Contact us at: sooddram@gmail.com

 

இந்திய இலக்கிய உலக மானிட மனச்சாட்சியின் குரல்.

ஜெயகாந்தன் காலத்தில் நாமும் வாழ்ந்தோம், அவருடன் பழகினோம் என்று எண்ணும்போது மனதில் ஒரு எழுச்சி குடி கொள்கிறது. நாங்கள் முற்போக்கு உலகின் படைப்பாளிகளைத் தேடி அலைந்த காலத்தில் அவர் எமது நெஞ்சங்களில் விளக்கேற்றினார். யாழ் நூலகம், பூபாலசிங்கம், வசந்தம், மக்கள் பிரசுராலயம், தோழர் மணியத்தின் புத்தககக்கடை, என்சிபிஎச் சென்னை புத்தககண்காட்சி, கும்பகோணம் நூல்நிலையங்கள் கன்னிமாரா என எல்லா இடங்களிலும் ஜெயகாந்தனைத் தரிசித்தோம். அவருடைய கலந்துரையாடல் மண்டபங்களுக்கும் பல தடவை சென்று வந்திருக்கிறோம்.
 

தோழர் பத்மநாபாவின் நினைவுக்கருத்தரங்குகள் சென்னை தேவநேயப்பாவணர் நூலக கட்டிடத்திலோ அல்லது எழும்பூர், பிராட்வே தொழிற்சங்க மண்டபங்களில், புழல் முகாமில் ஜெயகாந்தன் ஒரு பிரதான பேச்சாளராக கலந்து கொண்டார். ஜெயகாந்தனின் அசோக் நகர் வீட்டு மொட்டை மாடியில் அவருடைய அறிவாற்றலை, தத்துவ விசாரணைகளை நள்ளிரவு வரைகேட்டிருப்போம. உணர்ச்சிப் பிளம்பாக ஒளிரும் கண்களுடன்- பாரதியின் ஒளிபடைத்த கண்களுடன் அவரை தரிசித்தோம்.
 

மானிடத்தின் மீதான அவரின் அப்பழுக்கற்ற பேரபிமானம். மகோன்னதமான மனிதர் அவர்.
நாம் வாழ்க்கையில் ஏதாவது சம்பாதித்திதிருக்கிறோம் என்றால் இந்த மனிதர்களுடன் உரையாட நெருங்கி பழகக்கிடைத்த கணங்கள் தான் என்பேன். அவருடைய பேச்சில் இந்திய தத்துவமரபுகளும் ,உலக மானிடம் பற்றிய செறிவும் இருக்கும். அவை வெறும் தர்க்கங்கள் அல்ல. ஆத்மார்த்த வெளிப்பாடு. 'தோழரே!' என்ற அவர் விழிக்கும் வார்த்தை ஏதோ அசரீரி போல் ஒலிக்கும்.

ஜெயகாந்தனின் மிகச்சாமானிய எளிமையான கலந்துரையாடல் கூடங்களில் ரிக்சாகாரர்களும், ரயில்வே ஊழியர்களும், சினிமாத்துறைசார்ந்தவர்கள் இலக்கிய ஆர்வலர்கள் என சென்னையின் சாமானிய மனிதர்கள் 10, 15 பேர் இருந்து கொண்டிருப்பார்கள். தத்துவம்- சமூகம் -விஞ்ஞானம் என பேராற்றின் சுழிப்பு -கொந்தளிப்பு- ஓட்டமாக அவருடனான உரையாடல் அமைந்திருக்கும் காந்தி- நேரு- இந்தியா- அஹிம்சை பற்றிய மானசீகமான பெருமித உணர்வு கொண்டிருந்தார். இந்திய சுதந்திர இயக்கம் -இந்திய பொதுவுடைமை இயக்கம்- சாமானிய மக்களின் வாழ்வின் துயரம் பற்றி, ஈழத்தமிழர்கள் பற்றி எவ்வாறு சமூக இயக்கத்தை முன் கொண்டு செல்வது பற்றி எல்லாம் கரை புரண்டோடும் வெள்ளம் போல் அவர் பேசிக் கொண்டிருப்பார்.

காந்தியடிகள் படுகொலை செய்தியை சென்னையின் நெரிசல் மிகுந்த தெருக்களில் அறிந்த ஜெயகாந்தனுக்கு ஏற்பட்ட அதே உணர்வுகளை அவர் இயற்கை எய்திய செய்தி கேட்ட போது நினைத்துப் பார்த்தேன்.  மிகுந்த ஈடுபாட்டுட்டன் பிரயாசையுடன் சந்தித்துக் கொண்டிருந்த ஒரு உன்னதமனிதனின் மரணச் செய்தி மன நெருடலை ஏற்படுத்தியது. எம்மை நாம் பண்படுத்துவதற்காக நாம் ஜெயகாந்தனைப் படித்தோம்.

தோழர் நாபா மீதும் ஈபிஆர்எல்எப் தோழர்கள் மீதும் அவர் அபிமானம் கொண்டிருந்தார்.
பாரதிக்குப்பின்னர் யார் என்று கேட்டால் அது ஜெயகாந்தன் என்றுதான் எங்களால் கூறமுடியும். மானிட நீதியை- அறத்தை மிகக்கனதியாக தமிழ் இலக்கிய உலகில் படைத்தளித்தவர் ஜெயகாந்தன். பாhரிய சமூக அதிர்வலைகளை ஏற்படுத்தியவர். இந்தியா என்னும் மாபெரும் தேசத்தின் மானிட மனச்சாட்சியின் குரல் அவர்.


'தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறுகதைகள் பேசி வேடிக்கை மனிதரைப்போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ' என்று கம்பீரமாக வாழ்ந்து மடிந்த மனுசன். அவருடைய எழுத்துக்கள் நீர்த்து விட்டன. அவர் கொள்கைப் பிறழ்வுகளுக்கு ஆட்பட்டு விட்டார் என்றெல்லாம் காழ்ப்பு வக்கிரம் கொண்டோர் கூறத்தலைப்பட்டனர். தனக்கு சரியெனப்பட்டதை பட்டவர்த்தனமாக தெரிவிப்பவர் அவர். ஜெயகாந்தன் அளவுக்கு சமூக அறத்தை கனதியாக நெற்றிப் பொட்டில் அறைந்தது மாதிரி தமிழ் இலக்கிய உலகில் எமக்குத் தெரிந்தவரையில் யாரும் கூறவில்லை. ஜெயகாந்தன் தமிழ் இலக்கிய உலகின் ஒரு பாய்ச்சல் எனலாம். நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை. திமிர்ந்த ஞானச் செருக் குடன் வாழ்ந்தார். அவருடைய பேச்சாற்றலும் திகைக்கவைக்கு அசாத்தியமானது. சொல்லும் பொருளும் அநாயாசமாக வந்து விழும்.

நாடுகளுக்குள் பிரிவினை அவருக்கு விருப்பமானதல்ல. ஆனால் அதிகாரங்கள் பகிந்தளிக்கப்படுவதை எப்போதும் வலியுறுத்தினார். தனது சிறுகதைகள் நாவல்கள் தேர்ந்த சிலவாவது சிங்கள மொழியிலும் பெயர்க்;கப்படவேண்டும் என விரும்பியிருந்தார். ஏற்றத்தாழ்வான சழுதாய அமைப்பு ,பெண்ணடிமைத்தனம் ,தீண்டாமை கொடுமைகளை தயவு தாட்சணியமின்ற சாடுவதாகவும் அரசியல்- சமூக போலித்தனங்களை அம்பலப்படுத்துவதாகவும் அவரது எழுத்துக்கள் அமைந்திருந்தன.
 

இந்த உன்னத மனிதரின் உருவாக்கத்தில் இந்திய சுதந்திர -பொதுவுடைமை இயக்கங்களின் பங்களிப்பு பாரியது. பொதுவுடைமை இயக்க கருத்துக்களை பரவலடையச்செய்ததில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. அதில் அவர் பெருமிதம் கொண்டிருந்தார். 'ரீ கிளாஸ்'; தூக்கிவந்த என்னை தோழரே என அழைத்து அருகிருத்தியவர்கள் பொதுவுடைமைக்கட்சியின் தலைவர்கள் என அவர் நினைவு கூருவார். தனது எழுத்துலக பிரவேசத்தில் தன்மீது செல்வாக்கு செலுத்திய நூல்களில் ஒன்றாக ரால்ஸ்ராயின் புத்துயிர்ப்பை சொன்னது ஞபகம்.
காந்தியடிகள் மீதும் ரால்ஸ்ராயின் செல்வாக்கிருந்தது.

வாழ்க்கை பற்றிய கூரிய நுண்ணர்வு அவரிடம் இருந்தது. அவர் வாழ்ந்த கிராமத்தின் அக்கிரகாரத் தெருவிலிருந்து சென்னை சேரிகளில் வீதிகளில் வாழும் மனிதர்களை வாழ்க்கையை எம் மனக்கண் முன் நிறுத்தினார். அதன் குரூரமான குறுக்கு வெட்டை இவ்வளவு துல்லியமாக எந்த சமூக விஞ்ஞான அறிஞரும் புலப்படுத்தியதில்லை.
இலக்கியம் எவ்வளவு வல்லமை மிகு சக்தி என்பதை புலப்படுத்தியவர். நிலமானியத்தின் ஈவிரக்கமற்ற தன்மை, அதன் சாயலுடனான நவீன வாழ்வியலை அவர் அம்பலப்படுத்தியது அசாதாரண துணிச்சல் மிகுந்த நடவடிக்கையாக இருந்து.

உலகம் முகாம்களாக இருந்த காலத்தில் அவர் சோசலிச ஜனநாயகத்தை நேசித்தார். இந்தக்காலம் அவரின் எழுத்துலக உச்சங்களாக இருந்தன. இன்னொரு-வாசிப்பு பண்பாடு அவரால் உருவாக்கப்பட்டது. அவர் இயக்கிய 'உன்னைப் போல் ஒருவன்' இன்றளவில் பேசப்படும் திரைப்படம்.

தோழர் நாபாவை நினைவு கூரும் கூட்டங்களில் வழமையாக பல தலைவர்கள் இலக்கியவாதிகளுடன் 4 பேர் பேச்சாளர்களாக வழமையாக இருப்பார்கள். த.பா ,சுப்பு, ஜெயகாந்தன் ,சோ. தமிழ் சமூகத்தில் நிலவிய பாசிசத்தை அவர் தயவு தாட்சணியம் இன்றி விமர்சித்தார். ஈழத்தில் ஆதிக்கம் வகித்த பாசிச அரசியலுக்கெதிராக ஊசலாட்டமற்ற தெளிவான நிலைப்பாடு அவரிடம் இருந்தது.

அறிவின் வெளிச்சத்தில் தனக்குப்பட்டதை பட்டவர்த்தனமாக கூறுபவர். திராவிட இயக்கத்தின் போதாமை பற்றி அவர் பல விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.  இந்திய பொதுவுடைமை இயக்கம் தொடர்பிலும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.
காந்தியார் கடைப்பிடித்த எளிமையான வாழ்வு அவருடையதாக இருந்தது.  சமூக முரண்பாடுகள் சிக்கலக்ளைப்புரிந்து கொள்வதில் அவற்றை விளங்கவைப்பதில் அசாத்திய திறமை கொண்டிருந்தார். தமிழ் சூழலில் சமூக அநீதிகளைப்புரிந்து கொள்ள அவர் தாக்கமான பங்களிப்பைச் செய்தார். அவர் ஒருகாலகட்ட சமூக இலக்கிய எழுச்சியின் குரலாக இருந்தார்.
அவருக்கு பின்னர் அத்தகைய ஒன்று இனி மேல் தான் உருவாகவேண்டும்.
(சுகு-ஸ்ரீதரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com