Contact us at: sooddram@gmail.com

 

வடக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் இழந்து விட்ட இன்னொரு சந்தர்ப்பம்.

(சுகு-ஸ்ரீதரன்)

13 வது தின் கீழான அதிகாரப்பரவலாக்கல்; வடக்கு கிழக்கில் பலப்படுவதற்கு அர்த்தமுள்ளதாக்குவதற்கு பாரதப்பிரதமரின் வருகை உதவிகரமாக இருந்திருக்கும். இந்தியா ஏற்கனவே இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் தொடங்கியுள்ள வீடமைப்பு, வீதி, தண்டவாளம் முதலீடுகளுக்கான கட்டமைப்புக்கள் துரித கதியில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு உபயோகமாக இருந்திருக்கும். 22 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழும் மக்களின் மீள்குடியேற்றம், மற்றும் கடல்வளப்பாதுகாப்ப  இருதரப்பு மீனவர்களின் வாழ்வாதாரப்பிரச்சனைகள் பற்றியும் ஆக்கபூர்வமான பிரச்சனைகள் பற்றிய ஆக்க பூர்வமான பேச்சுவார்த்தைகள் செயலுருவாக்குவதற்கும்  வழிவகுத்திருக்கும்.

பிரதானமாக இலங்கை பல்லினங்களின் நாடு என்ற வகையில் அனைத்து மக்கள் பிரிவினரின் நலன்கள் பொறுப்புணர்ச்சியான அணுகுமுறையே தேவைப்பட்டது. தற்போதைய நிலையில் ஒருதரப்பினரை மறுதரப்பார் பீதியூட்டி பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியாது. இலங்கையை ஜனநாயக மயப்படுத்துவதற்கான காரியசாத்தியமான அக்கறைகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.

என்னதான் சொன்னாலும் பொதுநலவாயம் உடப்ட பல சாவதேச அவயங்களில  இந்தியாவிற்கென பிரத்தியேக மரியாதை இருக்கிறது. நிகழ்ந்திருந்தால் இந்தியப்பிரதமரின் பிரசன்னமே முக்கியத்துவம் பெற்றிருக்கும். கமரோன் கூறியபடி 2014 மார்ச்சின் பின்னர  வழமையை விட வேறொன்றும் நிகழப்போவதில்லை. அவரின் யாழ் பிரசன்னம் சிங்கள மக்களை இலங்கை அதிகாரத்தை சுற்றி அணிதிரள வைத்திருக்கிறது. அவ்வளவுதான்.

அதிசயங்கள் ஏதும் நிகழ்ந்தால் தவிர ராஜபக்ஸக்களின் ஆட்சி   இன்னுமொரு 15 ஆணடுகாலம் ஆட்சியில் நிலைப்பதற்கான சாத்தியமே இருக்கிறது. அவர்கள் தற்போது சிங்கள மக்களின் ஏக பிரதிநிதிகள்?

இந்தியப்பிரதமரின் வருகையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தவில்லை. பகிஸ்கரிப்பு அரசியல் சமூகத்திற்கு ஆக்கபூர்வமானதாக இருந்ததில்லை. அது எமது சமூக வரலாற்று அனுபவமும் கூட. பொதுவாக நாட்டிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் இரண்டு விடயங்கள்   செயற்படுத்த வேண்டியிருக்கின்றன. இராணுவமயமாக்கல் நிலையிலிருந்து விடுவித்தல், அதிகாரப்பரவலாக்கல் கட்டமைப்பை பலப்படுத்துவது.

மனித உரிமைகள் என்னும்போது கடந்த 30  ஆண்டுகளில் இலங்கை அரசு, புலிகள் உட்பட போராட்டத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்ட சகல தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டவை பற்றி திறந்த மனதுடன் ஆராய வேண்டும். விவாதிக்கப்படவேண்டும். கண்டறியப்படவேண்டும். யுத்தத்தின் இறுதிக்கால பிரத்தியேகமானதும் பெருமளவிலானதுமான நிலையும் கருத்திற்கெடுக்கப்படவேண்டும்.

நவநீதம்பிள்ளை அவர்கள் இலங்கை வந்து திரும்பும் போது அரசின் சர்வாதிகாரப்போக்குபற்றியும் புலிகளின் படுகொலைவாதம் பற்றியும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். விடயங்கள் இந்த முறையில் அணுகப்படவேண்டும்.

கமரோன் வந்தார். சரி ஆனால் எதிர்பார்ப்பையும் பதட்டத்தை ஏற்படுத்தி விட்டு ஆக்க பூர்வமாக ஒன்றுமே நடக்காமல் போவதற்கு சாத்தியமே அதிகமாக இருக்கிறது. ஒரு பக்கம் முதலீடுகளுக்கான கார்ப்பரேட் பெரும் படையணிகளுடன் அவர் வந்திருந்தார். மறுபக்கம் 2014 மார்ச் மாதத்திற்கிடையில  உண்மைகளை கண்டறியும் குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வராவிட்டால் சர்வதேச விசாரணையை வலியுறுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

எமது அனுபவங்களிலிருந்து பட்டறிவிலிருந்து எது சாத்தியம் என்பதையும் பார்க்கவேண்டும்.

'கூட்டத்தில் கூடி நின்ற  ூவிப்பிதற்றலன்றி நாட்டத்தில் கொள்ளாரடி நாளில் மறப்பாரடி' என்பது எமக்கு அனுபவ பாடம்.

கமரோனின் நாளாந்த அவரது உள்ளூர், இங்கிலாந்து அரசியலையும் எமது நீண்டகால நலன்களையும் கணக்கிலெடுக்க வேண்டும். எமக்கு காரியசாத்திய மானவற்றை எவ்வாறு செயலுருவாக்கி முன் கொண்டு செல்வது என்பதே முக்கியம்.

வடமாகாண சபையின் செயற்பாடுகள் பல்வேறு இராணுவ அதிகாரவர்க்க செயல்பாடுகளால் முடக்கப்படுவதாக வடக்கு முதலமைச்சர் கூறுகிறார். கிழக்குமாகாண சபையின் நிலை பற்றி பேச்சு மூச்சே இல்லை. மாகாணசபை உறுப்பினர் துரைரட்ணம் அவ்வப்போது வெளிப்படுத்தும் அறிக்கைகளைத் தவிர. தமிழ் மக்களின் பிரச்சனையை யாழ்ப்பாணப்பிரச்சனையாக வேறு குறுக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியப்பிரதமரின் வருகையை தமிழ் தேசிய கூட்டமைப்பு தானாக முன்வந்து தெளிவாக வலியுறுத்தியிருக்கவேண்டும். வருகை நிகழ்ந்திருக்குமானால் அர்த்தமுள்ள பல விடயங்களுக்கு சாத்தியம் இருந்திருக்கும். தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒருசீர்தன்மையற்ற கதம்பத்தனமும் இன்று வட மாகாணசபையை ஆரம்ப நிலையிலேயே கலகலக்கச் செய்திருக்கிறது. உள்ளூராட்சி சபைகளின் நிலையைப்பற்றிப் பேசவே வேண்டாம்.

சம்பந்தரின் இரட்டை நாக்கு அரசியல் இந்திய நடுவண் அரசு பிரதமர் இலங்கைக்கு வரவேண்டும் என்று விரும்புகிறது தமிழ் மக்கள் அதனை விரும்பவில்ல . என்ற மாதிரியான பேச்சுக்கள் பொறுப்புணர்வின் பாற்பட்டவையல்ல. மாகாண சபையை இயங்கச் செய்ய வேண்டுமானால  அதற்கு யதார்த்தமாக மனப்பூர்வமாக பாடுபடவேண்டும். கமரூன் மாயையை மார்ச் மாதம் வரை தான் கொண்ட  ோகலாம். அதன் பின்னர் புதிய கதை தேவைப்படும .

உள்ளூரில் அதிகாரப்பரவலாக்கலுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதே இப்போது முக்கியமானது. செய்ய வேண்டிய செய்யக் கூடிய காரியங்கள் ஆயிரம் இருக்கின்றன. சாட்டுச்சொல்லிக் கொண்டிருப்பது மக்களை ஏமாற்றத்தில் விரக்தியில் தள்ளுவதாகவே அமையும்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com