Contact us at: sooddram@gmail.com

 

புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்கள் பற்றி எவரும் கவலைப்படுவதில்லை

(தோழர்ஸ்ரனிஸ்)

புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்களும் அவர்களது தியாகங்களும் என்றுமே வஞ்சிக்கப்பட்டே கொண்டிருக்கிறது. இது திட்டமிட்டே சிலரால் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த வஞ்சித்தல் ஏன் எதனால். இதில் முழுக்க முழுக்க அரசியலே உள்ளது. புலிகளில் இருந்து கொல்லப்படட்வர்களுக்காகவும் அவர்களது நலன்கள் தொடர்பாகவும  இந்த உலகமே ஓர் அணியில் நிற்பதைப்போல் ஒரு தோற்றம் உள்ளது. ஆனால் புலிகளால் கொல்லப்பட்டவர்களின  ிலைமை பரிதாபாக உள்ளது. யாரும் அவர்கள் தொடர்பாக கதைப்பதே இல்லை அந்தக்குடும்பங்கள் என்ன நிலைமையில் வாழ்கிறார்கள் என்பதையோ அவர்கள் நலன்கள், மறுவாழ்வு தொடர்பாகவோ எவரும் கண்டுகொள்வதாக இல்லை இன்று புலிகளில் இருந்து கொல்லப்பட்டவர்கள் தொடர்பான நலன்கள் மற்றும் அவர்கள் மறுவாழ்வுபற்றி பேசுபவர்களின் அரசியலே கோலோச்சுகிறது.

வீழ்ந்து கிடக்கும் ஒரு மனிதனுக்கு ஒன்று பண பலம் வேண்டும் அல்லது மனிதர்களின் பக்கபலம் வேண்டும் இவை இரண்டுமே இல்லாத மனிதன் வாழ்வில் பிரகாசம் ஏற்படும் வாய்ப்புகளே இல்லை மற்றவர்களின் வாழ்விலும் எல்லாம் நடக்க இந்த அரசியல் வாதிகள் முன்வரவேண்டும்.இந்த நிலைமைதான் இன்று புலிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி படுகொலையின் போது உயிரழந்த தமிழர்கள் 16பேர் குடும்பங்கள் தற்போது கொலையாளிகளுக்கு இந்திய உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக அதிர்ச்சி அடைந்து அவர்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தச் சம்பவத்தில் இன்பெக்டர் கணவனை பலிகொடுத்த பாலசரஸ்வதி 'என் கணவரும் பச்சை தமிழர்தான் தூக்கு தண்டனை கைதிகளுக்கு குரல்கொடுத்த தலைவர்கள் எங்களுக்கு ஆறுதல் கூறவரவில்லை.அதே சம்பவத்தில் கொல்லப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி முகமது இக்பால் அவர்களின் மகன் ஜாவீத் இக்பால்,நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்தவர்களின் தண்டனையை ரத்து செய்வதில் வருத்தம் அளிக்கிறது  எனக் கூறியுள்ளார்.

இலங்கையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரனையில் பலர் தங்கள் பிள்ளைகளை புலிகள் பிடித்து சென்றதாகவும் பின்னர் அவர்களை புலிகள் கொலை செய்திருப்பார்கள் என்றும் புலிகள் மேல் குற்றம் சுமத்தியுள்ளனர்.தற்போதைய சூழ்நிலையில் பலருக்கு இந்த விடயம் சிவபூசைக்குள் கரடி நுழைந்த கதையாகத்தான் இருந்திருக்கும்.ஆனால் உண்மை என்றுமே உறங்குவதில்லை.

இலங்கையில் நடைபெற்ற போராட்டங்களின் போது பல தமிழர்கள் புலிகளால் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது இந்த உலகிற்கே தெரிந்திருந்தும் அவர்களது மறுவாழ்வு குறித்து கவனம் செலுத்த எந்த அரசியல் கட்சியும் முன்வருவதில்லை. ஏனென்றால் அவர்களது மரணத்தை பேசுவதால் அரசியல் கட்சிகளுக்கு பிரயோசனம் இல்லை என அவர்கள் நினைக்கிறார்கள்.இதனால் அவர்கள் பலதை இழந்துவிட நேரிடும் என நினைக்கிறார்கள்.புலிகளுக்கு எதிராக பேசியவர்கள் அவர்களது செயல்பாட்டை விமர்சித்தவர்கள் இலங்கை அரசியலில் பின்னுக்கே தள்ளப்பட்டு கிடக்கிறார்கள்.

இது இன்று ஒரு 'ரெண்ட்' ஆக உள்ளது.இந்த 'ரெண்ட்' இல் இருந்து விடுபட்டுவிட்டால் தங்களது அரசியலே அஸ்தமனமாகிவிடும் என இவர்கள் நினைப்பது என்றும் ஆபத்தானது.

இப்படியொரு அரசியல் முடிவினாலே இன்று தமிழகத்தில் ராஜீவ் கொலையாளிகளின் விடுதலை தொடர்பான சர்ச்சை ஏற்பட்டுள்ளது.எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முடிவால் இன்று கொலையாளிகளின் விடுதலை கேள்விக்குறியாக நிற்கிறது. இதற்காக போராடிய தமிழ் அமைப்புகள் அடுத்தகட்டமாக ஒன்றும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பல வழக்குகளில் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் மரண தண்;டண கைதிகளை தட்டியெழுப்பி அவர்களும் விடுதலை தொடர்பாக ஜனாபதியை அணுக முயற்சிகளை மேற்கொள்ள தூண்டிவிடப்பட்டுள்ளார்கள்.

மத்திய அரசும் மாநில அரசும் பேசி கொலையாளிகளின் தண்டணையை குறைக்கலாம் என்று கூறிய உச்ச நீதி மன்றமே, இன்று விடுதலை செய்தால் ஏற்படும் ஆபத்து தொடர்பான அப்பீல் மனுiவை ஏற்றுக்கொண்டு அவர்களது விடுதலை தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம்கேட்டு மார்ச்6 வரை இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழக அரசின் இந்த அவசரம் தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்தது மட்டுமல்லாமல் தமிழக முதல்வரின் பிரமதமர் கனவிலும் திரைகள் விழுந்துள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com