Contact us at: sooddram@gmail.com

 

நேபாளத்தின் அதிர்வும் அழிவும் உணர்த்துவதென்ன??
(சுகு-ஸ்ரீதரன்)

2013 இல் கேதாரிநாத்- பத்திரிநாத் பகுதிகளில் ஏற்பட்ட பெருவெள்ளம் மக்களின் வாழ்வையும், வரலாற்றையும் அழித்தது. 2004 இல் தெற்கு தென்கிழக்காசிய கரையோர மக்களின் வாழ்வும் பண்பாடும் சுனாமியால் அழிந்தது. இடையே சீனாவில், பிலிப்பைன்சில், யப்பான், புக்குசீமாவில் சுனாமி பூகம்ப பேரனர்த்தங்கள். காஸ்மீரில், வங்கத்தில், ஒரிசாவில், நமது பதுளை மிரியா பெத்தையில் பெருவெள்ள மண் சரிவு அழிவுகள் இன்னும் பல.....
இப்போது நேபாளத்தில் மரணம் வரலாற்றின் சிதைவு எவரெஸ்ட் அசைந்தது என உலகப் பத்திரிகைகள் தலையங்கம் தீட்டுகின்றன.
 

இதுவரை 8000 இற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இடிபாடுகள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தியாவும் உலகமும் நேபாளத்திற்கு அரவணைப்புக் கரத்தை நீட்டியுள்ளன. ஆனால் இயற்கையின் கோரத்தாண்டவத்தின் முன்னே வாழ்வு ஸ்தம்பிதமடையும் நிலையும், கையறுநிலையும், தனித்து அனாதரவாக விடப்பட்டதான மனநிலையும் மனித குலத்தின் ஒரு பகுதியனருக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
உள்ளககட்டமைப்பு போக்குவரத்து வசதி சுகாதார வசதி அவசர சேவைகளுகான வாய்ப்புக்கள் இல்லாத பகுதிகளில் நிராதரவாக மனிதர்கள் மரணிக்கிறார்கள்.

நேபாள புவி அதிர்வு சுற்றிவர உள்ள நாடுகளில் இந்திய பிகார், வங்கதேசம், தீபேத்,  பாகிஸ்தான், சீனா என வௌ;வேறளவுகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.ஊக வாணிபமும், பங்கு சந்தையும் ஏனைய காப்பிரேட் தொழிற்பாடுகளும் களைகட்டி நிற்க இயற்கை கோரத் தாண்டவம் ஆடுகிறது. கேதாரிநாத, பத்திரிநாத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய போது உருத்திரதாண்டவம் என இந்திய ஊடகங்கள் வர்ணித்தன. இப்போது வரலாற்றின் சிதைவு ,எவரெஸ்ட அசைந்தது என தலையங்கங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.

சில வருடங்களுக்கு முன்னர் தான் நேபாளத்தில் முடியாட்சி வீழ்ச்சியும் ஜனநாயக மீட்பும் நிகழ்ந்தது. வெகுஜன எழுச்சி ஜனநாயகத்தின் நர்த்தனம் என்று அழைக்கப்பட்டது. தற்போது எவரெஸ்ட அசைகிறது.  சமூக வாழ்க்கையில் உள்ள முரண்பாடுகள், இயற்கையின் முரண்பாடுகள், இயற்கைக்கும் மனிதர்கள் மற்றும் ஜீவிராசிகளுக்கிடையே யான முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. சுனாமி, பூகம்பம், பெருவெள்ள அனர்த்தங்கள் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றப்படல் உட்பட உடனடியாகச் செயற்படுவதற்குமான தொழில் நுட்பங்கள் தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்படவேண்டும். மனித குலம் எதிர் நோக்கும் பிரமாண்டமான சவால்கள் தொடர்பில் இது மிகவும் முக்கியதுவம் வாய்ந்தது.
சுனாமி அனர்த்தங்களிலிருந்து மீள ஒரு தசாப்தத்திற்கு மேல் சென்றது. குஜராத் பூகம்ப அனர்த்தத்தில் லட்சம் பேரை இழந்த பின்னரும் சில வருடங்களில் மீண்டது.
ஆனால் மனிதப்பேரழிவுகள் முழுதாக தடுக்கப்படக் கூடியதாக இல்லை.

புக்குசீமா அனர்த்தங்களில் சேதமடைந்த அணு உலைகளின் கதிர் வீச்சு தாக்கங்கள் இன்னும் தொடர்கின்றன. இந்த அனர்த்தங்களுள் வாழ மனித குலம் பழக்கப்டடிருக்கிறபோலும்.
எனவே கடந்தகாலத்தை விட உலகம் நெருக்கமாக செயற்பட வேண்டியிருக்கிறது.
இது வரை கண்டிராத மனித குல இயற்கை வரலாற்று விபரீதங்கள் இதனை கோரி நிற்கின்றன. நாம் மனித குலத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக கரங்கோர்த்து ஒருவருக் கொருவர் உதவியாக இருக்கவேண்டும் என்ற நிலை உலகளாவிய அளவில் ஏற்படுத்தப்படவேண்டும்.
இயற்கை விடுத்துள்ள சவால் மனித குலம் ஒன்றாக நிற்கவேண்டியதன் அவசியத்தை நிர்பந்திக்கிறது.

ஆனால் காப்பிரேட் உலகமும் யுத்தவாதிகளும் இதனை அனுமதியார். எல்லைகள் தாண்டி உலகம் ஒன்றாக வேண்டும். இயற்கை விடுக்கும் செய்தி இது. இயற்கையின் சவால்களை எதிர் கொள்வதற்காகவே ஆதி மனிதர்கள் ஒன்றாக இயங்கவேண்டியிருந்தது. வர்க்கங்களாக பிளவுண்டு மனிதன் இயற்கையை வென்று விட்டான் என்று இறுமாந்திருந்த நேரத்தில் இப்புவிக்கோளின் இருப்பு எதிர்காலம் பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன. மனித குலம் ஒன்றாக சமத்துவமாக இயற்கையுடன் அனுசரித்து வாழ்வதையே இயற்கையின் வரலாறும் மனித குல வரலாறும் வலியுறுத்துகின்றன.

புவிக்கோளின் இயல்பான அனர்த்தங்களுக்கான தன்மைகளுக்கப்பால் வளச்சூறையாடல்- யுத்தம் என்பன இயற்கையையும் மனித குலத்தையும் அழிவின் விழிம்பில் நிறுத்தியுள்ளது.
மனித குல நாகரிகங்கள் வரலாறுகள் ஜீவராசிகள் இருப்பு என்பன அழிவடைவதை தடுப்பதற்கான உலகளாவிய இணைவும் உலகளாவிய சூறையாடல் சமூக அமைப்பின் தகர்வும் அவசியப்படுகின்றன. 3 வாரங்களின் பின் மீண்டும் நில அதிர்வு 50 இற்கு மேற்பட்டோர் உயரிழப்பு 1200 பேருக்மேல் காயம்  3 வாரங்களுக்குள் அடுத்தடுத்து அதிர்வுகளும் அழிவுகளும்  நேபாளமும், தென்னாசியாவும் பாதுகாப்பாக வாழ்வது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி ஒருங்கிணைந்து சிந்திக்கவேண்டிய தருணம் இது.
(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com