Contact us at: sooddram@gmail.com

 

மீண்டும், மீண்டும் வழி தவறும் தமிழக கட்சிளும், இலங்கை தமிழ் கட்சிகளும்

(தோழர் ஸ்ரனிஸ்)

இலங்கையில் தற்போது வந்தடைந்து பலதரப்பையும் பார்த்து கலந்துரையாடி நிலமைகளை அவதானித்து வரும் இந்திய பாராளுமன்ற குழுவில் தமிழகத்தின் பிரதான இரு கட்சிகளும் கடைசி நேரத்தில் காலை வாரியது எனபது அவர்களுக்குள் உள்ள வழக்கமான அரசியல  ிளையாட்டு என்றே கூறமுடியும்.

அதே போல் இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள  ஒற்றுமை கூட்டு எனச் சொல்லி வந்தாலும் நடைமுறையில் அவர்கள் எந்தவொரு இணக்கப்பாட்டுக்கும் வந்ததாக தெரியவில்லை. தமிழ் தேசிய கூட்டமமைப்பு இன்று தமிழர்களிடையே அங்கீகாரம் பெற்ற கட்சி, 'எதுவானாலும் எங்களுடன் தான் பேச வேண்டும்' என்ற எண்ணம் அவர்களிடம் காணப்படுவதாகவே தெரிகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தும  அவர்களால் உதாசீனம் செய்யப்படும் கட்சிகளும் உள்ளன. இவர்களது நிலைப்பாடுபற்றியும் அனைவரும் கட்டாயம் சிந்திக்கவேண்டி உள்ளது.

ஒற்றுமை கூட்டு என பேசும் பலரும், இது தொடர்பாக தொடர்ந்தும் பேசாமல் இந்த தடைக்கான காரணிகளை கண்டறிய வேண்டும். இந்திய பாராளுமன்ற குழு இலங்கையயில் தற்போது பிரசன்னமாகி இருப்பது தொடர்பாக இந்த தமிழ் கட்சிகள் ஒற்றுமையுடன் அவர்களை சந்தித்து இருக்க வேண்டும். ஆனால் இது நடைபெறாமல் தமிழ் தேசிய கூட்டடைப்பு தனியாகவும் மற்றய தமிழ் கட்சிகளான தமிழ் மக்கள் விடுதலைக் கழகம், தமிழர் விடுதலைக் கூட்டணி,பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனியாகவும் சந்தித்து தங்களது கருத்துக்களை இலங்கை தமிழர் தீர்வு தொடர்பாக அவர்களது வாழ்வாதரம் சிறப்பது தொடர்பாக முன்வைத்தள்ளன.

ஏன் இவர்கள் அனைவரும் இந்திய பாராளுமன்ற குழுவை ஒன்றாக சந்திக்காமல்   தனித் தனியாக சந்தித்துள்ளார்கள். இவர்களிடம் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை என்  என்பதை தமிழ் மக்கள் கண்டறிய வேண்டும். இவர்களில் சிலர் தமிழ் மக்களின் கட்சிகளின் ஒற்றுமை என்றும் பின்னர் ஒற்றுமையை ஏற்படுத்தாமலும் பின்னர் ஒற்றுமை பற்றி கதைக்கும் இவர்களை இனங்காண வேண்டியது இன்றைய நிலைமையில் அவசியமாக இருக்கிறது.

இந்திய பாராளுமன்ற குழு தமிழ் கட்சிகளை தனித்தனியே சந்தித்தது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள வினோ தெரிவித்திருக்கும் கருத்து வினோதமாக உள்ளது. இந்தியா, இலங்கை அரசைப்போல் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்த நினைக்கிறதா என கூறியுள்ளார். இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தவறா? இந்திய அரசின் சதியா? ஏன்றும் கூறியுள்ளார். தற்போதைய நேரத்தில் இது தேவையற்றதே என நினைக்கத் தோன்றுகிறது. ஏன் உங்களால் அனைவரையும் ஒன்று சேர்த்து சந்திக்க முடியவில்லை. இனி இந்த தவறை செய்ய வேண்டாம்.

இந்திய பாராளுமன்ற குழுவை சந்தித்த தமிழ் கட்சிகள் அனைத்தும் இந்தியாவிடம் இலங்கை பிரச்சியை தீர்த்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. இந்த தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக சந்தித்திருந்தால் அதற்கு வலிமை உண்டு.

எந்த தமிழ் கட்சிகளையும் உதாசீனம் செய்யாமல் எந்த பேச்சுவார்த்தையானாலும் அனைவரும் பங்குபற்ற வேண்டும். இதனை தமிழ் கட்சிகள் அனைவரும் ஒற்றுமையுடன் பங்குபற்ற வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னுதாரணமாக செயல்பட்டடிருக்க வேண்டும்.

தமிழக கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இன்று இரு அணிகாளக இருக்கிறது ஒன்று தி.முக சார்பு மற்றயது அ.தி.மு.க சார்பு.  இதில் தி.மு.க ஆளும் காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளது. இருந்தும் மாநில அரசியல் தொடர்பாக அது காங்கிரசில் இருந்து விலகியே இருக்கிறது. அ.தி.மு.க வை பொறுத்தவரை அது காங்கிரசை முற்றுமுழுதாக எதிர்க்கும் நிலைப்பாட்டிலே உள்ளது. இலங்கை அரசாங்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பதைப்போல.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க, தி.மு.க இன்று அப்பட்டமாக அரசியல் செய்கிறது என்பதை பலராலும் புரிந்து கொள்ள முடியும். இன்று ஈழத்திற்கு வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு கருணாநிதி வந்து ஜெயலலிதாவுக்கு 'செக்' வைத்துள்ளார். ஆளும் கட்சியாக உள்ள ஜெயலலிதா இது தொடர்பாக நிதானமாவே அடுத்த 'செக்' ஐ கருணாநிதிக்கு வைக்க வேண்டும். அதற்கும் இலங்கை பிரச்சினையில் காரணம் இருக்கும்.

இந்த எதிர்ப்பு அரசியல் என்பதை சிலர் விரும்புகிறார்கள், சிலர் இதனை எதிர்பார்கிறார்கள், ஏனென்றால் ஆளும் கட்சிகள் பல விடயங்களை சொன்னாலும் அவற்றை நிறைவேற்றுவதில்லை என்ற ஒரு நிலைப்பாடு மக்களிடம் உள்ளது. இது எதிர்ப்பு அரசியல் நடத்துபவர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது. தேர்தல் காலங்களில் அவர்களுக்கு வாக்கு சேகரிக்க இது பெரிதும் துயைணாக இருக்கிறது. 

இலங்கைக்கு இந்திய பாராளுமன்ற குழு செல்லவிருக்கிறது என்ற செய்தி வெளிவரத் தொடங்கியவுடனே அது தொடர்பான விமர்சனங்களும் வெளிவரத் தொடங்கிவிட்டது.

இந்திய நாடாளுமன்ற குழு பயணம் என்பது இலங்கையை திருப்திப்படுத்த நடக்கும் நாடகம் என்றும், இலங்கை ஜனாதிபதியின் பரிசுப்பொருட்களையும், விருத்தையும் தான் இவர்கள் பெறமுடியும் என்றும் பல தரப்பட்ட விமர்சனங்கள  ிலரால் வழக்கமாக இலங்கை அரசு தொடர்பாகவும் இந்திய ஆட்சியாளர்கள் (அதிலும் காங்கிரஸ் ஆட்சியாராக இருப்தால்) தொடர்பாகவும் வைக்கப்படும் விமர்சனங்களாகவே பார்க்க வேண்டியுள்ளது.

ஏதிர்கட்சி தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையில் சென்ற குழுவால் இலங்கைத் தமிழர்களுக்கு பல நன்மைகள் தோன்றவே வாய்ப்புகள் உள்ளன. இந்திய பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான பிரச்சினைகள  இந்திய பாராளுமன்ற எதிர்கட்சியான பாராதிய ஜனதா கட்சியின் எதிர்ப்பு என்பது சற்று குறைவாகவே காணப்படும்.

இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகள் தனித்தனியே இந்திய பாராளுமன்ற குழுவை சந்தித்தது என்பதும் தமிழக கட்சிகளான அ.தி.மு.க,தி.மு.க என்பன இந்திய நாடாமன்ற குழுவுடன் செல்லாதது என்பதும் இலங்கை தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு தடையாகவே உள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com