Contact us at: sooddram@gmail.com

 

சமூகங்கள் சமத்துவமாக மீள் இணைவதற்கான இழந்து விடக் கூடாத சந்தர்ப்பம்

(ஸ்ரீதரன் சுகு)

2013 செப்டெம்பர் 21 ந்திகதி பெருவாரியான வடக்கு மக்கள  தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு  வாக்களித்தார்கள். கண்ணை உறுத்தும் பரவலான இராணுவ பிரசன்னமும், அரசின் அதிகார அகங்காரமும், அரசியல் சமூக விவகாரங்களில் படையினரின் தலையீடுகளும், கண்காணிப்புக்களும் இதற்கு பிரதான காரணங்கள் என்று குறிப்பிடலாம். அடுத்து அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக அரசின் தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட ஆட்சித் தலைவர்களின்   அவநம்பிக்கையை ஏற்படுத்தும் கருத்து வெளிப்பாடுகளும் காரணமாகும். சொல்லப்படும் அபிவிருத்தி மற்றும் விடயங்களை விட மக்களுக்கு அதிகாரப்பரவலாக்கல் பிரதான விடயமாக இருந்தது.

விருப்பு வாக்குகள் 2004 பாராளுமன்ற தேர்தலின் பிரதிபலிப்புக்களை கொண்டிருக்கின்றன. திரு கஜன் பொன்னம்பலம , திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரின் தெரிவை ஒத்ததாகவும்  காணப்படுகிறது.  தீவிர தேசியவாத நிலைப்பாடுகளும் உள்ளார்ந்து காணப்படுகின்றன என்பதை மறுத்து விட முடியாது. கொந்தளிக்கும் சமுத்திரத்தில் லாவகமா  ாகாண சபையை இயங்கச் செய்வதில் இவர்களுக்கு குறிப்பாக திரு. விக்கினேஸ்வரன் அவர்களுக்கு மிகுந்  ிதானம் தேவைப்படுகிறது. கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் வெ'வ்'வேறு தங்கள் தனிப்பட்ட நலன்கள் சார்ந்து இயங்கக் கூடியவர்கள். ஆக்கபூர்வமாக மாகாணசபையை இயங்கச் செய்வது அதற்கான அதிகாரங்களுக்காக போராடுவது என்பதை விட அதனை குறுந்தேசியவாத அரசியல் நோக்கி இழுத்துச் செல்வது விபரீதங்களுக்கு வழி வகுக்கும்.

2010 நாடாளுமன்றத் தேர்தலில் பின்னர் தென்னிலங்கையில் நடந்ததும் அதுதான்.  விமல் வீரவன்ச போன்றவர்கள் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றார்கள . கடுமையான பெருந்தேசியவாத உணர்வுகள் செல்வாக்குச் செலுத்தும் அரசு உருவாகியது. இந்  அரசில் இடதுசாரி ஜனநாயக சத்திகளும் ஒரு பகுதியினராக இருந்தாலும் மேலாண்மை கொண்ட தேசியவாதிகள் கடுமையான நிலைப்பாடுகள் உருவாகுவதில் செல்வாக்குச் செலுத்துகிறார்கள். இந்த மாதிரியான சூழ்நிலையில  ிதானமாக விடயங்களை முன்னெடுத்துச் செல்வதில் புதிதாக அமைந்த வடக்கு மாகாண சபைக்கு பொறுப்பும் கடமைகளும் உண்டு.

வடக்கு மாகாண சபை, இடதுசாரி ஜனநாயக சத்திகள் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் கட்சிகளுடன் உறவை ஏற்படுத்திச் செயற்பட முனைய வேண்டும . முதலாவதாக புலம்பெயர் நாடுகளில் இருந்து உருவாகும் யதார்த்தத்திற்க  ுறம்பான- உள்ளளூரில் விபரீதங்களை உருவாக்கும் போதையூட்டும் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் செயற்படவேண்டும். உண்மையில் வடக்கும் தெற்கும் தொடர்ச்சியாக அல்லது அடிக்கடி அனுகூல சத்துருக்களை உருவாக்குகிறது. உண்மையில் இந்த அரசியல் மக்களை விரோத நிலையில் வைத்துக் கொண்டு அரசியல் வாதிகளின் தனிப்பட்ட அதிகார நலன்களுக்கு உதவுவதாகவே அமைகிறது.

தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக மாத்திரம் அல்லாமல் தீண்டாமை, பெண் அடிமைத்தனம் தொடர்பாக இந்த உறுப்பினர்களில் எவ்வளவு பேர் புரிந்து கொள்வார்கள் என்பது கேள்விக்குறியே. மக்களால் தெரிவு செய்யப்படுபவர்கள் எல்லோரும் உத்தமர்கள் என்றல்ல. அப்படி வரலாற்றில் உதாரணங்களும் கிடையாது. தமது பதவிகளுக்காக இறந்த தோழர்கள், தியாகம் செய்தவர்கள் அனைவரையும் பயன்படுத்துவதில் எந்த கூச்ச நாச்சமும் இல்லாத பேர்வழிகள  இருக்கிறார்கள். களவாணிகள், அறவுணர்வு இழந்த சிலரும  ெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இதனை விளங்கிக் கொள்ளாத வரலாற்றை உன்னிப்பாக அவதானிக்காத பலர் இந்த வெற்றியை கும்பல் மனோபாவத்துடன் ஆராதிக்கிறார்கள . இதில் வெற்றி பெற்ற சிலர் சமூக அக்கறையாளர்கள் என்பதும் உண்மை. ஆனால் எல்லோரும் அப்படியென்றல்ல. தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை அதன் அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். மத்திய அரசு அது சுமுகமாக செயற்படுவதற்கான அதன் உரிமைகளை முடக்கக் கூடாது. முக்கியமாக காணி ,ொலிஸ், நிதி அதிகாரங்கள் உட்பட 13 வதில் உள்ளபடி  அனைத்து அதிகாரங்களும் பகிரப்படவேண்டும்.

அமையும் மாகாணசபை காலம் காலமாக நிலமில்லாமல் வாழும் அடித்தட்டு மக்களுக்கு நிலம் வழங்க முன் வரவேண்டும். மதவெறி ,ீண்டாமை ,பெண் அடிமைத்தனத்தை சகித்துக் கொள்ளப் படக் கூடாது. சக சமூக வெறுப்புணர்வுகளுக்கு வட மாகாண சபை இடமளிக்கக் கூடாது. ஒரு தாரதம்மியம் மிக்க ஜனநாயக நிறுவனமாக மாகாணசபையை கட்டியெழுப்ப முன்வரவேண்டும். மாகாணசபைக்குரிய அதிகாரங்களை முழுமையாக கோரிப் பெறுவதும் அது சாத்தியமாகாத பட்சத்தில் மாகாண சபையில் தனது குரல்களை ஓங்கி ஒலிப்பதுவும் மகாண சபைக்கு உள்ளும் வெளியும் அகிம்சை வழி இயக்கங்களை முன்னெடுப்பதும் அவர்களின் கடமை. பரந்த வேலைகள் அவர்களின் முன் இருக்கின்றன. பொறுப்புணர்ச்சி நிதானத்துடன் அவற்றை முன்னெடுக்கவேண்டும்.

கடந்து வந்த கால்நூற்றாண்டுகளில் யுத்தகாலத்தில் மாதிரி இல்லாமல், அந்த ஜனநாயக விரோத பாசிச சூழல் மாதிரி இல்லாமல் செயற்படுவதற்கான ஜனநாயக இடைவெளி இருக்கிறது. இதனை யாரும் மறுத்து விடமுடியாது. ஆனால் சமூகங்கள் மீது வெறுப்பூட்டும் பாசிச அரசியலின் மீள் எழுச்சிக்கு வழி வகுத்து விடக் கூடாது.

தெற்கிலும் சர்வாதிகார அரசியல் செயற்பாடுகள் தான் முன்னெடுக்கப்படுகின்றன. வம்சம  ார்ந்த இராணுவவாத அரசொன்றை கட்டமைக்கும் முயற்சி இடையறாது நடைபெறுகிறது. தமிழர் தரப்பில் ஜனநாயக விரோத பாசிச அரசியலைத் துதிக்கும் அபாயமான போக்கொன்று மேலெழுவதற்கான சாத்தியங்களையும் மறுப்பதற்கில்லை. அதன் குணங்குறிகள் வெளிப்படையாகவே தெரிகின்றன. உண்மையான பாரிய மீள் இணக்கச் செயற்பாடொன்றே இத்தகைய போக்குகளை தணிக்கமுடியும். இனவாத சத்திகள் சகல தரப்பிலும் தனிமைப்படுத்தப்படவேண்டும். இது விடயத்தில் ஜனநாயக முற்போக்கு சத்திகள் விழிப்புடன் இருக்கவேண்டும்.

(ஸ்ரீதரன் சுகு)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com