்றை விட வித்தியாசமான ஆர்வமூட்டும் ஒன்றது. எமது பகுதிகளில் முற்போக்கு இயக்கத்தின் வேர் எது என்பதை அறிவார்ந்த முறையில் அடையாளம் காட்டினார். இன சமூகங்களிடையே நல்லுறவுக்காகவும் தீண்டாமை சமூக அநீதிகளுக்கு எதிராகவும் அவர் கரிசனை கொண்டிருந்தார். சமூகத்துடன் தொடர்புபட்டு செயற்படுவது பற்றிய பிரக்ஞை அவரிடம் இருந்தது. எமது கிராமங்களில் ஆங்கில அறிவை விருத்தி செய்வது கல்வியின் தரத்தை உயர்த்துவது -உயர் கல்விச் சீர்திருத்தம் பற்றிய அக்கறைகள் இருந்தன.

நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கத்தில் மிக நெருக்கடியான காலத்தில் காலஞ்சென்ற தோழர் பரராசசிங்கம், வண பிதா ஜெயசீலன் போன்றவர்களுடன் இணைந்து வட பகுதியில் பணியாற்றினார். 1981 இல் யாழில் நேர்ந்த அனர்த்தங்கள் பற்றி விரிவான முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை ஆங்கில- தமிழ் மொழிகளில் மேற்கொண்டவர். குறிப்பாக யாழ் பொது நூலகம், ஈழநாடு பத்திரகை காரியாலயம், புதிய சந்தை எரிக்கப்பட்டது- படுகொலைகள் அராஜகங்களை ஆதாரபூர்வமாக சிறப்பாக பதிவு செய்தார்.

இந்த இருண்ட நாட்களில் யாழ்ப்பாணத்தில் அரச பயங்கரவாதம் என்ற பிரசுரத்துடன் தென்னிலங்கையில் இருந்து சமூக நல்லெண்ணம் இன சமூக அக்கறைகளை நாடுவோர் வந்திருந்தனர். இவர்கள் இங்கு வந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவைத் தெரிவித்ததில்,இங்கு அரங்கேற்றப்பட்ட அராஜகங்களை நாடும் உலகும் அறியச் செய்ததில் சீலனின் பங்கு முக்கியமானது. நாம் ஈழமாணவர் பொதுமன்றமாக செயற்பட்ட காலத்தில் எமக்கு நம்பிக்கை அளிப்பவராக சீலன் விளங்கினார். முற்போக்கான மாணவர் இளைஞர் இயக்கங்களின் உருவாக்கம் எப்போதும் அவருக்கு ஆர்வமூட்டுவதாக இருந்தது.

1982 இல் ஜே.ஆர் பாராளுமன்றத்தின் ஆட்சிக்காலத்தை அடுத்த 6 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் ஜனநாயக விரோத சர்வசன வாக்கெடுப்பை நடத்த ஆயத்தமாகியிருந்தார். வழமையான தேர்தல் பகிஸ்கார எண்ணத்திலேயே ஈழமாணவர் பொதுமன்றமாக செயற்பட்ட நாம் இருந்தோம். சீலன் இத்தேர்தலில் பாராளுமன்றக்காலத்தை நீட்டிப்பதற்கெதிராக மக்கள் வாக்களிக்குமாறு செயற்படுங்கள் என்று எமக்கு ஆலோசனை கூறினார்.

1980களின் முற்பகுதியில் யாழ்பல்கலைக்கழகத்தின் மறுமலர்ச்சிக்கால பேராசிரியர் அவர்.
அக்காலத்தின் சிறப்பு வாய்ந்த முற்போக்கு புத்திஜீவிகள் குழாம் என்ற மரபைச் சாந்தவர். தேடலும் சமூகப்பிரக்ஞையும் உள்ள மாணவர்களாலும் முற்போக்கு ஜனநாயக முகாமைச் சோந்தவர்களாலும் அறியப்பட்டவர். பெரிதும் நேசிக்கப்பட்டவர். அவரின் மறைவு அறிவுலகத்தில் ஒரு சமூகம் சார் வெற்றிடமே.

அறிவார்ந்த இணக்கமான சமூக வாழ்வை ஏற்படுத்துவதற்கான அவரின் கனவுகள் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் அவசியமானவை. அவரின் புதல்வர்களில் ஒருவரான அகிலன் கதிர்காமரும் தனது தந்தையின் பிரக்ஞைகளின் செல்வாக்கிற்கு உட்பட்டவர்.
ஆங்கில விரிவுரையாளரான அவரது துணைவியார் புதல்வர்கள் எல்லோருமே பேராசிரியர் சீலனின் இடையறாத செயலூக்கமான சமூக அக்கறைகளுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வது” எவ்வாறு என்பதை சீலன் உணர்த்திச் சென்றார்.

(சுகு- ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com