Contact us at: sooddram@gmail.com

 

தமிழகத்தில  உள்ள இலங்கை மக்களின் வலியும், தவிப்பும்.

(அருள்-விஜயன்)

இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாகவும், அதனைத் தொடர்ந்தும் தமிழகத்துக்கு இடம  ெயர்ந்தோர், முகாம்களிலும், வெளியிலுமாக தங்கி இருக்கிறார்கள். இவர்களில் இலங்கையின் வடக்கு - கிழக்கை சோந்தவர்கள் மட்டும் அன்றி மலையகத்தைச் சோந்தவர்களும் தங்கியிருக்கிறார்கள். மலையகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் மண்டபம் மற்றும் திருச்சி கொட்டப்பட்டு முகாம்களில் தங்கி இருக்கிறார்கள். சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தில் தாயகம் திருப்பிய ஒரு சிலர் இன்னமும் கொட்டப்பட்டு முகாம்களில் தங்கியிருக்கிறார். அந்த ஒப்பந்தத்தில் வந்த பெரும்பாலானவர்கள  தமிழகத்தில் உள்ள தங்களது பூர்வீக இடத்தை தெரியப்படுத்தி தங்களது சொந்த பந்தங்குளுடன் இணைந்து விட்டனர். தற்போது எஞ்சி இருப்பவர்கள் இவை தெரியாதவர்களாக முகாம்களிலே தங்கியிருக்கிறார்கள்.

வெளியில் தங்கியிருக்கும் இலங்கை மக்களுக்கு அரசின் எந்தவித உதவியும் இல்லை. அவர்கள், தங்களது சம்பாத்தியத்தை நம்பியே வெளியில் இருக்க வேண்டும். அவர்கள் கட்டாயம், அவர்கள் இருக்கும் பகுதி பொலிசில் பதிவுபெற்று இருக்க வேண்டும். முகாமில் உள்ளவர்களுக்கு முகாம் பதிவு இருக்கும் அவர்கள் வெளியில் வேலைக்குச் செல்லும் போது முகாமில் உள்ள பதிவேட்டில் முகாமைவிட்டு வெளிச் செல்லும் நேரம் உள்ளே வரும் நேரம் குறிப்பிட வேண்டும்.

அகதிகள் முகாம் தமிழக அரசால் பராமரிக்கபட்ட காலத்தில் குடும்பத்தின் தலைவருக்கு ரூ.55 வழங்கப்பட்டது. பின்னர்அத  ூ100 ஆக மாறி,ரூ400 ஆகி, தற்போது ரூ.1000 வழங்கப்படுகிறது. தற்போது குடும்ப தலைவருக்கு ரூ1000, இரண்டாம் நபருக்கு ரூ.750, 12 வயதுக்கு மேல் ரூ.750,12 வயதுக்குள் ரூ400 வழங்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு மண்ணெண்ணெய் ஒரு குடுப்பத்துக்கு 10லீட்டர். இதன் விலைரூ.140, அரிசி ஒரு மாதத்திற்கு 12வயதுக்கு மேல் 12கிலோ, 12 வயதுக்கு கீழ் 6 கிலோ இதன் விலை 55 பைசா, சீனி ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்கு அரைகிலோ, 4பேருக்கு மேல், எத்தனை பேர் இருந்தாலும் 2 கிலோ வழங்கப்படுகிறது.

முகாமில் உள்வர்களின் பிள்ளைகள், வெளியில் உள்ளவர்களின் பிள்ளைகள் தங்கள் வசதிக்கு ஏற்றப்போல் மெட்ரிக்குலேன், மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளில் படிக்கிறார்கள்.

இலங்கை மக்களின் பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்கள், நல்ல மதிப்பெண்களை பெறுகிறார்கள் பலர் கல்லூரிகளில் படித்து பட்டமும் பெற்றுள்ளார்கள். ஆனால் அரச வேலை வாய்ப்பு அவர்களுக்கு கிடைப்பதில்லை. மாறாக எங்கேயாச்சும் தனியார் நிறுவனங்களில் மிகவும் குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்கிறார்கள்.

இலங்கையை விட்டு இடம் பெயர்ந்த மக்களில் பலர  தங்களது பிள்ளைகளின் படிப்பு விடயத்தில் மிகவும் அக்கறையாக உள்ளார்கள், பலர்  தங்கள் பிள்ளைகளை நல்ல படிப்பு படிக்கவும் வைத்துள்ளனர். இலங்கை செல்ல பலர் தயக்கம் காட்டுவதிற்கு தங்கள் பிள்ளைகளின் கல்வி விடயமும் ஒன்றாகும்.

இலங்கை செல்ல பலர் தயங்குவதற்கு பிரதான காரணமாக இருப்பது பொருளாதார நிலமை, வாழ்க்கையை தொலைத்த அவர்கள் இலங்கை செல்ல தயங்குவதற்கு இது ஒரு நியாயமான காரணமாகும்.

அகதிகள் முகாமில் இருந்த ஒருவர் நன்றாக கூலி வேலை செய்து சம்பாதித்தார், தாய்நாட்டின் ஏக்கம் அவரை வாட்டிய போது இலங்கை சென்றார். ரொம்பநாட்களுக்கு பின்னர் ஊர் சென்றவருக்கு உபசரிப்பு என்றால் சொல்லி வேலை இல்லை. இவை சில நாட்கள்தானே, நிலமையை உணர்ந்த அவர் தொழில் தேட முயன்றுள்ளார். கூலித் தொழிலுக்கு சென்றுள்ளார். ஆனால  அவருக்கு நிரந்தர வேலை இல்லை அதனால் மீண்டும் அகதியாக வந்து விட்டார்.

பல வருடங்கள் வாழ்க்கையை தொலைத்த அவருக்கு, இலங்கையில் உள்ள சிலரின் வாழக்கை முறை வெறுப்படைய வைத்துள்ளது. பலர் வசதியாக உள்ளனர் என்றம் தங்கள் சொந்தத்திலே பலர் வசதியாக இருப்பதாகவும் தான் இனி அவர்கள் அளவுக்கு வரமுடியாது அதனால் கண்காணமல் வாழ்வதே நன்று எனவும் கூறினார்.

இந்த எண்ணம் பல அகதி மக்களிடம் உள்ளது. இதனால் அந்த பத்துக்கு பத்து    அறையில் தங்கள் எதிர்காலத்தை நினைத்து ஏக்கத்துடன் முகாம்களில் வாழ்கின்றனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com