Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையின் அரசியல் சமூக பொருளாதார மாற்றத்திற்கான நெருக்கடி

(ஸ்ரீதரன் - பத்மநாபா ஈபிஆர்எல்எப்)

இலங்கையில் வரலாறு காணாத சமூக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது என்றே கூறலாம். 1953 ஹர்த்தாலுக்குப் பின் 1981 40 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிலிருந்து துரத்தப்பட்டதன் பின்னர் இதுவொரு புதிய வித்தியாசமான எழுச்சி நிலையாகும். ரயில்வே தொழிலாளர்களின் குடும்பங்கள் தண்டவாளங்களில் சமையல் செய்து தமது எதிர்ப்பை தெரிவித்தது ஒரு சில தலைமுறைகளுக்கு முந்தியவர்களுக்கு அனுபவமாக இருக்கும்.

அரிசி விலையுயர்வு இங்கு பிரதான பிரச்சினையாக இருந்தது. 60 ஆண்டுகளை எட்டும் நிலையில் இங்கு நாடளாவியளவில் மக்கள் கிளர்ச்சிகளும் களநிலைமைகளும் தோன்றியுள்ளன என்றால் அது மிகயைல்ல. உலகளாவிய பின்புலத்திலேயே நாம் இதனை பார்க்க வேண்டும். ஐரோப்பிய நாடான மேற்கத்திய கலாச்சாரத்தின் தொட்டிலான கிரேக்கத்தில் வெடித்தெழுந்த கிளர்ச்சித் தீ இன்னும் ஓயவில்லை. அமெரிக்காவின் வால் தெரு ஐரோப்பா எங்கணும் மக்கள் வீதிக்கு வந்துள்ளார்கள்

அரபு நாடுகளில் ஜனநாயகத்துக்கான இயக்கம் தொடர்ச்சியாக நிகழ்ந்தேறி வருகிறது. மியன்மாரில் ஜனநாயக சீர்திருத்தங்கள் நிகழிகின்றனஇயக்கவியல் நோக்கில் அவை நிரந்தர புரட்சியின் குணங்குறிகளை கொண்டுள்ளன. ஜனநாயகம் மக்களின் முகம் என்பன முன்னிறுத்தப்பட்டு எழுச்சிகள் நிகழும் காலமிது. உலக வளங்கள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படல், சூழல் பாதுகாப்பு, தேசங்களில் சுதந்திரம், ஜனநாயம், மனித உரிமை என்பன முக்கியமத்துவம் பெற்று வருகின்றன. வரலாற்றின் குப்பைக் கூடையில் இருக்கவேண்டிய காலாவதியான கடந்தகால விலங்குகள்தாம் நாங்கள் இந்தக்காலத்துக்குரிய ஜந்துக்கள்  என்பது போல் நடந்து கொள்கின்றன.

நாட்டின் வளங்களை குடும்பமும் உற்ற சுற்றமுமாக அபகரிப்பது ,இராணுவமயப்படுத்துவது, எண்ணிக்கையில் சிறுபான்மையான தேசிய சமூகங்களை அடிமை கொள்வது, உயர்கல்வி நிறுவனங்களின் சுதந்திரத்தில் தலையிடுவது, அறிவை இராணுவ வாதத்துக்கு கீழ்நிலைப்படுத்துவது சதாரண மக்களின் ஜீவாதாரத் தேவைகளை முன்னிறுத்தாத உள்ளக கட்டமைப்பு எந்த சட்டத்திட்டங்களுக்கும் வராத கும்பல்களின் ராச்சியங்கள்போதைவஸ்த்தையும் மதுவையும் தாராளமாக புழக்கத்தில் விட்டு விபச்சாரத் தொழிலை ஊக்குவித்து சமூகங்களின் சிறந்த விழுமியங்களை சிதைத்தழிப்பது ஏதற்கெடுத்தாலும் சிறுபான்மை தேசிய சமூகங்களுக்கு எதிரான பெருமித உணர்வை வெளிப்படுத்துவது அல்லது அச்சுறுத்துவது சிவில் நிர்வாகம் உட்பட எங்கும் எதிலும் இராணுவ முத்திரையை பதிப்பது தமிழர்கள் வாழும் பகுதிகளில் அவர்கள் தமது தனித்துவத்தை பாதுகாக்க முடியாமல் அவஸ்த்தை படும் நிலையை இராணுவ பிரசன்னங்களின் மூலம் ஏற்படுத்துவது போன்ற செயல்கள் எவ்வளவுதூரம் நாட்டின் முன்னேற்றத்திற்கு உபயோகமாக இருக்கும் என்பது கேள்விக்குரியாகும்.

உண்மையில் இவை மக்கள் விரோத பாசிச நடவடிக்கைகள்!

புலிகள் எவ்வாறு சக சமூகங்களை அச்சுறுத்தி சொந்த சமூகத்தையும் அச்சுறுத்தி, சிறந்தது அனைத்தையும் நிர்மூலம் செய்து ஒரு பாசிச ஆட்சியை ஸ்தாபித்தார்களோ அத்தகைய போக்குகளே பேரினவாத அரச மட்டத்திலும் விரவிக் காணப்படுகின்றன. ஆட்கடத்தல், காணாமல் போதல், ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல் வெள்ளை வான் கலாச்சாரம் என்பன  மக்களை அமைதி இழக்கச் செய்துள்ளன

சில மாதங்களுக்கு முன்னர் சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒரு தொழிலாளி பொலிசாரால் சுடப்பட்டார். இன்று சிலாபத்தில் மீண்டும் ஒருவர் சுடப்பட்டிருக்கிறார். மின்சார ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள், ஏனைய அரச தலைவர்கள், கூட்டுத்தாபன ஊழியர்கள், தோட்டத் தொழிலாளர்கள், பல்கலைகழக மாணவர்கள் அமைதியிழந்து காணப்படுகிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அவர்களின் அடிவயிற்றில் தீயாக பற்றிக் கொண்டிருக்கிறது. குரல்வளை நெரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசாங்கம் நியமித்த உண்மைகளை கண்டறியும் குழு இனப்பி;ரச்சினைத் தீர்வு, இராணுவ பிரசன்னம், தொடர்பான ஆக்கபூர்வமான யோசனைகளைத் தெரிவித்திருக்கிறது. ஆனால் யுத்தத்தின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட பொதுமக்கள் தொடர்பான போதாமை வெளிப்படையாகவே காணப்படுகிறது.

நாகரிகமான சமூகத்தில் கடந்த காலத்தில் நடந்த உயிரிழப்புக்கள் தொடர்பாக பொறுப்புக்கூறல் அவசியமானது. அது யுத்தத்தின் இறுதி நாட்களில் மாத்திரமல்ல கடந்த முப்பது வருடங்களில் அரசு புலி உட்பட சகல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் அவசியமானது.

1977,1980, 1983 தொடர்ச்சியான முப்பது வருட வடக்கு கிழக்கு யுத்தம், 1971,1988 தெற்கின் கிளர்ச்சி இக்காலகட்டப் பகுதியில் கொல்லப்பட்ட மக்கள் 1990 களில் வடக்கில் முஸ்லீம் மக்களின் வாழ்வு   கேள்விக்குறியானது கிழக்கில் நடந்த மசூதிப்படுகொலைகள் உட்பட கரிசனை செலுத்தப்படல் வேண்டும்சகல சமூகங்கள் தொடர்பாகவும் கருத்திற்கெடுக்கப்படல் வேண்டும்.

சுதந்திரம் பெற்ற 63 ஆண்டுகளில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஆட்சி நடத்த வேண்டியேற்றபட்டதன் காரணம் என்ன என்பதனை திருப்பிப் பார்க்க வேண்டும். இலங்கையின் அரசியல் யாப்பு அதன் சிதைவு இயக்கத்தின் ஜனநாயகத்திற்கு எதிர்மாறான பாதையில் பயணித்தது பற்றியும் சிந்திக்க வேண்டும். இலங்கை வெற்றிகரமான பொருளாதாரமாக மாறுவதற்கான காரணங்களை கொண்டிருந்தும் நாம் ஏன் பின்னோக்கி சென்றோம் என்பது பற்றி ஆராயப்படல் வேண்டும்.

மலையக தமிழ் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டமை, சிங்களம் மட்டும் சட்டம், ஆங்கில அறிவற்ற தலைமுறையொன்றை உருவாக்கியது போன்ற விடயங்களும் வெஞ்சினத்துடன் முப்பது வருடங்கள் போர் புரிவது என்பது பற்றியும் ஆராய்தல் வேண்டும். நாம் சௌகரியமான வாழ்வை மட்டும் பேசிவிட்டு சென்றுவிட முடியாது. யுத்தத்தின் இறுதி நாட்களில் நடந்தவற்றை மட்டும் பேசிவிட்டு போய்விட முடியாது. கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டது மக்கள் கூட்டத்திற்கெதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள் இலங்கையில் சித்திரவதைகள், அதன் வரலாறு, முகாம்கள் பற்றி எல்லாம் ஆராயப்படல் வேண்டும். சிறைப்படுகொலைகள் பற்றியெல்லாம் பேசப்படல் வேண்டும். இதைவிட்டு விட்டு நாம் மூத்தகுடி ஐரோப்பியர்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தபோது நாம் நாகரிகமாக வாழ்ந்தோம் என பேசுவது அப்பட்டமான போலித்தனமாகும்.

எமது பாராம்பரியத்திலும், கலாச்சாரத்திலும் காட்டுமிராண்டித்தனங்கள் இருந்திருக்கின்றனவா என்பதை பார்க்க வேண்டும். சமூக பெருமை பேசுவதில் எந்த அர்த்தமும் கிடையாது. திறந்த மனத்துடன் வெளிப்படையாக விடயங்களை ஆராய்வதன் மூலமே உண்மைகளை நாம் தரிசிக்க முடியும்.

இலங்கையில் சமூக ரீதியில் ஒரு பகுதியினரை மற்றவர்கள் ஒடு;க்காமல் பாரபட்சமில்லாமல் நடந்துகொள்ளும் கலாச்சாரம் எப்போது வருமோ தெரியாது. பொலிஸ் நிலையங்களிலோ ,கச்சேரியிலோ ஆஸ்பத்திரியிலோ ,பேரூந்துகளிலோ ஆலயங்களிலோ, தெருக்களிலோ நம்பிக்கை கொள்வதற்கான எந்த அறிகுறிகளும் காணப்படவில்லைபேச்சில் வன்முறை விரவிக் காணப்படுகிறது. கலாச்சார இயக்கமொன்று தேவைப்படுகிறது. மனிதர்கள் தம்மையும் இயற்கையையும் நாசம் செய்யாமல் வாழ்வதற்கான இயக்கம் தேவைப்படுகிறது. வறுமையும் துன்பமும் தலைவிதி என்ற கீழைத்தேய சிந்தனை அயோக்கியத்தனமானது, ஈவிரக்கமற்றது. வளங்கள் சமமாக பகிரப்படல் வேண்டும் சமூக அடையாளங்கள், தனித்துவங்கள் பற்றிய நம்பிக்கைகள் மீது சுயாதீன செயற்பாடுகள் மீது அதிகார அகங்காரங்கள் பிரயோகிக்கப்பட கூடாது. பல்லினங்களின் நாடாக இந் நாடு மாற வேண்டும் எல்லோரும் இன்புற்றிருக்க  இவ்வுலகு!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com