Contact us at: sooddram@gmail.com

 

பலசேன ாசிசம் தோற்கடிக்கப்படவேண்டும்! இலங்கையின் பல்லினப் பாங்கு நிலைநாட்டப்படவேண்டும்!!

(ஸ்ரீதரன்-சுகு)

இலங்கையில் யுத்தத்திற்குப் பிந்திய சூழலில் நெடுஞ்சாலைகள் உள்ளக கட்டமைப்பு வசதிகள், பாரியளவில் மேற்கொள்ளப்பட்டிருப்பது உண்மையே. இலங்கையின் சகல திசைகளையும் இணைக்கும் பிரதான வீதிகள் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் உதவியுடன் பாரிய வீடமைப்பு பணிகள் வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படுகிறது. அம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையம் என்பன செயற்படும் நிலைக்கு கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது. ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன. இவையெல்லாம் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, ஐநா வின் நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியுடனும் உலக வங்கி, சர்வதேச நாணயம் நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கடன்களிலிருந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. அனல்மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றது. உல்லாச பிரயாணிகளின் வருகைக்கான ஊக்குவிப்புக்கள் நிகழ்கின்றன. பிரமாண்டமான ஹோட்டல்களில் இருந்து சாதாரண ஹோட்டல்கள் வரை அமைக்கப்படுகின்றன.

கொழும்பு காலிமுகத்திடலில் சீனாவின் சங்கரிலா ஹோட்டல் அமைக்கப்படுகிறது. கட்டுநாயக்கா- கொழும்பு, அம்பாந்தோட்டை- கொழும்பு கடுகதி வீதிகள் அமைக்கப்படுகின்றன. ஏ-9 வீதி செப்பனிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் உள்ளக பிரதான வீதிகள் துரித போக்குவரத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படுகின்றன. பலாலி விமான நிலையம் மறுசீரமைக்கப்படுகிறது.

தனியார் பல்கலைகழகங்கள், கல்வி நிறுவனங்கள் பரவலாக நிறுவப்பட்டு வருகின்றன. இவ்வளவும் நிகழ்ந்தாலும் விலைவாசி, ஊழல், வேலையின்மை என்பன சாதாரண மக்களின் வாழ்வை திணறடிப்பதாகவே இருக்கின்றன.

இந்த மாற்றங்களுக்கும் சாதாரண மக்களின் வாழ்விற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. அவர்களின் அன்றாட வாழ்வில் வறுமை ஓரளவுக்கேனும் குறைந்திருக்கிறதா, இன சமூகங்களுக்கிடையே நல்லுறவு நிலவுகிறதா? இராணுவ மயப்படுத்தப்பட்ட சூழல் அகன்றிருக்கிறதா? என்றால் நாம் விரக்தியடைவதற்கான பதில்கள்தான் எமக்குக் கிடைக்கின்றன.

இலங்கைக்கு நிரந்தரமான வருமானம் என்று சொன்னால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களினதும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்றவர்கள் பல்வேறு துன்பங்களின் மத்தியில் இலங்கைக்கு அனுப்பும் அன்னிய செலாவணியும், ஆடைத்தொழிலில் ஈடுபட்டுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் உழைப்பில் இருந்து வருவதும் ,தவிர பிறநாட்டு முதலீடுகளில் இலங்கையர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்புக்களும் மாத்திரம்தான் இருக்கின்றன.

இவர்களின் வாழ்க்கையில் விடிவு வந்திருக்கிறது என்றால் அதுதான் இல்லை. இவர்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே திணறுகிறார்கள். சராசரியாக இலங்கை பணத்தில் 10,000-15,000 ரூபா வரையிலான வருமானத்தையே இவர்கள் ஈட்டுகிறார்கள். கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் இதர சேவைகள் துறைகளில் உள்ள சிற்றூழியர்கள் எல்லோரினதும் நிலைமையும் இதுதான். இலங்கையின் விலைவாசியுடன் இவர்களுடைய வாழ்க்கை போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

வடக்குக் கிழக்கில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் ,பாரிய இழப்புக்களைச் சந்தித்த குடும்பங்களின் வாழ்க்கை சொல்லிமாளாது. ஆனால் பெருமளவு உற்பத்தியில் ஈடுபடாத பல்லின பாங்கற்ற இலங்கையின் படைத்துறை இலங்கையின் தேசிய வருமானத்திலும் வெளிநாட்டு உதவிகளிலும் குறிப்பிடத்தக்க பங்கை அனுபவிக்கிறது.

படைத்துறைக்கு இலங்கையின் பொருளாதாரத்தை வைத்து அளிக்கப்படும் சலுகைகள் சாதாரண மக்களின் ஜனநாயகத்துக்கான இடைவெளியை குறுகியதாக்கும். இலங்கையின் அளவு மற்றும் காரணிகளை வைத்துப் பார்க்கும் போது இந்தளவு பெரிய படை இலங்கைக்கு தேவையில்லை.

யுத்தத்திற்குப் பிந்திய சூழலில் வென்றவர்கள் என்ற ரீதியில் தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் நில வளங்கள் குறிப்பிடத்தகுந்தளவில் படையினரால் அனுபவிக்கப்படுகின்றன. தவிர இன சமூகங்களின் உரிமைகளை அங்கீகரிப்பதில் ஒத்துக் கொள்வதில் முன்னர் இருந்ததை விட மோசமான நிலைமையே காணப்படுகிறது.

19977, 80, 81, 83 என இன கலவரங்கள் வடக்கு கிழக்கு மலையக தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டு அது பாரிய யுத்தமாக மாறி பேரழிவுகளை ஏற்படுத்தி 30 ஆண்டுகள் கடந்த பின்னர் இன்று மீண்டும் முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும் அவர்களுடைய பொருளாதாரம், மதம், கலாச்சாரத்துக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

நாடு முழுவதும் பரவலாக வாழும் முஸ்லீம் மக்கள் பீதியுடன் வாழும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஹலால் முத்திரைக்கு எதிரான போராட்டம் இப்போது முஸ்லீம் பெண்கள் மீதான தாக்குதலாக மாறியுள்ளது. பல்வேறு தளங்களில் அச்சுறுத்தல்கள் நிகழ்கின்றன. தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மேற்கொள்வது மத, கலாச்சார ஆக்கிரமிப்புக்களை நிகழ்த்துவது நிரந்தர இராணுவ பிரசன்னம் இவை தொடர்ந்து கொண்டிருக்கும் அதேவேளையில் பொதுப்பல சேனா என்ற பெயரில் பெருமெடுப்பில் முஸ்லீம் மக்களுக்கெதிரான இனவாத விசம் கக்கப்படுகிறது.

இதன் துணைக்குழுக்களாக இராவண சேனா, இந்து சேனா? என அனாமதேய? அமைப்புக்கள் பேரினவாத சத்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.. சமூகங்கள் ஐக்கியமாக வாழ்வதற்கு எதிராக இந்த விபரீதமான போக்கு தலையெடுத்துள்ளது. இது பிரதானமாக முஸ்லீம்களின் பொருளாதாரம் ,நிலம் என்பவற்றை இலக்கு வைத்தே நிகழ்வதாக கூறப்படுகிறது.

இலங்கையின் ஓயாத தலைவலியான நூற்றாண்டுக்கு மேற்பட்ட இந்த மேலாதிக்க உணர்வு நிலை குரோதம், விரோதம் என்பன ஒரு சீழ்பிடித்த பிரச்சனையாக வௌ;வேறு வடிவங்களில் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பௌத்தம் உலகில் மிகவும் முன்னேற்றகரமான ஒரு மதம். சகிப்புத்தன்மை, அன்பு கருணை என்பவற்றைத்தான் அது போதித்து வருகிறது. ஆனால் இன்று பௌத்தத்தின் பெயரில் சிங்கள இனத்தின் பேரில் மற்றவர்கள் மீது வெறுப்பு உமிழப்படுகிறது.

இலங்கை ஒரு பல்லினங்களின் நாடாக மாற வேண்டி அவசியத்தை வரலாறு கோரி நிற்கிறது. நடக்கும் சம்பவங்கள் இலங்கையின் இன்றைய அரசியல் அமைப்பு இலங்கையின் இன சமூக உரிமைகளை பாதுகாப்பதற்கு போதுமான உள்ளடக்கங்களை கொண்டிருக்கவில்லை என்பதை உணர்த்தி நிற்கிறது.

சமூகங்கள் ஒன்றையொன்று அனுசரித்து வாழ்வதற்கேற்ப அரசியலமைப்பு சீர் திருத்தப்பட வேண்டியிருக்கிறது. 13வது அரசியல் சீர்திருத்தம் குறிப்பிடத்தகுந்த உள்ளடகங்களை கொண்டிருந்தாலும் அவற்றை பிடுங்கியெடுத்து ஒன்மில்லாமல் செய்வதற்கான அரசியல் பலவீனம் இலங்கையில் இருந்து கொண்டிருக்கிறது. இன்று அரசுக்கு அசுர பலம் இருந்தாலும் அந்த பலத்தை கொண்டு சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக சிறுபான்மை சமூகங்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் விதத்திலேயே காரியங்கள் நிகழ்கின்றன.

எனவேதான் மாகாணங்களுக்கு பகிரப்பட்ட அதிகாரங்கள் திரும்பவும் மத்திக்கு கடத்திச் செல்லப்படாதளவுக்கு அரசியலமைப்பில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. சமூக வாழ்விலும் பாடசாலை புத்தங்களில் இருந்து -அதிதீவிரவாத ஜனநாயக மக்கள் விரோத இயக்கங்களிலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது. இன சமூகங்களிடையே விரோதத்தை தோற்றுவிக்கும் குழுக்களின் செயற்பாடுகள் சட்டரீதியாக தடை செய்யப்பட வேண்டும்.

இலங்கையின் இன சமூகங்கள் ஒன்றையொன்று புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உருவாக்கப்படல் வேண்டும். மத, கலாச்சார பொருளாதார வாழ்விட பிரச்சனைகளில் சமூகங்கள் ஒன்றையொன்று சகித்து வாழ்வதற்கான நிலைமை ஏற்படுத்தப்படல் வேண்டும்.

மத சார்பற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இலங்கையின் சிறுபான்மை சமூகங்கள் சதாகாலமும் பயந்து பயந்து வாழ்வதற்கான நிலை மாற்றப்படல் வேண்டும். பிரிவினை தீர்வென்றில்லை. வம்புத்தனமாக ,அகங்காரமாக மற்றவர்கள் கீழ்படிய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் நிகழும் தலைக்கனமான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். சமூகங்களிடையே நஞ்சு வார்ப்பது தடை செய்யப்பட வேண்டும். இதனை மேற்கொள்வதற்கு உள்நாட்டில் மாத்திரமல்ல சகல விதமான ஏற்புடைய சர்வதேச அழுத்தங்களும் அவசியம். ஜெனீவாவில் உண்மைகளை கண்டறியும் குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களை நிறைவு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

உள்ளக கட்டமைப்பு வசதிகள், கண்ணிவெடிகளை அகற்றியது, வடமாகாணசபை தேர்தலை நடத்தும் தீர்மானம் என்பன வரவேற்கப்பட்டிருக்கின்றன. 13வது திருத்த சட்டமூலத்தை முழுமையாக நிறைவேற்றுவது, பொது மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறுவது, காணாமல் போனோர், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோர், இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்டோர் பற்றிய நியாயமான நீதி விசாரணை மேற்கொள்வது உள்ளிட்ட பிரதான அம்சங்கள் நிறைவு செய்யப்பட வேண்டும்.

காணியற்றவர்களுக்கு அரச நிலங்களை பகிர்ந்தளிப்பது, ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அவற்றை துரிதமாக பெறுவதற்கு ஏற்பாடு செய்வது என்பனவும் இங்கு மிகவும் முக்கியமானது. கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் மக்களும் பாரிய நிலப்பிரச்சனையை எதிர்நோக்குகிறார்கள். இது இனங்களிடையேயான முரண்பாடுகளாக மாறுவதை ஊக்குவிக்காமல் அரச காணிகளை பகிர்ந்தளிக்கும் நடைமுறை மூலம் மேற்கொள்ள முடியும். அகதிகளான தமிழ் மக்கள் எவ்வாறு தமது சொந்த நிலங்களில் குடியேறுவதற்கான நிலைமைகள் ஏற்படுத்தப்பட வேண்டுமோ அதேபோல் முஸ்லீம் மக்களுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழும் நிலங்கள் அவர்களுக்கு சொந்தமாக்கப்பட்டு அவர்கள் ஒரு சமூகமாக வாழ்வதற்கான நிலைமைகள் ஏற்படுத்தப்படல் வேண்டும். உள்ளக கட்டமைப்பு வசதிகள் போக்குவரத்து, சுகாதாரம் மின்சாரம் போன்றன அவர்களுக்கு கிட்டாத விடயங்களாக இருக்க முடியாது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மனிதத்தன்மையை உள்ளடக்கியதாக அமைய வேண்டும். அவர்களை கொத்தடிமைகள் போல் நடத்துவதாக அமைய முடியாது. தொழிற்சங்கங்களும் ,அரசியல் கட்சிகளும் இதில் பொறுப்புணர்ச்சியுடனும் தூர நோக்குடனும் செயற்பட வேண்டும். அன்றாட தேர்தல் அரசியல் நோக்கங்களுக்காக மக்களை பகடைகளாக்குவதாக இருக்க முடியாது.

1994 இல் சந்திரிகா அவர்கள் பதவிக்கு வந்த காலத்தில் மலையக மக்கள் முன்னணியின் காலம்சென்ற தலைவர் பெ.சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் சில முயற்சிகள் முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் பின்னர் அவை தொடர வில்லை. பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை உள்ளிட்ட அத்தியாவசியமான ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்கான நிலைமைகள் இலகுவாக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் இனவாத கபடத்தனங்களுடன் அணுகுவது இலங்கையின் நல்ல எதிர்காலத்துக்கு உதவப் போவதில்லை.

1980 களுக்குப் பின்னர் ஐரோப்பாவிற்கும், வட அமெரிக்காவுக்கும் சென்றவர்கள் பிரஜாவுரிமையையும் பெற்று உரிய ஆவணங்களை அந்தந்த நாடுகளில் பெற்றுள்ளார்கள். ஆனால் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியவர்கள் அதற்காக தலைமுறை தலைமுறையாக வாழ்க்கையை தொலைத்தவர்களின் இன்றைய வாழ்க்கை நிலை இலங்கைக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காது.

சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை, ஜனநாயக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதில்தான் இலங்கையின் பிரகாசமான எதிர்காலம் தங்கியிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் இதர சட்ட கோவைகளில் இலங்கையின் பல்லினத் தன்மையை கருத்திற்கெடுத்த மாற்றங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் சட்டங்களினால் மாத்திரம் அவற்றை செய்துவிட முடியாது.

ஆரம்ப பாடசாலைகளில் இருந்தும் இலங்கையின் தேசிய மொழிகளில் விரும்பும் தமது மொழிகளில் அரச நிர்வாகத்துடன் தொடர்பு கொள்வதற்குமான நிலைமைகள் மேம்படுத்தப்பட வேண்டும். பொலிஸ், சிவில் நிர்வாகத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு மக்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பது பயிற்றுவிக்கப்பட வேண்டும். சமூகப் பிரச்சனைகள் பற்றி பொலிசுக்கோ அல்லது சிவில் நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கோ போதிய பயிற்சிகள் இல்லை. அன்றாடம் சாதாரண பொது மக்கள் இவர்களின் அதிகார அலட்சிய மனோபாவங்களால் அவமானப்படுத்தப் படுகிறார்கள்.

வாக்காளர்களாக மாத்திரமல்லாமல் மக்களை மனிதர்களாக அணுகும் மனோபாவம் அரசியல்வாதிகளிடம் தேவைப்படுகிறது. ஒரு பீதியற்ற தலைநிமிர்ந்த வாழ்க்கையொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் இலங்கை இதற்கு எதிரான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த நாட்டில் உள்ள சகல பிரஜைகளும் தாம் இலங்கையர்கள் என்ற மனோநிலைக்கு இயல்பாக செல்ல வேண்டிய தேவையிருக்கிறது. ஆனால் தூரதிஸ்டவசமாக ஒவ்வொரு சிறுபான்மை சமூகமும் தாம் பிறத்தியார் என்று சிந்திப்பதற்கான நிலைமைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த நிலைமை மாற வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com