Contact us at: sooddram@gmail.com

 

ஒரு காலத்தின் துயரை, மரணங்களை நினைவு கூரல்

(சுகு-ஸ்ரீதரன்)
யுத்தம் முடிவடைந்து 6 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்த யுத்தம் உயிரழிவினூடாக நாம் பெற்றதென்ன? இந்த யுத்தத்தில் தமிழர் தரப்பில் இருந்த சரி பிழைகள் பற்றி நாம் சிந்தித்திருக்கிறோமோ?  இத்தனை உயிரிழப்புக்கள் நிகழ்ந்தது பற்றி மனக்கிலேசம் ஏதாவது இருக்கிறதா? எதைச் செய்யலாம் அல்லது எதைச் செய்யக் கூடாது, எவ்வாறு போராடுவது என்ற புரிதல் தன்னும் ஏற்பட்டிருக்கிறதா? தமிழ் மக்களின் அல்லது சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகள் பற்றிய திட்டங்கள் ஏதாவது எம்மிடம் இருக்கிறதா? சமூகங்கள் இணங்கி இசைந்து வாழ்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறதா?
 

இதில் குடும்பம், உற்ற சுற்றம், மற்றும் எல்லாவற்றையும் இழந்தவர்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் பற்றிய ஆக்க பூர்வமான தொலை நோக்கு நிலைப்பாடுகள் எதுவும் இருக்கிறதா? இந்த அழிவிலிருந்து எவ்வாறு மீள்வது புலம்பெயர்ந்தவர்கள், நாட்டில் உள்ளவர்கள், வௌ;வேறு சமூகங்கள் சமத்துவமாக இணைந்து வாழ்வதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கும் அக்கறை இருக்கிறதா? இளம் தலைமுறை இங்கு வாழ்வதற்கான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு என்ன செய்யப்பட்டிருக்கிறது. வன்முறை கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர நல்லியல்புள்ள சமூகத்தை உருவாக்க என்ன செய்யப்பட்டிருக்கிறது.
 

பண்பாட்டு மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் எதுவும் இருக்கிறதா? அதிகாரத்திற்கு வந்தவர்கள் தமிழ் பாரம்பரிய நிலப்பிரபுத்துவ அதிகாரதோரணையை விட வேறு எதையாவது கொண்டிருக்கிறார்களா? அரசு, சர்வதேச, புலம்பெயர் சமூக வழங்களை உள்ளூர் வழங்களுடன் இசைவாக்கி சமூக பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தவும், ஜனநாயக பண்பாட்டு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கும், முதலீடுகள், வேலைவாய்ப்புக்கள், சமூக பாதுகாப்பு என்பவற்றை நிலை நாட்டுவதற்கும் எத்தனையோ வாய்ப்புக்கள் இருக்கின்றன.
 

எமது சமூகத்தில் பாதுகாப்பு என்பது முக்கியமான பிரச்சனை. வீடு, சுகாதாரம், கல்வி என்பவற்றை அனைத்து பிரிவினரும் தங்குதடையின்றிப் பெறுவதற்கான நிலை உறுதி செய்யப்பட வேண்டும். யுத்தத்தில் இறந்த உறவுகளை நினைவு கூருவது இழப்புக்களை சந்தித்த அனைவருக்கும் இயல்பான உரிமை. குறிப்பாக 3 தசாப்தங்களுக்கு மேலாக நிலவிய யுத்தத்தில் கொல்லப்பட்ட அனைத்து மக்களும் நினவு கூரப்படவேண்டும்.
இதில் தீண்டாமை பாரட்டப்பட முடியாது.

யுத்தத்தின் இறுதி நாட்களில் கொல்லப்பட்டவர்கள் மாத்திரம் என்பது 30 ஆண்டு காலயுத்தம் பேரழிவுகள் தொடர்பான விரிந்த பார்வை இல்லாத, மனித உரிமைகள் ஜனநாயகவிரோத தொடர்பாக குறைபாடானதொருநிலைப்பாடாகும்.  எவ்வளவு பிரமாண்டமான விலை செலுத்தப்பட்டது என்பது உணரப்படவேண்டும். இந்த விலையின் சமூகப் பலாபலன்கள் என்ன என்பது சிந்திக்கப்படவேண்டும். சமூகங்களிடையே நல்லெண்ணத்தை உருவாக்குவதும் ,சமத்துவமாக வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும், மனித உரிமை, சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை உயர்த்திப் பிடிப்பதுமே நாம், இவர்களுக்குச் செய்யக் கூடிய அஞ்சலியாக இருக்கும்.


பேரழிவுகள் பாடமாக இருக்க வேண்டும். இனிமேலும் இத்தகைய அழிவுகள் நிகழாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பொறுப்புணர்வுடன் சிந்திக்க வேண்டும். இழப்புக்களைச் சந்த்தித்தவர்களின் துயரங்களைப் புரிந்து கொள்ளமுயல வேண்டும். பழி உணர்ச்சிக்கு மாற்றாக சுதந்திரம், ஜனநாயகம், பொருளாதார சமத்துவம் என்பவற்றை உறுதி செய்யும் விதமாகச் செயற்பாடுகள் அமைய வேண்டும்.
மக்களின் வாழ்வின் அனர்த்தங்கள் நினைவு கூரப்படும்போது வன்முறை மயப்பட்ட தலையீடுகள் இருக்கக் கூடாது.

3 தலைமுறைகளுக்கு நிகழ்ந்த அழிவும் ஊரை நிசப்தமாக்கிவிட்ட இடம்யெர்வும், புலம்பெயர்வும் ஆழமான சிந்தனைக்குரியது. ஊர் வாழ்க்கையிலிருந்து தனிமைப்பட்டுக் கொண்டிருக்கிறது. அல்லது வெறிச்சோடிக் கொண்டிருக்கிறது. வன்முறை, பாலியல் பலாத்காரம், படுகொலைகள் தலைதூக்கியிருக்கின்றன . எதையெல்லாம் இழந்தோம் என்பதை ஆழமாகச் சிந்திக்க வேண்டும். இனிமேலும் இத்தகைய இழப்புக்கள் ஏற்படாமல் தடுக்க நல்லியல்புடன் வாழ்வதற்கான சாத்தியம் பற்றி சிந்திக்க வேண்டும்.

துரோகிகள் என்றும் தியாகிகள் என்றும் முத்திரையிடப்பட்டு கொல்லப்பட்டவர்கள், சகோதர இன சமூகங்களின் அவர்களின் உறவுகளின் படுகொலை, மரணங்கள் துயரங்களையும் சிந்திக்க வேண்டும். அர்ப்பணத்துடன் போராட வந்த ஒரு பகுதியினர் தம்மைத்தாமே சமூகத்தின் அதிகாரமாக நிறுவிக் கொண்டவர்களால் துரோகிகள் ஆக்கப்பட்டு கொன்றழித்தார்கள். எமது சமூக ஆதிக்க மன நிலையும் அப்படித்தான் இருக்கிறது. இவ்வாறான பிரிவினையிலேயே இறந்தவர்களை நினைவு கூருவதற்கான தார்மீக யோக்கியதையை சமூகம் இழந்து விடுகிறது. அதிகாரசக்திகளின் அபிலாசைகளுக்கேற்ப சாதாரண மனிதர்களின் உயிர்களின் பெறுமதியைத் தீர்மானித்து விடமுடியாது.
(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com