Contact us at: sooddram@gmail.com

 

விபரீதத்தை அரசு உணர்ந்து கொள்ளுமா?

(தோழர் சுகுசிறீதரன்)

உண்மைகளை கண்டறியும் குழுவின் பரிந்துரைகளை நடைமுறை சாத்தியமாக்குமாறு தீர்மானம் நிறைவேற்றியதையடுத்து இலங்கை அரசு மிக அதிகமாகவே கலவரமடைந்துள்ளது. ஒரு சாதாரண விசயத்திற்கு மிகையான எதிர்வினைகள் காட்டப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைத்தல், அதிகாரப் பகிர்வு, மனித உரிமைகள் தொடர்பாக இலங்கை அரசு நியமித்த குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக இலங்கை அரசே பதட்டம் அடைந்துள்ளது. இந்த விடயங்களை இலங்கை அரசு சுலபமாக எதிர்கொள்ள முடியும். மியன்மார் மேற்கொண்டது போல் ஜனநாயக சீர்திருத்தங்களை முன்னெடுத்தால் உலக அரங்கில் தனக்கு கௌரவத்தை இலங்கை அரசு தேடிக்கொள்ள முடியும் என்று பிரான்சிற்கான இலங்கையின் தூதுவர் தயான் ஜயத்திலக்க தெரிவித்தது ஏதோ கசப்பு மருந்தை உட்கொண்டது போல் இலங்கை அரச நிர்வாக யந்திரத்தை  ுகம் சுழிக்க வைத்துள்ளது.

வானத்துக்கும் பூமிக்குமாக தறிகெட்ட அரசியல் வாதிகள் சிலர்  ுதித்துக் கொண்டிருக்கிறார்கள்எந்தவித தார்மீக கலாச்சார பண்பாட்டு நெறிமுறைகளுக்கும் உட்படாத மேர்வின் சில்வா போன்றவர்கள( அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்) ஜெனீவாவில் கலந்துகொண்டு மனித உரிமைகள் தொடர்பான அக்கறையை செலுத்திய அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்களை பல்லை உடைப்பேன், முதுகெலும்பை முறிப்பேன், கை கால்களை உடைப்பேன் என அநாகரிகமான முறையிலும் வக்கிரமான முறையிலும் பேசுவதற்கு அனுமதித்துள்ளது.

அமெரிக்கா இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்ததற்காக கூகுள் தேடல் இயந்திரத்தை பகிஷ்கரிப்போம், கோதுமை மாவை பகிஷ்கரிப்போம் என்றவாறான கோமாளித்தனமான கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.

இலங்கை அரசின் நிலையை விமர்சிப்பவர்கள் தேச துரோகிகள் என்று பட்டம் சூட்டப்படுகிறார்கள். ஜெனீவாவில் விமர்சித்தவர்களின் புகைப்படங்களை பிரசுரித்து அவர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலும் இலங்கை அரச சக்திகள் ஈடுபட்டுள்ளன. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம்  இவற்றின் தயவிலேயே இன்றும் இலங்கை காலத்தை ஓட்டுகிறது. வேறு அதிசயம் எதுவும் கிடையாது.

இந்த லட்சணத்தில் வீராப்பு வேறு.

ஆட்கடத்தல், காணமல் போதல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  மக்கள் பெரும் பொருளாதார இக்கட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். விவசாயிகள் தமது உற்பத்திகளுக்கு நியாயமான விலையைப் பெற முடியவில்லை. மீனவர்கள் எரிபொருள் பிரச்சனையால் திண்டாடுகிறார்கள். தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வாழ்வு கால் பட்டினி, அரைப்பட்டினி என்றாகிவிட்டது.ஊழலைப் பற்றி சொல்லவே வேண்டாம். அது இன்று ஜனரஞ்கமான விடயமாகிவிட்டது. இலங்கையின் அனைத்து சமூகங்களுமே பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன..

இந்த நாட்டில் பாரிய இடைவெளியைக் கொண்ட ஒரு வாழ்வு கட்டமைக்கப்பட்டுள்ளது.  பங்கு சந்தையை அடிப்படையாகக் கொண்டே பொருளாதார வளர்ச்சி; தீர்மானிக்கப்படுகிறது.

இராணுவத்திற்கு அளவுக்கு மிஞ்சிய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, எங்கும் இராணுவம், எதிலும் இராணுவம் என்ற நிலை தோற்று விக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக வடக்கில் மக்களின் அன்றாட சமூக பொருளாதார வாழ்வில் இராணுவத் தலையீடு அதிகரித்து வருகிறது.. மக்களின் அந்தரங்க வாழ்வின் மீது தனிப்பட்ட வாழக்கையி;ன மீது தலையீடுகள் நிகழ்த்தப்படுகின்றன. மனித உரிமை ஜனநாயகம் என்பன இலங்கையில் புத்துயிர் பெற வேண்டியிருக்கிறது, இலங்கை பல இன மக்களின் நாடாக மாற வேண்டியிருக்கிறது.

பௌத்த சிங்கள பெருமித உணர்வின் கீழ் இரண்டாந்தர பிரஜைகள் என்ற நிலையில் இலங்கையின் தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் வாழ முடியாது. சமகால உலகில் இவை சகித்துக், கொள்ள முடியாதவை.

கிழக்குத் திமோர் சூடான் அனுபவங்களை இலங்கை பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆனால் பேரினவாதிகள் நிலைமையை விபரீதமாக்கி கொண்டிருக்கிறார்கள். தீவிர மாற்றங்கள் நிகழ வேண்டும். இந்த மாற்றங்கள் நிகழாவிட்டால் வடக்கிலும் தெற்கிலும் வன்முறைகள் வெடித்துக் கிளம்புவதை எந்தக் கடவுளாலும் தடுக்க முடியாது.

சாதாரண மக்களின் வாழ்வு கௌரவமானதாகவும், சுய மரியாதையானதாகவும், சமத்துவமானதாகவும் அமைய வேண்டும். ஆட்சி தெய்வங்களை பூஜித்து வழிபடுமாறு மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இந்த கழிசடைத்தனமான பாரம்பரியம் இலங்கையில் இல்லாதொழிக்கப்படல் வேண்டும்.

மனிதரை மனிதர் மதிக்கும் விட்டுக்கொடுத்து வாழும் சகிப்புத் தன்மையான ஆட்சி முறை உருவாவதற்கான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

இன்று ஜெனீவாவில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் இலங்கையின் விமோசனத்திற்கு அடிப்படையானவை. இதனை எந்த தாழ்வுச் சிக்கலுக்கும் இடமளியாமல் செயற்படுத்துவதற்கு இலங்கை அரசு முன்வர வேண்டும்.

இதனை செயற்படுத்துவதை எதிர்கட்சிகளும், குறிப்பாக தமிழ், முஸ்லீம் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும், ஊக்குவிக்க வேண்டும்.

இதில் அரசியல் செய்யக் கூடாது.

அது மக்களின் வாழ்க்கையுடன் நடத்தும் விபரீதமாகும்.

அது சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் பாரிய விபரீதங்களை ஏற்படுத்தும்.

இதனை இலங்கை அரசு உணர்ந்து கொள்ளும ? காலந்தான் பதில் சொல்ல வேண்டும்.

தோழமையுடன்
தோழர் சுகு -
சிறீதரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com