Contact us at: sooddram@gmail.com

 

காந்தியாரும் சமகால இலங்கையும்

(சுகு சிறீதரன்)

வெலவேரியாவில் குடி நீர் நஞ்சாவதை எதிர்த்த மக்கள் மீது துப்பாக்கிச் சூட ,பள்ளிவாசல் -தேவாலயங்கள் -சிறுபான்மையினரின் உடமைகள் மீதான தாக்குதல்கள், கன்னை கட்டி நிற்கும் இனப்பெருமித உணர்வுகள் இவற்றையெல்லாம் பார்க்கும் போது காந்தியடிகளின் அறவிழுமியங்கள் மிச்சமீதியாகத் தன்னும் எம்மிடம் இருக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. இலங்கையின் வரலாறு பூராவும் நிகழ்ந்த இனக்கலவரங்களாயினும் சரி ,1990இல் முஸ்லீம் மக்கள் வடக்கிலிருந்து உடுத்த துணியுடன் வெளியேற்றப்பட்ட அவலமாயினும் சரி ,இன்று மிக ஆரவாரமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் பேரினவாத திட்டமிட்ட இனவிரோத நிகழ்ச்சி நிரலாயினும் சரி காந்திய விரோத நிலைப்பாடுகளே.

அ.மார்க்ஸ், காலஞ்சென்ற இந்தியாவின் புகழ் பூத்த வரலாற்றாசிரியர் ரஜனி பாமிதத், இந்திய இடதுசாரி இயக்கத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராகி  ாங்கே போன்றவர்களின் குறிப்புக்கள் காந்தி பிறந்த தினத்தையொட்டி இந்து பத்திரிகையின் புதிய சகோதர தமிழ் பத்திரிகையில் வாசிக்க முடிந்தது. ஆர்வமூட்டும் தேடல் உணர்வைத் தூண்டும  பத்திகள் அவை.

சமூகங்கள் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் வாழ்வதற்கான நிலைமைகள் இலங்கையில் அறவே அற்றுப்போய்க் கொண்டிருக்கின்றன. புத்தபிரானை நேசிக்கும்? நாட்டில் இந்த முரண் நிலை காணப்படுகிறது. சகிப்புத்தன்மை என்பது அறவே கிடையாது. நுகர்வுக் கலாச்சாரம் புரையோடிக்கிடக்கிறது. நெறியானவாழ்வு மருந்துக்கும் கிடையாது. உதாரித்தனம் தலைவிரித்தாடுகிறது. உழைப்பில்லாமல் வெளிநாடுகளில் இருந்து வரும்பணத்தை தண்ணீராய் செலவு செய்யும் கூட்டம் உருவாகியிருக்கிறது. தேர்தல்கள் என்று வந்தால் இனப் பெருமித உணர்வுகளே துருத்திக்கொண்டு நிற்கின்றன.

ஆனால் பேரினவாதத்தையும் சிற்றின வாதத்தையும் சமப்படுத்த முடியாது. ஆனால் சிறு தேசியங்களின் தேசியவாதத்தில் ஒரு ஜனநாயக உள்ளடக்கம் இருக்கிறது. ஆனால் சமூகங்கள் ஒரு புரிந்துணர்வுக்கு வருவதற்கு இது ஒருவரலாற்று தடையாக இருக்கக் கூடாது.

 

காந்தியம் உருவாக்கிய பாரம்பரியம் சகிப்புத் தன்மை, மொழிவழி மாநிலம் உருவாவதற்கும் -இன்று பொருளாதார சமூக சமத்துவமின்மைகளின  அடிப்படையில் உருவான தெலுங்கானா வரை நீட்சி பெற்றுள்ளது.  காந்தியம் அம்பேத்கார் போன்ற ஆளுமைகள் உருவாவதற்கான உள்ளார்ந்த ஆற்றலை இடைவெளியைக  ொண்டிருந்தது.

ஆனால் இலங்கையின் இனத்துவ வகைப்பட்ட அரசியல் அத்தகைய எதையும் பிரசவிக்கவில்லை. மிகக் கொடூரமாக பெருந்தொகையான மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட படுகொலைகள் வன்முறைகள் தொட ர்பாக பரஸ்பரம் குற்றஞ்சாட்ட விரும்புகிறார்களே ஒழிய தங்கள் தங்கள் தரப்பில் இழைக்கப்பட்டவை பற்றி பேசுவதற்கு தயாரானவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். உண்மைகளைக் கண்டறிவதற்கான இடைவெளி குறைவாகவே காணப்படுகிறது. இதனால் இனத்துவ வகைப்பட்ட சிங்கள தமிழ் அரசியல் திரும்ப திரும்ப மக்களை நரகப்படுகுழிக்குள் விழுத்திக் கொண்டிருக்கிறது.

அறஞ்சார்ந்த அரசியலை இடதுசாரிகள் முன்னெடுப்பார்கள் என்றால  அவர்களும் மிகவும் பலவீனமான நிலையில் தான் இருக்கிறார்கள் . அதிகாரத்தை சார்ந்து இயங்கவேண்டிய நிலையில் பாரம்பரிய இடதுசாரிகள் இருக்கிறார்கள் .இதர அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் தன்னலம் மறுத்தவர்கள் இல்லை. பெரும்பாலானவர்கள் வியாபாரிகள். நாக்கில் சமூக அரசியலும் நெஞ்சில் குடும்ப, உற்ற சுற்ற நலன்களையும் ஏந்திநிற்பவர்கள் கனவான்களாக இருக்கிறார்கள்.

காந்தியாரின் அற அரசியல் மக்களை பீதியில் பதட்டத்தில் வைத்திருப்பதற்கு எதிரானது. ஜனநாயக ,மனித உரிமை ,தார்மீக விழுமியங்களால் நிறைந்தது. இங்கு இலங்கையில் நிகழ்வது சாதாரண மனிதர்களை துச்சமென கருதும் அராஜக அரசியலுடன  சம்பந்தப்பட்டது. காந்தியடிகள் உலகுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்.

ஆபிரிக்காவில், வடஅமெரிக்காவில் ஏன் உலகளாவிய அளவில் நிறவெறிக்கெதிரான -தீண்டாமைக்கெதிரான, காலனி ஆதிக்கதிற்கெதிரான வறுமைக்கெதிரான இயற்கை அழிப்பிற்கெதிரான பெண்கள் மீதான வன்முறைக்கெதிரான போராட்டங்களின் உந்துவிசையாக இருந்திருக்கிறார். பிற்காலத்தில் நடைமுறைசார் சர்வதேசியவாதியாக சே இருந்தாரோ காந்தி தமக்கே உரிய முறையில் இந்திய மரபுகள் சார்ந்து செயற்பட்டிருக்கிறார்.

சமூகங்களின் ஒற்றுமை தீண்டாமை நிராகரிப்பு, நிறவெளி எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, வறுமை ஒழிப்பு, பெண்களின் வாழ்நிலையை உயர்த்துவது, இயற்கைப்பாதுகாப்பு சமாதான சகவாழ்வு இவையெல்லாம் காந்தியத்தின் பிரதான விடயங்களாக இருக்கின்றன.

இன்று உலகளாவிய அளவில் நேசிக்கப்படுபவர் காந்தி. மனிதர்ளின் நல்லியல்புகளை வெளிக் கொணர்வத ,எந்த மனிதருக்குள்ளும் வௌ;வேறளவில் அது இருக்கும் என்ற நம்பிக்கை ஆர்வமூட்டுவது நாம் கருதிய -நேசித்த ஆகா என்று எழுந்த யுகப்புரட்சிகளையெல்லாம் தாண்டி கடந்து காந்தீயம் நிலவுகிறது.

எல்லோரும் மார்க்சிய மூலவர்களின் மொழிப்பிரயோகத்தை நடைமுறை அனுபவத்தை பிரயோகிக்கவேண்டும் என்றில்லை. ஆனால் வௌ;வேறு சமூக அனுபவங்கள் செய்றபாடுகள் வௌ;வேறாக இருப்பினும் சாரம்சம் ஒத்ததாகவும் இருக்கிறது. வௌ;வேறு தளங்களில் சமூக அனுபவங்களுடன் சமூக இயக்கவியல் வரலாற்று இயக்கவியல் நிகழ்கிறது. இன்றைய கலிகாலத்தில் பேரழிவு யுகத்தில் காந்தியடிகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.

அறத்தை வலியுறுத்துகிறோம் என்று வீராவேச சொற்சிலம்பங்க ளூடாக காந்தியாரை மறுக்கும் போக்கொன்றும் இருக்கிறது. மத ,இன ,சாதி வெறியர்கள் ,பெண் விரோதிகள் காந்தியத்தை நடைமுறையில் காந்தியாரை வெறுக்கிறார்கள்.

சமகாலத்தில் சமூக அறம் பற்றி மிகப் பிரமாண்டமான அளவில் எழுதியவர் பேசியவர் ஜெயகாந்தன். அவருடைய நாவிலும் எழுத்திலும் முதுமையிலும் காந்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய சபையில்-மடத்தில  ெருமித உணர்வுகளுடன் கலந்து எழுச்சியுணர்வுகளுடன் கேட்டிருக்கிறேன்.

காந்தியின் ஓவியம் ஒன்றும் காற்றில் ஆடிக்கொண்டிருக்கும். உண்மையில் காந்தியார் எமக்கொரு கருவூலம். காந்தீய சாரம்சம் எமக்கொரு வழிகாட்டியாக இருக்கவேண்டும். 'காந்தி பிறந்து நூறு ஆண்டுகாலம் ஆச்சுங்க ,ாந்தி சொன்ன வழியில் செல்வோர் யாரும் இல்லீங்க' என்று தினபதியில் வந்த வசனம் எனக்கு இன்னும் ஞாபகம்.

60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் இலங்கையின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதற்கு காந்தீயம் உதவும்.ஆனால் காந்திய வழி எமது சமூதாயத்தில் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்பதே உண்மையாகும . எதிர்மாறான நிலைகள் கடந்த 3 தசாப்தங்களாக நிலவின.

தென்னாபிரி;க்க நிறவெறி அரசாங்கத்தையும் ஆபிரிக்க விடுதலைப்போராட்க்காரர்களையும் பேசவைத்ததும், சுதந்திர தென்னாபிரிக்கா சகல சமூகங்களின் இருப்பையும் ஏற்றுக் கொண்டு உருவாவதற்கும் காந்தீயம் பங்களித்திருக்கிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமா எத்தயை அரசியலைக் கொண்டிருப்பினும் கறுப்பினத்தவர் -இஸ்லாமிய மதப்பின்னணிiயும் கொண்ட ஒருவர்;; ஜனாதிபதியானது இடது சாரிகளின் மொழியில் ஜனநாயகப்புரட்சியின் அம்சம் எனலாம். காந்தீயச் செல்வாக்கு மாட்டின் லூதர் தொடக்கம் மண்டெலா வரை விரிந்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் பலுச்சிஸ்தானில் வாழ்ந்து தனது 90களில் நம் காலத்ததில் மரணித்த கான் அப்துல் கபார்கான் பிடிவாதமான காந்தியவாதி. தனது இறுதி நாள் வரை பிரிவினையை எண்ணி வருந்தியவர்.

இந்திய இடது சாரி இயக்கங்களின் காரியாலயங்களில் இனம் புரியாத ஒரு எளிமையை அவதானிக்கலாம். தோழர் ஜீவா ,ெரியார், காமராஜர் போன்றவர்களின் எளிமையிலும்  காந்தியம் வௌ;வேறளவுகளில் செல்வாக்குச் செலுத்தியது. இது காந்தியத்திடம் இருந்து வாரிசுரிமையாகப் பெறப்பட்டது.

பாரதி சொன்னானே இனியொரு விதி செய்வோம். பிரச்சனைகளை இயலுமானவரை மீண்டும் மீண்டும் பேசிப்பார்ப்போம். உறுதியுடன் எடுத்துரைப்போம். ஆனால் எமது பிரச்சனைகள் எவை என்று திட்டவட்டமாக எமக்குத் தெரிந்திருக்கவேண்டும். சாத்தியமாகாத இடங்களில் அஹிம்சை வழியில் போராடமுயல்வோம்.

அஹிம்சைப் போராட்டத்திற்கான இடைவெளி எப்போதும் பேணிப்பாதுகாக்க வேண்டும். அண்மையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்னர் தமது கோரிக்கைகள் அடங்கிய பிரசுரங்களை பொதுமக்கள் மத்தியில் வினியோகித்தவர்கள் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். நாடு சர்வதிகாரத்தை நோக்கிசெல்கிறது என்று நவநீதம்பிள்ளை சொல்லியதை நாளாந்தம் உறுதிப்படுத்துக்கொண்டிருக்கிறார்கள '

அஹம்சைப்போராட்டத்திற்கா  இடைவெளி எப்போதும் பாதுகாக்கப்படவேண்டும்!

மனிதகுலவிரோத சட்டங்கள் நீக்கப்படவேண்டும்!!

சகலவிதமான தீண்டாமைகளுக்கும் முடிவு கட்டவேண்டும்!!!

காந்தீயவழி மனித குலத்தின் சுயமரியாதை தொடர்பானது. இதை நாம் மனதில் இருத்தியாகவேண்டும். ரால்ஸ்ராயின் எழுத்துக்கள் காந்தியாரில் செலுத்திய செல்வாக்கு எத்தகையது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். தென்னாபிரிக்க இந்தியவாழ்க்கை அனுபவம் அவருக்கு தரிசனமாக இருந்தது.

நேர்மையாக வாழ வேண்டுமாயின் போராடுவதும் பிழைபுரிவதும் தூக்கியெறிதலும் திரும்பவும் தொடங்குதலும் குழப்பிக்கலங்குதலும்; இழப்புக்குள்ளாதலும் இன்றியமையாதவை. மன நிம்மதி அது ஆன்மாவின் இழிநிலை.-ரால்ஸ்ராய்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com