Contact us at: sooddram@gmail.com

 

ப்பன் என்று உறவுகளால் அன்புடன் அழைக்கப்படும் கமலநாதன் நடராசா ஆகிய தோழனாகவும் -போராளியாகவும- மனங்களில் வாழும் என் சகோதரனின் நினைவுகள்
 

 

1964-1987
1964 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் நாள் நடராசா இரத்தினம்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்தார். சிறு வயதிலிருந்தே அமைதி ,ஆழ்ந்த சிந்தனை, பொறுப்புணர்வு, நிதானம், துடிப்பு ,செயலாற்றல், இயல்பாக அமைந்திருந்தன. பலராலும் விரும்பப்படும் வசீகரம் இருந்தது.
உரும்பிராய் சைவத்தமிழ் ,மகாஜனா கல்லூரிகளில் பயின்றவர். தமது பள்ளிநாட்களிலேயே தோட்டம் வீடு என எல்லாவிதமான வேலைகளிலும் ஈடுபட்டார். கவிதை மற்றும் இலக்கிய ஈடுபாடு, நேர்மை சமூக அக்கறை கொண்டவர். 1983 இன்முற்பகுதியில் புலம்பெயர்ந்து சுவிற்சலாந்து சென்றவர் சில மாதங்களிலேயே இலங்கையில் நிகழந்த இனவன்முறை கலவரங்கள் - நிகழ்ந்த சம்பவங்களின் பாதிப்புக்கள் தாக்கங்களால் மீண்டும் நாடு திரும்பி ஈழப்புரட்சி அமைப்புடன் தன்னை இணைந்து சமூக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.


ஒரு சமூக மாற்றத்திற்காக தன்னுடைய இளமைக்கால- மற்றும் குடும்ப வாழ்க்கை- அரவணைப்பு எல்லாவற்றையும் துறந்து தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர்.
ஆடம்பரம் , போலித்தனம், மூடத்தனம் ,அடிமைத்தனம் இவற்றை அடியோடு வெறுத்தார்.
சமத்துவமான ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமூகத்தை உருவாக்கவேண்டும் என்ற கனவிருந்தது .
இவர் போன்ற எத்தனையோ போராளிகளை நாம் இழந்திருக்கிறோம்.
இந்த மக்களின் வாழ்வை நேசித்து -இச் சமூகத்தின் நல்வாழ்விற்காக தமது இளமைக்காலத்தையும், உறவுகளையும் தியாகம்செய்து முகம்தெரியாமலேயே மறைந்து போய்விட்டார்கள். அவர்கள் நினைவு கூரப்படவுமில்லை. அவர்கள் தியாகம் செய்ததற்கான அர்த்தமும் பெறுமானமும் இந்த சமூகத்தில் நிறுவப்படவுமில்லை.
ஆனால் இவர்களை போராட்டத்திற்கு வழிநடத்தியவர்கள் ??அவர்களின் வாழ்க்கைத் துறவறத்திற்கு தூண்டுகோலாக இருந்த பலர் வெளிநாடுகளில் சௌகரியமான வாழ்க்கையை தமக்கு அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.
புரட்சி --சமூகமாற்றம், பகுத்தறிவு என்றவர்கள் இன்று அத்தனை பத்தாம்பசலி- படுபிற்போக்கு -சம்பிருதாயங்கள் சடங்குகளுடன்- பகட்டு -ஆடம்பரங்களுடன் தாமும் தமது குடும்பமும் என்று வாழ்க்கையை சுருக்கியிருக்கிறார்கள். தம்மால் வழிநடத்தப்பட்டு இறந்து போனவர்கள் பற்றி எந்த மனக்கிலேசமும் இல்லை.
"இன்று இந்த சமூகத்திற்காக எதையும் இழக்கவோ, தியாகம் செய்யவோ முன்வராத பெரிய பிரளயங்கள் நிகழ்ந்த காலங்களிலெல்லாம் எந்த பிரக்ஞையும் இல்லாமல் இருந்தவர்கள் சுய நலமிகளாக தாங்களும் ,தங்கள் குடும்பமும் என, தங்கள் சொந்த வாழ்க்கைக்காக கல்வி -தொழில்- பணம் பதவி தங்களுடைய காலத்தை தமது சொந்த முன்னேற்றத்திற்காக மாத்திரம் பயன் படுத்தியவர்கள் இன்று மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற முக்கியஸ்தர்களாகவும் அரசியல் பிரமுகர்களாகவும் இழந்த போராளிகளையும் அப்பாவி மக்களையும் அவர்களின் இழப்புக்களையும் -அவலங்களையும்- கண்ணீரையும் தமது சொந்த நலன்களுக்கு மூலதனம் ஆக்குபவர்களாக இன்று மக்கள் மத்தியில் வலம் வருகிறார்கள்".மக்களால் தெரிவு செய்யபட்டவர்களும் பெரும்பாலும் அவர்களே.
கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புக்களோ -மரணங்களோ- மனக்காயங்களோ அத்தனையும் அவற்றை சந்தித்த மக்களால் மட்டுமே உணரவோ அனுபவிக்கவோ முடியும்.
தொடர்ந்தும் ஏமாறுபவர்களாக மக்கள் இருக்குவரை ஒரு கூட்டம் இதை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டே இருக்கும்.

(Gnanasakthy Sritharan)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com