Contact us at: sooddram@gmail.com

 

ஜனநாயகத்திற்கான பாதையில் முன்னரோ பின்னரோ தடைகள் தகரும்

(சுகு-ஸ்ரீதரன்)

அரசியல் அதிகாரம் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களின் கைகளில் குவிவது சமூக ஜனநாயக உணர்வுகளுக்கு எதிர்மாறானது.மனித குல இயல்புகளுக்கு விரோதமானது.திவிநகுமசமுர்த்தி மத்திய மாகாண அபிவிருத்தி , தென் பகுதி அபிவிருத்தி போன்றன அதுவும் பில்லியன் கணக்கான பணத்துடன் ,இருவேறு சட்டவாக்க நிறுவனங்களுடன்  சம்பந்தப்பட்ட விடயங்கள். மத்தியில் மாத்திரமல்ல பிராந்திய மட்ட அரசியல் சபையின் அனுமதியைப் பெற வேண்டும். ஓன்றையொன்று அனுசரித்தல் ,கலந்து பேசுதல் என்பன இலங்கையில் புழக்கத்திற்கு வரவேணடும். ஜனநாயகம் என்பது கலந்துரையாடல் உடன்படுதல் ,ேறுபடுதல் ;நடைமுறைச் சாத்தியமாக்குதல் என்பவற்றையும் உள்ளடக்கியதே. ஆரோக்கியமான ஜனநாயக சமூகத்தில் இவை துரித கதியில் நிகழும். ஆனால் நோயுற்ற சமூகத்தில் குறைப்பிரசவமாகவே நிகழும்.

இலங்கையைப் பொறுத்தவரை நீதித் துறை சட்டவாக்க சபைகள் (மத்திய பிராந்திய) விசேட அதிகாரம் என்பன ஒன்றையொன்று பழுதாக்காமல் தனித்துவங்களை தாரைவார்க்காமல் இசைவுபட்டு நடத்தல் என்பதே அரசியல் யாப்பின் அடிப்படையாக உள்ளது

தற்போது விசேட அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து இலங்கையில் அழுத்தம் பெற்று வருகிறது.

1978 இற்குப் பின்னர் அது இலங்கையின் அரசியல் சமூக பொருளாதார தளத்தில் பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அதன் சிதைவியக்கத்தில் இராணுவ சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்வதற்குமான நிலைமைகள் தோன்றியுள்ளன.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அவை கட்டற்ற நிலைக்குச் சென்றுள்ளன. 18 வது திருத்த சட்டமூலம் பிராந்தியங்களின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி விசேட அதிகாரம் கொண்ட சா ,பேத ,தான ,தண்டங்களினூடாக நிரந்தரமாகிவிடுவதற்கான ஆபத்தான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன.

17வது அரசியல் திருத்த யோசனைகள் சுதந்திரமான நீதிச்சேவை ஆணைக்குழ ,சுயாதீன பொலிஸ் சேவை ஆணைக்குழு, பொதுசேவை ஆணைக்குழு - தொடர்பில் அரசமட்டதிலான இடைவெளி பரிசீலனை மனநிலை என்பன யுத்தத்திற்கு பிந்திய அரசியல் சூழலில் அள்ளுண்டு போயின. தனி மனிதனின் சுதந்திரம் வௌ;வேறு மட்டங்களில் அரசியல் அதிகாரம், அரச முறைமை என்பன சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமானவை.

மிக வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடாகவும ,உலகம் முழுதும் காலனிகளைக் கொண்டிருந்ததுமான பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து சுதந்திரமாக இருப்பதா அல்லது அது தனியாகச் செல்வதா என்பது பற்றிய வாக்கெடுப்பு 2014 இல் நடத்துவதற்கு பிரித்தானிய அரசம் ஸ்கொட்லாந்து அரசம்  உடன்பாடு கண்டுள்ளார்கள்.

ஸ்கொட்லாந்தின் பிரச்சனை பிரித்தானியாவில் அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவிக்கவில்லை யாரும் குய்யோ முறையோ என்று கத்தவில்லை. காட்டிக்கொடுப்பு துரோகம் பற்றி எவரும் பேசவில்லை. சமகால நவீன உலகின் இயக்கப்போக்கின் குறியீடு.

இலங்கை என்னதான் சொன்னாலும் முதலாளித்துவ உற்பத்தி உறவு முறையையும் ,ிலமானிய தளைகளையும் பெருமளவு கொண்ட நாடு. இங்கு ஜனநாயகப் புரட்சி நிகழவேண்டியிருக்கிறது. அது தான் இன சமூகங்களுக்கும் பிராந்தியங்களுக்கும்  அதிகாரப்பரவலாக்கல்.

இலங்கை மாதிரி சிறிய நாட்டிற்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது என்கிறார்கள் பேரினவாதிகள். சிறியநாட்டில் மக்களுக்கு சுதந்திரம் தேவையில்லை. சகல அதிகாரம் கொண்ட ராசாக்கள் இருந்தால் போதும் என்பது இதன் மறை பொருளாகும்.

மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படாததாலேயே அவை வெள்ளையானை எனப்படுகின்றன. அதிகாரப்பரவலாக்கலை விரும்பாதவர்களும் இவ்வாறு கூறுகிறார்கள். இது ஏகபோக மன நிலையின் வெளிப்பாடாகும்.

மக்கள் சுதந்திரமாக சமூக பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் ஊடாக தான் நாடு அபிவிருத்தியடையமுடியும். மக்கள் மாப்புக் கட்டு கட்டிநின்று தங்கள் பரோபகாரத்தில நெகிழ்ந்து நெக்குருகி நிற்கவேண்டும் என்று அதிகார வர்க்கம் எதிர்பார்க்கிறது.

பாதுகாப்புசெயலாளர்  தனத நிர்வாக பதவிநிலைக்கப்பால் சென்று 13 வது திருத்தசட்டமூலம் நீக்கப்படவேண்டும் என்று கூறியிருப்பதற்கு அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் இடதுசாரி அமைப்புக்களின் தலைவர்களான வாசு ,திஸ்ஸவிதாரண போன்ற தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கையின் பாரதூர தன்மையை இவர்களின கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன.

அரசியல் யாப்பில் 13வது திருத்த மூலத்தின் கீழான அதிகாரங்களையும் வழங்க முடியாதென்றால் தமிழ ,முஸ்லீம் ,மலையக மக்களுக்கு அடுத்த தெரிவு என்ன என்ற கேள்வி எழுகிறது. 13 வது வெறும் இலக்கம் அல்ல. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பெறுபேறு. தமிழ் மக்களின் போராட்டதிலும் தியாகத்திலும் விழைந்தது அது.

இதனை நிராகரித்தவர்கள் கூட தெற்கில் மாகாண சபைகளில் அங்கத்துவம் வகிக்கிறார்கள். இனங்களுக்கும் ,ிராந்தியங்களுக்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான முயற்சியின் ஒரு படிக்கல். அதிகாரங்களை சகல மட்டத்திற்கும் முன் எடுத்துச் செல்வதற்கான பிராந்திய மட்டங்களில் அரசமுறையில் பங்குபற்றுவதற்கான படிக்கல். அந்த படிக்கல்லையே உடைத்து விடுவதென்றால் அடுத்ததென்ன? மக்கள் கீழ்படிவுள்ளவர்களாக நடந்து கொள்வதா? அல்லது ஒற்றையாட்சிக்கு அப்பால் சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதா?

 13வது இன்று உள்ளு+ர் விடயம் மாத்திரமல்ல. அது உலக விவகாரம். ஐ. நா வலியுறுத்துகிறது. இலங்கையின் உண்மைகளை கண்டறியும் குழுவும் வலியுறுத்தியுள்ளது. இது தனியொருவரின் விருப்பு வெறுப்பு சார்ந்த விடயமுமல்ல. சமகால உலகின் நாடுகள , நாடுகளுக்குள்ளே மக்களின் மக்களின் சுதந்திரம் பற்றிய மிகப் பெறுமதி வாய்ந்த கோட்பாடுகள் இருக்கின்றன.

ஆக்கி;ரமிப்புக்கள், ஒடுக்குமுறைகள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் இந்த அறவியல் கோட்பாடுகள் உலகளாவிய அளவில் நடைமுறையில் வலியுறுத்தப்படுகின்றன. அது எகிப்தின் சதுக்கங்களாக இருக்கலாம் ,எதென்சின் வீதிகளாக இருக்கலாம். உலக சபைகளில் பெரும்பான்மை நாடுகளின் குரலாக இருக்கலாம், மனித உரிமை அமைப்புக்கள் ,இயற்கை ,சுற்றாடல் பேரழிவுகளுக்கு எதிரான அமைப்புக்களாக இருக்கலாம். இவையெல்லாம் மனித குல வாழ்வியல் அறம் பற்றி வலியுறுத்தி நிற்கின்றன.

அவசரகாலச் சட்டம , பயங்கரவாத தடைச்சட்டம் அகற்றப்பட்டசகல அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை காலாவாதியானஇராணுவவச் சாயல்கள் அகன்றபல்லினங்களின் மக்களின் முகங்கள் முன் நிறுத்தப்பட்ட அரசியல் சமூக முறைமை இலங்கையில் ஸ்தாபிக்கப்படவேண்டும்.

 இன்று மாற்றங்கள் தேவைப்படுகிறது. பாரிய மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அரசியலமைப்பிலிருந்து சமுதாய நிலைமைகள் வரை மாற்றங்கள் ஜனநாயக மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற எவற்றையும் கருத்திற்கெடுக்காத அரசியல்- அறஞ்சார்ந்த அரசு உருவாக்கத்தை கடைசிவரையும் ஏற்படுத்தாது. மாற்றத்திறகான விழிப்புணர்வு மக்களிடமும் வேண்டும்.  தலைவர்களிடமும் வேண்டும்? தெரிவுக்குழுவில் பங்கு பற்ற வேண்டியதேவை இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு எவ்வளவு தூரம் அவநம்பிக்கைக்குரியதாக இருப்பினும் அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கு பற்றியாகவேண்டும்.

இடதுசாரிக்கட்சிகள , முஸ்லீம் , மலையக மக்களின் கட்சிகள் அதிகாரப்பரவலாக்கலை ஆதரிக்கும் ஸ்ரீலசுக , ஐதேக பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். இந்த இடைவெளியில் தமிழ்  மக்கள் சார்பிலான கோரிக்கைளை முன்வைக்கவேண்டும்.

முரண்பாடுகள் ஏற்படும். இவை ஒன்றும் கடந்தகாலத்தில் நிகழாதவையும் அல்ல.ஆனால் இணக்கமும் முரண்பாடும் என்ற விடயம் அவசியம் ஓன்றும் நிகழவில்லை என்றால் அவர்கள் அப்பலப்படுவார்கள். சத்தி மிக்கவர்கள் ,ாமானியர்கள் உட்பட பலரும் கூர்ந்து அவதானிக்கும் விடயம் .

நாம் எமது சமூகதின் கௌரவமான சுயமரயாதையான வாழ்விற்கு எம்மை அர்ப்பணிக்க தயாராக இருக்கவேணடும். மலையகமுஸ்லீம் மக்களின் உரிமைகள்- பிராந்திய மட்டத்தில் அதிகாரங்கள் பகிர்வதன் அவசியத்தை வலியுறுத்தவேண்டும்.  பரந்தளவிலான ஆதரவு தளம் உருவாக்கப்படவேண்டும். தமிழ் சமூகத்தின் நலிவு மௌனமாகத் தொடர்கிறது.

இதனை தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரப்பகிர்வ , அரச முறையில் பங்குதாரர்களாவதற்கான வழிவகைகள் கண்டறியப்படவேண்டும்.அதே வேளை தொடர்ந்து ஜனநாயக மயப்படுத்தலுக்கான போராட்டம் விழிப்புணர்ச்சி நடவடிக்கைகள் நிகழவேண்டும்.

குட்டி முதலாளித்துவத் தலைமைகள் எப்போதும் அது சிறிய தேசியமோ, அல்லது பெருந்தேசியமோ ஆக்கபூர்வமான நிகழ்ச்சி நிரலுக்கு பதிலாக மக்களுக்கு போதையூட்டும் நிகழ்ச்சி நிரலையே விரும்பும். ஆனால் விடயம் ஒரு முட்டுச் சந்திற்கு வந்து விட்டது. இனிமேல் இதனைத் தொடர்வதற்கான அகப்புறச் சூழல்கள் அருகி விட்டன.

சமூக அழிவு மக்கள் ஊரை விட்டு துரதேசங்களுக்கு புலம்பெயர்ந்து கொண்டிருத்தல் 3வது சிறுபான்மையினமாக தமிழர்கள் மாறி வரும் எதார்த்த நிலை எல்லாமே விளங்கிக் கொள்ளப்படவேண்டும்சிறுபான்மை சமூகங்களும் தென்னிலங்கையின்  ுற்போக்கான சமூகப் பிரிவும் இணைந்து செயற்படவேண்டும்.

பேரினவாத குறுந்தேசியவாத மோல்கள் இன்றைய சர்வதேச உலகமயமாகக்ல் சூழலில் செல்லுபடியற்றுப்போகலாம். நிலமானிய சமூகசத் தழைகள் அறுந்து வருவது தவிர்க்கமுடியாதது.

பேரினவாத வியாபாரமும் தொடர்ந்து ஓடமுடியாது. வெற்றி தோல்வி பற்றிய கதைகள் இராணுவ மேன்மை புகழாரங்களை  அதிக காலத்திற்கு செய்யமுடியாது. கடை போண்டியாகிவிடும்.  நிஜப் பசியும், தேடலும் எல்லா மக்களுக்கும் இருக்கின்றன.

இனப்பிரச்சனை இலங்கையில் தீர்க்கப்படவேண்டும , ஜனநாயக மயப்படுத்தப்படவேண்டும் மனித  உரிமைகள், தொடர்பான  சமுதாயப் பேரழிவு தொடர்பான கணக்கு வழக்குகள் சர்வதேச நிகழ்ச்சி நிரலின் பாகமாகி விட்டன.

எல்லாமே பல்வேறு உலக சத்திகளின் நலன்களுடனும் இணைந்தது. உலகில் எதுவுமே அவ்வாறில்லாமல்; நிகழ்வதில்லை. இதில் தீர்க்க தரிசனத்துடன் இலங்கையின் ஜனநாயக சதத்pகள் செயற்படவேண்டும். உணர்ச்சி வசப்படுத்தாத ,சகல மக்களினதும் கௌரவமான வாழ்க்கைக்கான சாத்தியங்கள் இருக்கின்றன. சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இதுவும் நழுவிப்போய்விடக் கூடாது.

(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com