Contact us at: sooddram@gmail.com

 

ஓயாத அலைகளின் அவசியம் குறித்து

இலங்கையின் அரசியல் யாப்பில் 19 வது திருத்த சட்ட மூலம் கொண்டு வரப்பட்டது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். இலங்கை சுதந்திரம் பெற்றதென்று சொல்லப்பட்ட நாட்களில் மலையக மக்களின் வாக்குரிமை பிரசா உரிமை பறிக்கப்பட்டதும்,
இனவாதத்தின் அடிப்படையில் அதிகாரத்தை கைப்பற்ற சிங்களம் மட்டும் சட்டத்தை கொண்டு வந்ததையும் குறிப்பிடலாம். வௌ;வேறு இன சமூகங்கள் செயற்படுவதற்கான அரசியலில் பங்குதாரர்கள் ஆனதற்கான இடைவெளியைக் குறைப்பதாக இச் செயற்பாடுகள் அமைந்தன. அது இன சமூகங்கள் சார்ந்ததாக அல்லாமல் பல்வேறு துறைகளுக்கும் வியாபித்தது.

1970களில் கிளர்ச்சிகளை அடக்குவது மற்றும் இனமுரண்பாடுகளை கையாள்வதில் அவசரகாலச் சட்டம் நாளாந்த வாழ்வின் அங்கமாகியது. இடையிடை இல்லாமல் இருந்தாலும் இலங்கையின் வாழ்வு பொதுவாக அவசரகாலச்சட்டத்துடன் தான் நகர்ந்தது. 1972 அரசியல் யாப்பு சிறுபான்மைச் சமூகங்களுக்கிருந்த எச்ச சொச்ச பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அகற்றியது. மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதில் நிலவிய பற்றாக்குறை அல்லது போதாமை,  கிளர்ச்சிகள் அதனை அடக்குவதற்கான செயற்பாட்டில் ஆயிரக்கணக்கான மனிதர்கள் பலியானமை- சித்திரவதை- சிறை என்பன பலமடைந்தன.

மூத்த இடதுசாரித் தலைவர்கள் அதிகாரத்திலிருந்த சந்தர்ப்பங்களில் கூட இளம் சமுதாயத்தின் அபிலாசைகளை கண்டுணரமுடியவில்லை. அவர்கள் இந்த சமூக சமத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் 1930களின் நடுப்பகுதியில் தொடங்கிய இயக்கம் சமூகப் பிரக்ஞை கொண்டது. 1935 இலிருந்து கால்நூற்றாண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு விடாப்பிடியான கொள்கை உறுதியுடன் நின்றது. தொழிலாளிவர்க்கம் ,விவசாயிகள் ,வறியமக்களின் உரிமைகள் மற்றும் இனங்களின் சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடித்தது. இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் கிராமப்புற வறிய மக்கள் தொடர்பாக அது அக்கறை கொண்டிருந்தது.நிலச் சிர் திருத்தம் சுய பொருளாதாரம் என்பவற்றில் அக்கறை கொண்டிருந்தது. ஆனால் 1970 களில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களை அது கைவிட்டிருந்தது. இடதுசாரிகளின் தோல்வி மற்றும் இனமேலாதிக்கவாத சத்திகளின் புத் தெழுச்சி 1960 களின் பிற்பகுதி மற்றும் 1970களின் முற்பகுதியில் கருக்கட்டத் தொடங்கியது.
 

இதன் அடிப்படையில் 1970களின் பிற்பகுதி 1980களின் முற்பகுதியில் நீடித்த யுத்தத்திற்கான கருமேகங்கள் சூழ்ந்தன. 77, 81, 83 என 3 இனவிரோத வன்முறைகள் ஒன்றின் பின் ஒன்றாக அரங்கேறின. 3 வது பாரியது 1981 இல் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் 40 ஆயிரம் பேர் வீதிக்கு விரட்டப்பட்டார்கள். இனயுத்தம் தீவிரமடைந்த காலத்தில் இந்த தொழிலாளர்கள் தற்கொலை செய்தும் வறுமையில் வாடிக் கொண்டுமிருந்தார்கள். இலங்கையின் இன சமூகங்கள் ஒன்றிணைந்து செயற்படுவது ஜே.ஆர் அறிமுகப்படுத்திய திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்காக விரிசல் விஸ்தரிக்கப்பட்டது. முஸ்லிம் மக்கள் 77 இலும் 81 இலும் தாக்கப்பட்டார்கள்.
 

1978 அரசியல் யாப்பு விசேட அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைப் பிரசவித்தது.
அதிகாரத்தை மையத்தில் கெட்டிப்படுத்துவதாக அமைந்தது. விசேட அதிகாரம், பாராளுமன்றம் , நீதித்துறை இவற்றுக்கிடையில் தடம்புரளல்கள் தலையீடுகள் நிகழ்ந்தன.
விகிதாசாரத் தேர்தல் முறை ,சிறிய கட்சிகள் சிறுபான்மை கட்சிகள் தொடர்பில் நன்மை பயப்பதாக கருதப்பட்டது. விசேட அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை கூட சிறுபான்மைச் சமூகங்களுக்கு சாதகமானதாக கருதப்பட்டது. அனைத்து சமூகங்களும் இணைந்தால் தான் ஜனாதிபதியாக ஒருவர் வரமுடியும் என்ற நிலை இருந்தது. யுத்தத்திற்கு பிந்திய பிளவுபட்ட அதி தீவிர மனநிலை நிலவிய காலத்தை தவிர மற்றப்படி ஜனாதிபதி சகல சமுகங்களின் தயவில் வெற்றி பெற வேண்டியிருந்தது. ஆனால் அந்தப்பதவியின் கோரமுகம் அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டாலும் 2010 இன் பின் நிரந்தரமாகியது.

காணமல் போதலும் ,சித்திரவதைகளும், அரசியல் பழிவாங்கல்களும் ,ஊடகவியலாளர்கள் கடத்தலும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் செவிகளைப் பிடித்து இழுப்பதும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவதும் பாராளுமன்றத்தை அவமரியாதை செய்வதும் தூக்கி எறிவதும் அப்பதவி வழங்கிய அனுபவங்கள். மாகாண சபைகள் பாராளுமன்றம் தவிர்ந்த சட்டவாக்க சபைகள் என்ற நிலைப்பாட்டை எடுத்தற்காகவே சிராணி பண்டாரநாயக்கா தூக்கி எறியப்பட்டார். ஜனநாயக மாற்றங்களுக்கான முயற்சிகள் பாராளுமன்றத்தில் முறியடிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் அதிகம்.

அதிகாரப்பகிர்ந்தளிப்பு தொடர்பில் சந்திரிகாவின் யோசனைகள் 2000 ஆம் ஆண்டில் பாராளுமன்ற மேசையில் தீயிடப்பட்டது. அன்றைய பல எதிர்கட்சிகள் ஓரணியாக குழப்பம் விளைவித்தன. 13 வது திருத்த சட்டமூலம் பல்வேறு திமிறல்கள், வீதி ஆர்பாட்டங்களுக்கு மத்தியில் இலங்கையின் அரசியல் யாப்பில் இடம்பெற்றது.  17 வது திருத்த சட்டமூலத்தை நீக்கி -கடாசி எல்லையற்ற அதிகாரத்தின் விரிபு படுத்தலாக 18 வது திருத்தம்


ஆனால் ஜனவரி 8 இல் பல்லின சமூக தீர்மானத்தில் உருவான ஆட்சி மாற்றத்தின் தொடர்ச்சியாக 19 அரங்கேறியதும் பல்வேறு தடைகளைத் தாண்டி அது நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு மக்கள் ஆணை பெறப்படவேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. எனினும் 17 வது மீட்கப்பட்டதும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதும் அரசியல் யாப்பு சபை உருவாக்கப்பட்டதும் ஊழல் மற்றும் துஸ்பிரயோகங்களுக்கெதிரான சுதந்திர ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டதும் முக்கிய நிகழ்ச்சியாகும்.

13 வது குறிப்பாக இன சமூகங்களும் நாட்டின் விழிம்புகளில் இருப்பவர்கள் அரசாங்கமுறைமையில் பங்கு பற்றுவது தொடர்பானது. நாடளாவிய அளவில் ஜனநாயக இடைவெளியை உருவாக்குவது மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே நெருக்கத்தை கொண்டு வருவது. தலையீடுகள் இல்லாமல் இலகுவாக காரியங்களை ஆற்றுவதற்கான நிலைமைகள் தோற்றுவிக்கப்பட வேண்டும்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது அதற்கெதிராக இடதுசாரிகள் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்கள் இணைந்த இயக்கம் தோற்றம் பெற்றது.
17 வருட ஆட்சியில் மாற்றம் வேண்டி 1990களின் முற்பகுதியில் ஒரு இயக்கம் தோற்றம் பெற்றது. 1982 இல் பாராளுமன்றத் தேர்தலை நடத்தாமல் காலத்தை நீட்டிப்பதற்கான சர்வசனவாக்கெடுப்பு நடத்தியபோது சகல எதிர் கட்சிகளும் நீட்டிப்பதற்கெதிராக வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார்கள். தமிழ் மரபுகளில் நாம் சிந்தித்தது அந்த தேர்தலைப் பகிஸ்கரிக்குமாறு. சீலன் கதிர்காமர் போன்ற அறிஞர்கள் சொன்னார்கள் அந்த தேர்தலில் தமிழ் மரபிற்கு மாறாக பானைக்கு வாக்களிக்குமாறு.

பகிஸ்கரிப்பு அரசியலை கை விட்டு தமிழர்கள் மற்றைய சமூகங்களுடன் இணைந்து வாக்களித்தது 8 ஜனவரி 2015 இல் தான். இனவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்ட படியால் 13 வதோ அன்றி சந்திரிகா கொண்டுவந்த யோசனைகளோ புரிந்து கொள்ளப்படவில்லை. ஆனால் 19வது புரிந்து கொள்ளப்பட்டது. 2012 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தது மிகப் பெரிய சாதனை .இதனை நடைமுறைப்படுத்துவதில் 13 வதற்கு ஏற்பட்ட கதி ஏற்பட்டு விடக் கூடாது. 13 வது இலங்கையின் அரசியல் யாப்பில் இடம்பெறுவதில் பல்வேறு முரண்களை இழுபறிகளைச் சந்தித்தது. 19 இலங்கையின் வரலாற்றில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி. இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் நிகழ்ந்த ஜனநாயக சீர்திருத்த நிகழ்ச்சி. 13 வதும் இத்தகைய ஒன்றே. எனினும் இனவாதம் இதன் தாற்பரியத்தை புரிந்து கொள்ள இடமளிக்கவில்லை.


ஜனநாயக புரட்சி கடமைகள் இடையறாத நடவடிக்கைகள் மூலம் பூர்த்தி செய்யாவிட்டால் வரலாறு கடுமையான தண்டனைகளை வழங்கும். எகிப்தில் ஹஸ்னி முபராக்கை பதவியிலிருந்து துரத்துவதில் கெய்ரோ தல்லஹீரீர் சதுக்க கிளாச்சியாளர்கள் வகித்த வரலாற்று பங்களிப்பு தற்காலிகமாக அடிப்படைவாதிகளாலும் ,இராணுவவாதிகளாலும் கடத்திச் செல்லப்பட்டதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மியன்மாரில் இராணுவ ஆட்சியாளர்கள் அங்சாங்சுஜி தேர்தல்களில் பங்குபற்றுவதற்கு இடமளிக்க வேண்டியிருந்தது.
ஆனால் மதவாதம் அங்கு தனது கோர முகத்தை காட்டிக் கொண்டிருக்கிறது. ஜனநாயகப் புரட்சி மத இனவாதங்களை கடந்து செல்லவேண்டும்.

19 வது திருத்த சட்டத்தின் கீழ் சுதந்திர ஆணைக்குழுக்களை உருவாக்கினால் மாத்திரம் போதாது. 13 வதற்கு ஏற்பட்ட கதி இதற்கு ஏற்பட்டு விடக் கூடாது. ஆனால் நிர்வகிப்பவர்கள் மேல் மட்ட கனவான்கள் போல் நடந்து கொள்வார்களானால் மீண்டும் இந்த நாட்டில் பெரும் கிளர்ச்சிகள் எழுவதை தடுக்கமுடியாது.இலங்கையின் அரசியல் குறிப்பாக 1977 இன் பின்னர் லும்பன்களுக்கும் கனவான்களுக்குமிடையே தடுமாறுகிறது. சாமானிய மனிதர்களின் அபிலாசைகளைப் புரிந்து கொள்ளக் கூடிய அரசியல் பண்பாடு உருவாக்கப்படவேண்டியிருக்கிறது. இன்னும் அரை நிலப்பிரபுத்துவ சாயல் கொண்ட அதிகார கட்டமைப்பே நிலவுகிறது.

இன சமூகங்களின் தனித்துவம் நாடளாவிய அளவில் சாதாரண மக்களுக்கான சுகாதாரம். கல்வி .சமூகப்பாதுகாப்பு இதர சேவைகள் குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக கிடைப்பதற்கு ஏற்பாடு செய்வது. பொலிஸ் நிலையம் மற்றும் நிர்வாகத்துடன் ,நீதித்தறையுடன் எதுவித தயக்கமுமின்றி அச்சமின்றி தொடர்பு கொள்வதற்கான நிலைமைகள் ஏற்படுவதில் தான் இந்த சுதந்திர ஆணைக்குழுக்களின் வெற்றி தங்கியிருகிறது.
மலையக மக்களின வாக்குரிமை பிரசா உரிமை 13 வது தமிழ் சிங்களம் ஆகியன அரச கரும மொழிகள் ஆக்கப்பட்டது.


சமஸ்டிமுறையிலான தீர்வுக்கான சந்தர்ப்பங்கள் உருவாகி தவறிப்போனது
தொழிலாளர் நல உரிமைச் சட்டங்கள் இவையெல்லாம் கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் அளவு ரீதியான மாற்றங்கள் இவை முழுமையான ஜனநாயகத்தை நோக்கிய குணாச் ரீதியான மாறுதலுக்கான நிலைமைகளை உருவாக்கலாம். உருவர்க்கவேண்டும். முழுமையான ஜனநாயகம் என்பது வெறும் அரசியல் ஜனநாயகம் மாத்திரம் அல்ல. பொருளாதார சமத்துவமும் தான். நவ தாராளவாத உலகமும் இதனை பொதுவாக கண்டுகொள்வதில்லை.

19 வதுடன் இனங்களின் சமத்துவத்தை வலியுறுத்துவதற்கான இடைவெளி தோன்றியுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம் போன்றவை காலவதியாக வேண்டிய தருணம் இது. இடையறாத ஜனநாயகப் புரட்சி இயக்கம் ஒன்று இங்கு நடந்தேற வேண்டியிருக்கிறது. அது ஓயாத அலைகளாக நிகழவேண்டியிருக்கிறது. வரப்பிரசாதங்களை சலுகைகளை அனுபவித்த அரசியல் அதிகார வர்க்கம் 1977 இலிருந்து இந்த கும்பல் உருவாக்கப்பட்டு வளர்ந்து வந்திருக்கிறது.அது இன்று இராணுவவாத சர்வாதிகாரத்தன்மை கொண்டதாகவும் அமைகிறது. அதற்கு தேவை சட்டங்களுக்கு உட்படாத கணக்கு வேண்டியதாக இல்லா அதிகராம்.

அதற்கு உதவக் கூடிய அத்தனை மக்கள் விரோத ஜனநாயக விரோத செயல்களையும் அது மேற்கொள்ளும். மத இனவாதங்களை விஸ்தாரமாகத் தூண்டும் நாட்டின் இறையாண்மை இராணுவ மேலாண்மையை தூக்கி பிடிக்கும். பாசிசத்தின் குணங்களுடனான இந்த தலையெடுப்பு தோற்கடிக்கப்படவேண்டும். கடந்து வந்த 30 ஆண்டுகளுக்குமேலாக தமிழ் பாசிசம் எவ்வாறு எந்த சட்டதிட்டத்திற்கும் உட்படாத ஜனநாயக மறுப்பு படுகெலைகள் பற்றி பிரக்ஞையில்லாத ஒரு அணியை உள்ள10ரிலும் உலகளாவிய அளவிலும் பிரசவித்ததோ
அதே மாதிரி ஒரு அணி தெறிகிலும் உருவாகியிருக்கிறது. அது மக்களின் மீது எல்லையிற்ற அதிகாரத்திற்காக பேராசையுட்ன் பெரும் பிரயத்தனத்துடன் இயங்குக்கிறது
ஜனநாயகப்புரட்சி இயக்கத்தின் திசைவழி கனவான் ததலைவர்களையோ அல்லது லும்பன் தலைவர்களையோ உருவாக்குவதல்ல.


சமூகம் சார்ந்து சாமானிய மனிதர்களுடன் வாழ்வும் கூட்டாக இயங்கவும் தமது சமூகத்தின் மொழியல் பேசத்தயாரான தயாரானவர்களின் தேவையே. மூக்கால் கதைத்து தோளைக்குலுக்குபவர்கள் அல்ல. இலங்கை வந்த ஜோன் கெரியைப் பார்ப்பதற்கு வேசம் கட்டிச் சென்ற தலைவர்களை பார்த்திருப்பீர்கள். தமிழ் மக்களின் முன்னால் வேலுடனும் தலைப்பாகையுடனும் ஆரோகணிப்பார்கள். பரிவட்டம் கட்டிய தம்மைச் சுற்றி வழிபாட்டை உருவாக்கும் அவதார புருச மூடநம்பிக்கைகளில் இருந்து விடுபட வேண்டும்.
அது நடளாவிய அளவில் அவசியபபடுகிறது. ஜனநயக புரட்சி இயக்கம் பூரணத்துவத்தை நோக்கி கடுமையான விழிப்புணர்வுடன் நகர்த்தப்படாவிட்டால் அது ஜனநாயகவிரோதசக்திகளின் கையில் சிக்கி சிதிலமடையும். எனவே பல்லின -வௌ;வேறு சமுக சத்திகளின் வேற்றுமையில் ஒற்றுமை இத்தருணத்தில் பேணப்படவேண்டும்.
(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com