Contact us at: sooddram@gmail.com

 

காலாவதியாக வேண்டியது வரம்பற்ற,  எல்லையற்ற அதிகாரம்

(சுகு-ஸ்ரீதரன்)
ஆயுட் பரியந்தம் அதிகாரத்தில் ஒருவர் இருக்க முயல்வது ஒருநாட்டுக்கோ அல்லது சமூகத்திற்கோ ஏன் கட்சிக்கோ எமது இதர சமூக நிறுவனங்களுக்கோ நல்லதல்ல. பொருத்தமானதுமல்ல. இதனால் நிகழ்ந்த விபரீதங்கள் உலகவரலாறு ழுமுவதும் காணப்படுக்கிறது. அதேபோல் மரபு வழி வாரிசு அரசியலும் பிரபுத்துவ மரபும் ஜனநாயக விழுமியங்களுக்கு முரணானது. இலங்கையில் விசேட அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை எவ்வாறு இலங்கையர்களுக்கான ஜனநாயக இடைவெளியை பொது வெளியில் அரித்தழித்து வந்திருக்கிறது. இந்த விசேட அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை கொண்டு வந்ததன் பின் ஆணைப்பெண்ணாக்க அல்லது பெண்ணை ஆணாக்க முடியாதே தவிர வேறு அனைத்து காரியங்களையும் செய்யமுடியும் என்று ஜே. ஆர் சொன்னது பிரபலமான கதை.

இந்த விசேட அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் மறுவடிவாக தமிழ்மக்கள் மத்தியில் அதன் பிரதி விம்பமாக ஏகபிரதிநிதித்துவ அதிகாரம் பற்றிய விபரீத எண்ணங்களுடன் ஜனநாயக சிதைவியக்கம் உருவாகியது. அவ்வாறு அவர்கள் கூறாவிட்டாலும் 2 வது கிளர்ச்சிக்கால ஜேவிபியும் அவ்வாறு தான் நடந்து கொண்டது. எப்போதும் சமூகத்தின் அதி உயர் மட்டத்தில் உருவாகும் இயல்புகள் சமூகத்தினுள்ளும் ஊடுருவிச் செல்லும். இந்த ஏக பிரதிநிதித்துவ ஜனநாயக விரோத சொற்பிரயோகம் புலிகளால் மாத்திரமல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் காங்கிரசினாலும் அவ்வப்போது உபயோகிக்கப்பட்டன.

முன்னேறிய நாடுகளில் இந்த சொற்பிரயோகம் பிரயோகிக்கப்படுவதில்லை.
மக்களின் அறிவு மற்றும் சமூக வளர்ச்சி மட்டம் உயர்வானதென்பதால் அதனை அதிகாரசக்திகள் பிரயோகிப்பதில்லை. இந்த விசேட அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறை நாடு முழுவதும் எவ்வாறு ஜனநாயக இடைவெளிபற்றிய கேள்வியை எழுப்பியதோ
அதேபோல் ஏகபிரதிநிதித்துவ அதிகாரம் தமிழ் மக்கள் மத்தியில் ஜனநாயக இடைவெளியை பாரதூரமாக இல்லாமல் செய்தது. விசேட அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை வந்த பின்னர் நாட்டில் நிகழ்ந்த ஜனநாயக விரோத நிகழ்வுகளைப்பட்டியலிடுவோமானால் அது முடிவற்றதும் நீண்டதுமாகும்.

உதாரணத்திற்கு சில.

  • 1979 பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டதும், உடனடியாகவே 8 போர் காணாமல் போனார்கள் . இன்பம் செல்வம் ஆகியோரின் பிணங்கள் பண்ணைக்கடலில் மிதந்தன. சித்திரவதைக் கூடங்கள் பரவலாக நிறுவப்பட்டன.
  • முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டன.
  • 1981 இல் சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் 40 ஆயிரம் பேர் வீதிக்கு துரத்தப்பட்டார்கள்.
  •  யாழ்நூலகம் ஈழநாடு பத்திரிகை காரியாலயம் எரிக்கப்பட்டது.
  • 1981 1983 குறுகிய கால இடைவெளியில் தமிழர்கள் முஸ்லீம்களுக்கெதிரான தாக்குதல்கள் அடுத்தடுத்து நடத்தப்பட்டன.
  • தமிழ் ஆயுதம் ஏந்திய எழுச்சி உருவாவதில் இந்த விசேட அதிகாரம் தன்னளவில் பங்களிப்பை வழங்கியிருக்கிறது.
  • தொழிலாளர் விரோத மக்கள் விரோத இனவிரோத நடவடிக்கைகளுக்கெதிராக வீதியிலிறங்கி போராடியவர்கள் மூர்க்கமாக தாக்கபட்டார்கள். செல்வாக்கு மிகுந்த லங்காசமசமாஜகட்சியின் தலைவர்களில் ஒருவரான விவியன் குணவர்த்தனா கூட தாக்கப்பட்டார். வடக்கு கிழக்கில் வீதியிலும் வீடுகளிலும் பிணங்கள் விழுந்து கொண்டிருந்தன.
  • மறுதலையான ஏகபிரதிநிதித்துவ அதிகாரமும் அனுராதபுரம் புனித போதி மரதின் கீழ் வரை சென்று மக்களைப் படுகொலை செய்தது.
  • வடக்கின் முஸ்லீம் மக்களை சொந்த நிலத்திலிருந்து வெளியேற்றியது .
  • தமிழ் மக்களின் சகல அரசியல் ஜனநாயக சமூக சக்திகளும் துடைத்தளிக்கப்பட்டன. தெற்கில் உருவான ஆயுதமேந்திய கிளர்ச்சியும் ஜனநாய உள்ளடக்கத்தை கொண்டிருக்கவில்லை.
  • 1983 இனவன்முறை “நக்சலைட் சதி” என பழிசுமத்தி இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். இலங்கையை பல்தேசிய கம்பனிகளுக்கு திறந்து விட்ட ஜே.ஆருக்கு அவ்வாறு செய்வது அவசியப்பட்டது.
  • 1981 இல் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் மோசடியும் இந்த அதிகார அகங்கார அரசியலின் பகுதியே.
  • 1978 இல் பொதுமன்னிப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஜேவிபியினர் 1980களில் மீண்டும் ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபடுவதற்கான நிலைமைக்கு செல்வதற்கான நிலைமையை உருவாக்கியதும் இந்த ஜனநாயக இடைவெளி இன்மையே.
  • தெற்கில் 60 ஆயிரத்திற்குமேலான சிங்கள இளைஞர்களின் அழிவுக்கும் வடக்கு கிழக்கில் ஒன்றரைலட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் அழிவு மற்றும் இலங்கை சமூகங்கள் நம்பிக்கை இழந்து அமைதியிழந்து போவதற்கும் இந்த விசேட அதிகாரம் அப கீர்த்தி மிக்க பங்களிப்பை வழங்கியிருக்கிறது. உலகத்திற்கு தெரியாத விஜயதுங்க ஜனாதிபதியாகிய கையுடன் சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மைச் சமூகத்தைபற்றிப்படரும் கொடி செடி போன்றவர்கள் என்றார்.
  • இலங்கையின் வலுமிக்க தொழிற்சங்க விவசாயிகள் இயக்கங்கள் காணாமல் போவதற்கும் இந்த விசேட அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களித்திருக்கிறது. மக்கள் தமது தலைவிதியை ஒரேயடியாக தனிமனிதர்களிடம் வழங்குவது மிகவும் ஆபத்தான நடைமுறையாகும். “ஜனநாயகம் மக்களால் மக்களுக்காக என்றவாறில்லை. தன்னால் தனக்காக என்று சிதைவடைகிறது”  ஜே.ஆர் பாராளுமன்றித்தில் ஐதேக விற்கு இருந்த 5இல் 4 பலத்தை தனது வரம்பற்ற அதிகார அபிலாசைகளுக்காக பயன்படுத்திக் கொண்டார்.
  • இன்று விசேட அதிகாரம் ஜனநாயக இடைவெளிகளை அரித்தழித்து ராணுவ மற்றும் குடும்ப உற்ற சுற்ற அதிகாரமாக சிதைவடைந்துள்ளது. அதிகாரம் மையத்தை நோக்கி குவிக்கப்பட்டுள்ளது. சுயாதீன நீதிச் சேவை ஆணைக்குழு,சுயாதீன பொதுச்சேவை ஆணைக்குழு, சுயாதீன பொலிஸ் சேவை ஆணைக்குழு ,சுயாதீன தேர்தல் ஆணைக்குழு என்பன உருவாவதற்கான சாத்தியப்பாடுகள் தகர்க்கப்பட்டுள்ளன.
  • இலங்கையின் நீதித்துறை பாரதூரமாக ஈடாட்டம் கண்டுள்ளது.
  • சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு துறையின் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது
  • 1978 விசேட அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறை 1978 இல் கொண்டு வரப்பட்டதன்பின் இலங்கையில் நிகழ்ந்த முக்கிய ஜனநாயக அரசியல் மாற்றம் என்னவென்றால் 13வதன்கீழான அதிகாரப்பரலாக்கல் மாத்திரம் தான்.
    அதுவும் இன்று நலிவடையச் செய்யப்பட்டுள்ளது.
  • மலையகத் தொழிலாளர்களின் நிலை பாரதூரமாக மோசமடைந்துள்ளது. எது வித சமூக பாதுகாப்பும் கிடையாது. பதுளை மண்சரிவும் இத்தகைய சம்பவங்கள் பற்றிய அக்கறையீனமும் தெளிவாக நிலைமைகளைப் புலப்படுத்துகின்றன.
    தொழிலாளர்களின் நலன்களை விட தோட்டக்கம்பனிகளின் நலன்களே முன்நிறுத்தப்படுகிறது. தேயிலைத்தொழில் நட்டம் என மூர்க்கத்தனமான பிரச்சாரம் செய்யப்படுகிறது.
  • இலங்கையின் கீர்த்;தி வாய்ந்த இலவசக் கல்வி, இலவச வைத்தியம் ஆகிய துறைகள் மெதுவாக தனியாரிடம் காப்பிரேட்டுக்களிடம் தாரைவார்க்கப்படுகிறது.
  • பல்கலைக்கழகங்கள் தமது சுயாதீனத்தை இழந்துள்ளன.
  • தேசிய உற்பத்தி ,வருமானம் என்பன காப்பிரேட்டுக்களின் ஏகபோகமாக மாறியிருக்கிறது. சாதாரண மககளின் விடிவென்பது காப்பிரேட்டுக்களின் சுரண்டலுக்குள்ளாவதும் இதனை அண்டிவாழ்வதும் என்றாக்கப்பட்டிருக்கிறது. காப்பிரேட்டுகளுக்கு முன் மக்களின் முகம் அழிக்கபட்டுள்ளது.
  • காப்பிரேட்டுக்களின் வளர்ச்சியில் மக்கள் பிழைத்துக் கொள்ள வேண்டும் என்றாக்கபட்டிருக்கிறது. எமது விவசாயம் மீன் பிடித்தொழில்கள் நலிவடைந்துள்ளன.
    சமூகப்பாதுகாப்பு உத்தரவாதங்கள் எதுவும் கிடையாது. சமூக ஏற்றத்தாழ்வு மலையும் பள்ளத்தாக்குமாகியுள்ளது.
     

இலங்கையின் அரசியல் கட்டமைப்பை ஜனநாயகமயப்படுத்துவதும் இதிலிருந்து மீள்வதற்கான ஒரு பாதையே.  விசேட அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்படுவதும் பாராளுமன்றம் மாகாண சபைகளின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படுவதும் காலத்தின் கட்டாயமாகும். தமது பிரதிநிதிகள் யார் என்று மககளுக்கு தெரியவேண்டும். அதற்கான தேர்தல் முறை சீர்திருத்தங்கள் அவசியப்படுகின்றன. பிராந்திய ,கிராம மட்டங்களில் மக்களின் பங்கேற்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளின் தனிப்பட்ட சொத்து விபரங்கள் மக்களுக்குத் தெரிய வேண்டும்.
மக்களின் தகவல் அறியும் உரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும். இலங்கையின் தொழிலாளர்கள் ,விவசாயிகள் ,கல்வியாளர்கள் ,தொழில் நுட்பவியலாளர்கள் மற்றும் பின்தங்கிய பிரதேசங்களின் மக்களை முன்நிறுத்திய இடையறாத ஜனநாயக புரட்சி இயக்கம் முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும். அதற்கு நிரந்தரமான அதிகார இருப்புக்கள் தகர வேண்டும். மாற்றம் என்பதே இங்கு நிரந்தரமானது. இலங்கையின் அரசியல் வரலாற்றில் பல விதி விலக்குகள் இருந்தாலும் இந்த இயக்கவியல் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

17 வருட ஐதேக ஆட்சியும் காலாவதியானது .சந்திரிகா அவர்களின் ஆட்சி 10 வருடத்துடன் முடிவிற்கு வந்தது. எனவே தற்போதை நிலைமையும் கடக்கப்படும். சந்திரிகா அவர்களின் ஆட்சிக்காலத்தில் சில முக்கியமான ஜனநாயக மறு சீரமைப்புகள் நிகழ்த்த முயற்சிக்கப்பட்டது. ஒரு சமஸ்டி அரசமுறைமை பரிந்துரைக்கப்பட்டது. மலையகமக்களுக்கு வீடுகள் கிராமசேவகர் முறை அறிமுகம் செய்யபட்டது. தொழிலாளர் நல சட்டங்கள் யாப்பு ரீதியாக உறுதி செய்யப்பட்டன. சந்திரகாவின் சமஸ்டி முறை பரிந்துரையை பேரினவாத மற்றும் தமிழ் ஆதிக்க அரசியலும் சேர்ந்து தான் தோற்கடித்தன.

ஜனநாயக அரசியிலமைப்பு மறு சீரமைப்புகள் பாரிய அளவில் நிகழும் என எதிர்பார்க்கப்பட்ட அவரது காலத்திலும் -தனது பதவிக்காலம் முடியும் வரை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க முயலவில்லை. ராஜபக்சேக்களின் ஆட்சியில் தமிழ் பாசிசம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. வடக்கு கிழக்கில் தேர்தல்கள் நடந்து ஜனநாயக இடைவெளி ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் ஒரே தேசம் ஒரேமக்கள் என்ற கோசம் மக்களின் பன்முகத்தன்மையை ஜனநாயகத்தை மறுதலிப்பது. இராணுவமயமாக்கல் சகல அதிகாரங்களையும் மையத்தை நோக்கி நகர்த்துவது மக்களுக்கான ஜனநாயக இடைவெளியை அரித்தழிக்கும் கைங்கரியங்கள் என்பதைச் சொல்லத்தேவையில்லை!
எனவே இந்த முறை மாறியே ஆகவேண்டும்.
(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com