Contact us at: sooddram@gmail.com

 

அமரத்துவ வாழ்வின் உதிர்வு
தோழர் சின்னராசண்ணை - கமலா அக்கா மறைவு

1980களின் முற்பகுதியில் இடதுசாரி வழிவந்த மற்றும் தமிழ் தேசியப் பிரச்சனை ஊடாக முற்போக்கு அரசியல் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் இணைந்து யாழ் செம்மண் பிரதேச கிராமப்புறங்களில் இரகசிய கருத்தரங்குகள் நிகழ்த்தப்பட்டன. உரும்பிராய், இருபாலை, திருநெல்வேலி, கோப்பாய், சுன்னாகம் கோண்டாவில் என இந்த கருத்தரங்குகளில் பல்வேறு சமூக பொருளாதாரப் பிரச்சனைகள் பற்றி ஆராயப்பட்டது. தீவிரமான தர்க்க - அறிவுபூர்வமான விவாதங்கள் நிகழ்ந்தன. தோழர் கௌரிகாந்தன் இந்த கருத்தரங்குகளை ஏனைய தோழர்களுடன் இணைந்து நடத்துவதில் முக்கியபங்கு வகித்தார்.

15 -25 பேர்வரை கலந்து கொள்வோம். வாரத்திற்கு ஒரு தடவை இது நிகழும்.
யாழ்குடாநாட்டு செம்மண் பிரதேசத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளிலேயே இக்கருத்தரங்குகள் இடம்பெற்றன. அதில் உரும்பிராய் தோழர் சின்னராசண்ணையின் வீடு பிரதானமானது. இக்கருத்தரங்குகளில் பல்வேறு சமூக மட்டத்திலிருந்து ஆட்கள் பங்கு பற்றினர். தோழர்கள் ஜெகநாதன், பாலா, மகாலிங்கம், தங்கராசா, இராசரத்தினம், சிவகுமார், ஜீவரத்தினம், வரதன், சின்னபாலா, விசுவானந்ததேவன், யோதிலிங்கம் உட்பட இதில் பெயர் குறிப்பிடப்படாத இன்னும் பலரும் வேறு தேசியவாத இயக்கங்களிலிருந்தும் அவ்வப்போது ஆட்கள் பங்கு பற்றியிருக்கிறார்கள். அவ்வாறு பார்த்தால் நூறுபேருக்குமேல் பங்கு பற்றியிருப்பார்கள்.

வறுமையும் - துன்பமும் - கெடுபிடிகளும் நிறைந்த அந்த நாட்களில் தேநீர் சிற்றுண்டி கொடுத்து இந்த நள்ளிரவு வரை விவாதிப்பவர்களுக்கு சின்னராசண்ணையின் குடும்பம் உபசரிக்கும். அவருடைய சமூக செயற்பாட்டுக்கு அவரது மனைவியார் உறுதுணையாக நின்றார். சின்னராசண்ணை கமலாக்காவின் துன்பியலான மரணங்களும் அதனை உணர்த்தி நிற்கின்றன. கமலா அக்கா புற்றுநோயால் அவஸ்தையுற்று இறந்ததையடுத்து தோழர் சின்னராசண்ணையும் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இருவருடைய இறுதி கிரியைகள்; ஞாயிற்றுக்கிழமை(29-03-2015) நிகழ்ந்தன. இவர்களுக்கு மூன்று பெண்களும் இரண்டு ஆண்களுமாக ஐந்து பிள்ளைகள்.

இவருடைய வீட்டிலும், முந்திரிகைத் தோட்டதினுள்ளும்- அருகிலிருந்த பனங்கூடலிலுமாக கருத்தரங்குகள் நிகழ்ந்தன.  அப்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளராக இருந்த பி.ஏ.காதருடன் மலையக மக்களின் பிரச்சனைகள் மற்றும் மலையகத் தேசியம் பற்றியும் கலந்துரையாடியது ஞாபகம். தவிர அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் மற்றும் குருநாகல் 'தேவசரணகாமயவின'; வண பிதா யோகான் தேவானந்தா போன்றவர்களுடன் கருத்துப்பரிமாறல்களை நிகழ்த்தினோம்.

60 களின கீர்த்தி மிகு தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களின் மரபைச் சேர்ந்த தோழர் சின்ராசண்ணையின் வீடு தலைமறைவுகாலத்தில் முற்போக்கு சமூக பொருளாதார அரசியல் கற்கைகளுக்கான ஒரு பள்ளிக் கூடமாகவும் இருந்தது. அவ்வாறு பல வீடுகள். நாங்கள் பலவிடயங்களை விவாதித்திருக்கிறோம்.

1980 களில் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் வீதிக்கு விரட்டப்பட்டமை, யாழ் செம்மண் பிரதேச கூலி- வறிய விவசாயிகளின் பிரச்சனைகள் தீண்டாமைக் கொடுமைகள், தேசிய இனப்பிரச்சனை அதன் வர்க்கநிலை பற்றிய விவாதங்கள் நிகழ்ந்ததும், மலையக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள், தென்னிலங்கை முற்போக்கு தொழிலாளர் இயக்கங்கள் பற்றியெல்லாம் கலந்துரையாடப்பட்டன.

இந்த விவாதங்கள் தேசிய இனப்பிரச்சனை – சமூக மாற்ற இயக்கத்திற்கான குறிப்பிடத்தகுந்த கருமையமாக அமைந்ததென்றால் அது மிகையல்ல.
தோழர் பாலசிங்கத்தின் இயக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி 'சிந்திக்க தொடங்கிவிட்டார்கள்' என்ற நாடகம், சிறுப்பிட்டி மத்தாளோடை சமூக ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்கள் மற்றும் ஈழமாணவர் பொதுமன்றம், கிராமிய உழைப்பாளர் சங்கம், கிராமியத் தொழிலாளர் விவசாயிகள் முன்னணி, ஈழப்பெண்கள் விடுதலை முன்னணி மற்றும் வெகுஜன அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நீண்ட பாதயாத்திரை ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர்கள் இதனை ஒழுங்குபடுத்தி ஏற்பாடு செய்வதில் முன்னணிப்பாத்திரம் வகித்தார்கள்.

வர்க்க -சமூக உறுதிப்பாடு -மானிட நேயம் வெகுஜனங்களின் செயற்பாடுகள் மீதான அசாதாரண நம்பிக்கை ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான கரிசனை உணர்வும் தோழர் சின்னராசண்ணையின் உணர்விலும் செயற்பாட்டிலும் நிரம்பி வழிந்தன. மிக நீண்டகாலத்திற்கு பின்னர் இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்னர் தான் அவருடைய வீட்டில் சந்தித்து உரையாட முடிந்தது. காலமும் எமது பிரதேசங்களில் கால் நூற்றாண்டுகளுக்கு மேல் நீடித்த யுத்தமும் வ.ஐ.ச. ஜெயபாலனின் 'விதிக்குரங்கு கிழித்தெறிந்த பஞ்சுத் தலையணையாக' எங்கெங்கோ பிரித்துப்போட்டிருக்கிறது.
குறுந்தேசியவாத சக்திகள் ஒடுக்கப்பட்ட மக்களின் செயற்பாடுகளுக் கிடையே ஏற்பட்ட உரசல்கள் மோதல்கள் முரண்பாடுகள் பற்றியும் இடம்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு அவலங்கள் பற்றியும் அவர் மூச்சுவிடாமல் பேசினார்.

தோழர் நாபா 80 களின் நடுப்பகுதியில் தனது வீட்டுக்கு வந்து சென்றது பற்றியும் குறிப்பிட்டார்.  சமூகக் கொடுமைகளுக்கெதிரான போராட்டங்கள் இன்றளவில் நீடித்து நிலவுகிறதென்றால் இத்தகைய முன்னோடிப் போராளிகளால் தான். ஏனென்றால் அது மிகையல்ல. தனது மனைவியார் புற்றுநோயுடன் போராடி மரணித்ததை அடுத்து தோழர் சின்னராசண்ணை அகாலமாக மரணத்தை தழுவிக் கொண்டார். ஆனால் தீவிர சமூகப் பிரக்ஞையுடனான அந்த வாழ்வு அற்புதமானது. கன்னட நாவலாசிரியர் நிரஞ்சனாவின் 'நினைவுகள் அழிவதில்லை'போல.
(சுகு - ஸ்ரீதரன்)

தலை மறைவு வாழ்க்கை காலங்களில் சின்னண்ணை - கமலா அக்கா வீட்டில் சில நாட்கள் நானும் தங்கி உணவருந்திச் சென்றதும். கலந்துரையாடலில் ஈடுபட்டதும் என் மனக்கண்முன்னேயும் நிழல் ஆடுகின்றது. இந்த வகையில் தோழர் கிபி சீவரத்தினம், தோழர் நக்கீரன் ஜெகன்நாதான்போன்றவரகளின் வீகள் ஈழவிடுதலைப் போராடத்தின் சரணாலயங்களாக பல தடவை பார்கப்பட்டதையும் நாம் மறக்க முடியுமா? பாத்திரங்கள் நெளிந்த தகர டப்பாக்களாக இருந்த வறுமையாக இருந்தாலும் இக் குடமபத்தவரகளின் உபசரிப்பு விருந்தோம்பல் எப்போதும் நேரிய நெழிவு சுழிவு அற்ற உறுதியான ஆதரவாக பரிவாக போராளிகள் மீது காட்டப்பட்தை நானும் தற்போதும் மனக்கண்முன் நிறுத்திப் பார்கின்றேன். - சாகரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com