Contact us at: sooddram@gmail.com

 

ஹலால் - முஸ்லிம் மக்கள் - தமிழ் மக்கள் - ஜெனீவா

(ஸ்ரீதரன் - சுகு)

வரலாறு கண்டிராத அளவில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதுவொன்றும் தற்செயலாக நிகழவில்லை. இலங்கையின் நூற்றாண்டுக்கு மேற்பட்ட  வரலாற்றை அவதானித்தால் இவை திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன. முதலில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும், பின்னர்  1915 இல் முஸ்லீம்களுக்கு எதிராகவும், பின்னர்  இலங்கை துறைமுக ரயில்வே வேலைகளுக்காக குடியேற்றப்பட்ட மலையாளிகளுக்கு எதிராகவும் 1940களிலிருந்து மலையக, வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு எதிராகவும், பேரினவாத செயற்பாடுகள் வன்முறைகள் நீதி விரோத தாக்குதல்கள் பாரபட்சங்கள் தீவிரம் பெற்று  வந்திருக்கின்றன.

சுருள் வில் போல் இவை திரும்பத்திரும்ப நிகழ்கின்றன. இப்போது மீண்டும் முஸ்லீம் மக்களுக்கு எதிராக, 1977இல் புத்தளம் பள்ளிவாசலில் நிகழ்ந்த சம்பவங்கள், 1980களின் முற்பகுதியில் காலியில் நிகழ்ந்த சம்பவங்கள்

இதன் பின்னர் தமிழ் தேசிய விடுதலை போராட்டம் முனைப்பு பெற்று பின்னர் பாசிசமாக சீரழிந்த காலத்தில் தமிழ் தேசிய வாதிகளாலும், பாசிச வாதிகளாலும் முஸ்லீம் மக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். 1990 முற்பகுதியில் உடுத்த துணியுடன் வடக்கில் தமது பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து விரட்டப்பட்டிருக்கிறார்கள்.

இப்போது முஸ்லீம் மக்களின் ஹலால் உணவு முறைக்கு எதிராகவும், அவர்கள் அணியும் பர்தாவுக்கு எதிராகவும் ,வணக்க தலங்களுக்கு எதிராகவும், வர்த்தக நிலையங்கள், வதிவிடங்களுக்கு எதிராகவும் தாக்குதல்கள் நிகழ்கின்றன.

எல்லா தளங்களிலும் பாரிய இனவாத தீயை மூட்டுவதற்கான எண்ணெய் சி;ந்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. சிறுபான்மை சமூகங்களை அடித்து பணியவைத்தல் அல்லது கீழ்ப்படிவுள்ளவர்களாக வாழ வைத்தல் என்ற முறையில் நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன.

சாதாரண பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு இத்தகைய நிகழ்ச்சி நிரல்களில் எந்த ஈடுபாடும் இல்லை. ஆனால் மனங்களில் விஷமூட்டும் நாசகார செயல்களை பேரினவாத அதிகார, மதவாத சக்திகள் மேற்கொண்டு வருகின்றன. யுத்தத்திற்கு பிந்திய சூழலில் இன சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு மாறான இனவாத நெகிடி நெருப்பு மூட்டப்படுகிறது.

எங்கும், எதிலும் பேரினவாத இராணுவம் சார்ந்த மேலாதிக்கம் நிலைநிறுத்தப்படுகிறது. சட்டம் ஒழுங்கு மற்றும் சிவில் நிர்வாகத்திலும் இதுதான் நிலைமை.

இன சமூகங்களின் சுதந்திரம், பொருளாதார நடவடிக்கைகள,; அபிலாசைகள் வௌ;வேறு சமய கலாச்சாரம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகள் மீது பலவந்தம் ,பலாத்காரம் பிரயோகிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது. ஜெனீவாவில் மனித உரிமை குற்றச்சாட்டுக்களை இலங்கையின் அதிகார பீடம் எதிர்நோக்கி நிற்கிறது.

யுத்தத்தின் இறுதி நாட்களில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், பேரழிவுகள், உயிரிழப்புக்கள், காணாமல் போதல் ,கருத்துச் சுதந்திரம், அவசரகால, பயங்கரவாத தடைச்சட்டம் இடம் பெயர்ந்து மீள்குடியேறிய மக்களின் கண்ணியமான சுயமரியாதையுடன் கூடிய வாழ்வு உயர்பாதுகாப்பு வலயங்கள் அதிகார பரவலாக்கலுக்கான நம்பிக்கைகளை சிதைத்து அதிகாரங்களை மத்தி;யப்படுத்தும் போக்கு இராணுவ மயமாக்கல், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு ஆப்பு, அரசியலமைப்பில் கேள்விக்கிடமற்ற குடும்ப பரம்பரை ஆட்சியொன்றை நிர்மாணிப்பதற்கான திருத்தங்கள், சிறுபான்மை சமூகங்களையோ சமூகங்களினது கோரிக்கைகளையோ அல்லது இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தின் வேண்டுகோள்களையோ, அநாயாசமாக தூக்கியெறியும் போக்கு, மக்களின் ஜனநாயக எதிர்ப்பு இயக்கங்கள் அடக்கப்படுவது உள்ளிட்ட பிரச்சினைகள் சவாலாக அமைந்துள்ளன.

உள்ளுரிலும் சர்வதேச அளவிலும் இவை பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளன. ஒரு ஜனநாயக சூழலே இலங்கையை சிறந்தவொரு எதிர்காலத்தை நோக்கி இட்டுச் செல்லும் .இலங்கையின் சகல சமூகங்களினதும் நல்வாழ்விற்கு, நல்லிணக்கத்திற்கு, சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என்பது இங்கு அதிகார சக்திகளால் புரிந்து கொள்ளப்படவும் இல்லை, அதனை புரிந்துக்கொள்ள விரும்பவும் இல்லை. இன சமூகங்களின் ஜனநாயக மனித உரிமைகளை  அங்கீகரிப்பதன் ஊடாகவே உண்மையான சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

உலகமும் ஊரும் சொல்வதை இலங்கையின் ஆட்சியாளர்கள் கொஞ்சமேனும் செவிமடுக்கும் நிலையில் இல்லை. . “விநாசகாலயே விபரீத புத்தி” என்ற நிலை.

இவ்விடத்தில் தமிழர்களால் வாக்களிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட தலைமையின் -தமிழ் தேசிய கூட்டமைப்பின்  கடமை என்னவென்ற கேள்வி எழுகிறது. தமிழ் மக்கள் சார்பில்  எதை கோருகிறோம் என்பதை அவர்கள் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். புலம் பெயர் தமிழர்களின் தீவிரவாத பிரிவினர் என்ன நினைப்பார்களோ அவர்களின் கடாட்சங்கள் கைவிட்டுப் போய் விடுமோ என்ற பீதியுடன் கோரிக்கைகளை வைக்க முடியாது. வார்த்தை ஜாலங்களை போட்டு குழப்பியடிக்காமல் அவர்கள் திட்டவட்டமான முறையில் பேச வேண்டும்.

தங்களால் ஏதோ காரியம் ஆனதாக சொல்வதற்காக லண்டனிலும் ஜெனிவாவிலும் கள்ளமொழித்து திரிகிறார்கள். தருமி இரவல் பாடலுடன் வந்து மதுரை தமிழ் சங்கத்தில் அரசன்   முன் பாடிவிட்டு நானே செய்தேன் நானே இயற்றினேன் என்று புலுடா விட்டது  போல்  தமிழ் மக்கள் முன் விடப்போகிறார்கள். .பாவம் தருமி ஏழைப்புலவன் . ஆனால் இவர்கள் அப்படி இல்லையே.

சர்வதேச அளவில் தமிழ் மக்களின் பிரச்சனைகள் பற்றி போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவை சாதாரண மக்களிடையே என்றென்றைக்குமான பகைமையை ஏற்படுத்துவதாக அமைந்துவிட கூடாது. புலிகளும் தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு கணிசமான அளவில் பங்களித்துள்ளார்கள். மனித உரிமை ,ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது என்பதையும் ,புலிகளின் நிலைப்பாட்டிலிருந்து கோரிக்கைகளை முன் வைக்க முடியாது என்பதையும் இந்த தலைமை உணர்ந்து கொள்ளவில்லை. உணர்ந்து கொள்ள விரும்பவுமில்லை.

இவ்விடத்தில் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் அதிதீவிர நிலைப்பாடுகளை எடுப்பவர்களின் பரோபகாரங்களுக்காக, உபசரிப்புக்கள், தட்சணைகளுக்காக அவர்கள் உண்மையை வெளிப்படையாக கூறுவதில்லை. அது மாத்திரமல்லாமல் தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் தொடர்பாக எந்த புரிந்துணர்வும் இல்லை. அதனை தீர்ப்பதற்கான எந்த அக்கறையும் இருப்பதற்கான அத்தாட்சிகளும் இல்லை. அமெரிக்க, வட அமெரிக்க இந்திய சுற்றப் பயணங்களிலேயே காலம் கழிகிறது. சர்வதேச நடவடிக்கைகளால் அதிசயங்கள் நிகழப் போவதாக இவர்கள் கூறுவார்கள். தமிழீழத்தில் இருந்து சுயநிர்ணய உரிமை, கூட்டாட்சி வரை அந்த நேரத்துக்கு வசதிப்பட்டதையெல்லாம் பேசுவார்கள்.

கடந்து வந்த 30 வருடங்களில் ஒரு தீர்வு ஏற்படுவதை தடுப்பதில்  நாமும் அதாவது தமிழர் தரப்பும் ஒரு முக்கிய காரணியாக இருந்திருக்கிறோம் என்பதை இவர்கள் வாய் திறந்து சொல்ல மாட்டார்கள். பேரினவாத அரசின் கண்மூடித்தனமான யுத்தக் குற்றங்கள் எத்தகையதோ ,அதற்கு கொஞ்சமும் குறையாத குற்றங்கள் புலிகள் தரப்பிலும் இழைக்கப்பட்டிருக்கின்றன. இறுதி யுத்தத்தின் போது தமது இருப்பிற்காக லட்சோப லட்சம் மக்களை மனித கேடயங்களாக பாவித்ததும், சனங்கள் செறிவாக இருக்கும் இடங்களிலிருந்து தாக்குதல்களை மேற்கொண்டதும் பலாத்காரமாக சிறுவர்களையும் இளைஞர், யுவதிகளையும் தமது படையணியகளில் சேர்த்ததும் ,வகை தொகையின்றி கண்ணிவெடிகளை விதைத்ததும் ஒரு வெடிமருந்து கிட்டங்கியாக வன்னியை மாற்றியதும், மக்களை பட்டினியாக இருக்க நிர்ப்பந்தித்தும் அவர்கள் தப்பி செல்வதற்கான எல்லா வழிகளையும் அடைத்ததும் பேரழிவுகளுக்கு காரணமாக அமைந்ததை நேர்மையாக சிந்திக்கும் எவரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

அதுமாத்திரமல்ல கடந்து வந்த 30 வருடங்களில் அடுத்தடுத்து இனக்கலவரங்களை ஏற்படுத்தி தமிழ் மக்களின் வாழ்வையும், வளத்தையும் அழித்த அரசாங்கங்கள் ஒன்றும் புனிதமானவையல்ல. பயங்கரவாதத் தடைச்சட்டமும், அவசரகாலச்சட்டம் இடைக்கிடை தளர்த்தப்பட்டிருந்தாலும் 1971இலிருந்து நீடிப்பது பயங்கரவாதத் தடைச்சட்டம் 1979 இலிருந்து இன்று வரை நீடித்திருப்பது.

இதற்குக் கீழ். நடந்த அட்டூழியங்கள், அழிச்சாட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. விமான குண்டு வீச்சுக்களுக்கும், சிததிரவதைகள், படுகொலைகளுக்கும் இந்த சட்டங்கள் மூலமே நியாயங்கள் சொல்லப்பட்டன. நிலங்கள் ஆக்கிரமிப்பு இன்று நேற்று நடைபெற்றதல்ல. மறுபுறம் தமிழ் மக்களின் விடுதலையின் பேரால் சகோதர தமிழ் மக்களுக்கு எதிராகவும், இயக்கங்கங்கள், கட்சிகள், தொழிற்சங்கங்கங்கள் ,மனித உரிமை அமைப்புக்கள் ,சாதாரண முஸ்லீம்களுக்கு எதிராகவும் எல்லைப் பிரதேசங்களில் வாழ்ந்த வறிய சிங்கள விவசாயிகளுக்கு எதிராகவும் நடத்தப்பட்ட குரூரமான தாக்குதல்களையும் நாம் மனங்கொள்ள வேண்டும்.

கற்பு  நிலையென்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அதனை பொதுவில் வைப்போம். யுத்தத்தின் இறுதி நாட்களில் நடந்த நிகழ்ச்சிகள் மாத்திரமல்ல கடந்த 30 வருடங்களில் இரத்தம் தோய்ந்த வரலாற்றுக்கும் கணக்கு வேண்டும்.

ஒரேயொரு பிள்ளைதான் ஒரொயொரு அப்பாவி பிள்ளைதான் கொல்லப்பட்டது போல் காட்டுவது பாசாங்கும் போலித்தனமுமாகும். பல 10 ஆயிரக்கணக்கான அப்பாவி குழந்தைகள், சிறுவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிங்கக் கொடிபிடித்து மனித உரிமையை பற்றி பேச முடியாது. அதேபோல் புலிக்கொடி பிடித்தும் பேச முடியாது. இன்று புலம் பெயர் நாடுகளில் உள்ள தீவிர புலி ஆதரவாளர்கள் ஜெனீவாவிலும், ஐரோப்பாவின் வட அமெரிக்காவின் ஏனைய நகரங்களிலும் புலிக்கொடி பிடித்து மனித உரிமைக்காக பாசாங்கு செய்கிறார்கள்.

இங்கு நாளும் பொழுதும் ஆட்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது இதை வைத்து சாவு வியாபாரம் செய்தவர்கள் அவர்கள். இலங்கை ஆட்சி முறையில் இன்று மீண்டும் பாசிச கூறுகள் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன.

நிச்சயமாக இந்த போக்குகள் தமிழ் மக்களுக்கு பொதுவாக இலங்கையர்களுக்கோ விமோசனத்தை பெற்றுத்தராது.தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அக்கறை இருக்குமானால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் புலம் பெயர் தமிழர்களும் சர்வதேச அளவில் தமிழ் மக்களுக்கு சார்பாக எழுந்துள்ள விழிப்புணர்வை ஆக்கபூர்வமாக இலங்கையில் வாழும் மக்களுக்காதரவாக கையாள  முன்வர வேண்டும்.

சொல்லப்படுகின்ற இந்த சர்வதேச சமூகமும், இந்தியா உட்பட உண்மைகளை கண்டறியும் குழுவின் அறிக்கையை முழுமையாக அமுல்படுத்துமாறும் ,13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி வருகின்றன. சர்வதேச சமூகமும் அல்லது இந்தியாவோ ஒன்றும் அதிதீவிரமான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. சர்வதேச நிலவரம் நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும். புரியாதது போல் மக்களுக்கு பொய்யுரைக்கக் கூடாது. தமிழர்களின் தெரிவு செய்யப்பட்ட தலைமை என்பது தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு பாராளுமன்ற இதர சட்டவாக்க நிறுவனங்களின் தமக்குள்ள தனிப்பட்ட வரப்பிரசாதங்களையும் சிறப்புரிமைகளையும் அனுபவித்துக் கொண்டு ஐரோப்பிய வட அமெரிக்க இந்திய  சுற்றுலாக்களை செய்து கொண்டு வடக்கு- கிழக்கு மக்களின் கண்களில் மண்ணை தூவக் கூடாது. அவர்களின் வாழ்வு  “பாழ்பட்டு வறுமை மிஞ்சி” போவதற்கு வழி வகுத்துக் கொண்டு தமக்கு ஒரு சௌகரியமான வாழ்வை- அரசியலைஅவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்களா? பலர் அமைத்து விட்டார்கள். ஈழப்போராட்டம் பெருவாரியான மக்களுக்கு நரகத்தையும் இன்னுமொரு பிரிவினருக்கு சொர்க்கத்தையும் காட்டி இருக்கிறது.

புலம் பெயர் தமிழர்களில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளை பற்றி தீவிரமாக பாசாங்காக பேசும் ஒரு கூட்டம் இங்குள்ள மக்களின் வாழ்வில் விமோசனம் ஏற்படாதவாறு கவனமாக பார்த்துக் கொள்கின்றது. ஈழத்தில் வாழும் தமிழர்களை காயடித்து காயடித்து சூறையாடி தனக்கென நிரந்தர சௌகரியமான வாழ்வொன்றை அது ஸ்தாபித்துள்ளது. அதனுடைய நலன்களும் ஈழத்தில் வாழுவோருடைய நலன்களும் வேறானவை. இது ஈழத்தில் வாழும் தமிழர்களாலும் விளங்கிக்கொள்ளப்படல் வேண்டும்.

  1. ஜெனீவாவில் ஏதும் நிகழ்வதானால் அது இலங்கை பேரினவாத மேலாதிக்க நாடாக அல்லாமல் பல்லினங்களின் நாடாக மாறுவதற்கு எந்தளவு காரியங்கள் ஆற்றப்படல் வேண்டுமோ அந்தளவு ஆற்றப்படல் வேண்டும்.
  2. யுத்தத்தின் இறுதிப் பகுதியில் மாத்திரமல்ல யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து சகல தரப்பினராலும் இழைக்கப்பட்ட அநீதிகள் துன்பங்கள் தொடர்பான நீதி விசாரணைக்கான ஏற்புடைய பொறிமுறையே வேண்டும்.
  3. உயர் பாது காப்பு வலயங்களாக மக்களிடம் கையப்படுத்தப்பட்ட நிலங்கள் திருப்பி மக்களிடம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படவேண்டும்.
  4. மக்களின் அன்றாடவாழ்வின் மீதான இராணுவத் தலையீடு முடிவுக்கு கொண்ட வரப்படவேண்டும்.
  5. இலங்கையில் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கு அது முற்றுமுழுதாக ஒரு இராணுவ மயப்பட்ட நாடாக மாறுவதற்கான நிலைகள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
  6. காணாமல் போதல், சிறை சித்திரவதை போன்ற மனித அற உணர்வுகள், பெறுமானங்களுக்கு முரணான செயல்களிலிருந்து அதனை மீட்க வேண்டும்.
  7. மதம், மொழி இனம் சார்ந்து இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக உறுதியான சட்ட சீர் திருத்தங்களும் ,சமூக பாதுகாப்புக்களும் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
  8. தொழிலாளர், பெண்கள், விளிம்பு நிலை மக்கள் மாணவர்களின் குரல்களின் சுதந்திரம் ,வாழ்நிலை மேம்பாடு உறுதிப்படுத்தப்படுத்தப்படவேண்டும். 
  9. பாடசாலைகள் பல்கலைகழகங்கள் இவற்றின் சுயாதீனம் பாதுகாக்கப்படல் வேண்டும்.
  10. சேவைத்துறைகள் மேம்படுத்தப்பட வேண்டும். கெடுபிடியான காவல்துறை முற்றுமுழுதாகவே மறுசீரமைக்கப்பட வேண்டும்.

இவையெல்லாம் சொல்வதற்கு நன்றாக இருந்தாலும் உடனடியாக சாத்தியமில்லை. ஆனால் இந்த மாற்றங்களுக்கான அழுத்தங்கள் உள்ளுரிலும், சர்வதேச அளவிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்க வேண்டும்.

உண்மைகளை கண்டறியும் குழுவின் அறிக்கையை முழுமையாக அமுல்படுத்துவதும், நடைமுறைப்படுத்துவதும் 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதும் சர்வாதிகாரத்தை நோக்கிய இலங்கையின் அரசியல் அமைப்பில் தீவிர மறுசீரமைப்பை மேற்கொள்வதும் இன்று உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளாகும்.

இனவாத சக்திகளின் செயற்பாடுகளுக்கு நிரந்தரமாகவே ஆப்பு வைக்கப்பட வேண்டும்.

இது இலங்கையில் மாத்திரமல்ல அண்டை நாட்டிலும் வேறு பல நாடுகளிலும் அமைதியின்மையையும் ,விரும்பதாக நிலைமைகளையும் தோற்றுவிக்கலாம்.

இலங்கை தொடர்பாக எத்தகைய தீர்மானமும் இலங்கையில் சகல சமூகங்களினதும், மக்களினதும் சுயமரியாதை கண்ணியத்துடனான வாழ்விற்கு வழி சமைக்க வேண்டும். 

(தொடரும்......)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com