Contact us at: sooddram@gmail.com

 

வரலாறு தோழர் ரட்ணத்தை விடுதலை செய்துள்ளது.

(சுகு - ஸ்ரீதரன்)

கிழக்கல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகறைப் பெற்ற தோழர் துரைரட்ணத்தின் வரலாறு துன்பமும் சவால்களும் நிறைந்தது. அது சமூகத்தின் சராசரி சவால் அல்ல. மரணங்களும், இடம்பெயர்வும், புலம்பெயர்வும்  ோதல்களும் முரண்பாடுகளும் அவலங்களும், நிறைந்தது. விடிந்தால் என்ன நடக்குமோ! மாலையில் என்ன நிகழுமோ! இப்போதுதான் யாது நிகழுமோ!!! என ஊகிக்க முடியாதது. அறிவு தெரிந்த நாள்முதல் அவரது வாழ்வு  மரணங்கள் மலிந்த பூமியிலானது.

1980 களின முற்பகுதியில் ஈபிஆர்எல்எப் இன் மாணவர் அமைப்பான ஈழமாணவர் பொதுமன்றத்தினூடாக சமூக அரசியல் பிரவேசத்தை மேற்கொண்ட ஆரம்பத்தில் அம்பாறை மாவட்ட கிரமங்களில் தனது பணிகளை ஆரம்பித்தார். அது ஆயிரக்கணக்கான விடுதலைப்போராளிகளின் பிரவேசம் போன்றதே. பணத்திற்காகவும் பதவிக்காகவும் அற்ப சலுகைகளுக்காகவும் அரசியல் பிரவேசம் செய்யும் அற்ப பதர்களினதைப்போன்றதல்ல. சமூகத்தில் அடிமட்டத்தில் உழல்பவர்களை அணிதிரட்டும் விழிப்படையச் செய்யும் பாரிய பணி அது. மக்களின் இன்ப துன்பங்களில் கலந்து கொண்டு ,அவர்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்பு பட்டு அவர்களை அரசியல் மயப்படுத்தும் முயற்சி அது.

அது அன்றைய சூழ்நிலையில் சாதாரண செயற்பாடல்ல.

கிழக்கின் விடிவெள்ளி சுவாமி விபுலானந்தர் பிறந்த  ாரை தீவைப்பிறப்பிடமாகக் கொண்ட தோழர் ரட்ணம் அங்கு நிலவும் பல்லினப் பாங்கை கருத்திற்கெடுத்துச் செயற்பட்டவர். விசேட அதிரடிப்படையின் அட்டூழியம் அக்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் பெரும் பிரசித்தம்.

இந்த சூழ்நிலையிலேயே வேலை செய்ய வேண்டியிருந்தது. அவர் தனது பிரதேச சுற்றாடலுடன் தனது வேலைகளை மட்டுப்படுத்தவில்லை.. மட்டக்களப்பு திருமலை கிழக்கு வடக்கின் நீள அகலங்களில் அலைந்து திரிந்து பணியாற்றியவர்.

ஓய்ந்து கிடப்பது அவரின் சுபாவத்தில இருந்ததில்லை. 1986 இறுதியில்  ுலிகள் ஈபிஆர்எல்எப்தடைசெய்து தெருவிலும் வயல்வெளிகளிலும் கடற்கரையிலும் எங்கெங்கு காணினும் சகோதர சங்காரம் செய்து கொண்டிருந்தபோது காட்டில் இருந்து கொண்டு பிபிசிக்கு பேட்டி அளித்தாh.; மரணத்தினுள் எமது இருப்பை அவர் பிரகடனம் செய்தார்.

தம்பிலுவில்  ோழர் சண்முகநாதசிவம் -குமார் போன்ற கீhத்தி மிக்க தோழர்களுடன் பணியாற்றியவர். 1980 களின் நடுப்பகுதியில் ஒரு அம்பாறை மாவட்ட கிராமத்தில் கட்சியின் முக்கிய தோழர்களின் கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விசேட அதிரடிப்படையின் தாக்குதலில் தோழர் குமார் உட்பட பலர் மரணித்தனர். தோழர் ரட்ணம் அதில் மயிரிழையில் உயிர்தப்பியவர்.

கடந்த 30 வருடங்களில் அவர் பல தடவை மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டிருக்கிறார். எத்தனையோ நெருக்கடியான சூழ் நிலைகளிலும் தாம் வேலை செய்த பிரதேசங்களை விட்டு தோழர் ரட்ணம் வெளியேறவில்லை.

 ஈபிஆர்எல்எப் தடைசெய்யப்பட்ட காலத்தில் கூட வெளியேறவில்லை. நாளாந்தம் தோழர்களின் மரணச் செய்தி வந்து கொண்டிருக்கும் இந்த சகோதரப்படுகொலை எல்லையற்று தொடர்து கொண்டிருந்தது.  பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தோழர்களின் குடும்பத்தினரையும் ஆதரவாளரையும் அவர் அறிந்து வைத்திருந்தார்.

தகவல்களை முறையாக திரட்டி வைத்துக்கொள்வார் .மிகைப்படுத்தல்களாகவோ பிரச்சனைகளின் தாற்பரியத்தை குறைத்து மதிப்பிடுவதாவோ அவரது தகவல்களில் இருந்ததில்லை. இலங்கையின் புகழ்பூ+த்த மனித உரிமைவாதிகளால் பெரிதும் மதிக்கப்பட்டவர். கிழக்கின் நிலைமை பற்றிய அவரது மதிப்பீடுகள் பல இராஜதந்திரிகளால் ,கல்வியாளர்களால் விதந்துரைக்கபட்டதை நான் அறிவேன்.

அவர் வடக்கு-கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும் இருந்தவர். அதிகாரப்பரவலாக்கல் தொடர்பான பிரச்சனைகளில் அவரிடம் நிறையவே நடைமுறை அனுபவம் உண்டு. அவர் என்றும் மக்கள் ஊழியனாகவும் தலைவராகவும் செயற்பட்டவர்.

மக்களுக்கு அன்றாடப்பிரச்சனைகளில் எப்பாடுபட்டாவது உதவுவது அவரின் தாரக மந்திரம். மாவட்டச் செயலகம் ,ிரதேச செயலகம் ,வைத்தியசாலை கல்விக் கந்தோர், அரச சார்பற்ற நிறுவனங்கள் மனித உரிமைகாப்பகம் பட்டி தொட்டி எங்குமே என அவரது கால் படாத இடமே இருக்காது. இங்கெல்லாம் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பவர்.

சாதாரண வறிய மீனவர்களின பிரச்சனைகளாகட்டும் ,Nலையற்ற பட்டதாரிகள் தொண்டர் ஆசிரியர்கள் பிரச்சனை ,சம்பூர் நிலப்பிரச்சனையாகட்டும் ,காணாமல் போனவர்களின பிரச்சனைகள் ,குடும்பத்தலைவரில் ஒருவரை இழந்து பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களாகட்டும் ,ஆட்டோசங்கம் உட்பட தொழிலாளர்களின்பிரச்சனையாகட்டும் நில கலாச்சார ஆக்கிரமிப்பு காணிப்பிரச்சனையாகட்டும், மரணித்தவர்களின் அஞ்சலி நிகழ்ச்சி ஆகட்டும், சுனாமி போன்ற பேரனர்த்தங்கள் ஆகட்டும் மனித உரிமை ஜனநாயக மறுப்பு அங்கெல்லாம் தோழர் ரட்ணத்தின் பிரசன்னம் இருக்கும்.

அவருடைய காரியாலயத்தில்  சமூகத்தில நலிவுற்றோர் ,அநீதி இழைக்கபட்டோh,; வஞ்சிக்கப்பட்டோர், புறத்தொதுக்கப்பட்டோர் நிறைந்து காணப்படுவார்கள்.

அவருக்கு மனைவியார்  3 பிள்ளைகள்.மிகச் சாதாரண வாழ்க்கையே அவர்கள் வாழ்கிறார்கள். கடினமான வாழ்க்கை என்றே கூறலாம். தோழர் ரட்ணத்தின் சமூகப் பிரக்ஞை ஒரு தவம் போன்றது. அதிகாலை எழுந்தால் மக்கள் மக்கள் அதுதான் சிந்தனை வேறொன்றுமில்லை.

கிழக்குமாகாண சபையிலும் அவரது குரல் ஓங்கி ஒலித்தது. பிர்ச்சனைகள் தொடர்பான அவரது குரல்நச்சென்று திறுதட்டமாகஇருக்கும். அவர் ஒரு உன்னதமான ஆளுமை. அவரது தோற்றமும் மனதும் அவ்வாறே. அஞ்சாத யாருக்கும் அடிபணியாத ஆழும . நிமிர்ந்த நேர்கொண்ட பார்வை.

யாமார்ககும் குடியல்லோம்என்ற அறைகூவல் அது.

 அவர் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில்  அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருக்கிறார். மக்கள் பணியில் அவருக்கான அங்கீகாரம் ழுமுமை பெறவேண்டும . அவர் அப்பணியில் சிகரங்களை தொடவேண்டும். இன்றுள்ள நிலைமைகளில் இன சமூகங்களுக்கு அதிகாரப்பரவலாக்கல், ஜனநாயகம் ,மனித உரிமை ,சமூக பொருளாதார மறுமலாச்;சி தொடர்பில் பல மக்கள் சார் அறப்போர்களை வரலாறு கோரி நிற்கிறது.

அவர் இந்த சிறிய அங்கிகாரத்தைப் பெற எத்தகைய நெடிய பயணத்தை மேற் கொள்ளவேண்டியிருந்தது.
அது ஒரு சரித்திரம். அந்த அனுபம் எதிர்காலத்தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப்படவேண்;டும்.
அவருடைய பங்களிப்புக்கள் அறிக்கைகள் செயற்பாடுகள் ஆவணமாக்கப்படவேண்டும். எத்தகைய பன்முக ஆளுமை என்பதும் மக்களை நேசிக்கின்ற மானிடன் என்பதும் 
ுரியும்

தோழர் ரட்ணம் போன்றவர்கள் இப்போராட்டதினூடாக பல்வேறு இயக்கங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அபூர்வமாக உருவாகியிருக்கிறார்கள் இவர்களை முன்னரங்குக்கு வரச்செய்து மக்களின் மனங்களில் நம்பிக்கை ஏற்படச் செய்யவேண்டும். வாழ்வின் மீது பிடிமானம் ஏற்பட அது வழி சமைக்கும். நேர்மையானவர்களை தமிழ் அரசியலில் விரல் விட்டு எண்ணி விடலாம்.

மொள்ள மாரிகள், முடிச்சவிக்கள், கேப்மாரிகள் தமிழ் அரசியலில் ஆதிக்கம் புரிகிறார்கள . இவர்களுக்கு மரணத்தின் இழப்பின் வலி தெரியாத . தமிழர்களின் ஜனநாயக அரசியல் அரங்கு மக்களுக்கு அரசியல் போதம் ஊட்டுவதன் மூலம் சுத்தீகரிக்கபடவேண்டும் .ஏனெனில் மக்களின் அறியாமையை இவர்கள் பயன் படுத்துகிறார்கள்.

தமிழ் மக்கள் மத்தியல் மாத்திரம் அல்ல இலங்கை பூராவும் இதுதான் சமாச்சாரம்.

மக்களின் தியாகங்களையும் இழப்புக்களையும் மறந்த அற்ப பதர்களே தமிழ் அரசியலில் அனேகமாக ஆதிக்கம் செய்கின்றன. இந்த நிலை மாறவேண்டும்.

வரலாறு தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப இயங்காது.  தோழர் ரட்ணத்தை விடுதலை செய்துள்ளது.

தோழமையுடன் சுகு-ஸ்ரீதரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com