Contact us at: sooddram@gmail.com

 

பிரச்சினைகளின் நதிமூலம்

(தோழர் சுகு – சிறீதரன்)

இலங்கையின் முன்னேற்றம் அல்லது சுபிட்சம் பிரகாசமான எதிர்காலம் என்பதெல்லாம் இலங்கையர்களின் வாழ்வு ஜனநாயகமயப்படுத்தலிலே தங்கியுள்ளது. இலங்கையில் வாழும் ஒரு பகுதி மக்கள் தாம் இலங்கையர்கள் என்று மானசீகமாக சிந்திக்காத நிலை காணப்படுகிறது. இது மிகவும் அவலமானதாகும். பேரினவாத மேலாதிக்க மனோபாவமே மக்களில் ஒரு பகுதியினரை அவ்வாறு சிந்திக்க விடாமல் தடுக்கிறது. இது இலங்கையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் ஜனநாயக விரோத போக்காகும். தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதே இதன் போக்காக இருந்தது. இந்தப் போக்கின் எதிர்வினையாகவே தமிழர்கள் மத்தியில் அகிம்சை போராட்டம் காலாவதியாகி ஆயுதம் தாங்கிய எழுச்சி உருவானது. அது பின்னர் தமிழ் பாசிசமாக மாறியது பெரு நாசத்தை தமிழ் சமூகத்திற்கும், சகோதர சமூகங்களுக்கும் விளைவித்தது என்பது வேறு கதை.

ஆனால் இந்த நாட்டில் புலி பயங்கரவாதம்தான் இருந்தது இங்கு வேறொன்றும் இருக்கவில்லை. அந்தப் பயங்கரவாதப் பிரச்சனை யுத்தத்தின் மூலம் தோற்கடிக்கப்பட்டு விட்டது என்று ஆட்சியாளர்கள் திரும்ப திரும்ப கூறிவருகிறார்கள். ஆனால் இந்த நாட்டில் தொடர்ச்சியாக அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது, மாறி மாறி வந்த அரசுகள் வௌ;வேறு அளவில் இதனை செய்திருக்கின்றன என்பது வரலாறு.

கிளிப்பிள்ளை போல் திரும்ப திரும்ப இதனை கூற முடியாது. எனினும் சில விடயங்களை நாம் தொடாமல் செல்ல முடியாது. இலங்கை சுதந்திரம் பெற்றது என்று சொல்லப்பட்ட நாட்களின் மறுகனங்களிலேயே மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமை, பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழும் பிரதேசங்களில் திட்டமிட்ட குடியேற்றங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தனிச்சிங்கள சட்டம். தனி சிங்கள சட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது ரவுடிகளை ஏவி தாக்குதல் புரிந்தது.  இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக போடப்பட்ட பண்டா- செல்வா, டட்லி-செல்வா ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. 1960 களின் முற்பகுதியில் அகிம்சை வழியில் காட்டப்பட்ட எதிர்ப்பு இயக்கம் இராணுவ பொலிஸ் பலம் கொண்டு வன்முறை வழியில் அடக்கப்பட்டது.

1958, 1977, 1981, 1983 என திட்டமிட்ட இனக்கலவரங்களை உருவாக்கி தமிழ் மக்கள் மக்கள் மீது தாக்குதல் தொடுத்தது. 1978, 1979 பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் போராடும் தமிழ் மக்களை கொல்வதற்கும் காணாமல் செய்வதற்குமான அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டது.

கலவரங்களின் போது பிற சந்தர்ப்பங்களிலும் சகட்டு மேனிக்கு தமிழ் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகமும், ஏனைய வன்முறை தாக்குதல்களையும் மேற்கொண்டு பல உயிரழிவுகளுக்கு காரணமாக இருந்தது. வடக்கிலும், தெற்கிலும் மலையகத்திலும் மக்களை தாக்கி துன்புறுதி தீ வைத்து தாக்குதல்களை அவ்வப்போது நடத்தியது. சிறைப்படுகொலைகள் என்பனவெல்லாம் இங்கு எளிதில் மறந்துவிடக் கூடிய சங்கதிகள் அல்ல.

எனவே புலிப்பயங்கரவாதம் எதோ திடீரென்று ஒரு காரணமும் இல்லாமல் அசரீரியாக தோன்றியது என்ற புலுடா கதைகளை ஆட்சியாளர்கள் அவிழ்த்து வருகிறார்கள். இனப்பிரச்சனைக்கு தீர்வு தேவையில்லை நாட்டை அபிவிருத்தி செய்தால் போதும் அதிகாரங்கள் மாகாண மட்டத்தில் பகிரப்பட முடியாது, நிலத்தின் மீதான அதிகாரம், நிதி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் என்பன பகிரப்பட முடியாது என்ற 60 ஆண்டுகால அனுபவம் யதார்த்தம் நீதி, நியாயம் இவற்றுக்குப் புறம்பான கதைகளையே ஆட்சியாளர்கள் அவிழ்த்து வருகிறார்கள்.

வடக்கு கிழக்கில் இராணுவத்தை நிரந்தரமாக வைத்திருப்பதற்கும், திட்டமிட்ட குடியேற்றங்களை மேற்கொண்டு வருவதும் ஒன்றும் ரகசியமல்ல. மிக வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எமது விவசாயிகளதும், மீனவர்களினதும் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இது மலையக மற்றும் முஸ்லீம் மக்களுக்கும் விதிவிலக்கல்ல.

கிழக்கில் மக்கள் மத்தியில் பேதங்களை தோற்றுவிப்பது, மோதல்களை ஏற்படுத்துவது என்ற நிலைமைகள் காணப்படுகின்றன. காந்தியடிகள், சுவாமி விபுலானந்தர், பேடன்பவல் சிலைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இது இப்போது மாத்திரமல்ல கடந்த 30 ஆண்டுகளில் வௌ;வேறு சந்தர்பங்களில் காணப்பட்டது.

பேரினவாத சக்திகள் பலவீனப்பட்டதாகவோ தெற்கின் ஆட்சியாளர்களின் சிந்தனை போக்கு மாறியதாகவோ எந்த அறிகுறியும் இல்லை. நிர்வாகத்துறையில் தமிழர்கள் எவரும் பதவி நிலைகளில் இல்லை. ஒன்று இரண்டு பேர் இருக்கலாம். இராணுவம் மத்தியப்பட்ட அதிகார மையம் என்பவற்றைக் கொண்டு ஒரு அகங்கார ஆட்சியை நாட்டில் ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எரிபொருள் விலையேற்றம், மின்சாரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, உயர்கல்வி தனியார் மயமாக்கம் என்பன மக்கள் மத்தியில்  விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆட்கடத்தல், காணாமல் போதல் இன நல்லுறவுகளை சீர்குலைக்கும் பேச்சுக்கள் என்பன மக்களை விரக்தியடைய வைத்துள்ளன.

சமகால உலகில் ஜனநாயக விழுமியங்களுக்கு மிகுந்த சிறப்பிடம் காணப்படுகிறது. எகிப்து மியன்மார் போன்ற நாடுகளில் அவை உணர்த்தப்பட்டு வருகின்றன. ஆனால் இலங்கை ஆட்சியாளர்கள். காலாவதியானவற்றை வரலாற்றின் குப்பைத் தொட்டிலில் வீசப்பட வேண்டியவற்றை காவித்திரிகிறார்கள்.

நாட்டின் நிஜமான பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு, மூடி மறைப்பதற்கு இனவாதம் ஒரு கருவியாக இனவாதம் ஒரு கருவியாக உபயோகிக்கப்படுகிறது. இது காலம் காலமாக பிரயோகிக்கப்பட்டு வருகிறது. இலங்கையின் சிங்கள எதிர்கட்சிகளும் ஜனநாயக எண்ணம் கொண்டவையாக இல்லை. ஜெனீவாவில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது ரணிலும், சஜித் இலங்கையின் இறைமை பற்றி பாசாங்காக கவலைப்பட்டார்கள்.

அவர்களுடைய கவலைகள் எல்லாம் இலங்கையில் ஒரு சமூகப் பிரிவினரான தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அநியாயங்கள் என்பவற்றை விட வெறும் இறைமை அவர்களுக்கு கவலைகளை ஏற்படுத்தியது. சிங்கள வாக்கு வங்கியை கருதியே அவர்கள் வேலை செய்கிறார்கள். பிரான்சுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க மியன்மாரில் மேற்கொள்ளப்பட்டது போல் இங்கு சீர்திருத்தங்கள் நிகழ வேண்டும் என்று கூறியதற்காக வெளிவிவகார அமைச்சில் இருக்கும் அதிகார வர்க்கப் பேரினவாதிகள் நாளாந்தரமான பேரினவாதிகள் அவருக்கு எதிராக செயற்படத் தொடங்கினார்கள்.

அறிவாளிகள் மற்றும் இனவாதத்திற்கு எதிரானவர்கள் மீது வன்முறையை  பிரயோகிக்கும் போக்கு மேர்வின் சில்வா, வீரவன்சா வகையறாக்களின் தொகை இலங்கை அதிகார மட்டத்தில் அதிகரித்து வருவதையே காட்டுகிறது. தூரதிருஷ்டியில்லாத முட்டாள்த்தனமான ரவுடித்தனமான பேர்வழிகள் சுதந்திரமாக செயற்படுவதற்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது.

மக்களின் நலன்கள் சார்ந்து செயற்படும் தொழிற்சங்கங்கள், தொழிலாளர் விவசாய, மாணவர் இயக்கங்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. 40 ஆண்டுகளுக்கு மேலாக அவசரகாலச்சட்டத்தையும் சித்திரவதைகளையும் படுகொலைகளையும் அரங்கேற்றிய நாடு. ஏந்தப் பெருமைக்கும் இங்கு இடமில்லை.

என்றைக்காவது எம்மை நாம் புனரமைத்துக் கொள்வோம், திருத்திக் கொள்வோம் என்று சிந்திக்கத் தயாரில்லை. சிறுபான்மை சமூகங்களின் கட்சிகளை உடைத்து அவர்களின் கோரிக்கைகளை பலவீனப்படுத்தி பேரினவாத ஜனநாயக விரோத அதிகாரத்தை ஸ்தாபிக்கும் போக்கு இலங்கையில் வேகமாக பரவி வருகிறது.

இலங்கை பல்லினங்களின் நாடாக மாற்றப்படுவதே இலங்கையில் ஜனநாயக புரட்சியின் முதலாவது படியாகும். பேரினவாத நுகத்தடி பிடுங்கி எறியப்பட வேண்டும்.  சர்வதேச அழுத்தம், இந்திய அழுத்தம் உட்பட அனைத்து வழிகளிலும் அது நிகழ வேண்டும். காலாவதியான பத்தாம் பசலித்தனமான சமகால உலகிற்குப் பொருந்தாத அடிமைத்தனத்தை திணிக்கும் வாழ்வு இலங்கையில் தகர்த்தெறியப்பட வேண்டும்.

தனிமனித சுதந்திரம், சமூக சுதந்திரம், மனித உரிமைகள் பொருளாதார சமத்துவம் என்பவற்றை நோக்கி இலங்கை தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தோழர் சுகு – சிறீதரன்

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com