Contact us at: sooddram@gmail.com

 

பெண்களின் வாழ்வில் நம்பிக்கை கீற்றுக்களை உருவாக்கும் சமூக இடைவெளி வேண்டும்
(சர்வதேச பெண்கள் தினம் 2015)

பெண்களின் உரிமைகள் தொடர்பாக உலகளாவிய அளவில் நிகழும் மாற்றங்கள் இலங்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன? நாடாளுமன்றம் மற்றும் மாகாண உள்ள+ராட்சி சபைகளில் பெண்களுக்குரிய முக்கியத்துவம் என்ன ? சமூகத்தில் பெண்களின் விகிதாசாரம் பற்றிய பிரக்ஞை இங்கு காணப்படுகிறதா? இலங்கையில் பெண்களை இந்த அவைகளில் தேடிக்கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது. நிர்வாகம் கல்வி-ஆசிரியப்பணி சுகாதாரம் வங்கி போன்ற துறைகளில் பெண்கள் கணிசமான அளவு செல்வாக்கு செலுத்துகிறார்கள். ஆனால் நிலமானிய சமூகத்தின் மிச்ச சொச்சங்கள் பெண்களின் விமோசனத்திற்கு வளர்ச்சிக்கும் தொடர்ந்து தடையாக இருந்து கொண்டிருக்கின்றன. ஆணாதிக்க- நிலமானிய சிந்தனை முறையே இன்றளவில் எமது சமூகத்தில் ஆதிக்கம் வகிக்கின்றது.

நாட்டில் ஜனநாயகம் இன சமூகங்களின் உரிமைகள் பற்றி பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால் பெண்களின் உரிமைகள் பற்றி அவ்வளவாக உரத்துக் குரல் கொடுக்கப்படுவதில்லை. ஊதியமின்றி சமையலறை- மற்றும் குடும்ப பாரங்களை சுமக்கும் பெண்களே நமது நாட்டில் பெரும்பான்மையினர்.

யுத்தம் -சுனாமி போன்ற பேரனர்த்தங்களில் அல்லது சடுதியான விபத்தில் கணவரை இழந்த பெண்களுக்கு பொதுவாகவே சமூகப் பாதுகாப்பு தொழில் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை. இடம்பெயர்ந்தும் புலம் பெயர்ந்தும் வாழும் குடும்பங்களில் பெண்களும் பெண் பிள்ளைகளும் பாரிய சவால்களை எதிர்கொள்கிறார்கள்.

சிறுவர் துஸ்பிரயோகம் பெண்களுக்கெதிரான வன்முறைகள் நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றன. எமது சமூக மனோபாவத்தில் அவை பல சந்தர்ப்பங்களில் பொருட்படுத்தப்படுவதுமில்லை. மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மத்திய கிழக்கில் வீட்டு வேலை ஆடைத் தொழிற்சாலைகளில் கிராமங்களில் கூலி உழைப்பாளர்களாக மற்றும் சிறு தொழிலகங்களில் நானாவித வேலைகளைச் செய்யும் பெண்களுக்குரிய சமூகப்பாதுகாப்போ கண்ணியமோ தகுந்த ஊதியமோ வழங்கப்படுவதில்லை.

என்னதான் போராடிய சமூகம் என்று கூறினாலும் யுத்தத்திற்கு பிந்திய அரசியலில் பெண்களின் சமூக முக்கியத்துவம் என்ன என்பதில் வெறுமை தான் மிஞ்சுகிறது. தேசியம் மற்றும் கலாச்சாரக் காவலர்களாக தம்மைக் காட்டிக் கொள்ளும் ஆண்கள் இங்கு மௌனமாக்கப்பட்ட பெண்குரல் பற்றி மூச்சு விடுவதில்லை. தம்மை சமூக அக்கறையுள்ளவர்கள் முற்போக்களார்களாக காட்டிக் கொள்ளும் எழுத்தாளர்கள்? சிலரும் பெண்கள் என்று வரும்போது தாராளமாக வக்கிரசிந்தனைகளை வெளிப்படுத்துகிறார்கள். சமூகத்தின் இதர பிரச்சனைகள் தொடர்பான அவர்களின் அக்கறைகள் இங்கு சந்தேகத்திற்குரியனவாகின்றன.

தென்னிலங்கையில் நிலைமை வடக்கு கிழக்கை விட முன்னேறிய தென்றாலும் சிறப்பானதாக இல்லை. ஆற்றலும் திறமையும் உள்ள பெண்கள் தீண்டாமை மற்றும் தந்தை வழிச் சமூக உறவு முறையால் நாளாந்தம் அடிபட்டுப் போகிறார்கள்.

அவர்களுடைய அறிவும் ஆற்றலும் ஆழுமையும் மழுங்கடிக்கப்படுகின்றன. சிதைக்கப்படுகின்றன. அர்த்தமிழக்கச் செய்யப்படுகின்றன. “வாழ்க்கைப்படுதல்” “இருக்கும் அமைப்பை அனுசரித்து நடத்தல”; என்பதுடன் அவர்களின் அத்தியாயம் முடிவுக்கு வருகிறது.

எமது சமூகத்தில் —– இது சர்வசாதாரணமாக நிகழ்கிறது. பெண்கள் எங்கேயாவது பேசுகிறார்கள் என்றால் முகம் சுழிக்கும் அல்லது வம்பளக்கும் சமூக மனப்பான்மையே ஆதிக்கம் பெறுகிறது. சமூகப் பிரக்ஞை கொண்ட பொதுமனிதர்கள்> இடதுசாரிகள் முற்போக்கு இயக்கங்கள்> கலை இலக்கியச் செயற்பாடுகள் வௌ;வேறு காலகட்டங்களில் நிலவி இருந்தாலும் தமிழ் சமூகத்தில் பெண்களின் நிலை குறிப்பிடும்படி மேம்பாடடையவில்லை.

வௌ;வேறு சமூக உரிமைகள் தொடர்பில் நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்று கோருபவர்கள் பெண்களின் உரிமை விடயத்தில் அதீத அமைதி காக்கிறார்கள். அவர்களின் ஏனைய சமூக கோரிக்கைகளின் “தார்மீக அறத்தாற்பரியம்” இங்கு அடிபட்டுப் போகிறது.

இன்றைய நவதாராளவாத ஏற்றத் தாழ்வான உலகில் சமூக ஏணியின் அடிமட்டத்தில் வாழும் பெண்கள் நாளாந்த அவமானங்களையும் சுமந்த படி வாழ்கிறார்கள். மன உழைச்சலுக்குள்ளாகிறார்கள். ; இவை பற்றி “கனவானிய” பெண்கள் அமைப்புக்கள் மூச்சுக் காட்டுவதில்லை. பெண் உரிமை இயக்கங்கள் ஜனநாயக பண்புகளுடன் அமைய வேண்டும்.

நாடு -சமூகம்- பொருளாதாரம்- கலாச்சாரம் பற்றிய பெண்களின் சுதந்திரமான சிந்தனைகள் செயற்பாடுகள் பெறப்படல் வேண்டும். இந்த பங்களிப்பு பெறப்படாமல் விடுபடுவது சமூகத்திற்கு பின்னடைவேயாகும். மனித உரிமை> ஜனநாயம் >பொருளாதார சமத்துவம் என்பவற்றை நிலை நாட்டுவதில் பெண்களின் சுயாதீன போராட்டங்கள் செயற்பாடுகள் அவசியப்படுகின்றன.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது- இன சமூகங்களிடையே ஐக்கியம்- சமாதான சகவாழ்வு மற்றும் மனித உரிமைகள்- வறுமை ஒழிப்பு -ஆரோக்கியமான சமூகம் ஒன்றை உருவாக்குவதில் பெண்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கமுடியும்.

பெண்களின் பங்களிப்பு கனதியாக உள்வாங்கப்படாத சமூகமோ நாடுகளோ உருப்பட்டதாக ஆதரங்கள் இல்லை. சமூகத்தின் மாபெரும் ஆற்றல் விரயமாக்கபடுவதும்> மழுங்கடிக்கப் படுவதும் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும். சந்ததி;- சமையல் போன்றவையே பெண்களின் கடமைகளாக கருதுபவர்கள் எமது சமூகத்தில் ஏகப் பெரும் பான்மையினர். இந்த மன நிலை களையப்படவேண்டும். நாம் இந்த லட்சணத்தில் இருந்து கொண்டு உலகம் எங்களைத் திரும்பி பார்க்கிறது என்று பேசுவது போலிப்பெருமையாகும்.

எனவே நாட்டின் சகல பிரிவினரதும் ஜனநாயக அரசியல் பொருளாதார உரிமைகள் நிலைநாட்டப்படுவதிலேயே நாட்டின் முன்னேற்றம் தங்கியருக்கிறது. ஓன்றை நிராகரித்து ஒன்றை நிலை நிறுத்த முடியாது. வௌ;வேறு சமூக அரசியல் விடயங்களிடையோன இயங்கியல் உறவு புரிந்து கொள்ளப்படவேண்டும் .அதுவே விமோசனத்திற்கு வழி.

விரைவாக தீர்வுகாண வேண்டிய சிலபிரச்சனைகள் -சவால்கள்

•வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள் சுனாமி- யுத்தம் இதர வன்முறைகளில் நேரடியாகப் பாதிக்கப்பட்டு இழப்புக்களைச் சந்தித்து வாழும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள்.

•பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது

•அதிகார-இராணுவ- வன்முறை மயப்பட்ட சூழலில் பெண்களுக்கான சமூகச் செயற்பாட்டு இடைவெளி

•யுத்தத்திற்கு பிந்திய வன்முறைகளும்- கிறீஸ் பேய் மற்றும் இனவாத பொதுப்பலசேனா அச்சுறுத்தல்களும் பெருமளவு பெண்களையே பாதித்துள்ளன. பொருளாதார ஊழல் பிரச்சனைகள் போல் இவற்றின் தாற்பரியங்களும் மூலங்களும் கண்டறியப்படவேண்டும்.

•மலையக தோட்ட தொழிலாளர்கள்> மத்திய கிழக்கு வீட்டுப்பணிப் பெண்கள்> ஆடை மற்றும் சிறு தொழிலகங்களில் வேலை செய்வோர் >முன்பள்ளி ஆசிரியர்கள்> தற்காலிக சுகாதாரப்பணியாளர்கள் >சிறு தொழில் செய்வோர்> வீதிப் பணிகளில் ஈடுபடுவோர்> கூலி விவசாயிகள் >அகதிகளாக முகாம்களிலும்- இடம்பெயாந்து புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் இதர பிரிவினரான பெண்கள் தொடர்பான ஊதியம்- நிரந்தர வேலை மற்றும் சமூக பாதுகாப்பு ஏற்பாடுகள்

•பொதுவாகவே தொழில் வாய்ப்பும் நியாயமான ஊதியமும்

•போசாக்கின்மை >பட்டினி பெண்களையும் சிறுவர்களையுமே பாதித்துள்ளன.

•வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இழிவையும,> அவலங்களையும் சமூகப் புறக்கணிப்புக்களையும் சுமந்து வாழும் பெண்கள்

•பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளையும் சவால்களையும் உரிமைகளையும் புரிந்து கொள்ளக் கூடிய பொது நிர்வாகம் நீதி மற்றும் பொலிஸ் துறை

•விசேட அதிகாரம்- நாடாளுமன்றம்- மாகாண சபை -மற்றும் உள்ள+ராட்சி அமைப்புக்கள் இவை தொடர்பில் பொறுப்புக் கூறுதல்
.

ஞானசக்தி -ஸ்ரீதரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com