Contact us at: sooddram@gmail.com

 

தீர்க்கமான தருணம்.

சுகு-ஸ்ரீதரன்

தமிழ் தரப்பினால் முஸ்லிம் மக்களுடன் சேர்ந்து ஒரு மாகாண சபையை கிழக்கில் உருவாக்கமுடியவில்லை. இது மிகவும் பலவீனமான நிலையாகும். சமூக அக்கறை இருக்குமானால் இதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு பரிகாரம் காணப்படவேண்டும். நில அபகரிப்பு  இராணுவமயமாக்கல் சிவில் நிர்வாகத்தில் படையினர் தலையீடு போன்ற நிலைமைகளில் இது மிகவும் முக்கியமானது. தவிர மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்வதற்குப் பதில் மத்தியை நோக்கி நகர்த்துவதென்பது திட்டமிட்ட முறையில் வெளிப்படையாகவே நிகழ்கிறது. கிழக்குமாகாண ஆளுனர் எப்போதும் மக்களால் தெரிவு செய்யப்பட்;ட பிரதிநிதிகளிடம் அதிகாரங்கள் போவதை விரும்பாதவர். கடந்த மாகாண சபையின் மீது அவரின் செயற்பாடுகள் அதற்கு சாட்சி. அது அவரின் சித்தமல் . ஆண்டவனின் சித்தப்படி அவர் நடக்கிறார். மாகாண சபையின் அன்றாட செயற்பாடுகளுக்கான அதிகாரங்கள் கூட அவற்றிடம் இல்லை.  இது முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட கடந்த மாகாண சபை உறுப்பினர்களது அனுபவம்.

எது எவ்வாறெனினும் இம்முறை மாகாண சபை அதிகாரப்பரவலாக்கலுக்காக குரல் எழுப்பும் மேடையாகவே காணப்படும். அது அவ்வாறிருக்க வேண்டிய தேவையுள்ளது. இந்தியா, உலகம் 13வதற்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்குமாறு இங்கு இருப்பதை பிடுங்குவதற்கான நிலைமைகளே காணப்படுகின்றன.

13 வதற்கு அப்பால் என்னும் போது அது ஒற்றை ஆட்சி கடந்ததாக இருக்கவேண்டும். தற்போதைய அனுபவங்கள் தரும் பாடமும் அதுதான். ஜனாதிபதி , பாராளுமன்றம், நீதித்துறை இவற்றின் சுயாதீனம் பாரதூரமாக பாதிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை சட்டம் ஒழுங்கு ஆகியன அரசியல் மயப்பட்டு அராஜகம் தாண்டவமாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே ஒற்றை ஆட்சியின் கீழான அதிகாரப்பரவலாக்கல் நடைமுறையில் வரும் பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தினுடாக தீர்வுகாணலாம் என்றும் அர்த்தப்படுகிறது.

ஆனால் இலங்கையில் நீதித்துறை இருக்கும் நிலையில் இது மிகவும் கடினமானது. எனவே ஒற்றையாட்சிக்கு அப்பால் சென்றே தீர்வு காணவேண்டும்.தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் பேச்சுவர்த்தை நடத்தும் போது இந்த ஒற்றையாட்சி அமைப்பை நீக்குவது பற்றிய கலந்துரையாடல் முக்கியமானது.

அரசியல் மயப்பட்டு இன சமூக நிலைமைகளை கருத்திற்கெடாமல் நீதித் துறை செயற்படுமிடத்து அதற்கு நிhபந்திக்கப்படுமிடத்து பேரினவாத நியாயங்கள் பாராளுமன்றத்தில் செல்வாக்குச் செலுத்தும் வரை ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப்பரவலாக்கல் சிறுபான்மைச் சமூகங்களுக்கு சாத்தியமில்லை. ஓட்டைப் பாத்திரத்தில்  தண்ணீர் அள்ளுவது போலத்தான் இருக்கும்.

இலங்கையை ஜனநாயகப்படுத்தும் பிரச்சனை இருக்கிறது. அதிகார போதையில் திளைப்பவர்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் ஆசிரியர்களின் அபிலாசைகள் கருத்திற்கெடுக்கப்படுவதில்லை. நிலபிரபுத்துவமும் பின்தங்கிய முதலாளித்துவமும் ஜனநாயக விரோத ஆட்சி முறையொன்றை திணிக்க முயல்கின்றன..

கல்விக்கு ஒதுக்க வேண்டிய தொகையை அதிகரிக்கக் கோரியும் ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு கோரிக்கையை முன்வைத்தும் கடந்த நான்கு மாதங்களாக போராடுகிறார்கள். இதனை செவிமடுப்பதற்கான பொறுமை இலங்கையில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கிடையாது. இனப்பிரச்சனையிலும் சரி கல்வியாயினும் சரி இது நாட்டிற்கான மக்களுக்கான தேவை சேவை என்பதைவிட அதிகார சவுக்கு தமது கையில் இருக்க வேண்டும் என்ற போக்கே காணப்படுகிறது. தொழிலாளர்களின் சேமலாப நிதி பங்குசந்தைக்குச் சென்றுள்ளது. பங்குச்சந்தை ஒருநாட்டின் வளர்ச்சியை சுட்டிக்காட்டும் என்பது அரைகுறை உண்மையாகும். அதுவொரு பகிரங்கமான சூதாட்டம்.சட்டபூர்வமான பாதுகாப்புக்களை கொண்டது.

சமூகத்தில் சாதாரண சூதாடிகள் கைது செய்யப்படுகிறார்கள் சிறைகளில் வாடுகிறார்கள். ஆனால் வெளியில் கனவான்கள் போல் வாழும் பங்குசந்தை வியாபாரிகள் பெரும் கொள்ளைகாரர்கள். என்னடா சம்பந்தா சம்பந்தமில்லாமல் இல்லாதவற்றுக்கிடையே முடிச்சுப் போடுகின்றேன் என்று நினைக்க வேண்டாம்.

இனப்பிரச்சனையாயினும் சரி நாட்டின் சமூக ,ொருளாதார சவாலானாலும் சரி பெருவாரியான மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பான பிரச்சனையே. தத்தமது சமூகத்திற்கு அதிகாரப்பரவலாக்கல் காலம் போய் ஏதோ பார்த்து செய்யுங்கள் எமக்கும் பங்கு தாருங்கள் என்ற போக்கு வளர்ந்து வருகிறது.
 
தேசிய இன சமூகங்கள் சட்டபூர்வமான முறையில் இலங்கையின் ஆட்சி முறையில் பங்குதாரர்களாக ஆக்கப்படல் வேண்டும். அதேவேளை நாட்டின் சமூக பொருளாதார விடயங்கள் தொடர்பில் மக்களின் அபிப்பிராயங்கள் எதிர்ப்பியக்கங்கள் ஜனநாயக முறையில் அணுகப்படல் வேண்டும். அவற்றை முன்னெடுப்பதற்கான சுதந்திரமும் மறுதலிக்க முடியாத வகையில் அரசியலமைப்பில் இடம் பெறல் வேண்டும்.

இராணுவவாத போதனைகள் கட்டுப்பாடுகள் மனிதகுலத்திற்கு பொருந்தாதவை. அது மனித தேடல் உணர்வை புதியது புனைவதற்கான ஆற்றலை மழுங்கடித்துவிடும். போர் வெற்றியினூடு இராணுவவாத கண்ணோட்டத்தின் ஊடாக மக்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் அணுகமுடியாது.

இலங்கையின் அரசியலமைப்பு ஜனநாயகம் சார்ந்த சீர்திருத்தத்திற்கு உள்ளாக வேண்டும். சர்வ அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை உட்பட மீள் பரிசீலனை செய்வது நாட்டிற்கு நல்லது. மிக அவசியமானது. எதிர்காலத்தில் தேர்தல் என்று வரும் போது இந்த முறைமையை அகற்றுவதற்கு யார் தயாராக இருக்கிறார்களோ அவர்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். நிலமானிய உறவு முறைகள் சண்டித்தன அரசியல் மக்களிடமிருந்து அன்னியப்பட்ட நட்பில்லாத சட்டம் ஒழுங்க;(பொலிஸ்துறையில் மாற்றம் வேண்டும்.

இலங்கையின் பிரதானமான இரண்டு மொழிகளிலும் (தமிழ் சிங்களம்) மக்கள் சுயமரியாதை கௌரவத்துடன் நிர்வாகம் மற்றும் அதிகார மட்டத்துடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படல் வேண்டும். சிவப்பு நாடாக்கள் எதுவும் தடையாக இருக்கக் கூடாது.
கட்டுநாயக்காவிலோ சிலாபத்திலோ தொழிலாளர்கள் மீனவர்களுடன் இலங்கையின் சட்டம் ஒழுங்குத்துறை நடந்துகொண்டது போன்ற பாராம்பரியம் இலங்கையிலிருந்து அகல வேண்டும்.
1940 களில் தொழிற்சங்கவாதி கந்தசாமி சுட்டுக்கொல்லப்பட்டதாக இருக்கட்டும்,
1970களில் டெல்டா டெவன் சங்குவாரி சிவனு லெட்சுமனன் போன்றவர்களுக்கு நடந்ததாக இருக்கட்டும், 1971 கிளர்ச்சியில் கதிர்காமத்து அழகுராணி மன்பெரிக்கு நடந்ததாக இருக்கட்டும் இன்று லலித் குகன் போன்றவர்களுக்கு நேர்ந்ததாக இருக்கட்டும் சாதாரண இளைஞர்கள் தொழிலாளர்களுக்கு நேர்ந்தவை இனிமேலும் நிகழக்கூடாது. தெற்கிலும் வடக்கிலும் இவை நிகழ்ந்தன. பல்லாயிரக்கணக்கான சாதாரண பொது மக்களின் இந்த நாட்டின் இளைஞர் யுவதிகளின் மரணங்களை சாதாரணமாக அலட்சியம் செய்துவிட்டு போகமுடியாது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் 40 ஆயிரம் பேர் வீதிக்கு துரத்தப்பட்டார்கள். அவர்களுக்கு பிறகு எந்த ஆட்சியிலும் நீதி கிடைக்கவில்லை. இனக்கலவரங்களின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கும் நியாயம் கிடைக்கவில்லை.

யுத்தத்தின் போதுபேரழிவுக்குள்ளான மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.
நீடித்து நிலவும் இனப்பிரச்சனைக்கான தீர்வும் காலங்கடந்து இழுபட்டுச்செலிகிற்து
அரசாங்காத்தால் வௌ;வேறு காலங்களில் நியமிக்க்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவும் உண்மைகளை கணடிறியும் குழுவும் சில  உருப்படியான பரிந்துரைகளைச் செய்துள்ளன. இவை முதலில் நடைமுறைக்கு வரவேண்டும்.

சில சீர்திருத்தங்கள் நிகழந்திருக்கின்றன என்பதற்காக தொழிலாளர்கள் விவசாயிகள் மத்தியதர வர்க்கத்தினர் கல்வித்துறையினரின் பிரச்சினைகள் தீர்த்துவிட்டதாகிவிடாது. 40 வருடங்களுக்கு  ேல் அவசரகால சட்டத்தின் கீழும் 33 வருடங்களுக்கு மேல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழும் ஆட்சி நடத்துபவர்களுக்கு சற்று வெட்க உணர்ச்சி வேண்டும்.
 
சமூகங்களிடையே சுயமரியாதை கௌரவத்துடனான நல்லிணக்கமும் ஜனநாயக மனித உரிமைகளும் பாதுகாக்கப்படல் வேண்டும். அப்போதுதான் இலங்கையில் சமூக பொருளாதார மறுமலர்ச்சி சாத்தியம்.
நாம் ஜனநாயக உலகுடன் ஐக்கியப்படுத்திக் கொள்ளவும் புதிய உலக சவால்களுக்கு ஈடுகொடுக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.
 
எமது சுற்றாடல் புவி வெப்பமாதல் நாடு பிராந்தியம் உலகம் பற்றிய அக்கறை இருக்க வேண்டும்.
சிறிய தீவு சிந்தனை பத்தாம்பசலித்தனமாகவும் இலங்கையின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாகவும் அமையும்.

சுகு-ஸ்ரீதரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com