Contact us at: sooddram@gmail.com

 

சும்மா ஒன்றும் வரவில்லை

படையினர் முகாம்களுக்குள் செல்ல வேண்டும். அல்லது வேறு துறைகளுக்கு மாற்றப்படவேண்டும். ஐ.நாவின் படையணிகளில் இணைத்துக்கொள்ளுதல்? உட்பட மக்களின் அன்றாடவாழ்வில் தலையீடு இருக்கக் கூடாது. சிவில  வகைப்பட்ட ஒரு அதிகாரி ஆளுனராக இருக்கவேண்டும்.1990 இல் வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் மீளவும் சொந்த நிலத்திற்குத் திரும்புவதற்கான அழைப்பு. காவல் துறைக்கு ஆள் திரட்டுவது அதற்காக மாகாண சபையின் அதிகாரங்களைப் பிரயோகிப்பது. திட்டமிட்ட ஆக்கிரமிப்பு குடியேற்றங்கள் மற்றும் நிலம் தொடர்பான பிரச்சனைகளில் ஓரளவு நிதானமாக வடக்கு முதலமைச்சர் தனது ஆரம்ப உரையை வடமாகாண சபையில் நிகழ்த்தியுள்ளார்.

முக்கியமாக மத்திய அரசும் மாகாண அரசும் பரஸ்பரம் ஒத்துழைத்துச் செயற்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தமது தொழில் நுட்ப மற்றும் மனித வழி ஆற்றல்களை வழங்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்தகைய போக்கிற்கான இடைவெளி கடந்தகாலத்தில் நிலவியிருந்தால் பலவிடயங்களை சாதித்திருக்க முடியும். காலம் கடந்தாவது இத்தகைய சிந்தனை உருவாகியிருப்பது நல்லதே. யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள், சிறைகளில் வாடுவோர், பெண்கள் மாத்திரம் தலைமை தாங்கும் குடும்பங்கள் இவர்களின் நலன்களுக்காக மாகாணசபை உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளார்.

மக்களை முன்நிறுத்திய பொறுமையும், நிதானமானதுமான செயற்பாடுகளே அதிகாரப்பரவலாக்கலை அர்த்தம் பெறச்செய்யும். எமது பிரதேசத்தின் நிலமற்றவர்களுக்கு நிலம் கிடைக்கச்செய்வது, சட்டம்- ஒழுங்குக்கென ஆட்கள் திரட்டப்படும் போது இன -மத பேதங்கள் கடந்த, தீண்டாமை, பால்சமத்துவம், மனித உரிமை- ஜனநாயகம் பற்றிய அக்கறைகள் முன்நிறுத்தப் படவேண்டும். அதற்கான போதனைகள்- அறிவூட்டல்கள் அவசியம்.

பொதுமக்களுடன் கண்ணியமாக நடக்கும் காவல்துறை உருவாக்கப்படவேண்டும். மாகாண அரச அலுவலகங்களில் அதிகாரிகளுக்கு மாத்திரமல்ல பொதுமக்களுக்கும் ஆசனங்கள் இருக்கவேண்டும். மக்களின் சுயமரியாதை, கண்ணியம் காப்பாற்றப்படவேண்டும். காவல்துறை நடைமுறையில் மக்களின் நண்பன் என்ற நிலை ஏற்படுத்தப்படவேண்டும்.

இலங்கையில் இனவாத- லஞ்சம் வாங்கும் - சித்திரவதை-கொலை- பழைய- புதிய சந்தைகள  -நூல்நிலையம்- பத்திரிகை காரியாலயம்  எரிக்கும் சமூகத்தின் ஒருபகுதியினர் மீது தீண்டாமை பாராட்டும்  காவல்துறை என்ற ஒரு நீண்ட வரலாறே இருக்கிறது. பேரினவாதமும் -அதிகார வர்க்க- சாதி அகங்காரமும்; பெண்களை இழிவுசெய்யும் கறைபடிந்த காவல் துறை வரலாறொன்றிருக்கிறது. இந்த வரலாறு மீள எழுதப்படக் கூடாது.

மாகாண மட்டத்திலாவது புதிய காவல்துறை பண்பாடொன்று ஏற்படுத்தப் படவேண்டும். இருக்கும் அதிகாரவர்க்கத்தின் கருங்காலிக்கூட்டமாக, அதிகாரம் கையில் வந்தவுடன் அராஜகமும்- அகங்காரமும் மனதில் குடிகொண்டு விடுகிறது. அதில் இன மத வேறுபாடுகள் இருப்பதில்லை. அது வடக்கிலும் தெற்கிலும் இரத்தம் தோய்ந்த வரலாற்று ஆனுபவம். இலங்கையின் நீதித்துற  சட்டம் -ஒழுங்குத்துறையின் உதவியுடன் தான் இயங்குக்கிறது. ஆனால் நாடறிந்த செல்லரித்துப்போன இந்த காவல்துறை வரலாறு பற்றி எப்போதும் கேள்விக்குட்படுத்தியதில்லை. துறைபோன நீதியாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எவரும் பதவியில் இருந்தபோதோ இல்லாதபோதோ அனேகமாக இது பற்றி கேள்வி எழுப்பியதில்லை.

சுயாதீனமான பொலிஸ் ஆணைக்குழுபற்றிப் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் அரசியல் தலைமைத்துவம் இல்லாத பொலிஸ் சிறப்பாகச்செயற்படும் என்று எடுத்த எடுப்பில் எதிர்வு கூறிவிடமுடியாது. ஆனால் அது தெளிவு படுத்தப்படவேண்டும். ஆனால் முழு இலங்கைக்கும் எடுத்துக்காட்டான மக்களுக்கு நட்பான காவல் துறை வடக்கில் உருவாக்கப்படவேண்டும். அதற்கான தகுதிகள் பற்றி அக்கறை செலுத்தவேண்டும்.

காவல் துறை எமது சமூகத்தில் பீதியூட்டும் ஒன்றாகவும், மக்கள் அணுக விரும்பாத ஒன்றாகவுமே காணப்படுகிறது. எனவே காவல்துறை பற்றிய மக்களின் பார்வையில் மாற்றம் ஏற்படும் அளவிற்கு சிறப்பாக அமைய வேண்டும். குறிப்பாக அதிகாரவர்க்கத்தினருக்கு மக்களின் சுதந்திரம்- ஜனநாயக உரிமைகள் தாம் மக்களின் சேவகர்கள் என்பதும் புரிவதில்லை. அது புரிய வைக்கப்படவேண்டும்.

மக்களுக்கு சேவை செய்வதே உறுப்பினர்களின் கடமை என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். அதிகார வர்க்கத்திற்கும் இது பொருந்தும். கிராமசேவகர் மட்டத்திலிருந்து மக்களுடன் மரியாதையாக நடந்து கொள்வது எப்படி என்பது போதிக்கப்படவேண்டும். எமது மரபுரிமையாக பெறப்பட்ட அதிகார தோரணைகள் என்ற இத்துப்போன மரவுரி களையப்படவேண்டும .

அதிகார அடுக்கில் மேலுள்ளவர்கள் கீழ் அடுக்கில் உள்ளவர்கள் பொதுமக்கள் மீது காட்டும் அலட்சியத்தை கண்டுகொள்வதில்லை. அது அவர்களுக்கு சௌகரியமாக இருக்கிறது. பொதுமக்களுக்கான சேவை தொண்டு அர்ப்பணத்தின் அடிப்படையில் நிகழவேண்டும்.

இன்றைய ஜனநாயக சூழல் உருவாவதற்கு பங்களித்தவர்களை மறந்து விடக்கூடாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது தலைமைக்குழு கூட்டத்தை யாழ் பொது நூல்நிலைய மண்டபத்தில் நடாத்துகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நூல்நிலையம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறக்க முற்பட்டபோது எத்தனை பிரச்சகைள், அந்த நூலகம் இடிபாடுகளுடன் ஞாபச்சின்னமாக இருக்க வேண்டும் என்று அராஜகங்கள் நிகழ்ந்தன.

அதிகாரப்பரவலாக்கலை- ஜனநாயகத்தை உருவாக்குவதற்கு எத்தனை பேருடைய உயிர்த் தியாகம் நிகழ்ந்திருக்கிறது. இரத்தம் சிந்தியிருக்கிறது. சும்மா ஒன்றும் வரவில்லை. எனவே ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் ஆட்சிக் கட்டமைப்பை உருவாக்குவதில் வரலாற்றில் நிகழ்ந்த தியாகங்களை மறவாதீர்கள . வாழ்த்துக்கள். யுத்தத்திற்கு பிந்திய ஓரளவு சுதந்திரமான சூழலில் தேர்தலில் பங்குபற்றுவது வேறு. ஜனநாயக இடைவெளி அறவே இல்லாதிருந்த காலத்தில் பாசிச- அராஜக சூழலில் வடக்கு-கிழக்கில் மாகாணசபை, உள்ளூராட்சி தேர்தல்களில் பங்குபற்றி- இரத்தம் சிந்தி- சவால்களை எதிர்நோக்கிய அந்த மரபு -தியாகமே இன்றைய வடக்கு மாகாண சபைத் தேர்தல் வரை முன்னேறி வந்திருக்கிறது. வானத்தில் இருந்து எதும் வரவில்லை. புதிதாக எதுவும் ஆச்சரியங்களாக நிகழவில்லை. இதனை புதிய மாகாண சபையை இயக்குபவர்கள் புரிந்து செயற்படவேண்டும். செயற்படுவார்களா?

(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com