Contact us at: sooddram@gmail.com

 

தோழர் முகுந்தன்- முருகநேசன் சில நினைவுகள்

புலிகளின் வதைமுகாமிலிருந்து அபூர்வமாக தப்பி தற்போது கனடாவில் வதியும் தோழர் ஒருவர் எழுதியவன்முறை மனநோயாளிகள்பற்றிய தனது சித்திரவதைமுகாம் அனுபவ நூலில் தோழர் முகுந்தனை எப்படி நடத்தினார்கள் என்பதைப்பற்றிய செய்தியொன்று காணப்படுகிறது. mugunthan வட்டுக் கோட்டையைப் பிறப்பிடமாக கொண்ட தோழர் முருக நேசன் 1980களின் முற்பகுதியில் இலங்கை விவசாய பீடத்தின் அனுராதபுரம் மகா இலுப்பள்ளமையிலும் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் ஆசிரியராக கடமையாற்றியவர்.

மகா இலுப்பள்ளமையில் கற்பிக்கும் போதே அவர் எமது இயக்கத்திற்கு வந்தவர். அவருடைய மாணவரும் தோழருமான மானிப்பாய் பாஸ்கரன்-சேகர் ஊடாகவே அவருக்கு இயக்கத்துடன் பரிச்சயம் ஏற்பட்டது. பல்கலைக்கழக வகுப்புக்களுக்கப்பால் மாணவர்களுடன் சினேகிதமான இளம் ஆசிரியர். ஓய்வு நேரங்களில் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு கராத்தே உட்பட உடல் உளபயிற்சிகளில் மாணவர்களுடன் சேர்ந்து ஈடுபட்டவர்.

ஈழப்போராட்டத்தில் ஈபிஆர்எல்எப் இயக்கத்தின் அணுகுமுறை - கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அவர் மானிப்பாயிலும் வட்டுக் கோட்டையிலுமாக எம்முடன் பல கருத்துப்பரிமாற்றங்களில் ஈடுபட்டவர். தேசியம் ,ோசலிசம் ஜனநாயகம், நவீன முறையில் விவசாயம் உள்ளுர் வளங்களை கையாள்வது உட்பட பல விடயங்களை அவருடன் கலந்துரையாடியிருப்போம்.

அநீதியற்ற ஏற்றத்தாழ்வற்ற சமூக முறை பற்றிய எமது கருத்து செயற்பாடு அவரை பெரிதும் ஈர்த்ததெனலாம். ஆழ்ந்த சிந்தனையுடன் மனதில் ஆயிரம் கேள்விகளுடன் அவர் ஈபிஆர்எல்எப் ல் இணைந்து கொண்டார். கும்பகோணத்தில் கோமளவல்லிப்பேட்டை - சிவபுரம் முகாம்களில் நிகழ்ந்த பயிற்சிகள் சேலம் உட்பட நிகழ்ந்த கருத்தரங்குகள் பயிலரங்கங்களில் அவர் ஆட்களை செம்மைப்படுத்தும் பணியைச் சிறப்புற ஆற்றினார்.

உயர்ந்த உடல்வாகும் ,ஆழுமையும், எளிமையும் ஆழ்ந்த சிந்தனையும் எதையும் ஆய்ந்தறிந்துசெய்யும் போக்கும் நிகரற்ற தோழமையும் அவரிடம் காணப்பட்டன. மாற்றுடைகள் ஒன்றிரண்டையே அவர் எப்போதும் வைத்திருந்தார். காந்தியடிகளின் எளிமை அவரிடம் இருந்தது. எந்த ஊதாரித்தனமும் அவரிடம் இருக்கவில்லை.

சாதாரண தோழர்களின் வாழ்க்கைமுறையை விட பிரத்தியேகமாக எதையும் அவர் கொண்டிருக்கவில்லை. கும்பகோணம் அதன் சுற்றாடல் சேலம் பகுதிகளில் அப்பிரதேசங்களின் இயற்கை, சமூகம் உள்ளுர் தொழில் துறைகள் பற்றிய அறிவைப்பெறுவதற்கான ஓயாத தேடலில் ஈடுபட்டார்.

சமூக மற்றும்- இயற்கை விஞ்ஞானியின் குண இயல் புகளுடனேயே வாழ்ந்தார். நான் சிறையில் இருந்த காலத்தில் அவர் இத்தகைய முறையில் செயல்பட்டதை நான் அறிவேன். எளிமையும், கம்பீரமும், நேர்மையும், அமைதியும், தன்னடக்கமும் அவரைப்பார்த்த உடனேயே புரிந்து கொள்ள முடியும். ஒரு சிறந்த படிப்பாளி. நூல்களை அவர் எப்போதும் சேகரித்துக் கொண்டிருந்தார். படித்துக் கொண்டிருந்தார். வேலை செய்துகொண்டிருந்தார்.

இயக்கம் தடைசெய்யப்பட்ட பின்னான நெருக்கடி மிகுந்த சூழலிலும் நம்பிக்கையூட்டினார். இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தோழர்களுடன் கடல் வழியாக இலங்கைக்கு வந்து இந்திய அமைதிகாப்புப்படையின் பிரசன்னம் இருந்தாலும் புலிகள் சுதந்திரமாக உலாவிய காலம் மன்னார் வவுனியா என பணிகளை ஆரம்பித்தார். இயக்கம் தடைசெய்யப்பட்டு ஏறத்தாழ ஒருவருட இடைவெளியின் பின்னர் இயக்கத்தை மீள் கட்டியமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

1980களின் பிற்பகுதியில் மயிலிட்டியில் ஒருவீட்டில் இரவு துங்கும் போது சாளரத்தினூடாக நடத்தப்பட்ட தாக்குதலில் காயமுற்று பின்னர் சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயம் ஆறிய சிலவாரங்களின் பின் மீண்டும் பணிகளை ஆரம்பித்தார்.

வவுனியாவில் இரவில் அவர் காரியாலயத்தின் கொல்லைப்புறத்தில் தூங்கும் போது பாம்பு தீண்டி வவுனியா மருத்துவமனையில் சிலநாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். வவனியாவில் பல்கலைகழகத்தில் அவரை நேசித்த அவருடைய சகாவான பெண் அவரை சந்திப்பதற்கு காரியாலயத்திற்கு வந்திருந்தார். அவர்கள் இணைந்து வாழ முடியாத சூழல் நிலவியது. தற்போதைக்கு தாம் ஒன்றாக வாழமுடியாத நிலையையும் அவகாசத்தையும் கேட்டிருந்தார். அந்த பெண் கலங்கிய கண்களுடன் காரியாலயத்திலருந்து சென்றது இன்னும் ஞாபகம். தோழர் முகுந்தன் தனது வேதனையை துயரங்களை காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அவர் அனுபவித்த வலியைப் புரிந்து கொள்ள முடிந்தது.

வவுனியாவில் மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் வந்து தோழர்களை போசித்தவர். வடக்கு கிழக்கு மாகாண சபையில் அவர் ஒரு அங்கத்தவராக முதலமைச்சர் வரதராஜப்பெருமாளின் யாழ் மாவட்ட இணைப்பாளராகவும் பணியாற்றியவர்.

1990 இன் முற்பகுதியில் இயக்கத்தில் சில இடங்களில் தோன்றிய அராஜகநிலைமைகளை நிலைமைகளை நேர்சீராக்குவதில் அவர் காத்திரமான பங்களிப்புக்களை நல்கியவர். அவர் இவற்றை செய்து கொண்டிருக்கும் காலத்தில் ஜனநாயக உணர்வுகொண்ட பெருவாரியான தோழர்கள் மத்தியில் தோழர் முகுந்தனின் நடவடிக்கைகள் பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

ஆனால் இந்த சீர்திருத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே இந்திய அமைதிகாப்பு படையின் வெளியேறுதல் ஆரம்பமாகியது. அமைதிகாப்பு படை வெளியேற்றத்துடன் ஈபிஆர்எல்எப் உம் விலக வேண்டியது தவிர்க்கமுடியாததாகியது.

ஒரு புறம் பிரேமதாச அரசு மறுபுறம் புலிகள் இடையில் எந்த இடைவெளியும் இருக்கவில்லை.

1990இன் முற்பகுதியில் கடலூடாக தோழர்கள் குடும்பங்களுடன் மிகவும் அவலமாக பாக்குநீரிணையைக் கடந்தன. நூற்றுக்குமேற்பட்ட தோழர்கள் குடும்பங்கள் பாக்கு நீரிணையில் கொல்லப்பட்டார்கள். கர்பபிணிப்பெண்களும் அடக்கம .

புலிகள் சூழ்ந்து நின்று சகட்டு மேனிக்குச் சுட்டார்கள் .வங்க கடலில் அவர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இருக்கவில்ல . அனைத்து ஆசீர்வாதங்களும் இருந்தது. தகவல் பரிமாற்றங்களும் நிகழ்ந்தன. சூது சூழ்ந்த போது தோழர் முகுந்தன் தனக்குத் தானே கைத்துப்பாகியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றபோதும் சன்னம் அவரது நெற்றியை உராய்ந்து சென்றது.

புலிகளால் அவர் உயிருடன் கைதுசெய்யப்பட்டு கடத்தப்பட்டடார். சில குடும்பங்கள் ஒருவரும் இல்லாமலே அழிந்தன. உற்ற சுற்றமென சில குடும்பங்களில் 10 12 பேர் உயிரிழந்தார்கள். இதில் உயிரைக்கையில் பிடித்துக் கொண்ட கடலைக்கடந்தவர்களே கடத்தப்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள். கடத்தப்பட்டவர்கள் அனேகமாக எல்லாருமே கொல்லப்பட்டுவிட்டார்கள்.

கடலில் ஓருமனிதப்பேரவலம் நிகழ்ந்துகொண்டிருந்தது. அப்போதுதான் வங்ககடல் பெருமளவிற்கு செங்கடலாகியது. கடல் மனித இரத்தத்தில் குளித்தது. இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சில பதிவுகளைச் செய்திருக்கிறது.

பின்னர் புலிகளின் வதைமுகாமிலிருந்து அபூர்வமாக தப்பி தற்போது கனடாவில் வதியும் தோழர் ஒருவர் எழுதியவன்முறை மனநோயாளிகள்பற்றிய தனது சித்திரவதைமுகாம் அனுபவ நூலில் தோழர் முகுந்தனை எப்படி நடத்தினார்கள் என்பதைப்பற்றிய செய்தியொன்று காணப்படுகிறது.

புதிய கைதிகளின் முன்னால் அவரைப்பேச சொல்லியும் அவர் தயங்கி நின்றபோது அவரது தலையில் கதிரையால் தூக்கி அடித்ததாகவும் அவர் குறிபிட்டிருந்தார். சித்திரவதைகளால் பலவீனமாகி ஒரு நாஸி வதைமுகாம் கைதியாக முருகநேசன் நின்றிருந்ததார்.

மார்க்ஸ ,லெனின் ,ஹோசிமின,; சே -வர்க்கம் ,தேசம் ஒடுக்குமுறை ,சுதந்திரம் இவற்றையும்- இயற்கை விஞ்ஞான அறிவையும் ஊட்டிய அறிவொளி வீசும் கண்கள் கொண்ட தாகமான அந்த மனிதரின் இறுதி நாட்கள் இப்படித்தான் கழிந்தன.

இறுதியும் இறுதியுமாக என்ன நடந்ததென்று தெரியாது.

சொந்த வாழ்க்கையை ,உற்ற சுற்றத்தை தன்வாழ்வைத் துறந்த அமரத்துவமான மனிதர் அவர். எமக்குள் இருந்த நிகரற்ற புரட்சியாளனை ஒரு சமூக- இயற்கை விஞ்ஞானியை நாம் தொலைத்திருக்கிறோம்.

சுகு-ஸ்ரீதரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com