Contact us at: sooddram@gmail.com

 

இருண்ட பாசிச யுகத்தில் ஜனநாயகத்தின் குரல்

தோழர் றொபேட் (ரஞ்சன்) சுபத்திரன் நினைவு நாள்

தோழர் றொபேட் படுகொலைசெய்யப்பட்டு 12 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. 2 தசாப்தங்கள் நிகரில்லா ஆளுமையுடன் சமூகப் பணியாற்றியவர். சிறை, சித்திரவதை, வன்முறையின் துப்பாக்கிக் குண்டுகள் எல்லாவற்றையும் எதிர் கொண்டவர். சவால் நிறைந்த இந்தக்காலத்தில் அவர் ஆசுவாசமாக சௌகரியமாக எப்போதும் அமர்ந்ததில்லை. ஆனால் அவர் பிரகாசமான முகத்துடன் ஒளிரும் கண்களுடன் பணி செய்தார். தேசிய, வர்க்க ஒடுக்குமுறைகள், தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் இவை பற்றிய புரிதலையும் தேடலையும் இடையறாது மேற்கொண்டார். சமூக மாற்றத்திற்கான இயக்கத்தின் திசைவழி பற்றிய கரிசனை கொண்டிருந்தார். நட்பு தோழமை இவற்றின் அர்த்தங்களை தோழர் றொபேட்டுடன் பழகியவர்கள் உணரமுடியும். நகைச்சுவை உணர்வும், கவித்துவ உள்ளமும், இலட்சிய வேட்கையும் கலந்த உருக்குறுதி வாய்ந்த மனிதர். சித்திரவதைக் கூடங்களிலும், சிறைகளிலும் இந்த சவால் நிறைந்த உலகிலும் அதை நிரூபித்தார். மாறுபட்ட மனிதர்களுடன் கூட்டாகப் பணிபுரியும் அளப்பரிய ஆற்றலை வெளிப்படுத்தினார்.

வெலிகடைச்சிறையில் கைதிகளின் விடுதலை தொடர்பாக நிகழ்ந்த போராட்டங்களில் சக கைதிகளான தோழர்களுடன் முன்னணியில் நின்றார். அதேபோல் அரசியல் கைதிகள் மீதான பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டபோது சக போராட்டக்காரர்களுடன் இணைந்து அதனை எதிர் கொண்டார். 1986 இல் ஈபிஆர்எல்எப் தடைசெய்யப்பட்டு தோழர்கள் பலர் படுகொலைசெய்யப்பட்டு, பின்னர் வடக்கு கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு, எந்தப்பக்கமும் ஜனநாயக இடைவெளியற்ற மோசமான இருளடைந்த சூழ்நிலை உருவாகியிருந்தது.

தமிழகத்தின் மூலை முடுக்குகள் அகதிமுகாம்களில் தங்கியிருந்த தோழர்கள் மக்களுக்கு உதவுவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். ஓய்வொளிச்சல் இல்லாத ஓட்டம். 1994 இற்குப் பிந்திய சூழ்நிலையில் சிதைவுகளிலிருந்து எம்மை மீள் கட்டியெழுப்புவதில் தோழர்களுடன் இணைந்து முயன்றார். வடக்கு, கிழக்கு, கொழும்பு, தமிழகம் திசையெல்லாம் சென்று பணி செய்தார். அன்றாடம் நாளும் பொழுத்தும் மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த நாட்கள் அவை. இந்த மரணத்துள் வாழ்ந்து மறைந்தவர்கள் பல நூறு தோழர்கள். பல நூறு ஆழுமைகள் மானிடத்தின் உயரிய லட்சியங்களை நிறுவ முயன்றவர்கள் புலிகளின் தமிழ் பாசிசம் மற்றும் பேரினவாத படை தாக்குதல்களிலும் படுகொலைசெய்யப்பட்டார்கள்.

தமிழ் சமூகத்தில் நிகழ்ந்த வேதனை இதுதான். நிகரற்ற பல ஆளுமைகள் அழித்தொழிக்கப்பட்டனர். புதிய ஆளுமைகள் உருவாவதற்கான இடைவெளியும் இருக்கவில்லை. 'பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள'; என்பார்களே! கருவறுத்தல் என்பாhர்களே!! இது தான் சமூகத்தினுள் நிகழ்தது. இந்த ஆளுமைகளின் இழப்புக்களில் மரணங்களில் திருடர்களும் அயோக்கியர்களும் சமூகத்தலைவர்கள் ஆனார்கள். இன்றைய நிலை பெரும்பாலும் இதுதான். இந்த மரணங்களும், இழப்புக்களும் வலிகளும் உணர்ந்து கொள்ளப்படாதவரை  இந்த சமூகம் சீரழிந்து சிதைவின் திசையில் பயணிப்பது தவிர்க்கமுடியாதது.

என்ன நடந்தது, எதையெல்லாம் இழந்தோம் என்ற பிரக்ஞை வேண்டும். வௌ;வேறு இயக்கங்கள் கட்சிகள் சமூக ஸ்தாபனங்களுடன் நட்பார்ந்த முறையில் ஜனநாயக நடைமுறைகளில் இயங்கும் ஆற்றல், சமூகத்தின் வௌ;வேறு விதமான மனிதர்களை ஈhக்கும் ஆழுமை, அயராத முயற்சி சமூக அரசியல் தளங்களில் மாத்திரம் அல்ல தோழர்களின் அன்றாடவாழ்வு, பொருளாதாரத்தை தேடுவதிலும் அவர் மிகப்பிரயாசையான கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.

சகோதர சமூகங்களுடன் நட்புறவுடன் வாழ்தல் பற்றிய நம்பிக்கை,  இனவிரோத எண்ணங்கள் அவர் மனதில் துளியளவும் இடம்பிடித்ததில்லை. நவீன இலக்கியம் பற்றிய ஆர்வம் ஈடுபாடு இருந்தது. இலக்கிய கூட்டங்கள், கருத்தரங்ககள் திரைப்படவிழாக்களை அவர் தவறவிடுவதில்லை. எத்தகைய வேலைப்பழுக்களின் மத்தியிலும் இவற்றுக்கு நேரம் ஒதுக்கிக் கொள்வார். சமூகத்தின் நெருக்கடிகள் துன்பங்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு வாழ்ந்தவர்.

வசந்தகாலங்கள் எதுவும் வந்து அதை அவர் அனுபவித்ததும் இல்லை. ஆசாடபூதித்தனமான கலாச்சாரம் மற்றும் பண்பாடு பற்றிய கருதுகோள்களையும் அவர் ஏற்றுக்கொண்டதில்லை. 1997-2003 இடைப்பட்ட காலப்பகுதியில் மரணங்கள் குடியிருந்த யாழ் மாநகர சபையில் ஒரு உறுப்பினராக செயற்பட்டுக் கொண்டு ஜனநாயக விளக்கை ஏற்றி வைக்க அரும்பாடுபட்டார். அவருடைய வாழ்வும், மரணம் இலங்கையின் பிரபல தமிழ் அச்சு இலத்திரனியல் ஊடகங்களில் கண்டு கொள்ளப்படவேயில்லை. உண்மையில் அவை யாழ் மையவாத தமிழ் பாசிசத்தின் ஊதுகுழல்களாகவே செயற்பட்டன.

2002 -2003 -2004 சமாதானகாலம் என்று சொல்லபட்டது. ஆனால் பெருமளவு படுகொலைகள் இக்காலத்தில் அரங்கேறின. தெற்கில் இருந்து வருபவர்கள் அரசியல்வாதிகள், ஊடகவிலாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், சாமானிய மனிதர்கள் என  எவராக இருந்தாலும் அவர்கள் எமது காரியாலயத்தில் தங்கிச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். அவரது தார்மீக உறுதியை சகிக்காத தமிழ் பாசிசவாதிகள் அவருடைய தந்தையாரை 1990களின் முற்பகுதியில் கடத்தி படுகொலைசெய்தார்கள். தாயாரை நாடு கடத்தனார்கள். இது போன்று பல

ஈழப் போராட்டம் இந்த வெட்கக் கேடான, அவமானகரமான, கோழைத்தனங்களை உள்ளடக்கியதே. வடக்கு முஸ்லீம் மக்களுக்கு இது ஒட்டு மொத்தமாகவே நிகழ்ந்தது. தோழர் றொபேட்டின் கனவுகள் எழிலார்ந்தவை. 'எல்லோரும் இன்புற்றிருக்கவே இவ்வுலகு' என்ற மாநிட நேயத்தை அடிநாதமாகக் கொண்டவை.

(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com