Contact us at: sooddram@gmail.com

 

நெஞ்சு பொறுக்குதில்லைய ! வறுமையினால் தற்கொலை

(தோழர் சுகு)

வரணிப்பகுதியில் 21 வயது பெண்ணும் அவளது ஆறு வயது மகளும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பத்திரிகைகளில் பார்க்க நேர்ந்தது. இந்த பெண்ணின் கணவர் 2007 இல் காணாமல் போய்விட்டார். இந்த இருவரும் உறவினர் வீட்டில் வசித்ததாக பத்திரிகைச் செய்தி. இது சாதாரண அன்றாடச் செய்தி .பாரிய மன அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்தி. இப்படி அன்றாடம் நடக்கலாம். அதற்காக இதனை வழமை என்று எடுத்துவிட்டு போய்விட முடியாது. இந்த சிறு பெண்ணினதும் குழந்தையினதும் நிலைமை ஒரு சோக சரிதம். இளம் பராயத் திருமணம். திருமணம் செய்த குறுகிய காலத்திலேயே கணவர் காணாமல் போனது வறுமை, உறவுகளின் தயவில் வாழ வேண்டிய நிலை மரணம்.

அடுத்தது 21 வயது தாயும் ஆறு வயது தாயும் மகளுமாக தீர்மானித்து அவர்கள் மரணத்தை எய்தினர். மரணம் தமக்கு நிரந்தர அமைதியை கொடுக்கும் எடுக்கும் நினைத்தார்களா? அல்லது அவர்களுக்கு வேறு எந்த வழியும் இருக்க வில்லையா. ஆனால் அவர்களின் மரணம் மன அதிர்ச்சி தருகிறது.

இதேபோல் கிளிநொச்சியில் ஐந்து பிள்ளைகளுடன் ஒரு தாயார் சில மாதங்களுக்கு முன்னர் நஞ்சருந்திய செய்தியொன்று பத்திரிகைகளில் பார்த்திருப்பீர்கள். இந்த துயரச் சம்பவங்கள் தொடர்பாக சமூக பிரக்ஞை உள்ளவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கரிசனையுடன் இருக்கிறார்களா?

இன்று ஆயிரமாயிரம் பெண்களும் குழந்தைகளும் வாழ்ந்து செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் நிதி பெற்று வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்கிறோம் என்று பேசுவதில் அர்த்தமில்லை.

புழுதி கிளப்பி வடக்கு கிழக்கில் ஓடும் புத்தம் புது அரசசாப்பற்ற நிறுவனங்களின் வாகனங்களுக்குறைவில்லை. எமது அரச அதிகாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு வண்டி ஓட்டுகிறர்hகள். இந்த வஞ்சிக்கப்பட்ட மக்களின் பேரில் தான் ஓட்டம்

ஆனால் இங்கு வாழ்பவர்கள்யார் வீழ்பவர்கள் யார் என்பது எளிதான உண்மை. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை

பேரிழப்பு மனதில் வெறுமையுடன் பெண்ணும் குழந்தையும் மரணித்துப் போனதை சிந்தித்து பாருங்கள்.

நாம் இங்கு தமிழரென சொல்லி வாழ்ந்திடுதல் நன்றோ!

இந்த அவலங்கள் மரணங்களுமே அதிர்ச்சியடையச் செய்யாவிட்டால் எம்மை காரியமாற்ற தூண்டாவிட்டால் நாம் எந்தப் பிரச்சினைப்பற்றி பேசுவதிலும் பிரயோசனமில்லை.

ஒரு ஸ்கன்டிநேவிய நாட்டில் அல்லது ஐரோப்பிய நாட்டில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருந்தால் இவை பத்திரிகைகளில் தலையங்க செய்தி

மரணங்களையும் அவலங்களையும் பார்த்து எமது மனங்கள் மரத்துப் போய்விட்டனவா? நாம் ஈவிரக்கமற்ற மனிதர்களாகிப் போனோமா?

தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி அவ்வளவு சமூக சக்தி ஆவேசம் அவரிடம் இருந்தது. உணவின் முக்கியத்துவத்தை பசியில்லாத வாழி;வின் முக்கியத்துவத்தை பாரதியால் உணர்த்தப்படுகிறது.

இத்தகைய மரணங்கள் இல்லாத வாழ்வு இல்லாத பிரக்ஞை எமது சமூகத்தில் எவ்வளவு இருக்கிறது.

கவர்ச்சிகரமான பணம் பண்ணும் கனவான்களை உருவாக்கும் உசுப்பேத்தும் அரசியல்தான் எமது சமூகத்தில் காணப்படுகிறது.

சமூகத்தில் சுயநலம் பெருகிவிட்டது. வெளிநாட்டில் இருந்துவரும் பணத்தில் போதை புரையேறி திரிகிறது ஒரு கூட்டம்.

ஏழையின் உறக்கங்கள் பாதையிலே அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலேஎன்பது போல்தான் இடைவெளி அதிகமாகிக் கொண்டு போகிறது.

அவர்கள் அவ்வாறு வாழ்வது அவர்களின் விதி என்பது போல் இந்தக் கூட்டம் பிரக்ஞையற்றுக் கிடக்கிறது.

அந்தப் பெண்ணும் குழந்தையும் இனஒடுக்கு முறை பால்நிலை ஒடுக்குமுறை, வர்க்க ஒடுக்குமுறை என்ற மூன்றையும் ஒருங்கே எதிர்நோக்கி மரணித்தார்கள்.

ஆசியாவின் அதிசயத்தில் சமூகப் பாதுகாப்பு இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது.

சுதந்திர வர்த்தக வலயத்தில் சேமலாப நிதியை கபளீகரம் செய்வதற்கு எதிராக தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு

எரிபொருள் விலையை தாங்கிக்கொள்ள முடியாத மீனவர்களின் மீது துப்பாக்கிச்சூடு மரணம்.

இங்கு இப்படி இரு மரணங்கள்.

அநீதியான சமூக அமைப்பு மாறாதவரை இன சமூக சமத்துவம் நிலைநாட்டப்படுத்தாத வரை இப்படியான இத்தகைய பிரச்சினைகள் தொடரத்தான் போகிறது.

மறு புறம் இயக்கங்களில் இருந்தவர்கள், அவர்களை மானசீகமாக ஆதரித்த சமூகப் பிரிவினர் பற்றி  தனி;ப்பட்ட முறையிலும் சரி பொதுநிலையிலும் சரி இத்தகையவர்களை தீண்டத்தகாதவர்கள் என்றுதான் பார்க்கிறார்கள்.

அவர்கள் பெண்பிள்ளைகள் ஆயிற்றால் சொல்லவே வேண்டாம . அவர்கள் தம்மை குடும் பத்திலும் சமூகத்திலும் முன்நிறுத்த அன்றாடம் போராடுகிறார்கள . எமது சமூகத்தில் தோல்வி அவமானம் எல்லாவற்ளையும் தண்டித்தான்  எழுந்து வரவேண்டும்.

இயக்கங்களிலிருந்த சாதாரண குடும்பங்களின் பிள்ளைகளின் தியாகங்கள் கடைந்தெடுத்த அயோகியர்களுக்கெல்லாம்  ாழ்வைக் கொடுத்திருக்கிறது

இயக்கங்களிலிருந்த பின்ளைகள் இறந்தவர்கள் போக வாழ்பவர்கள் முகமிழந்து வாழ்கிறார்கள .

அரசியல் ஒரு அந்தஸ்தாக மாறி விட்டது

உசுப்பேத்தும் அரசிலுக்கு பயன்படாதவரை சாதாரண மக்களின் பிரச்சினைகள் இவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் அற்றவை.

புலம் பெயர் மக்கள் இவ்வாறு சபிக்கபட்டவர்களுக்கு நேரடியாக உதவ முன்வரவேண்டும் .ஐரோப்பிய தலை நகரங்களில் புலிக் கொடி பிடிப்பதால் இந்த பஞ்சைப்பராரிகளுக்கு துன்பத்தின் மேல் துன்பம் தான் வந்து சேரும். அன்பு கருணை சர்வதேச சகோதரத்துவத்தின் குறியீடாக இருக்க கூடியவற்றை தாங்கிப்பிடியுங்கள்.

(தோழர் சுகு)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com