Contact us at: sooddram@gmail.com

 

அகாலம் மனதிலிருந்து…….

(ஸ்ரீதரன்-சுகு)

இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக திரும்பவும் வாசிக்காமல் அது மனதில் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தில் இருந்து எழுதுகிறேன்.

வாசித்து ஒரு மாதத்திற்கு மேல்.

அதற்கு சில நாட்களுக்கு முன்னர் டால்ஸ்டாயின் போரும் அமைதியும் (சொக்கலிங்கம் அவர்களின் மொழிபெயாப்பு 1956) புத்துயிர்ப்பு ரா. கிருஸ்ணையாவின் மொழிபெயாப்பு திரும்பவும் வாசித்திருந்தேன்.

சிறைகளிலும் சித்திரவதைமுகாம்களிலும் கொடுமைகள் வேறு வேறு காலங்களில் அவ்வளவு வித்தியாசமில்லாமல் தான் இருந்திருக்கின்றன.

டால்ஸ்டாயின புத்துயிர்ப்பு நாவலில் மாஸ்லாவா என்ற வஞ்சிக்கபட்ட அப்பாவிப் குடியானவப் பெண்  அனுபவிக்கும் கொடுமைகளினூடான யாத்திரை அமரத்துவமாக பதிவுசெய்யப்பட்டிருந்தன. இன்றளவும் உலகளாவிய அளவில் இந்த யாத்திரைகள் தொடாந்து கொண்டதான் இருக்கின்றன

நாஜிகெஸ்டபோசிறையில் செக்கோசலவாக்கிய கம்யூனிஸ்ட யூலியஸ் பூசிக்கின் அனுபவங்கள் துக்குமேடைக்குறிப்பாக வெளிவந்தது.

நாஜி சிறையில் கொல்லப்பட்ட அன்னி பிராங்  என்ற யூதச் சிறுமியின்  டயறியும்(வதைமுகாம் செல்ல முன்னரே குடும்பம் தலைமறைவாக வாழந்தபோது எழுதப்பட்டது) அமரத்துவம் ஆனது ஒவ்வொன்றும் வௌ;வேறு சமூக நாட்டு கால சூழலின் பிரத்தியேக தன்மையைக் கொண்டிருந்தாலும் இவற்றிடையே அதே பொது இயல்புகள் இருக்கின்றன.

இவை மனித வாழ்வின் அறம் பற்றியது.

இவை ஏற்படுத்திய பாதிப்பிற்கு எந்தளவும் குறையாத பாதிப்பை புஸ்பராணி அவர்களின் புத்தகம் ஏற்படுத்துகிறது

எமது நாட்டில் ஒருகாலத்தில் (இன்று இன்னும் பயங்கரம்) சட்டம் ஒழுங்கு? துறையின் நிர்வாணம் அதிகார அகங்காரம் தோலுரிக்கபட்டுள்ளது தமிழ் பொலிஸ் அதிகாரிகள் சொல்லவே தேவையில்லை. வதை முகாம்களில் மனிதம் மதிப்பிழந்து போனதை மனித சுயமரியாதை கௌரவத்திற்கு விடப்படும் சவாலை இவை பதிவு செய்திருக்கின்றன. இன்று இவை நவீன வடிவங்களைப் பெற்று மெருகேறியுள்ளன.

சிறப்பான மொழி நடையில் சாதாரணமாகநச்சென்றுபுரியக் கூடிய விதமாக புஸ்பராணி இதனை எழுதியுள்ளார்.

டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு  ாஸ்லாவா 19ஆம் நூற்றாண்டு முற்பகுதி சிறைகளில்  அனுபவித்த துயரங்களை விட புஸ்பராணி கல்யாணி போன்றவர்கள் 20 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியில் அனுபவித்தவை ஒரு கண்ணோட்டதில் மிகக் கொடுமையானவை.

யுத்தமும் வன்முறையும் என்றாகிவிட்ட சமூகத்தில் பெண்கள் எதையெல்லாம் அனுபவிக்க வேண்டி வருகிறது.

மொழி ,இனம கடந்து இவை நடைபெறுகின்றன. ஜேவிபி பெண்கைதிகள் மற்றும் சாதாரண கைதிகள் தொடர்பான அவரது பதிவு இதனை பிரதிபலிக்கிறது. அதலி நட்புணர்வும் இணக்கமும் தெரிகிறது

அவரது பதிவு பிரதானமாக 70களிலும் 80களின் முற்பகுதியிலும் நிகழ்ந்தவற்றை பதிவு செய்துள்ளார்.

எமது அரசியல் சூழல் அதன் போதாமை ,ோலித்தனம் எல்லாவற்றையுமே அது வெளிச்சம் போட்டுகாட்டுகிறது.

இந்த பதிவு இப்படி இருக்குமானால் நாம் கடந்து வந்த 30 வருடங்களில் எத்தனை ஆயிரக்கணக்கான  அதிர்ச்சிகள் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன.

மனித குலம் இழிவுபடுத்தப்படுவதை அவமானப்படுத்தப்படுவதை  இரத்தமும் சதையுமாக அகாலம் உணர்த்தி நிற்கிறது.

 அகாலம்என்ற தலைப்பே மனதில் ஆழ்துயரை ஏற்படுத்துகிறது. அனுபவமில்லாதவர்களுக்கு தனித்து அது வெறும் சொல் அர்த்தமாகவே இருக்கும . என்னைப் பொறுத்தவரை  அந்த மொழியை வலியைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

இந்த அகாலத்தின் நீட்சி தான் அவசாகாலச்சடடம் பயங்கரவாத்தடைச்சடடம் இனக்கலவரங்கள் நூல்நிலைய எரிப்பு பழையசந்தை எரிப்பு  படுகொலைகள் - அரச பயங்கரவாதம்

எமது நிறுவனங்கள் எமது சமூக அமைப்பு தீவிர மாற்றங்களுக்குள்ளாக வேண்டியிருக்கிறது.

இதே மாதிரியாக குரோதமும் வக்கிரமும் கொண்ட அதிகார வர்க்கம் இன்று இலங்கையில் விரிவாக்கம் பெற்றிருக்கிறது. தமிழர்கள் மத்தியில் இருக்கிறது. முக்கியமாக யாழ்ப்பாண (தமிழ்)ொலிஸ் எப்படி இருந்தது அது தேசிய ஒடுக்குமுறையில் மாத்திரமல்ல. 60களில் சாதி ஒடுக்குமுறைககு எதிரானபோராட்டங்களில் ஆதிக்கசாதியினரின் அதிகாரவர்க்கத்தினரின் கைக்கருவியாகவே இருந்தது  

வருங்காலத்திலும் பொலிஸ் மீண்டும் பாரதூரமான பிரச்சனைகளை உருவாக்கும் என்தபதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாகவே இருக்கின்றன? ஏனெனில் கடந்தகாலச் செயற்பாடுகள் பற்றி விசாரணைகளும் இல்லலை புதிய சீhதிருத்தங்களும் இத்துறையில் இல்லை.

தமிழ் தேசிய இயக்கம் அற உணர்வுகளுக்கெதிராக மாறிய அதன் போலித்தனம்  சகோதர படுகொலைகளாக மாறியது பற்றிய ஏமாற்றம் விரக்தி அங்கங்கே பிரதிபலிக்கிறது. எங்கெங்கு கோளாறுகள் இருந்தன என்பதை அறிவதற்கும் இது ஓரளவு உதவும்.

வக்கிரமும் குரூரமும் நிறைந்த இந்த சூழல் மாறவேண்டும்.

சொந்த பொது வாழ்க்கையில் தான் அனுபவித்தவற்றை குறித்த அவரது எழுத்து ஒரு காலத்துயரின் குறியீடாக அமைகிறது.

அர்ப்பணிப்புக்கள் எல்லாமே அவமாய்ப்போன வெறுமை தெரிகிறது.

உண்மையில் ஈழப்போராட்டத்தில் பெண்கள் முதன்மையானவர்களாக எப்போதும் இருந்ததில்லை .அவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். அவ்வளவு தான்.

அந்த வகையில் இதுவும் ஒரு ஆழுமையின் குரல்.

உண்மையில் பிரதானமாக இது தமிழ் தேசிய ஆண்களின் போராட்டம் என்றே மனங்கொள்ளப்படலாம் .முன்னரும் போராட்டத்தின் போதும் பின்னரும் பெண்களுக்கான தீர்மானிக்கும் இடைவெளி கேள்விக்குரியது.

இந்த புத்தகம் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படவேண்டும் .

ஏனெனில் அற உணர்வு பற்றிய கேள்வியை இத்தகைய பதிவுகள் தான் நெற்றிப்பொட்டில் அடித்தது மாதிரி எழுப்புகின்றன.

வடக்கிலும் சரி தெற்கிலும் சரி மனிதத்தை இழிவு படுத்தும் அதிகார அகங்காரம் அகல வேண்டும். சுதந்திரம் மனித கௌரவம் என்பன நிகரற்றவ .

புலம் பெயர் அனுபவம் சூழல் அவரது பார்வையை விசாலிக்கச் செய்துள்ளது.

(ஸ்ரீதரன்-சுகு)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com